Home Blog Page 167

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; புதிய மேல்சாந்தி பதவியேற்பு!

sabarimala nata opened for mandala pooja - 2026
#ஸ்ரீ கோவில் நடைதிறந்து இவ்வாண்டு சபரிமலை மேல்சாந்தியாக பதவியேற்கும் பிரம்ம ஸ்ரீ அருண்குமார் நம்பூதிரி அவர்களுக்கு தந்த்ரி ப்ரம்மஸ்ரீ கண்டரரு ராஜீவரு கலசாபிஷேகம் செய்வித்து, மேல்சாந்தியாக ஸ்ரீ கோவிலின் உள்ளே அழைத்துச் செல்லும் நிகழ்வு! ஸ்வாமியே சரணம் ஐயப்பா

இவ்வாண்டு சபரிமலை மேல்சாந்தியாக புதிதாக பதவியேற்ற பிரம்ம ஸ்ரீ அருண்குமார் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து நெய் தீபம் ஏற்றி வைத்து 41 நாள் மண்டல பூஜை வழிபாட்டை இன்று பக்தர்கள் சரண கோஷம் முழங்க துவக்கி வைத்தார்.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக வெள்ளி மாலை திறக்கப்பட்டது.

மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி தந்திரி கண்டரரூ ராஜீவரு முன்னிலையில் நடை திறந்து தீபம் ஏற்றி அணையா தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைத்தார்.

இந்த கார்த்திகை மாதம் முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் அழைத்து வந்து பிரசாதம் வழங்கினார்.

புதிதாக பதவியேற்ற மேல்சாந்தி இருவருக்கும் தந்திரி ஐயப்பன் மந்திரம் காதில் ஓதி முறைப்படி சன்னிதானம் அழைத்து வந்து ஐயனின் முன் பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர் இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெற்றது. வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டடது.

இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி நடை திறந்து ஐயன் சன்னிதானத்தில் நெய் தீபம் ஏற்றி வைக்க 41நாள் மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கியது. தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான பக்தர்கள் கொண்டு வந்த நெய்யால் மண்டல கால நெய் அபிஷேகம் துவங்கியது.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது. 18 படிகளில் இந்த சீசனில் அனுபவம் நிறைந்த போலீசார் மட்டுமே பக்தர்களுக்கு உதவ நியமிக்கப்படுவார்கள்.

இதற்காக கடந்த சித்திரை ஆட்டத் திருவிழா பூஜையின் போது படி ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 18 படிகளுக்கு மேலே நகரும் கூரை பணியும் முடிந்துள்ளது.

சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

40 லட்சம் டின் அரவணை தற்போது இருப்பில் உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் . இதனால் சீசன் தொடங்கி கூட்டம் மிக அதிகரித்தாலும் பிரசாதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

IND Vs SA T20: அபார வெற்றி பெற்ற இந்திய அணி; தொடரை வென்றது!

ind vs sa t20 - 2026
#image_title

இந்தியா தென் ஆப்பிரிக்கா நான்காவது டி20 ஆட்டம் – ஜோகன்னஸ்பர்க்– 15.11.2024

இந்திய அணி தொடரை வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 283, திலக் வர்மா 120, சஞ்சு சாம்சன் 109, அபிஷேக்ஷர்மா 36) தென் ஆப்பிரிக்க அணியை (18.2 ஓவர்களில் 148, ஸ்டப்ஸ் 43, டேவிட் மில்லர்36, மார்கொ ஜான்சன் 25, அர்ஷ்தீப் சிங் 3/20, வருண் 2/42, அக்சர் படேல் 2/6, ரவி பிஷ்னோய்1/28,) 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நான்குடி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவதற்காகச் சென்றிருக்கிறது. அதில் முதலாவது ஆட்டம் டர்பன்நகரில் நடந்தது. அதில் இந்திய அணி 61 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம்கபரைகா நகரில் நடந்தது. அதில் தெ ஆப்பிரிக்க அணி  3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவதுஆட்டம் செஞ்சுரியன் மதானத்தில் நடந்தது. இதில் திலக் வர்மா அடித்த சதம் காரணமாய்இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, இன்று இறுதி ஆட்டம் இன்று ஜோகன்னஸ்பர்க்கில்நடந்தது. பூவாதலையா வென்ற இந்திய அணி மட்டையாட முடிவுசெய்தது.

          இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சுசாம்சன் (56 பந்துகளில் 6 ஃபோர், 9 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன் ரன்),அபிஷேக் ஷர்மா (18 பந்துகளில் 2 ஃபோர், 4 சிக்சர்களுடன் 36 ரன்) அருமையான தொடக்கம்தந்தனர். பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு73 ரன்கள் எடுத்தது. அபிஷேக் ஷர்மா 5.5ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்திலும்திலக் வர்மா மூன்றாவது இடத்தில் இறங்கினார். இந்திய அணி 100 ரன்களை 51 பந்துகளிலும்150 ரன்களை 70 பந்துகளிலும் 200 ரன்களை 85 பந்துகளிலும் எடுத்தது. 20 ஓவர் முடிவில்ஒரு விக்கட் இழப்பிற்கு 283 ரன் எடுத்தது.

          சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ரெகுலர் கிரிக்கட்விளையாடும் அணியின் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறை. திலக் வர்மா அடுத்தடுத்தஆட்டங்களில் சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முதல் வீரர் சஞ்சு சாம்சன். தென் ஆப்பிரிக்கஅணியின் சுழல் பந்து வீச்சாளர்களார் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

          இரண்டாவதாக விளையாட வந்த தென் ஆப்பிரிக்கஅணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்றிக்ஸ் முதல் ஓவரில் ஆட்ட்மிழக்க,ரிக்கிள்டன் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மர்க்ரம் மூன்றாவதுஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் விக்கட்டுகளையும் எடுத்தர்.இதனால் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 148 ரன்மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

          இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

பல சாதனைகளை முறியடித்த இன்றைய அற்புதமான இந்தியன் இன்னிங்ஸ்…

★1 டி20i வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் முதல் முறையாக இரண்டு வீரர்கள் செஞ்சுரி அடித்து அட்டகாசமான புதிய சாதனை.

★2 ஒரு வருடத்தில் மூன்று முறை T20 செஞ்சுரிகள் அடித்து புதிய சாதனை படைத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார் சஞ்சு சாம்சன். #SanjuSamson

★3 அடுத்தடுத்த போட்டிகளில் செஞ்சுரி அடித்து இரண்டிலும் நாட் அவுட் ஆக புதிய சாதனை படைத்தார் திலக் வர்மா. #TilakVarma

★4 வெளிநாட்டில் இந்தியா அமர்க்களமாக அடித்த அதிகபட்ச ரன்கள் (283) புதிய சாதனை.

★5 சவுத் ஆப்ரிக்கா வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பதிவான அசத்தலான அதிகபட்ச ரன்கள் (283) புதிய சாதனை,

★6. T20i வரலாற்றில் மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் (210) ரன்கள் 2வது விக்கெட்டுக்கு அனாயாசமாக ஒரு புதிய சாதனை.

★7. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (23) அடித்த அணி இந்தியா மற்றொரு அதிரடியான புதிய சாதனை.

ரயிலில் அத்துமீறிய நபர்; விசாரணை கோரும் அ.பா.ம.க., தலைவர் ராமநாதன்!

abmk ramanathan complaint against man in train - 2026
#image_title

செம்மொழி எக்ஸ்பிரஸ்ஸில் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரிடம் அத்துமீற முயன்ற இளைஞர் மீது தீவிர விசாரணை – கரூர் ரயில்வே போலீஸார் தீவிரம்!

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவராக இருப்பவர் ராமநாதன், இவர், தஞ்சாவூரில் இருந்து கோயம்புத்தூருக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ்ஸில் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.

அவர், குளிர்சாதன பெட்டி முதல் வகுப்பில் கரூர் வழியாக வந்து கொண்டிருந்த நிலையில், ஓர் இளைஞர் சந்தேகத்திற்கிடமான நிலையில்,தூங்கிக் கொண்டிருந்தவரைத் தட்டி எழுப்பியுள்ளார். கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதோடு, தண்ணீர் பாட்டில் வேண்டுமா? என்றும் கேட்டுள்ளார்.

அந்த நபர் ரயில்வே கேண்டீனில் தற்காலிகமாக பணியாற்றுவதாகக் கூறியதாகவும், அவரிடம் அடையாள அட்டை ஏதும் இல்லை எனும் நிலையில், இஸ்லாமிய இளைஞர் என்று தெரியவந்த நிலையில், தாம் சந்தேகம் கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார் ராமநாதன்.

