இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சோழவந்தான்: மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.
7-ம் நூற்றாண்டில் சங்கம் தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள் வசம் அப்போது, மதுரை ஆண்ட கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமார பாண்டியனும் சிக்கி அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ்நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை, மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும் வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து விநாகர் முன்வர திருஞானசம்பந்தருடன் நின்றசீர் நெடுமார பாண்டியனின் தலைமை அமைச்சரான குலச்சிரை நாயனாருடன் வந்து ஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடினை எடுத்து செல்லும் வைபவமானது கேடயத்தில் விநாயகர் குதிரை வாகனத்தில் ஏடகநாதர் மற்றும் கேடயத்தில் திரு ஞானசம்பந்தர் இவருடன் வைகை ஆற்று வாழ்க அந்தணர் என்ற வாசகம் குறித்த கரையில் உள்ள திருஞானசம்பந்தர் செப்பு தகட்டில் உள்ள ஏடு சன்னதியிலிருந்து, வாழ்க அந்தணர் என்ற செப்பு தகட்டில் ஆன ஏடு அலங்காரமாகி வைகையாற்றின் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.
இங்கு ஓதுவார் ஸ்தலத்திலேயே ,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக் கூறினர். நேற்று மாலை கன மழை பெய்த நிலையில் கனமழையிலும் பக்தர்கள் கூட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.
பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள். கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், கோவில் பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர், சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
எல்லா மனிதர்களுக்கும் ஸுகம் வேண்டும் என்கிற ஆசை பொதுவாக இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பகவானின் கிருபையை அடைவது மிக அவசியம். பகவானின் கிருபையை அடைவதற்கு சில ஸாதனங்களை சாஸ்திரங்கள் கூறியிருக்கின்றன.
மந்த்ரஜபம் என்பது அப்பேர்பட்ட ஸாதனங்களில் ஒன்று. ஏதாவது ஒரு மந்த்ரத்தை நிஷ்டையுடன் ஜபித்தால் இஷ்டார்த்தம் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
மந்த்ரங்களில் காயத்ரீ மந்த்ரம் மிகவும் உயர்ந்தது. காயத்ரீ மந்த்ரத்தை ஜபித்தவனுக்கு ஸகல க்ஷேமங்களும் உண்டாகும்.
காயத்ரீ என்கிற சப்தம் மட்டுமே காயத்ரீ மந்த்ரத்தை ஜபிக்கிறவனை ஆபத்திலிருந்து காப்பாற்ற கூடியது என்று நம்புகிறார்கள்.
உபநயனம் ஆன உடனே காயத்ரீ மந்த்ரத்தை உபதேசம் செய்யவேண்டும். அன்றைய தினம் முதல் ஒரு நாள் கூட தவறாமல் அதை ஜபிக்கவேண்டும். இதற்கான பலனை ஸுதஸம்ஹிதையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது சந்தேகத்துக்கு காரணம் எதுவும் இல்லாமல் அவன் எல்லா விருப்பங்களையும் அடைகிறான் என்று பொருள். காயத்ரீ உபாஸனையால் ஜனங்கள் சர்வாபீஷ்டங்களையும் அடைவார்களாக!
பாலக்காடில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இதனை கடந்த வாரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!
இந்நிலையில், நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டு, ஏற்கெனவே இயங்கி வந்த நெல்லை – தூத்துக்குடி பாசஞ்சர் ரயிலை நிறுத்தியதை பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
பாலக்காடு – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி!
செங்கோட்டையில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விஸ்வகர்மா சமுதாயத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் ஐயப்பன் முன்னிலையில் நடந்த பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு நடத்தி வைத்தார்.
இதில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
செங்கோட்டை அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சியில் வரும் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம். தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் ஆய்க்குடி பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து தென்காசி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார் வட்டாரமருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி மருத்துவ அலுவலர் முத்துபிரகாஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் வார்டு உறுப்பினர்கள் புணமாலை விமலா ராணி ஆகியோர் முன்னிலை வைகித்தனர் முகாமில் மகப்பேறு மருத்துவம் பொதுநல மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் பல் மருத்துவம் கண் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மேலும் ரத்த பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் இசிஜி மற்றும் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் ஆய்வு பரிசோதனைகள் நடைபெற்றது முகாமில் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் மலர்க்கொடி பொதுநல மருத்துவர் . மாரீஸ்வரி மகப்பேறு மற்றும் ஸ்கேன் பரிசோதனை மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன் கல்யாணசுந்தரம் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர் மற்றும் ஏனைய சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் முகாமில் ஆய்க்குடி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பரிசோதனை மருத்துவ ஆலோசனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர் முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா. செங்கோட்டை அருகே உள்ள சீவநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் 78வது சுதந்திர தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமைஆசிரியா் திவான்பக்கீர் தலைமைதாங்கினார். உதவி தலைமைஆசிரியா் கோமதிவிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை மண்டல துணை ஆளுநர் பால்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினா். அதனைதொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவா் அபுஅண்ணாவி, செயலாளா் தேன்ராஜ, பொருளாளா் சீதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். பட்டதாரி ஆசிரியா் கிறிஸ்டோபர் தொகுப்புரையாற்றினார். முதுநிலை ஆசிரியா் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது. செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து கட்டளைகுடியிருப்பில் வைத்து 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன் தலைமைதாங்கினார். துணைத் தலைவர் பாக்கியலட்சுமி முன்னிலைவகித்தார். கிராம சபை கூட்டத்தில் செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கல்யாண சுந்தரம் கலந்துகொண்டு பிறப்பு பதிவில் பெயர் சேர்ப்பதன் அவசியத்தை பற்றியும் தற்பொழுது பெயர் சேர்ப்பதில் 31 12 2024 வரை உள்ள விதிவிலக்குகள் பற்றியும் அதன் பிறகு விதிவிலக்குகள் கிடையாது என்பது பற்றியும் சுத்தமான குடிநீர் பருகுவதன் அவசியத்தை பற்றியும் அயோடின் உப்புகள் பற்றிய விழிப்புணர்வையும் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு உதவி திட்டம் மற்றும் தாய் சேய் நல பரிசு பெட்டகம் மாதவிடாய் கால சுகாதார திட்டம் மக்களை தேடி மருத்துவம் முதலிய தமிழக அரசின் பொது சுகாதார நலத் திட்டங்களை பற்றி விளக்கி கூறப்பட்டது கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் செயலர் இசக்கி நன்றி கூறினார்.
செங்கோட்டையில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் வைத்து நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு நகரத்தலைவா் ராமர் தலைமைதாங்கினார். தென்காசி மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவா் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், நகரத்துணைத்தலைவர் முருகையா, நகர மகளிரணி தலைவா் முத்துலெட்சுமி, ஆகியோர் முன்னிலைவகித்தனா். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட பொதுச்செயலாளா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நகரத்தலைவா் இராமர் தலைமையில் தேசபிதா மகாத்மா காந்தியின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னா் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மதுசித்திக், எஸ்சி,எஸ்டி பிரிவு நகரத்தலைவா் சிவன், நகர்த்துணைத்தலைவா்கள் காதர்அலி, கோதரிவாவா, நகரப்பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து. இசக்கியப்பன், சுப்பிரமணியன், நகரச்செயலாளா்கள் நடராஜன், சுடலையாண்டி, வார்டு தலைவா்கள் தங்கம், திருமலைக்குமார், நாகூர்மைதீன், வார்டு உறுப்பினா் வேல்சாமி, ஜேம்ஸ், நகர சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பூபதி, சேக்முகம்மது, வாவாகனி, முகம்மதுசர்புதீன், பெரியபிள்ளைவலசை கிராமத்தலைவா் சாய்பு உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 78 வது சுதந்திர தின விழா மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் வியாழக்கிழமையன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்த நிதி ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்திற்கு ரூபாய் 414.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணிகள் சேவையின் மூலம் ரூபாய் 270.94 கோடியும், சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் 115.60 கோடியும், இதர பயணிகள் வருமானத்தின் மூலம் ரூபாய் 19.76 கோடியும், வணிக ஒப்பந்தங்கள் மூலம் ரூபாய் 7.75 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளன.
