Home Blog Page 220

தேர்தல் களம் 2024: தென்காசி தொகுதி- ஓர் அலசல்!

tenkasi john pandian - 2026

தென்காசி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 37வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

தொகுதியில் ஆண் வாக்காளர்கள்: 7,42,158
பெண் வாக்காளர்கள்: 7,73,822
இதர வாக்காளர்கள் 203 உள்ளனர்.

தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும்.

இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் பொது தொகுதியாக இருந்த தென்காசி, அதன் பின்னர் இப்போது வரை தனி தொகுதியாக நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரே தனி தொகுதி தென்காசியே.

தென்காசி தொகுதியில் 1957 முதல் காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.சங்கரபாண்டியன், 1962-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.பி.சாமி, 1967-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த ஆர்.எஸ்.ஆறுமுகம், 1971-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த செல்லச்சாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1977, 1980, 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை காங்கிரஸை சேர்ந்த எம்.அருணாச்சலம் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 6-வது முறையாக அருணாச்சலம் வெற்றி பெற்றார்.

1998, 1999-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எஸ்.முருகேசன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.அப்பாதுரை, 2009-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.லிங்கம், 2014-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த வசந்தி முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றது. திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால், இம்முறை தனுஷ் எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

தென்காசி தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இப்போது 7-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான்பாண்டியன், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தென்காசி தொகுதியில் களம் காண்கிறார்.

இசை மதிவாணன்
நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேச்சைகள் உட்பட 15 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி திமுக வேட்பாளர் களம் காண்கிறார்.

அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிகளம் காண்கிறார். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் களம் காண்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய திமுக எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, மற்றகட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ள குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலா தலமாக்க வேண்டும். விவசாயம், நூற்பாலைகள் மருத்துவ துணி தயாரிப்பு ஆயுத்த ஆடை தயாரித்தலை முக்கிய தொழிலாக கொண்ட தென்காசி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை, மாம்பழச்சாறு தொழிற்சாலை, எலுமிச்சை சார்ந்த தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வாசுதேவநல்லூர் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும், உள்ளார் தலையணை அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், விருதுநகர் முதல் செங்கோட்டை வரை இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் . செங்கோட்டை ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிமனை,கூடுதல் பிட்லைன் வசதிகளை ஏற்படுத்தி செங்கோட்டை மில் இருந்து இந்தியாவில் முக்கிய தொழில் நகரமாக உள்ள பெங்களூரு மும்பை கோவை செக்கந்தராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ரயில் வசதி நேரடியாக ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளது .

அரசியல் கட்சிகளால் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு தொகுதியில் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

இந்த மக்களவைத் தொகுதியில் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய 2 பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள்தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணிகள் மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தோ்தல் பொதுப் பாா்வையாளா் டோபேஸ்வா் வா்மா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்தலுக்கு தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பாரதத்தின் கௌரவத்தைக் காப்பாற்றியது ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை!

vasudevananda saraswathi sankaracharya - 2026

பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தைக் கட்டிக் காத்து வருகிறார் என, மதுரை வந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி,
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று
மதுரை வருகை புரிந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், சின்ன சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு மதுரை சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் வெங்கட் ரமணி, மற்றும் ராமேஸ்வரம் சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர் மதுரை அனுஷத்தின் அணுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை சங்கர மடம் வாத்தியார் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது,

பாரத நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற நடந்தது தான் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.

500 வருடமாக இருந்த ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது‌. பாரத நாட்டில் ராம ராஜ்யம் ஏற்பட இது வழிகாட்டியுள்ளது‌.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது‌. தென் இந்தியாவில் இருந்து நிறைய மக்கள் அயோத்திக்கு வருகின்றார்கள். அயோத்தி ராமர் கோயில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளது‌. பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார்.” என்றார்.

தென் மாநிலங்களுக்கு புனித யாத்திரைக்காக அயோத்தியில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்
இளையாத்தான்குடி கைலாச நாதர் கோவில், கனக துர்க்கை கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், பங்காரு காமாட்சி அம்மன் கோவில், திருவிடைமருதூர் , சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர்.

சுவாமிகளுடன் சன்னியாசி சிஷ்யர்கள் சங்கரானந்த கிரி பிரமானந்த சரஸ்வதி தக்ஷிண பாரத யாத்திரை குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் வந்தனர். சுவாமிகள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றார்.

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

gk vasan in madurai campaign - 2026

மதுரை, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தமாகா தலைவர் ஜி கே வாசன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பரப்புரை மேற்கொண்டார்.

வாக்கு சேகரிக்கும் போது திடீரென வடை கடையில் புகுந்து வடை வியாபாரம் செய்து பின்னர் வடை சுட்டு டீ குடித்து “தாமரைக்கு ” வாக்குகளை வாசன் சேகரித்தார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் ஆதரவாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் .

அவர் உரையாற்றிய போது..

ராதிகா சரத்குமார் பிரபலமான வேட்பாளர் என்பதை விட பிரபலமான குணச்சித்திர நடிகர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இந்தப் பகுதியில், தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு விருதுநகர் தொகுதியின் முக்கிய பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க முடிவெடுத்து விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

விருதுநகர் தொகுதி ஒரு வியாபார நகரம் எண்ணெய் வித்துக்கள், பருப்பு உள்ளிட்டவர்கள் உற்பத்தி செய்வதற்கான அடையாளங்களைக் கொண்டது.

இந்த தொகுதி. சிறுதானிய உற்பத்தியில் பிரதான இடமாக விருதுநகர் தொகுதி உள்ளது.என்பதை நாம் அறிவோம்.
இந்த தொகுதியில் உள்ள மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கு வேட்பாளர் மேற்கொள்வார் .

தொகுதியின் பல்வேறு இடங்களில் நடக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றார். திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகை விவசாயம் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியிலே மல்லிகை விவசாயிகளை பொறுத்த வரை நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, நீண்ட நாளாக கோரிக்கை வைத்துள்ளார்கள் மத்திய அரசின் துணையோடு இது போன்ற, ஒரு நிலை இந்த தொகுதியில் ஏற்படுவதற்கு ராதிகா சரத்குமார் பணி புரிவார் .

குறிப்பாக விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி இ எஸ் ஐ மருத்துவமனை உள்ளிட்டவைகளை அமல்படுத்துவதற்கு வேட்பாளர் முயற்சி மேற்கொள்வார்.

சாட்சியாபுரம் திருத்தங்கல் ரயில்வே மேம்பால திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் உறுதியாக எடுக்கப்படும்.

கடல் நீரை குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம் தேவை என்பது வேண்டுகோள் அந்த வேண்டுகோளை நிறைவேற்றும் பணியை வேட்பாளர் செய்வார்கள் .
குல்லூர் சந்தை நீர்த்தேக்கத்தை தூர்வாரி குடிநீர் அதிகமாக மேம்படுத்தக்கூடிய நிலைலையை ஏற்படுத்துவார்கள்.

அருப்புக்கோட்டை தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுடைய நலம் காக்கும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டவருக்கான நல்ல சூழலை உருவாக்கி தருவார்.

பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நல்ல நிலையை ஏற்படுத்து
வார்கள்.

அருப்புக்கோட்டை திருச்சுழி வழியாக மதுரை – தூத்துக்குடி ரயில்வே சாலையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை ரயில் பாதை அமைக்கவும் சாத்தூர்,
கப்பலூர் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருப்பரங்குன்றத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெறும் சூழலில் நாட்டை வல்லரசாக உயர்த்துவார் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசோடு ஒத்துப் போகின்ற வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே முடியும் எனவே இத் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

மக்கள் விரோத திமுக அரசுக்கு 2026ல் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நிலைக்கு ஆதாரமாக விருதுநகர் தொகுதியின் வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

காவேரி மேலாண்மை ஆணையம் இருந்தாலும் தமிழக அரசு நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் கடந்த கூட்டங்களை போல தமிழக அரசு மெத்தனப் போக்கை கடைபிடிக்க கூடாது.

விவசாயி சேற்றில் காலை வைத்தால்தான் நாம் சோற்றில் கையை வைக்க முடியும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே விவசாயிகளின் எண்ணங்களை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களூரில் குடிநீருக்கு கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு தமிழர்கள் தடையல்ல தமிழ்நாடு தடையல்ல அதேபோல் எங்களுக்கு நியாயமாக கொடுக்கக்கூடிய தண்ணீருக்கு நீங்கள் தடையாக இருக்கக் கூடாது என்பது எங்கள் விவசாய பெருமக்களின் வேண்டுகோளும் தமிழக மக்களும் வேண்டுகோள் என்பதை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார் .

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது என்ற செய்தி இன்று பார்த்தேன். தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணங்களை கொடுக்காமல் மத்திய அரசு கொடுத்த நிதியை வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தாமல் இன்றைக்கு வாக்கு வாங்கிக்காக புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்ற நினைக்கிறது குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் தமிழக அரசு மழை வெள்ளத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.

புயல் மழை,வெள்ள காலத்திலே பணிகளை திட்டமிட்டு செய்யவில்லை அதன் அடிப்படையிலேயே வெள்ளம், மழையைதமிழக அரசால் சமாளிக்க முடியவில்லை அவர்களின் அலட்சியப் போக்கையும் மெத்தன போக்கையும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் அதை நன்கு அறிவார்கள் வாக்களிக்கும் போது அதை மனதில் வைத்து அவர்களை மன்னிக்க மாட்டார்கள் .

மத்திய அரசால், தமிழகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட முதல் தவணை பணத்திற்கு தமிழக அரசிடம் வெளிப்படையான தன்மையான செயல்பாடு இல்லை என்பது தான் அரசின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிற சந்தேகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, வாக்கு வங்கி அரசியலுக்காக புயல் வெள்ளத்திலே நிவாரணம் வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு செல்வது என்பது அரசியல் காழ் புணர்ச்சி வாக்கு வங்கி அரசியல் தேர்தலுக்காக என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்களும் சரி தமிழக மக்களும் சரி தமிழக அரசை இந்த விஷயத்தில் நம்ப தயாராக இல்லை எனபேசிய ஜி கே வாசன் ராதிகா சரத்குமாருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

டீக்கடை பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் திருமண மண்டப வாசலில் நின்றவர்களிடமும் ஜிகே வாசன் வாக்கு சேகரித்தார் பின்னர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் .

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த டீக்கடை ஒன்று சென்று தொண்டர்களுக்கு வடையை எடுத்துக் கொடுத்து வியாபாரம் செய்தார் பின்னர் அங்கிருந்த எண்ணெய் சட்டியில் வடை சுட்டு அதை எடுத்து தொண்டர்களுக்கு கொடுத்தார்.

பின்னர் ஜி கே வாசன் தேநீர் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசனிடம் கச்சத்தீவு குறித்து திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குறை சொல்லி வருகிறார்கள் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஜி. கே வாசன் கட்சத்தீவு பிரச்சனையில் யாரும் யாரையும் மாறி மாறி குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு வரலாற்று பிழை. வரலாற்றிலே இந்த பிழை இடம்பெற்றிருக்கிறது.

அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முடிவுக்கு திமுக உடந்தையாக செயல்பட்டது என்ற முடிவை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. இந்த வரலாற்றுப் பிழையை இனிமேல் திருத்த வேண்டும் என்றால் படிப்படியாக நம்முடைய பாரதப் பிரதமர் ஆளுமையின் அடிப்படையில் அடுத்த நாடுகளோடு இணைந்து செயல்பட்டு இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவார் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

மீனவர்கள் இனி ஒருபோதும் திமுக, காங்கிரசை நம்ப மாட்டார்கள். மீனவர்களை இனிமேல் ஏமாற்ற திமுக காங்கிரஸ் நினைக்க வேண்டாம் அவர்கள் ஏமாளிகள் அல்ல என்றார். தொடர்ந்து திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என பிரதமர் பேசியதற்கு வைகோ திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை மண்ணோடு மண்ணாக்குவோம் என பேசியது குறித்த கேள்விக்கு உலக அளவில் பிரதமரை பாராட்டக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலில் அதனுடைய தாக்கம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் தெரிவித்தார்.

துரோகம் செய்த எடப்பாடிக்கு புத்தி புகட்ட தினகரன் எம்.பி. ஆக வேண்டும்!

cr saraswathi for ttv dinakaran campaign - 2026

எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தால் இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம் என்று, மதுரை மாவட்டம் சோழவந்தானில்
சிஆர சரஸ்வதி பேசினார்.

மதுரை, சோழவந்தானில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு சிஆர் சரஸ்வதி பேசும்போது …

தமிழகத்தில் மூன்று அணியாக இருக்கிறோம். ஒன்று துரோகத்திற்கு பேர் போன அதிமுகவை அளித்துக் கொண்டிருக்கிற இரட்டை இலை சின்னத்தை விலைபேசிக்கொண்டு திமுகவிற்கு சாதகமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற எடப்பாடி அணி .

மற்றொன்று திமுக அணி அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையிலான நமது அணி என்று மூன்று அணியாக இருக்கிறோம்.

எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு முதல்வர் ஆனார். என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை இன்று வரை டிவியில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்
கிறீர்கள். உலகத்திலேயே முட்டி போட்டு முதலமைச்சரானது ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எடப்பாடி பழனிச்சாமி தான் .

ஒரு மனுஷன் நன்றி மறக்கலாமா, துரோகம் பண்ணலாமா ஓபிஎஸ் ஆவது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடியை யாருக்கு தெரியும். சேலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்தவர் தமிழகத்தில் ஒரு அமைச்சர் அவ்வளவுதான் அவரை முதலமைச்சராக பரிந்துரை செய்தவர் டிடிவி தினகரன். முதலமைச்சராகியவர் சின்னம்மா.

பரிந்துரை செய்த டிடிவிக்கும் துரோகம் செய்துவிட்டார். முதல் அமைச்சர் ஆக்கிய சின்னம்மாவிற்கும் துரோகம் செய்துவிட்டார். நாலரை வருஷம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸ் க்கும் துரோகம் செய்துவிட்டார். தாங்கிப் பிடித்த பிஜேபிக்கும் துரோகம் செய்துவிட்டார்.

எடப்பாடியிடம் நன்றியும் இல்லை உண்மையும் இல்லை. விசுவாசமும் இல்லை துரோகம் மட்டும்தான் உள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்காக பாடுபட்டவர்கள் நாங்கள் அம்மா எத்தனையோ தேர்தல்களை சந்திக்கும்
போது, இதே சோழவந்தானில் இரட்டை இலைக்காக வாக்குகள் கேட்டிருக்கிறோம்.

ஆனால் இன்று இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதற்கு காரணம் உதயகுமார், ஜெயக்குமார், சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் .

இரட்டை இலை மீட்க வேண்டிய இடத்தில் தற்போது இருக்கிறோம். இவர்கள் ஒன்றாக இருந்திருந்தால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா, பாரதிய ஜனதாவின் ஆலோசனையை இவர்கள் கேட்டிருந்தால் அனைவரும் ஒன்றாகி இருந்திருப்போம் .

2021ல் அம்மாவின் ஆட்சி அமைத்திருப்போம். இந்த ஆட்சி பறிபோனதற்கு காரணம் எடப்பாடி தான். அடுத்தடுத்து வரும் தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எடப்பாடியால் தான். ஆகையால் இதை மாற்ற டிடிவி தினகரனை டெல்லி நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் இவ்வாறு பேசினார் .

இதில், சோழவந்தான் பேரூர் அமமுக செயலாளர் திரவியம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஜெயலலிதா ஆட்சியில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்தார்கள்; அதை இந்த ஆட்சியில் கட்டச் சொல்கிறார்கள்?!

madurai central cooperative bank - 2026

சோழவந்தான் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் செலுத்தியவருக்கு மீண்டும் பணம் கட்டச் சொல்லி குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். ஜெயலலிதா ஆட்சியில் கடன் பெற்று அதற்காக வட்டிக் கடன் தள்ளுபடி செய்ததை தற்போதுள்ள அரசாங்கம் அந்த தள்ளுபடியை நீக்கி கடன் பெற்றவர்கள் மீது திணிக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்று கூறுகிறார் அவர்.

சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சிறு குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சிறு தொழிலுக்காக கடன் வாங்கி திருப்பிசெலுத்தி வருகின்றனர்

கடந்த மார்ச் 30ம் தேதி இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கியதில் கடன் பாக்கி உள்ளதாகவும், இதை மார்ச் 31ந்தேதி கடன் முழுவதும் பாக்கி இல்லாமல் செலுத்தி நேர் செய்யவும் என்று அவரவர் செல்போனுக்கு தகவல் வந்துள்ளது.

இதனால், வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வங்கியில் 2016 ஆம் ஆண்டு கடன் பெற்று கடனை முழுவதும் திருப்பி செலுத்திய சீனிவாசன் என்பவர் கடந்த 30 ஆம் தேதி சோழவந்தானில், உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் பார்த்தசாரதியைசந்தித்து இதுபோல் தகவல் வந்திருக்கிறது. நாங்கள் 2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி முழுவதும் செலுத்தி விட்டு அதிலிருந்து மூன்று முறை கடன் வாங்கி முழுமையாக செலுத்தி உள்ளோம். கடைசியாக செலுத்திய கடன் தொகை கடன் இல்லை என்று பாஸ்புக்கில் எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால், எங்களுக்கு 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாகவும், கடனை செலுத்த வேண்டும் என்று குறுந்தகவல் வந்திருக்கிறது. இது எங்களுக்கு மனவேதனை தருகிறது என்று கூறியுள்ளார். இதற்கு கிளை மேலாளர் இது எங்களுக்கு சம்பந்தமில்லை மாவட்ட அதிகாரிகள் அனுப்பிய குறுந்தகவல் இருந்தாலும் உங்களுடைய பெயரில் உங்களது கணக்கில் 2016 ஆம் ஆண்டு கடன் பாக்கி உள்ளதாக காட்டுகிறது. ஆகையால், நீங்கள் கடனை செலுத்த வேண்டும் என்று கூறி மேலும், வாடிக்கையாளர் மனதை புண்படச் செய்து உள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கியில் சிறு தொழில் செய்ய கடன் வாங்கி மாதந்தோறும் தங்களது தவணையை செலுத்தி மீண்டும் மறுபடியும் கடன் பெற்று தொழிலில் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யக்
கூடிய நிலை உள்ளதால் சிறு தொழில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் தற்போது மிகவும் குறைந்து வரும் நிலையில்தற்போது வாங்கிய கடனை கட்டுவதே சிரமப்பட்டு கட்டக்கூடிய நிலை உள்ளதாகவும், முறையாக கடனை அடைத்து திரும்ப கடன் பெற்றுள்ள நிலையில் பழைய கடனுக்கு பாக்கி உள்ளதாக கூறுவது சந்தேகமாக உள்ளது என்றும், 2016 ஆம் ஆண்டு கடன் பெற்ற சிறு வியாபாரிகள் குமுறுகின்றனர்.

ஆகையால், மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலட்சியத்தால் கடன் பாக்கி உள்ளதா, இல்லை அங்கு உள்ள பணியாளர் கூறுவது போல் அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் கடன் பெற்று அதற்காக வட்டிக் கடன் தள்ளுபடி செய்ததை தற்போதுள்ள அரசாங்கம் அந்த தள்ளுபடியை நீக்கி கடன் பெற்றவர்கள் மீது திணிக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

எது உண்மையோ தேசிய வங்கிகள் எத்தனையோ இருந்தும் கூட்டுறவு வங்கி மேம்படுத்த வேண்டும் என்று சாதாரண சிறு குறு விவசாயிகள் சிறு தொழில் நடத்தக்கூடிய சிறு பெட்டிக்கடை வியாபாரிகள் கணக்கு வைத்து சேமிப்பு மற்றும் நகை கடன், வியாபார கடன் விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

தற்போது, இவர்களுக்கு வந்திருக்கும் குரு செய்தி மூலம் இவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளதாக கூறுகின்றனர். வியாபாரிகள் ஆகையால், அரசும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் உயர் அதிகாரிகளும் இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

IPL 2024: குஜராத்க்கு எதிராக பஞ்சாப் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதிநாலாம் நாள்
ஐபிஎல் 2024 – 04.04.2024 – அகமதாபாத்
குஜராத் டைடன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

குஜராத் அணியை (199/4, ஷுப்மன் கில் 89*, சாய் சுதர்ஷன் 33, கேன் வில்லியம்சன் 26, ராகுல் திவாத்தியா 23, ரபாடா 2/44) பஞ்சாப் அணி (ஷஷாங்க் சிங் 61*, பிரப்சிம்ரன் சிங் 35, அஷுத்தோஷ் ஷர்மா 31, ஜானி பெயர்ஸ்டோ 22, நூர் அகமது 2/32) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா வழக்கம்போல இரண்டு அதிரடி ஷாட்டுகள் விளையாடிவிட்டு 11 ரன்னுக்கு மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஷுப்மன் கில் (45 பந்துகளில் ஆட்டமிழக்காமம் 89 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) கேன் வில்லியம்சனுடனும் (22 பந்துகளில் 26 ரன்) சாய் சுதர்ஷனுடனும் (19 பந்துகளில் 33 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சாய் சுதர்ஷன் 13.5 ஓவரில் ஆட்டமிழந்தபோது விளையாட வந்த விஜய் ஷங்கர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கடைசியாக வந்த திவாத்தியா எட்டு பந்துகளில் 23 ரன் அடித்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்திருந்தது.

200 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இரண்டாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். பெயர்ஸ்டோ 13 பந்துகளில் 22 ரன் அடித்து 5.1ஆவது ஓவரில் அவுட்டானார்.

சாம் கரன் (5 ரன்) இன்றும் ஜொலிக்கவில்லை. பிரப்சிம்ரன் சிங் (24 பந்துகளில் 35 ரன்), சிக்கந்தர் ராசா (16 பந்தில் 15 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (8 பந்துகளில் 16 ரன்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடவில்லை. ஆனால் 8.4ஆவது ஓவரில் ஆடவந்த ஷஷாங்க் சிங் (29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) ஜித்தேஷ் ஷர்மா (16 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 19.5 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

புனலூர் – செங்கோட்டை பாதையில் ரயில்களின் பெட்டிகள் அதிகரிப்பு!

sengottai thenmalai railway line electrification - 2026
#image_title

புனலூர் செங்கோட்டை மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன.

பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் எர்ணாகுளம் கோட்டயம் முதல் கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக வாரம் இரு முறை இயக்கப்படுகின்ற வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 14 இருந்து 18 பெட்டிகளாக அதிகரிக்கப்பட உள்ளன. ஏப்ரல் மாதம் 6ம் தேதியில் இருந்து எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப். 7ம் தேதியில் இருந்து வேளாங்கண்ணியில் இருந்து கிளம்பும் ரயிலிலும் பெட்டிகள் அதிகரிக்கப்படுகின்றன.

இரண்டாம் வகுப்பு Sleeper படுக்கை வசதி பெட்டிகள் ( 2) மற்றும் மூன்றாம் வகுப்பு 3rd ஏசி பெட்டிகள் (2) இணைக்கப்பட்டு மொத்தம் 18 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளன . இந்த வழித்தடத்தில் செங்கோட்டை முதல் கொல்லம் வரை உள்ள மலை வழி ரயில் பாதையில் 14 பெட்டிகள் மட்டுமே இயங்கும் ரயில்களை கூடுதல் பெட்டிகள் இணைக்க வசதியாக கடந்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது

இந்த சோதனை ஓட்டத்தின் முடிவில் 22 பெட்டிகள் வரை இந்த மலைவழிப் பாதையில் இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழியில் இயங்கும் கொல்லம் – செங்கோட்டை – ராஜபாளையம் – சென்னை விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் – பாலக்காடு இடையே இயங்கும் விரைவு ரயில்களிலும், 18 பெட்டிகளாக அதிகரித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து உள்ளது.

மலைப்பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்கள் 22 பெட்டிகளுக்கு ஏற்ற வகையில் நீளமாக இல்லை என்பதால், பிளாட்பாரங்கள் நீட்டிக்கப்பட்ட பிறகு வருங்காலத்தில் 22 பெட்டிகளுடன் இந்தப் பாதையில் ரயில்கள் இயங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

MODI ONCE MORE 2024: தமிழ்நாட்டப் பத்தி மோடிக்கு என்ன தெரியும்?

modi once nore 2024 - 2026

ஜான்சன் vs ஜானகிராமன்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஜான்சன் – வணக்கம் ஜானகிராமா …

ஜானகி – வணக்கம் ஜானி

ஜான்சன் – என்ன உங்க மோடா பாய் வரல போல

ஜானகி – அது என்ன மோடா பாய்? மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அப்படீன்னு சொல்லு.

ஜான்சன் – சரி … சரி உள்துறை அமைச்சர் … ஏன் நமக்கு தமிழ்நாட்டுல எப்படியிருந்தாலும் தோல்விதான் … எதுக்கு போவானேன் அப்படீன்னு தான வரல …

ஜானகி – இல்ல ஜான்சன் அவருக்கு நிறைய பணிகள் இருந்திருக்கும்.

ஜான்சன் – ஆனா உங்க பிரதமர் மட்டும் சும்மா சும்மா வந்துட்டுப் போறாரு … எலக்ஷன் வறதாலதான …

ஜானகி – அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமா வராறு … தென் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் வருகிறார்.

ஜான்சன் – வந்து என்ன பிரயோஜனம் ?

ஜானகி – என்ன அப்படி சொல்லிட்ட இந்த வருஷம் ஜனவரி மாதம் அவர் திருச்சி வந்தார். ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறை போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

ஜான்சன் – ஆனா … இவங்க எல்லோரும் இந்தியை தமிழ்நாட்டுல திணிக்கிறவங்கதானே …

ஜானகி – என்ன அப்படி சொல்லிட்ட … பிரதமர் போற இடத்தில் எல்லாம் தமிழின் பெருமை பற்றிப் பேசுகிறார். தமிழ்நாடு இந்தியாவின் செழிப்பு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். தொன்மையான தமிழ் மொழியின் தாயகம் தமிழ்நாடு, அது பண்பாட்டு பாரம்பரியத்தின் பொக்கிஷம் என்று கூறுகிறார். தமிழ் மொழியில் அற்புதமான இலக்கியங்களை உருவாக்கிய திருவள்ளுவர் மற்றும் சுப்பிரமணிய பாரதி ஆகியோரை நினைவுகூருகிறார்.

ஜான்சன் – பிரதமருக்கு தமிழ்நாட்டப் பற்றி என்ன தெரியும்?

ஜானகி – திருச்சியில் அவர் பேசும்போது திருச்சிராப்பள்ளியின் வளமான பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் நாயக்கர் வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகளின் மிச்சங்களை திருச்சியில் காண்பதாகக் கூறினார். தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி குறிப்பிடத் தவறுவதில்லை என அவர் கூறினார். “நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ் கலாச்சார உத்வேகத்தின் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைவதாக நான் நம்புகிறேன்”, என்று அவர் கூறினார். புதிய நாடாளுமன்றம், காசித் தமிழ், காசி சௌராஷ்டிர சங்கமம், புனிதமான செங்கோல் நிறுவப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வழிவகுத்த முயற்சிகள் என்று பலவற்றை அவர்  சுட்டிக்காட்டினார்.