ஏற்கெனவே கடந்த 12 ம் தேதி, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை, அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான தாம் சந்தித்து, தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளதாகவும், அவர்களை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை கொடுத்து அதை, தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகவும் தெரிவித்த ராமநாதன், இந்தச் சூழ்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், தமது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, கரூர் ரயில்வே போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதில், அந்த இளைஞர் கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியைச் சார்ந்த இப்ராஹிம் என்று தெரியவந்துள்ளது.

அமைச்சர் பேரச் சொல்லி ரூ.41 லட்சம் சுருட்டிய திமுக., நிர்வாகி மீது புகார்!

complaint against ranipettai dmk person - 2026
#image_title

ராணிப்பேட்டை: `பணத்தை கேட்டால் பிணம்தான்… என மிரட்டுவதாக அமைச்சரின் உதவியாளர்” குறித்து, எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்

“கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் உதவியாளர் எனக்கூறி ரூ.41 லட்சம் பணத்தை மோசடி செய்ததோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும்’’ ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-வின் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் மீது புகாரளித்திருக்கிறார் பெண் ஒருவர்.

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில், “எனக்குத் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். நானும் எம்.பி.ஏ வரை படித்துவிட்டு 2013 முதல் 2019 வரை சிங்கப்பூரில் டி.ஹெச்.எல் என்ற தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளத்துக்கு வேலைப் பார்த்து வந்தேன். 2019-ம் ஆண்டு அந்த வேலையை விட்டுவிட்டு செட்டில்மெண்ட் தொகை ரூ.24 லட்சத்துடன் சொந்த ஊரில் தொழில் தொடங்குவதற்காக வந்தேன்.

இந்த நிலையில்தான் முகநூல் (ஃபேஸ்புக்) மூலமாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் நண்பராக அறிமுகமானார். தி.மு.க பிரமுகர் எனவும், கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் உதவியாளர் எனவும், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியின் நெருங்கிய நண்பர் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸ்ரீநிவாஸ், அமைச்சர் மற்றும் அமைச்சரின் மகனுடன் சேர்ந்து இருக்கும் அவரின் புகைப்படங்களையும் காட்டினார்.

அதோடு, ராணிப்பேட்டை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே தனக்குச் செல்வாக்கு இருப்பதாகவும், நிறையத் தொழில் செய்து வருவதாகவும், வியட்நாமில் `GO GREEN’ என்ற லெதர் தொழிற்சாலைக்கு அவர்தான் சி.இ.ஓ எனவும் ஸ்ரீநிவாஸே என்னிடம் கூறினார்.

இதையடுத்து, ராணிப்பேட்டையில் புதிதாக அகர்பத்தி பவுடர் இறக்குமதி தொழில் செய்யத் திட்டம் இருப்பதாகக் கூறிய ஸ்ரீநிவாஸ், என்னை பங்குதாரராகச் சேர்த்துகொள்வதாகக் கூறினார். முன்பணமாக ரூ.5 லட்சம் கேட்டார். நானும், என் தோழி ஒருவரும் சேர்ந்து கடந்த 2021 ஜூலை மாதம், அந்தத் தொகையை அவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். அதன் பிறகு `தொழில் வளர்ச்சிக்காக கார் ஒன்றை புதிதாக வாங்க வேண்டும்’ என்று கூறியும் ரூ.62 ஆயிரம் வாங்கினார்.

இதையடுத்து, அகர்பத்தி தொழிலில் கொஞ்சம் பிரச்னை இருப்பதாகக் கூறிய ஸ்ரீநிவாஸ், `கைத்தறித்துறை அமைச்சரின் மூலமாக ஏரியைத் தூர்வாரும் டெண்டர் எடுத்து தொழில் செய்யலாம். இதில் அகர்பத்தி தொழிலை விடவும் நல்ல லாபம் கிடைக்கும். இதற்காக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது. ரூ.20 லட்சம் கொடுத்தால், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக தந்து விடுகிறேன்’ என்று கூறினார்.

நம்பிக்கை அடிப்படையில் நானும் ரூ.19.50 லட்சம் பணத்தை கடனாக வாங்கி, ஸ்ரீநிவாஸ் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி வைத்தேன். இதுவரை என்னிடம் இருந்து ரூ.41.20 லட்சத்தை ஏமாற்றியுள்ளார் ஸ்ரீநிவாஸ்.

இந்த நிலையில், நான் தொழில் தொடர்பாக கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி வந்தார். எனக்குக் கடன் கொடுத்தவர்களும் பணத்தை திரும்பக் கேட்க ஆரம்பித்தார்கள். இதனால், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி ஸ்ரீநிவாஸை தொடர்புகொண்டு என்னுடைய பணத்தை திரும்ப கேட்டேன். அதற்கு அவர், `உனக்கு ஒரு ரூபாய்க்கூட கொடுக்க முடியாது. பணம் கேட்டு ராணிப்பேட்டை பக்கம் வந்தால் பிணமாகத்தான் போவாய்’ என மிரட்டினார். எனவே, ஸ்ரீநிவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து என்னுடைய ரூ.41.20 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்தப் பெண்.

இதையடுத்து, இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி கிரண் ஸ்ருதி.

மேலும் புகார் குறித்து வேதா ஸ்ரீநிவாஸிடமே விளக்கம் கேட்டோம். “இது பிசினஸ் கம்ப்ளைன்ட். கட்சியில் என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காத ஒருசிலரின் தூண்டுதல் காரணமாக இப்படியான புகார்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் யாரையும் மிரட்டவில்லை. இதற்கு முன்பு அதுபோன்ற புகார்களும் என் மீது வந்ததில்லை. நான் அமைச்சருடன் இருப்பதாலும், அவரின் பெயரையும் சேர்த்து கெடுக்க வேண்டும் என்று பொய்ப் புகார் கொடுத்திருக்கின்றனர். என் தரப்பு வழக்கறிஞர் மூலமாக சட்டப்படி இந்த புகாரை எதிர்கொள்ளப் போகிறேன்’’ என்றார்

காவல் தெய்வத்துக்கு ஐப்பசி பௌர்ணமி சிறப்பு அபிஷேகம்!

pournami poojai in sellandipalayam kaval therivam - 2026
#image_title

டி. செல்லாண்டிபாளையம் சாலையில் உள்ள காவல் தெய்வத்திற்கு ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகுதியில் சாலையில் குடிகொண்டு நூதன முறையில் அருள்பாளித்து வரும் காவல் தெய்வத்திற்கு இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ச்சியாக காவல் தெய்வத்திற்கும், பெண் தெய்வத்திற்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் டி செல்லாண்டிபாளையம் சாலையில் அருள் பாலிக்கும் காவல் தெய்வத்திற்கு நடைபெற்ற ஐப்பசி மாத பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சமயபுரம் கோயிலில் புரட்டாசி பௌர்ணமி 108 விளக்கு பூஜை

samayapuram mariamman temple - 2026
#image_title

திருச்சி: சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை.

திருச்சி சமயபுரம் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் வந்து மன நிம்மதிக்காகவும் ,வேண்டுதல்களுக்காவும் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி செல்கின்றனர் .

இந்நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று மாலை 108 பெண்கள் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை செய்தனர்.

இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளான நேற்று சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடைத்திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெண்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் மாரியம்மன் முன்பு பூஜை நடைபெற்றது.

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையின் முடிவில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

மேலும் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன் உதயம் ரவி கோயில் குத்து விளக்கை ஏற்றி 108 திருவிளக்கு பூஜையை துவங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் செய்து இருந்தனர்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

karur annabhisekam - 2026
#image_title

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் கரியமாளீஸ்வரர், காந்திமதி அம்மன், நாகேஸ்வரர், செளந்தரநாயகி சுவாமிக்கு அன்னாபிஷேகம் அலங்காரம்

கரூர் கல்யாண பசுபதிசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள பசுபதீஸ்வரர் , நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர், சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் சுவாமிகளுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார் கற்பூர ஆர்த்தி ,கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி மற்றும் தீபாரதனை நடைபெற்றது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அண்ணா அபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை மண்டல பூஜை நடை இன்று திறப்பு: பஸ் சேவையில் கோட்டை விட்ட தமிழக அரசு!

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருநடை வெள்ளிக்கிழமை நவம்பர்15-ந்தேதி திறக்கப்படுகிறது. முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் முகாமிட்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை நவ 16ல் மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெறும். டிசம்பர் 26-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசு விரிவாக செய்துள்ளது.

கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பூஜைகளின் நிறைவாக 41 வது நாள் மண்டல பூஜை நடைபெறும், இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி கோவிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.

தொடர்ந்து அங்கு காத்திருக்கும் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்திகள் சபரிமலை – அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து சன்னிதி முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு புதிய மேல் சாந்திகளுக்கு அபிஷேகம் நடத்துவார்.

வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நவ.16 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பூஜைகள் தொடங்கும்.