இது இந்திய ரயில்வேயில் உள்ள கோட்டங்களை காட்டிலும் முதன்மை சாதனை அளவாகும். சரக்கு ரயில்கள் சராசரியாக மணிக்கு 38.19 கி.மீ. வேகத்தில் இயக்கப் படுகின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.77 சதவீதம் அதிகமாகும்.
இதுவும் இந்திய ரயில்வேயில் முதன்மை சாதனையாக உள்ளது. பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் ஆகஸ்ட் 14 முதல் 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 15 முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை பொழிவிலிருந்து பாதுகாக்க 39 நீண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள கழிவறைகள் ரயில் நிலையங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 17 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு வரும் 42 மின் தூக்கிகளில் ஏற்கனவே 7 மின்தூக்கிகள் பயணிகள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 6 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.
மீதமுள்ள 29 மின் தூக்கிகள் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டு இந்த ஆண்டிற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரயில் நிலையங்களில் குளிர் குடிநீர் இயந்திரங்களுடன் இந்த ஆண்டு கூடுதலாக வழங்கப்பட்ட மண்பானை தண்ணீர் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் பயண சீட்டு பெற முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மொபைல் பயணச்சீட்டு செயலி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4.5 சதவீதமாக இருந்த விற்பனை ஜூலை மாதம் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்த ரயில் நிலையங்களில் மிகக் குறைந்த வாடகையில் 43 விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் தயாரிப்புகள் இதுவரை ரூபாய் 55.70 லட்சம் அளவுக்கு விற்பனையாகி உள்ளன.
வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக 7 ரயில் நிலையங்களில் பேட்டரி கார் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் விழி ஒளியிழந்த பயணிகள் வசதிக்காக ரயில் நிலைய நுழைவாயிலில் இருந்து ரயில் பெட்டி செல்லும் வரை நடைபாதையில் சிறப்பு குறியீட்டு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நுழைவாயில் வளைவு, காத்திருக்கும் அறைகள், மின் தூக்கிகள், நடைமேடை சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, பசுமை பூங்கா, அணுகு சாலை விரிவாக்கம், கழிப்பறை வசதி, மேற்கூறையுடன் கூடிய வாகன காப்பகங்கள், நடைமேடை மேற்கூரைகள், ரயில் நிலைய முகப்பு மேம்பாடு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வசதிகளுக்காக ரூபாய் 115.85 கோடி செலவிடப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூபாய் 150.69 கோடி செலவிடப்படுகிறது.
மதுரை கோட்டத்தில் 80 சதவீத ரயில் பாதைகளில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 94.7 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 69.75 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்துகளை தவிர்க்க 18 ரயில்வே கேட்டுகள் சிறப்பு ஏற்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 34 கேட்டுகளில் எளிதாக திறந்து மூட கீழ்மேல் இறங்கும் நீண்ட இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
27 கேட்டுகளில் சாலை வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல மின் ஆற்றல் மூலம் கேட்டை திறந்து மூடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் தலையில் ஏற்படும் காயங்களில் எலும்புகளை சரிப்படுத்த கிரானியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நுரையீரல் சிகிச்சைக்கும் நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக மதுரையில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ரயில்வே சொத்துக்களை திருடிய 70 வெளிநபர்கள் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்டத்தை மீறிய 3380 நபர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 19.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு ஓடி வந்த 125 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு உள்ளனர். பயணிகள் தொலைத்த ரூபாய் 56.60 லட்சம் மதிப்புள்ள உடமைகள் ரயில்வே பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 375 ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
764 ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 396 ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பணியில் மரணம் அடைந்த 12 ஊழியர்களின் வாரிசுகளுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ரயில் வாசல் படிகளில் பயணம் செய்த 27 விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் ரயில் பெட்டி நுழைவாயில் படிகளில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ பயணம் செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயில்வே பெண்கள் சங்க மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை கோட்ட ரயில்வே மேலாளர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் உட்பட அதிகாரிகளும் ரயில்வே ஊழியர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவரது உரை!
78ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. அவரது உரையில் குறிப்பிட்ட முக்கியமான சில குறிப்புகள்….
