அமைச்சர் ப.தியாகராஜன் குறித்த விமர்சனம்: கே.சி.திருமாறன் கைது! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

thirumaranji arrest - 2026

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பிரிவினைவாதக் கருத்துகளை விமர்சனம் செய்ததற்காக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவுனர் கே.சி. திருமாறன் கைது செய்யப் பட்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த பாசிசப் போக்கு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கையில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

மதுரை அமைச்சர் ப.தியாகராஜன் தூண்டுதலின் பேரில் மதுரை மாவட்ட பாஜக., தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கண்ணன் கிருஷ்ணன் வீட்டில் காலை 4 மணிக்கு போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், கண்ணன் கிருஷ்ணன் வீட்டில் இல்லாத காரணத்தால் அவருடைய மைத்துனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரை கடுமையாக துன்புறுத்தியதாகவும் கூறி, சமூகத் தளங்களில் பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

madurai kk - 2026

கண்ணன் கிருஷ்ணன் தினசேவல் எனும் பெயரில் இணைய பத்திரிக்கை மற்றும் யுடியுப் சேனல் நடத்தி வருவதாகவும், அதில் பழனிவேல் தியாகராஜன் குறித்த உண்மைகளைச் சொன்னதற்காக, அவர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஒரு வாரமாக அவரை கைது செய்யும் நோக்கத்தில் காவல் துறை தீவிரமாக செயல்பட்டதாகவும் கூறும் பாஜக.,வினர், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது குடும்பத்தினரை மிரட்டி அவரது மைத்துனரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கைது சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது கண்டன அறிக்கையில்…

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவரும் தமிழகத்தின் காவி படை தளபதியுமான திரு கே சி திருமாறன் அவர்கள் இன்று அதிகாலை மதுரை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

திமுகவினர் குறித்து அவதூறு பரப்பியதாக அவமரியாதையாக பேசியதாக, தமிழக நிதியமைச்சர் மாண்புமிகு தியாகராஜன் அவர்களின் தூண்டுதல் பேரில் திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் திருமாறன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் உடைய ஜனநாயக விரோதப் போக்கு,மாற்றுக்கருத்து உள்ளவர்களை நசுக்கும் பாசிச மனப்பான்மை, பழிவாங்கும் நடவடிக்கை, இதன் காரணமாக திருமாறன் ஜனநாயக விரோதமாக, சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அவர்கள் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை அவமானப்படுத்தும் வகையில் பேசுவதும், ஒருமையில் பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் குறித்து அவன் இவன் என ஏக வசனத்தில் பேசி வருகிறார். நரேந்திர மோடிக்கு எதிராகவும் இந்து இயக்க தலைவர்களுக்கு எதிராகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகிறார். அவருடைய அவதூறு கருத்துக்கு ஜனநாயக முறையில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் கே சி திருமாறன் அவர்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் தனது வீட்டில் வந்து பணம் வாங்கி சென்றதாகவும் தனது வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டுப் போவார் என்றும் தவறான தகவல்களை பதிவு செய்ய திரு தியாகராஜன் முயற்சி செய்கிறார். வரலாற்றுப் பூர்வமாக தேவர் அய்யாவின் புகழ் காக்கும் நடவடிக்கைகளை திரு திருமாறன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதி அமைச்சர் தியாகராஜன் போலீசாரை ஏவி விட்டு இன்றைக்கு கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் இது விஷயத்தில் உடனடியாக தலையிட்டு திருமாறன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். திருமாறன் அவர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழ் காப்போம் கே சி திருமாறன் அவர்கள் கைதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுகிறோம் அவரை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி அறப் போராட்டங்களில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories