Author: SMS-சங்கர்
Journalist
ஜெ. மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவு!
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின்...
திருச்சி விமான நிலையத்தில்ரூ .18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்த ஜலாலுதீனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா துப்பாக்கி முனையில் கைது!
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நபா் ராக்கெட் ராஜா. இவா் மீது கொலை வழக்கு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் ராக்கெட் ராஜா மற்றும்...
தாயகம் திரும்பினார் ரஜினி: ஆரத்தி எடுத்து வரவேற்றார் மனைவி!
அமெரிக்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை நாடு திரும்பினார்.தன் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷ், உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் ஏப்., 23ம் தேதி, ரஜினி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு உடல்நல பரிசோதனை...
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
பிறந்தநாளில் சச்சினை கிண்டலடித்த ஆஸி. கிரிக்கெட் வாரியத்துக்கு ரசிகர்கள் பதிலடி!
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 46-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட்...
கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கவிட்டால்… பள்ளி கல்வித்துறை முன்பு உண்ணாவிரத போராட்டம் : மாநில தலைவர் பேட்டி!
நெல்லை மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் அதிகமான் முத்து தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் டி.ரவிச்சந்திரன்,...
200 பேருடன் பயணித்த அல்ஜீரிய ராணுவ விமானம் விபத்து
அல்ஜியர்ஸ் தலைநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ப்லிடா மாகாணத்தின் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும் : சுப்ரீம் கோர்ட் உறுதி!
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மே
முழு கடையடைப்புக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு!
தமிழகத்தில் ஏப்.,3 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் – பயணிகள் கடும் அவதி
கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில்...
ஜாதியை வைத்தோ… மதத்தை வைத்தோ… தமிழர்களை பிரிக்க முடியாது : கனிமொழி எம்.பி பேச்சு!
ஜாதியை வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில் கனிமொழி எம்.பி பேசினார்.நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில் மறைந்த முன்னாள்...
