December 6, 2025, 12:58 AM
26 C
Chennai

மோட்டோரோலா எட்ஜ் X: சிறப்பம்சங்கள்!

Motorola Edge X
Motorola Edge X

ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு எண்ணற்ற ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் ஆகி வருகிறது.

இவற்றில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ஃபோன்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகும். துல்லியமாக படம் பிடிக்கும் கேமிரா, நீண்ட நேர பேட்டரி வசதி, சிறப்பான ப்ராசெஸ்ஸார் போன்ற முக்கிய அம்சங்களை ஸ்மார்ட்போன் வாங்குவோர் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பலருக்கும் விருப்பமானவை. பல வருடங்களாக சந்தையில் அமோகமாக விற்பனையான மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள், சில காலமாக சரிவை சந்தித்து வருகின்றன.

இதை ஈடுகட்ட அவ்வப்போது சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது மோட்டோரோலா எட்ஜ் X என்கிற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் பிறகு கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறுப்படுகிறது.

மோட்டோ எட்ஜ் எஸ் ப்ரோ, மோட்டோ எட்ஜ் லைட், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இந்த மோட்டோ எட்ஜ் X அறிமுகமாக உள்ளது.

புதிதாக அறிமுகம் ஆகவுள்ள இந்த எட்ஜ் X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெளிவாக வெளிவரவில்லை என்றாலும், சில முக்கிய அம்சங்கள் அதற்கு முன்பு அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன் சீரிஸ் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் எஸ் ப்ரோ மற்றும் மோட்டோ எட்ஜ் லைட் ஆகிய ஸ்மார்ட்போன்களில் 6.7 இன்ச் முழு HD + OLED டிஸ்பிளே தரப்பட்டது.

மேலும் இந்த ப்ரோ மாடலில் 144 Hz ரெஃபிரஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட் வசதி உள்ளது. இந்த லைட் வெர்ஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் 778G SoC சிப்செட், 8GB LPDDR4 RAM வசதி கொடுக்கப்படுகிறது.

எனவே இந்த மோட்டோரோலா எட்ஜ் X ஸ்மார்ட்போனிலும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 888 SoC. சிப்செட் தரப்படலாம். மேலும் 108 மெகா பிக்சல் பிரைமரி கேமிரா மற்றும் 2 முன்புற கேமிரா வசதியுடன் இது அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் X ஸ்மார்ட்போனில் சிறப்பான பேட்டரி வசதி தரப்படலாம். முன்பாக மோட்டோ எட்ஜ் எஸ் ப்ரோவில் 4,250mAh பேட்டரி மற்றும் 30W விரைவான சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டு இருந்தது.

அதே போன்று மோட்டோ எட்ஜ் லைட் மாடல் 4,020mAh பேட்டரி மற்றும் 33W விரைவான சார்ஜிங் வசதியுடன் வந்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS, NFC, மற்றும் USB டைப்-C போர்ட் ஆகிய அம்சங்களுடன் வெளியாகின.

இதே போன்ற அம்சங்கள் மோட்டோ எட்ஜ் X போனிலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ.28,700 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories