Home Blog Page 125

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர் என்று- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டனர்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவின் கைக்கூலி அமைச்சர் சேகர்பாபு போராட்டத்தில் கலந்து கொண்ட இந்துக்களையும் முருக பக்தர்களையும், இந்து முன்னணியினரையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து அரசியல் ஆதாயம் கருதி முருகபக்தர்களுக்கு எதிராகப் பேசி வருகிறார்.

திமுகவை சேர்ந்த நவாஸ் கனி, மற்றும் அப்துல் சமது ஆகியோர் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் இந்துக்களின் புனித தலமாக இருந்தபோதும் தன் சகாக்களுடன் வந்து அசைவ உணவை சாப்பிட்டு மதமோதல் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து மதப்பற்றாளராக இல்லையென்றாலும் கூட , அறநிலையத்துறையின் அமைச்சர் என்ற வகையில் நவாஸ் கனியின் செயலை கண்டித்தாரா? இதுவரை அந்த திருப்பரங்குன்றத்தின் புனிதத்தைக் காக்க ஏதாவது குரல் கொடுத்தாரா? அல்லது இந்து உணர்வுடன் வேறு ஏதாவது ஒரு அமைச்சர்கள் குரல் கொடுத்தனரா?

இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமே இந்தப் பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். மக்களும் விழிப்புணர்வு பெற்று இச்செயலுக்கு மிகப் பெரிய அளவில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
திமுகவிற்கு தற்போது வயிறு எரிகின்றது.

அதன் வெளிப்பாடாக சேகர்பாபு கதறுகிறார் . இவரின் கருத்தும், கதறலும் இனி இந்துக்கள் மத்தியில் ஜெயிக்காது என்பதற்கு நேற்று நடந்த இந்து எழுச்சி ஆர்ப்பாட்டமே சாட்சி!

இந்துக்களின் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோவில்களின் நலனில் அக்கரை காட்டாமல் , பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

1000271651 - 2026

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்துவை தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில செயலாளர் மணிமகேஷ்வரன் மற்றும் செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ண்ன நேரில் அழைத்து பாராட்டு சான்று வழங்கி மரியாதை செலுத்தினர்.

திருப்பதியை அடுத்துள்ள காளகஸ்தி திருக்கோவிலுக்கு புளியங்குடியை சேர்ந்த மாரிமுத்து தனது குடும்பத்துடன் வழிபட சென்றார். அப்போது ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்க பணம், பாஸ்வேர்டுடன் கூடிய ஏடிஎம் கார்டு, ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் 27 நபர்கள் பயணம் செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கட் இருந்துள்ளது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜேஸ் என்பவர் தொலைந்துபோன தனது போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதனை எடுத்து பேசிய புளிங்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர், தங்களுடைய போன், மற்றும் ரொக்க பணம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் எங்கிருப்பதாக தெரிவித்தால் நான் நேரில் வந்து தருகிறேன் என கூறி, ஆட்டோ மூலம் அவர்கள் இருந்த பகுதிக்குச் சென்று அவர்களுடைய பணம், செல்போன், ஆன்லைன் டிக்கட் ஆகியவற்றை ஒப்படைதுள்ளார்.

இவரின் நேர்மையான செயலால் நெகிழந்துபோன மத்தியபிரதேசத்தை சார்ந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்த்தோடு அவர்களுடைய பயணத்தையும் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்நிலையில், மாரிமுத்துவின் நேர்மையான செயலை பாராட்டும் வகையில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுப்புராம் ஆலோசனையின்படி, மாநில செயலாளர் மணிமகேஷ்வரன், மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் ராமு, தென்காசி நகர தலைவர் மாரியப்பன், நகர பொறுப்பாளர் குருவாயுர் கண்ணன், திருமால், சித்தர் மறுமலர்ச்சி தலைவர் வக்கீல் முத்துமாரியப்பன், சிவக்குமார், அவைத்தலைவர் துரைராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், செங்கோட்டை அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணன், மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவர் பாஸ்கர் கனகராஜ் ஆகியோர், மாரிமுத்துவின் நேர்மையை பாராட்டும் வகையில் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்று வழங்கி சிறப்பித்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

crackers - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் தொழிலாளி பலி : 6 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே தாதபட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ளது சின்னவாடியூர் ஊராட்சி. இங்குள்ள தாதபட்டி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பிற்பகல் 2 மணியளவில் வேதிப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ஆலையில் பணிபுரிந்த சக தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.

தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர், சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மற்ற பகுதிகளுக்கு தீயைப் பரவ விடாமல் பல மணி நேரம் போராடி தடுத்து நிறுத்தினர்.

இந்த விபத்தில் 6 அறைகள் இடிந்து தரை மட்டமாகியது ஒருவர் பலி : மேலும், பெண் தொழிலாளி இடிபாடுகளுக்குள் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார் .

6 பேர் காயம் :

அதிவீரம்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

modi in vellore - 2026
#file picture

பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

இதற்காக அவர் தமிழகம் வருகிறார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார்.

பின்னர், புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணம் செய்யும் வகையில் திறப்பு விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

thirupparankundram crowd - 2026

தன்மானத்திற்கு ஒரு பிரச்சினை என்றால்….. தலையே போனாலும்., அப்படி தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தவே நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆன போதிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

அது தான் தமிழகம். ஆவேச கூச்சல் இல்லை… ஆபாச வார்த்தைகள் இல்லை.. அரோரா கோஷம் விண்ணை பிளந்தது என்றால் அது மிகையில்லை. வடிவேலும் மயிலும் துணை… – என களத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள். திட்டமிட்டு நாள் பார்த்து வரலாறு அமைவதில்லை என்பர். அதுபோலவே நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டவர்களை அத்தனை சுலபத்தில் வீழ்த்தி விடவும் முடியாது……. ஆனானப்பட்ட ஔரங்கசீப்பே தெரிக்க விட்டவர்களுக்கு இன்று உள்ள சில்வண்டுகள் எம்மாத்திரம்…. இதனை இன்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

இனி அமைதி மார்க்கம்….? கேள்வி குறி தான். அடுத்ததாக தை பூசத்திற்கு தயாராகி வருகிறார்கள். இனி ஒவ்வொரு நாளும் அந்த ஓநாய் கூடத்திற்கு விடியா நாளாக தான் தொடரப்போகிறது. எந்த ஒரு இஸ்லாமிய கடைகளில் எதனையும் வணிகம் செய்யப்போவதில்லை….. இது நாளைய நம் சந்ததியினருக்காக செய்ய வேண்டிய கடமை என்று ஏற்க வேண்டும்.

சீண்டி இருக்கிறார்கள். அதனை சண்டியர் பூமியில் செய்து காண்பித்திருக்கின்றார்கள். இனி விடக்கூடாது. விஷ வித்து என்பதை காண்பித்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக…… கொடி பிடிக்க கோஷம் எழுப்ப அன்றிலிருந்த திராவிட கட்சிகள் முதற்கொண்டு நேற்று பிறந்த கட்சி வரை வாலை ஆட்டிக் கொண்டு வாக்கு வங்கி அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.

இனி அந்நிய மதத்தை, அந்நிய அரசியல் கைக்கூலிகளை…., வேரறுக்காமல் ஓயக்கூடாது. இஃது விதண்டாவாதம் இல்லை. முழுமையான விபரங்களோடு களமிறங்கி இருக்கும் கூட்டம் இது என்பதனை நிரூபிக்க ஓர் சந்தர்ப்பம்.

நீதிமன்றம் வரை சென்று தான் நம் நிலையை நிரூபிக்க வேண்டும் என்றால்……. அந்நிய சக்திகளின் நிதியியலை கை வைப்பதில் தவறில்லை. எந்த ஒரு வணிகமும் இனி அவர்களுடன் கிடையாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இதில் நிச்சயம் நல்லவர்களும்… நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட கூடும்.அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகங்களை அவர்களால் இன்று உள்ள நிலையில் தட்டி கேட்க முடிவதில்லை. அதன் பலனாக இதனையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.

இனி அக்பர் மரம் நட்டார் என்கிற பம்மாத்திற்கு இடமில்லை. பாலிதான் திவாஸ்…. நினைவிருக்கிறதா..?? நெஞ்சில் ஏறி மிதித்த ராணி துர்க்காவதி பற்றியும் சொல்லி கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அது வெறும் அக்பருக்கு மாத்திரமே கிடையாது என்பதை வரவிருக்கும் நாட்களில் தெரிந்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே சமாச்சாரம்.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

thirupparankundram h raja speech - 2026

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக அரசு தடை விதித்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்துக்களை கைது செய்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த உடன் குவிந்த இந்து அமைப்பினரால் பழங்காநத்தம் அதிர்ந்தது.

திருப்பரங்குன்றம் கந்தர் மலையை மீட்போம் என இந்து அமைப்பினர் இன்று போராட்டத்திற்கு அறிவித்திருந்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சுமார் ஆயிரக்கணக்கில் பழங்காநத்தம் தில் கூடத் தொடங்கினர்.

ஆண்கள் மட்டுமல்லாத பெண்களும் அதிக அளவில் குவிய தொடங்கியதால் மாற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் இப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். எனினும் ஐந்து மணிக்கு மேல் தான் நீதிமன்றம் உங்களுக்கு ஆர்ப்பாட்டமும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன் யாரும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்தது.

இதன் பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5 :00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியதன் பேரில் அங்கு திரளான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரன் ஆகிய சிவபெருமானுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அங்கே மலைமீது அண்மையில் கட்டப்பட்ட தர்காவில் முஸ்லிம்கள் சிலர் மாமிச உணவு உண்டதால் பதற்றம் நிலவியது. உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்ததைக் கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த திமுக அரசு அனுமதித்த நிலையில், அதனை தொடர்ந்து மலையை காக்க, அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மதுரை நகர திமுக அரசின் போலீசார் அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, விழாக்காலமான பிப்., 11 வரை அனுமதி வழங்குவது கடினம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தலாம். இதற்கு போலீசார் உரிய பாதுகாப்பைத் தர வேண்டும். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறுப்பைத் தூண்டும் வகையிலான முழக்கங்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இதனையடுத்து மதுரை பழங்காநத்தத்தில் ஏராளமான முருக பக்தர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் அறப்போராட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரை திமுக அரசின் போலீசார் கைது செய்தனர். மடத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானுக்கு சொந்தமானது. அதில் அமைந்துள்ள தர்கா ஒன்றை காரணம் காட்டி, மலையில் ஆடு, கோழி வெட்ட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்து முருக பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்தே இந்து முன்னணி சார்பில், இன்று திருப்பரங்குன்றம் மலையை காக்கும் அறப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதை தடுக்கும் நோக்கத்துடன், போலீசார், மாநிலம் முழுவதும் கைது, வீட்டுக்காவல் நடவடிக்கை எடுத்து பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்களை அடைத்து வைத்தனர்.

அதன்படி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் கைது செய்யப்பட்டார். மேலும் வெவ்வெறு இடங்களில் ஊர்வலமாகவும், தனித்தனியாகவும் திருப்பரங்குன்றம் புறப்பட்ட ஆயிரக்கணக்கான பா.ஜ., இந்து முன்னணி தொண்டர்கள், ஆங்காங்கே மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

usilampatti ganapathi temle kumbabishekam - 2026

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமை வாய்ந்த மஹா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மஹா கணபதி ஆலயம்., 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 51 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பி கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

முன்னதாக, சிவாச்சாரியார்கள் கணபதி யாக பூஜையுடன் துவங்கி மூன்று கால யாக பூஜைகள் செய்து உருவேற்றி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, தீயணைப்புத்துறை வாகனம் மூலம் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் கணபதி சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை செய்து சிறப்பு அலங்காரத்தில் பூஜை செய்தனர் இந்த கும்பாபிஷேக விழாவிற்கு, உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில் அமைந்துள்ள கலசத்தில்சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கலசத்திற்கு கொண்டு சென்று கும்பத்தில் ஊற்றினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படது. விழாவிற்கான ஏற்பாடுகளை, 66.எம் உசிலம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இப்படியே போனா… இரும்புக் கரம் பேரிச்சம்பழம் வாங்கத்தான் பயன்படும்!

annamalai stalin edappadi
அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

கடந்த வருடம் காவல்துறை எஸ். ஐ., தேர்வுகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு ஒரு பட்டியல் வெளியாகி அதை உயர்நீதிமன்றம் கண்டித்தது. அதன் பின்னர் பட்டியல் திருத்தப்பட்டது. ஆனால், அதை நீதிமன்ற ஆணைக்குப் பின்னும் தாக்கல் செய்யமுடியாத அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, ஏடிஜிபி கல்பனா நாயக் விசாரித்தார்.

இது தொடர்பாக அறிக்கைகளை தயார் செய்துவந்த அவரது அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் சென்ற ஜூலை மாதம், தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. மேலும் இறுதி தேர்வாளர்களின் பட்டியல் அவரது பார்வைக்குச் செல்லாமல் வெளியிடப்பட்டது. இது குறித்துப் பேசிய ஏடிஜிபி கல்பனா நாயக், தன்னைக் கொலை செய்ய நடந்த சதி தான் இது. தான் சில நிமிடங்கள் தாமதமானதால் தப்பித்தேன் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இரும்புக்கரம் எதற்குப் பயன்படுகிறது? என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தை அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுகின்றனர்; போலீஸ் உயர் அதிகாரிகள் கூட மாநிலத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. நீதியை நிலை நிறுத்த வேண்டிய முதல்வரின் இரும்புக்கரம், உண்மையை மறைப்பதற்குப் பயன்படுகிறது – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஸ்டாலின் மாடல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.

தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?

ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, திரு. ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி! என்று, அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

இத்தகைய பின்னணியில், அண்ணாமலை குறிப்பிட்டவாறு ஸ்டாலினின் இரும்புக் கரம் எதற்கு பயன்படுகிறது என்று சமூகத் தளங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு, பலரும் பல விதங்களில் பதில் கூறி வருகின்றனர்.

இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டே வந்தால், ஸ்டாலின் குறிப்பிட்ட இரும்புக் கரம், ஓட்டை உடைசல் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் வாங்கித் தின்னத்தான் லாயக்கு என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏடிஜிபி.,யிடம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை அதிகாரத்தில் உள்ளவருக்கே இந்நிலை என்றால், எளியவர்களின் பாடு இந்த மாடல் ஆட்சியில் என்ன பாடு படும் என்று கேள்விகளை முன்வைக்கிறார்கள் பலரும்! அதுவே நம் கேள்வியும் கூட!

உண்மையை மௌனமாக்கவே பயன்படுகிறது ஸ்டாலினின் இரும்புக்கரம்!

annamalai bjp tn leader - 2026

தமிழக முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என்று, தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகத் தளக் கருத்து…

விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?

காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.

தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

போலீஸ் ஆள்சேர்ப்பு முறைகேட்டை வெளியிட்டதால் கொலை செய்ய சதியா? ஏடிஜிபி புகார்; டிஜிபி அலுவலகம் மறுப்பு!

adgp kalpana naik letter to dgp - 2026

போலீஸ் ஆள் சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால், தன்னை கொல்ல சதி நடந்திருப்பதாக தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கல்பனா நாயக் குற்றம்சாட்டி உள்ளார். இது தமிழகத்தில் மக்களிடமும், அரசியல் மட்டத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு டிஜிபி அலுவலகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 2024ம் வருடம் ஜூலை 29ம் தேதி அன்று, இங்கு திடீரென தீ விபத்து நிகழ்ந்த்தால், பெரும் பரபரப்பு நிலவியது. ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 15, 2024 அன்று இப்புகாரை டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கல்பனா நாயக் அனுப்பிவைத்துள்ளார். இதை அடுத்து, அவரின் புகார் மீது விரிவான விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டார். ஆனால் 6 மாதங்கள் கடந்த பிறகும் விசாரணை முடிவுகள் வெளிவரவில்லை. எனினும், இந்தத் தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாக கல்பனா நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏடிஜிபி கல்பனா நாயக், இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது…

ஜூலை 29, 2024 அன்று, சென்னையில் எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை, நான் வெளிக்கொண்டு வந்த சில நாட்களில், இந்த தீவிபத்து நடந்தது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த இந்த ஆட்சேர்ப்பை நான் தடுத்ததால், தமிழக அரசுக்கு ஏற்படவிருந்த அவமானம் தடுக்கப்பட்டது. ஆனால் அது, என் உயிருக்கு ஆபத்தையும், அரசு சொத்துக்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 29 அன்று, சென்னையில் உள்ள எனது அறைக்கு சென்ற போது, அங்கு தீவிபத்து நடந்திருந்தது. எரிந்த என் நாற்காலியைக் கண்டபோது, அதிர்ச்சி அடைந்தேன். நான் சிறிது நேரத்திற்கு முன்பு அறைக்கு வந்திருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். ஏசி.,யில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக நடந்த இந்த தீவிபத்து, என் அலுவலகத்தை அழித்து விட்டது. விபத்து நடந்த ஒரு நாளிலேயே, போலீஸ் ஆட்சேர்ப்பு பட்டியல், எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது.

மூத்த அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவினால், மற்ற போலீசாரின் நிலைமையை சிந்திக்க வேண்டும். – இவ்வாறு அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கல்பனா நாயக் அறையில் வேண்டும் என்றே திட்டமிட்டு தீ வைத்ததாக ஆதாரங்கள் இல்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைக்கவில்லை. தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாசவேலை காரணமல்ல.

அறையின் மின்கசிவு கசிந்தது என்பதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. – என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.