மண்டல சீசனில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பாட் புக்கிங் கவுண்டர் பம்பையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விரைவுப் பேருந்துகள் இயங்குமா?!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி தென்காசி செங்கோட்டை வழி கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை மீண்டும் இயக்க பக்தர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் செல்வதற்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை வழி கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்த வழித்தடத்தில் தான் முன்பு ஏராளமான பக்தர்கள் வேன் பஸ்களில் சபரிமலை சென்று வந்தனர் . சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக மதுரை தென்காசியில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் பம்பைக்கு மண்டல மகர விளக்கு காலங்களில் நேரடி சிறப்பு பஸ்களை செங்கோட்டை புளியரை புனலூர் பத்தனம்திட்டா வழியாக இயக்கியது.

கொரோனா காலத்திற்கு பின்பு இந்த சிறப்பு பஸ்கள் தென்காசியில் இருந்து இயக்கப்படுவதில்லை சென்னை மதுரை பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து குமுளி வழியாகவே பஸ்கள் இயக்கப்படுகிறது.

மதுரை தென்காசி நகரங்களிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை புனலூர் பத்தாம் திட்ட வழியாக பம்பைக்கு இயக்கப்பட்ட சபரிமலை சீசன் களச் சிறப்பு பஸ்கள் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குவது இல்லை கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் மட்டுமே பம்பையில் இருந்து தென்காசிக்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

தற்போது இந்த வழித்தடத்தில் செங்கோட்டையில் இருந்து அல்லது தென்காசியில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதுவரை தென்னக ரயில்வே ரயில்வே வாரியம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை சேலம் பாலக்காடு வழியாகவே கோட்டையம் சங்கனூருக்கு இயக்குகிறது.

இந்த வழித்தடத்தில் பெங்களூரில் இருந்து மற்றும் சென்னையில் இருந்து செங்கோட்டை புனலூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை. தற்போது இந்த வழித்தடத்தில் கேரளாவுக்கு ரெகுலர் சர்வீஸ் களாக இயக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் தற்போது இயங்குவதில்லை

சென்னையில் இருந்து மதுரை தென்காசி செங்கோட்டை புனலூர் வழியாக பத்தனம்திட்டாவிற்கு தினசரி விரைவு போக்குவரத்து கழகம் பஸ் சொகுசு சூப்பர் பஸ்சாக இயக்கப்பட்டது. இது போல் கொல்லும் புனலூர் செங்கோட்டை வழி சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் இயங்கி வந்தது.

மேலும் கொட்டாரக்கராவில் இருந்து தென்காசி வழியாக திருச்சிக்கு தினசரி இரண்டு பஸ்களும் கொட்டாரக்கராவில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பஸ் கொல்லத்திலிருந்து ஒரு அரசு விரைவு பஸ்ஸும் சென்னைக்கு இயக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடியில் இருந்து தென்காசி செங்கோட்டை வழியாக குருவாகி இருக்கும் ஒரு அரசு விரைவு போக்குவரத்து கழக சொகுசுபஸ் இயக்கப்பட்டது இந்த பஸ்கள் அனைத்துமே தற்போது இயங்குவதில்லை. இந்த பஸ்களை மீண்டும் இயக்கி சபரிமலை செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும் என பயணிகள் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் செங்கோட்டை கேரளாவின் நுழைவு வாயில் பகுதியாக உள்ளது. செங்கோட்டையில் இருந்து பண்பொழி அச்சன்கோவில் வழியாக பத்தணாபுரம் சென்று பத்தனம்திட்டா வழி பம்பைக்கு எளிதில் சென்று விடலாம்.

இதுபோல் செங்கோட்டையில் இருந்து புனலூர் வழியாக பத்தனம்திட்டா வழி பம்பைக்கு செல்வதற்கு நல்ல தேசிய நெடுஞ்சாலை வசதி உள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டைக்கு அதிகளவில் வருகை தந்து இங்குள்ள ஐயப்பன் படை வீடுகளைக் காணச் செல்கின்றனர்.

செங்கோட்டையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோவில், செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஆரியங்காவு, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.

இந்தக் கோவில்கள் ஐயப்பனின் படைவீடு கோயில்களாக உள்ளன. இதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு ஒரு அரசு பஸ்சை தினமும் இரண்டு முறை இயக்கி வந்தது. இந்த பஸ் தற்போது சீராக இயங்குவதில்லை. சீசன் காலத்தில் இந்த பசை வசூல் ரீதியாகப் பார்க்காமல் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் இயக்க பயணிகள் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்!

அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

gangaikondachozhapuram annabhishekam
#image_title
  • ராமலிங்கம் கிருஷ்ணா

கலியுகத்தில் உலக உயிா்களுக்கு உணவு தான் பிரதானமாக உள்ளது. உயிா் வாழ உணவு இன்றியமையாதது ஆகும். இதனை உணா்ந்தே, “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பொங்கினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. மனித வாழ்வில் “இது போதும்” என்று மனித மனம் திருப்தி அடையும் இடமே உணவுதான்.

கல்லுக்குள் தேரையும் கருப்பை உயிரும் உயிா்வாழ மறவாமல் படியளக்கும் பரமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் அன்னம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபடுவதே புனிதம் நிறைந்த “அன்னாபிஷேக” நிகழ்வாகும்.

உபநிஷத் போற்றும் அன்னம் ! “அஹமன்னம், அஹமன்னம் , அஹமன்னதோ”, என்கிறது, அதாவது அன்னமே இறைவடிவம் என்றும் மஹேஸ்வரனே அன்னத்தின் வடிவில் இருக்கிறாா் என்றும் அன்னமே தானாக இருக்கிறேன் என்று ஈசனே திருவாய் மலா்ந்துள்ளதாக வேதங்கள் தொிவிக்கின்றன.

“தட்சன்” தனது அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டு அவனிடம் தனது பெண்கள் அனைவரையும் சமமாகப் பாவித்து அவர்கள் எல்லோரிடமும் சமமான அன்பு செலுத்தவேண்டுமென ஆசீர்வதித்தான்.

ஒன்பது கிரகங்களில் சந்திரன் தான் நம் எண்ணவோட்டத்தை நிர்ணயம் செய்பவன் எனவே சந்திரனுக்கு மனோகாரகன் என்றும் பெயருண்டு. ஆனால் அந்த சந்திரன் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது. 27 கன்னி பெண்களை மணந்தும், “ரோகிணி” மீது மட்டும்தான் அவன் அதிக பாசத்தையும் அன்பையும் காட்டிட, இவன் இழைக்கும் அநீதியை எப்படி மற்ற இருபத்தாறு பெண்கள் எப்படி பொறுத்துக்கொண்டு இருப்பார்கள், அவர்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர்.

உடனே இந்த நிலைக்கு என்ன காரணம் என்று சந்திரனிடம் கேட்க, பதில் கூற முடியாமல் தவிப்பதைக் கண்ட தட்சன், தனது மருமகனை கோபத்துடன், “நீ இதுநாள் வரை கற்றறிந்த கலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக உன்னை விட்டு நீங்கக்கடவது,” என்று சாபம் கொடுத்தான்.

தட்சனின் சாபத்தை கண்டு கலங்கிய சந்திரன் இதை நீக்கம் செய்ய ஒரு உபாயம் கூறவேண்டும் என இந்திரனை கேட்கவும், தட்சனின் கோபத்திற்கு நான்

ஆளாக நோிடுமென அஞ்சி அவன் பதிலேதும் கூறாமல் மெளனமாகிவிட சாபம் நீங்க வழி தேடித்தேடி சந்திரனின் கலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் தேய்ந்து சுருங்க, இந்த சாபத்தை தீர்க்க நான்முகனை தனக்கு உதவி செய்யுமாறு வேண்ட, சந்திரனின் இந்த நிலையைக் கண்ட பிரம்மன், “இந்த சாபத்தினால் வரும் வினைகளை தீர்க்கக்கூடிய வல்லமை எல்லாம் வல்ல ஈசனுக்கு மட்டுமே உண்டு” என கூற அந்த கயிலை நாதனை தஞ்சமடைந்துவிடு என்று கூற,

கயிலை மலை சென்று அங்கு சிவனார் மற்றும் அம்பிகையையும் மனமுருகித் தொழுது, இந்த சாபத்திலிருந்து என்னை காப்பாற்றவேண்டும் என்று ஈசனின் திருவடிகளில் சரணடைந்தாா்.

“மின்னாா் செஞ்சடை மேல் மிளிா் கொன்றை அணிந்த பொன்னாா் மேனியன்” சாபத்தை நீக்க திருவுள்ளம்

கொண்டு ஒவ்வொரு கலைகளாக தேய்ந்து பிறை வடிவிலிருந்த சந்திரனை சூடிக்கொண்டு,“சந்திரமெளலீஸ்வரராக” காட்சி தந்து சாபத்தைப் நீக்கியருளி, “இன்று முதல் தேய்ந்த உனது கலைகள் மீண்டும் வளர அருள்புரிகிறேன்” என ஆசீர்வதித்து, பதினைந்து தினங்கள் தேய்ந்த உன் கலைகள் அனைத்தும் அடுத்த பதினைந்து தினம் திரும்ப வளர அருள்புரிகிறேன்” என்றார். அந்த கயிலை நாதன் சந்திரனின் சாபத்தை போக்கிய ஐப்பசி மாத நிறைநிலவில் பூர்ண ஒளியுடன் மிளிர்ந்தான். இந்த தினமே சிவ “அன்னாபிஷேக” தினம் என்பதால் பஞ்ச பூதங்களின் வடிவாக விளங்கும் ஈசனுக்குப் பஞ்ச பூதங்களின் மூலம் விளைந்த அன்னத்தை ஐப்பசி மாத பெளா்ணமியன்று அபிஷேகம் செய்து பூஜிப்பதே “அன்னாபிஷேகம்” ஆகும்.

பூமிக்கு அருகில் சந்திரன். வானியல் அறிவியலின்படி அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் சந்திரன் பூமிக்கு வெகு சமீபமாக வருவதால் அதன் ஒளி மிகவும் பிரகாசமாக நமக்கு தொிகிறது.

ஐப்பசிமாத பெளா்ணமியில் சந்திரனின் ஒளி வெள்ளத்தை நாம் கண் கூடாக காணலாம். இந்த நாளில் ஈசனின் மேனி மீது சாற்றப்பட்ட ஒவ்வொரு சாதத்தின் பருக்கையும் ஒரு சிவலிங்கமாகவே வணங்கப்படுகிறது. அன்னாபிஷேக அன்னத்தால் ஆன ஆடையை அணிந்து கொண்டிருக்கும் சிவனை தாிசனம் செய்தால் “கோடிசிவ லிங்க தாிசனம்” செய்த பலன் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி பெளா்ணமி அன்னாபிஷேக தாிசனம் முடிந்ததும் ஈசனின் லிங்கத் திருமேனியில் சாற்றிய அன்னம் பிாிக்கப்பட்டு வேதகோஷங்கள் முழங்க சாற்றி அந்த அன்னத்தின் ஒரு பகுதியை அருகிலுள்ள நீா் நிலைகளில் கரைத்து அங்கு தீபாரதனைகள் நடக்கும், இதன் மூலம் நீாில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஈசன் படியளப்பதாக ஐதீகம்.

ஈசன் “சூாிய வடிவம்” என்றும் அம்பிகை “சந்திர வடிவம்” என்றும் போற்றுகின்றன வேதங்கள். இதனால் சந்திரன் தானிய மான நெல்லிலிருந்து கிடைக்கும் அாிசி (அன்னம்) அம்பிகையின் அம்சம் பொருந்தியதாக நம்பப்படுகிறது. அாிசியின் வடிவமாகத் திகழும் அம்பிகை ஈசனின் திருமேனியைச் சேரும் நாள் “ஐப்பசி அன்னாபிஷேக நாளாக” வணங்கப்படுகின்றது.

இத்திரு நாளில் சிவசக்தி வடிவமாக விளங்கும் ஈசனை வழிபட பிாிந்த தம்பதியா் ஒன்று சோ்வா் என்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்றும் நம்பப்படுகிறது.

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியையாம் பாடக்கேட்டேயும் வாட் தடங்கண் மாதேவளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதாரமளியின் மேல்நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனுமாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோரெம்பாவாய்.”

நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பர். நம் மனதுக்கு அதிபதி சந்திரன் தான், பலத்தை உண்டு பண்ணுபவன், சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அரிசியைக் கொண்டு சோறு சமைத்து அதை ஈசன் திருமேனி எங்கும் சாத்தி வழிபடுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

குறிப்பாக ஜாதகத்தின் சந்திரன் பலவீனமாக உள்ளவர்கள், மனநலம் மேம்பட வேண்டுபவர்கள் சந்திராஷ்டம தினங்களால் மிகுந்த துயரடைபவர்கள் அன்னாபிஷேக தரிசனம் கண்டால் மனக் கலக்கங்கள் மறைந்து நிம்மதியும் இன்பமும் பெறுவர் என்பது நம்பிக்கை.

“இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல்தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ
எமை ஆளுமாறு ஈவதொன்றெமக்
கில்லையேல் அதுவோவுனதின்னருள்
ஆவடுதுறை அரனே.”

அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம்

மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை நமது முன்னோர் நன்கு உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே அன்னாபிஷேகம் போன்ற தெய்வீக நிகழ்வுகள்.

யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம், அன்னாபிஷேகத்தை தொடரும் அன்னதானமாக வெளிப் படுகிறது. “உண்ணும் உணவில் மட்டும் தான் இது போதும் என்று மனித மனம் திருப்தியுறும். பொன், பொருள் என எத்துணை அளித்தாலும் இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே மனம் எண்ணும்” எனவே தான் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கோயில் என்பது மனிதகுல மேம்பாட்டிற்கான மைய புள்ளியாக அமைந்திருக்கிறது என்பதையே இத்தகைய வழிபாட்டு முறைகள் உணர்த்துகின்றன. ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்ற ஆப்த மொழியை பெரியவாள் மேற்கோள் காட்டி, உணவிடுவதில் வித்தியாசம் பாராட்டவே கூடாது என்பார்.

கேரளத்தில் செருக்குன்னம் என்னும் தலத்திலுள்ள அன்னபூரணி ஆலயத்தில் சேவார்த்திகளுக்கு எல்லாம் அன்னம் படைத்த பிறகு, இரவில் அவ்வழியே செல்லும் திருடர்களுக்காக என்றே ஒரு மரத்தில் சோற்று பட்டை கட்டி வைக்கும் பழக்கம் இருப்பதாக அவருடைய பல உரைகளில் கூறியிருக்கிறார்.

எதிரெதிர் கட்சிகளான பாண்டவ படை, கௌரவ படை இரண்டிற்குமே உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் உணவு அனுப்பி பெருஞ்சோற்று சேரலாதன் என்றே பெயர் எடுத்ததாக சங்க இலக்கியங்களில் காண்கிறது என்று வெகுவாக ரசித்து கூறுவார்.

தானங்களில் சிறந்தது அன்ன தானம் தான், எவ்வளவு பொிய தானங்களும் தா்மங்களும் செய்த பின்னர் அவை அனைத்தும் பசித்து வரும் ஒருவருக்கு செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது.

அன்னாபிஷேகப் பலன்கள்.

சிவன் அபிஷேகப்பிாியா். ஈசனை பதினாறு வகையான திரவியங்கள் மற்றும் பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் சுத்த அன்னத்தால் அபிஷேகம் செய்வதாகும். சிவனாருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பான தாகும்.

“அன்னாபிஷேகம்” செய்வதால் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டு விவசாயம் தழைத்தோங்கும் என்றும் இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது என்று நம்பப்படுகின்றது.

ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தாிசித்த அன்பா்களுக்கு என்றுமே அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது. செல்வந்தா்களாக இருந்தும் பல நோய்களின் தாக்கம் காரணமாக ஒரு சிலருக்கு உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். சாப்பிட மனமிருந்தும் உடல் நிலை ஏற்காததால் உணவருந்த முடியாமல் தவிப்பாா்கள். இதனை “அன்னத் துவேஷம்” (அன்னத்தின் மீது வெறுப்பு) என்று கூறுவதுண்டு, இந்த நிலையில் உள்ள அன்பா்கள் இந்த அன்னாபிஷேக தினத்தன்று ஈசனைத் தாிசித்து அங்கு ஈசனுக்கு சாற்றிய அன்னத்தை சிறிது பிரசாதமாக அருந்தினால் அன்னத்தின் மீதான வெறுப்பு நீங்கும்.

அனைத்து சிவாலயங்களிலும் 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொண்டு பல்வேறு நன்மைகள் பெறலாம்.

ஓம் நமசிவாய – சிவாய நம ஓம்

மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

pradosha vazhipadu in madurai temples - 2026
#image_title

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில், பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்
வரலிங்கம் , பிரளய நாதர் சுவாமி ஆகியோருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

இவ்விழாவில், தொழில் அதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர்கள் எம். மருதுபாண்டியன், எம். வள்ளி மயில், கோவில் நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி பூபதி, வசந்த் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல, சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்திலும், மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், ஜூபிலி டர்ன் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும் தாசிலா நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும் ஜெ.ஜெ. நகர் விநாயகர் ஆலயத்திலும், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும் பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமான் அம்பாளுக்கு சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.