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்.
நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது
செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி.
இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
நீதித்துறைக்கு வலிமை சேர்க்க மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
சிறப்பான சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனால் வங்கித்துறை மேலும் வலிமை அடைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம்.
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும்.
உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும்
“ஒரே தேர்தல் – ஆதரவு தாருங்கள்”
“தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது”
“மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது”
“எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது”
“ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்”
“பொது சிவில் சட்டம் – அமல்படுத்தும் தருணம்”
“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது”
“மதம் சார்ந்த சிவில் சட்டத்திலிருந்து மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி மாற வேண்டிய தருணம் இது”
“புதிய சட்டதிட்டங்கள்”
“ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா”
“3ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம்”
“நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது”
“பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்”
“உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள்”
“நாட்டை வலிமையாக்க மாற்றங்களை கொண்டு வருகிறோம்”
“மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கானது”
“வங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன”
“இன்று அரசின் திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே செல்கிறது”
“விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா”
“விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்”
“விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம்”
“தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு பெருமையான விஷயம்”
“விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை மக்கள் வழங்கியுள்ளனர்”
“அதிகளவிலான செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் ஏவி வருகிறது”
“திறன்பெற்ற இளைஞர்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை சிலர் வழங்கியுள்ளனர்”
வங்கித் துறை இன்று வலுவாக்கப்பட்டுள்ளது உலகின் தலைசிறந்த வங்கிகள் மத்தியில் பாரத வங்கிகள் இடம்பிடித்துள்ளன. மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு கடனுதவி கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் ரயில், சாலை, துறைமுகம், விமானம் என உள்கட்டமைப்பு பணி நடந்துள்ளது.
தேவையற்ற 1500 சட்டங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தோம். குடிமக்களுக்கு தண்டனையல்ல, நீதி கிடைக்க, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினோம்.
உலகின் மிகப் பெரிய கம்பெனிகள் பாரதத்தில் முதலீடு செய்ய ஆசைப் படுகின்றன. இது பொன்னான வாய்ப்பு. உரிய தொழிற் கொள்கை, நல்லாட்சி, சீரான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை உருவாக்கி மாநில அரசுகள் அதிகபட்ச முதலீட்டை ஈர்க்க போட்டி போட்டு முயற்சி செய்ய வேண்டும்.
தேசத்தின் இளம் செயற்கை நுண்ணறிவு / அனிமேஷன் வல்லுநர்கள் உலக கேமிங் சந்தையில் வலுவான இடம் பிடிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் குறித்த உலகின் கவலையை போக்கும் விதத்தில் நாம் பேச்சால் அல்ல, செயல்பட்டு உலகை ஆற்றுப்படுத்தியிருக்கிறோம், ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறோம்.
பாரத தேசம் உலக நன்மைக்கான தேசம். உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எத்தனை சவால்கள் வந்தாலும் சவால்களுக்கு சவால் விடும் ஹிந்துஸ்தானம் இது. எமது 1000 ஆண்டுக்கால கலாச்சாரத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடிக்கும். ஊழல் வாதிகள் மனதில் பயத்தை ஏற்படுத்துவோம்.
ஒரு தொடக்கமாக, அரசியல் தொடர்பே இல்லாத குடும்பங்களிலிருந்து 1,00,000 இளைஞர்களை மக்கள் பிரதிநிதிகளாக முன்னிறுத்த இருக்கிறோம். புதியவர்கள் வரவால் புதிய எண்ணங்கள் வரும் ,புதிய வல்லமை உருவாகும்.
மாதம் தோறும் தேர்தல் நடக்கும் இன்றைய சூழ்நிலையில் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இது பற்றி விவாதித்து குழு அறிக்கை தந்துள்ளது. ஒரு தேசம் ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள தேசம் முன்வர வேண்டும்.
ஆண்டு 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு மெய்ப்படுவதற்காக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நாங்கள், மும்மடங்கு நேரம் தந்து பணியாற்றுவோம், மும்மடங்கு வீச்சுடன் செயல்படுவோம்.