ஜான்சன் – தமிழகத்தின் மீது அவருக்கு ஏன் அவ்வளவு அக்கறை?

ஜானகி – மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும் என்ற அரசின் அணுகுமுறையைப் பிரதமர் நம்புகிறார். மத்திய அரசின் 40-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் கடந்த ஓராண்டில் 400-க்கும் மேற்பட்ட முறை தமிழகம் வந்துள்ளனர். “தமிழ்நாட்டின் முன்னேற்றத்தால் இந்தியா முன்னேறும்” என்று மோதி அவர்கள் எப்போதும் குறிப்பிடுகிறார்.

ஜான்சன் – திருச்சி விமான நிலையத்தால ஏழைகளுக்கு என்ன பயன்?

ஜானகி – திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம், விமான நிலையத்தின் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும். கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுடனான இணைப்பை வலுப்படுத்தும். புதிய முனையக் கட்டிடத்தின் திறப்பு விழா முதலீடுகள், வணிகங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உயர்த்தப்பட்ட சாலை மூலம் விமான நிலையத்தை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதை அதிகரித்ததையும் அவர் குறிப்பிட்டார். திருச்சி விமான நிலையம் அதன் உள்கட்டமைப்புடன் அங்கே உள்ள ஓவியங்கள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும்.

ஜான்சன் – திருச்சில வெறும் விமான நிலையம் பற்றித்தான் பேசினாரா? இல்லை வேறு ஏதாவது சொன்னாரா?

ஜானகி – ஐந்து புதிய ரயில்வே திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அவை தொழில் மற்றும் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று கூறினார். ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம் மற்றும் வேலூர் போன்ற முக்கிய நம்பிக்கை மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில்  புதிய சாலைத் திட்டங்கள் அமையும் என்றும் சொன்னார்.

          கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமர் பேசினார். கடலோரப் பகுதிகளையும் மீனவர்களின் வாழ்க்கையையும் மாற்றுவதற்கான திட்டங்களைக் குறிப்பிட்டார். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் மற்றும் பட்ஜெட், மீனவர்களுக்கான வேளாண் கடன் அட்டை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகு நவீனமயமாக்கலுக்கான உதவி மற்றும் பிரதமர் மத்ஸ்ய சம்படா திட்டம்  ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

          சாகர்மாலா திட்டத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ஜான்சன் – சாகர் மாலா அது என்ன?

ஜானகி – நாட்டில் உள்ள துறைமுகங்கள் இத்திட்டத்தின்படி  மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் துறைமுகங்கள் சிறந்த சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தின் திறன் மற்றும் கப்பல்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளன. இப்போதே காமராஜர் துறைமுகத்தின் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜான்சன் – நீ சொல்றதைப் பாத்தா ஒன்றிய அரசு, அதான் உங்க மத்திய அரசு தமிழகத்திற்கு நிறைய செஞ்சிருக்கு அப்படீங்கற …

ஜானகி – தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த வரலாறு காணாத செலவு செய்திருக்கிறது. 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடியும், கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியும் வழங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கும் 2.5 மடங்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, மாநிலத்தில் மூன்று மடங்கும், ரயில்வே துறையில் 2.5 மடங்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச ரேஷன், மருத்துவ சிகிச்சை மற்றும் பக்கா வீடுகள், கழிப்பறைகள் மற்றும் குழாய் நீர் போன்ற வசதிகளைப் பெற்று வருகின்றன.

ஜான்சன் – மொத்தத்துல என்ன சொல்ல வர?

ஜானகி – மீண்டும் மோதி வேண்டும் மோதி

நடிக்காதீங்க, திமுக., இந்து விரோத கட்சின்னு சின்ன குழந்தைக்குக் கூட தெரியும்!

hindumunnani - 2026

முதல்வரே நடிக்க வேண்டாம். இந்து விரோத திமுக என்பது சிறு குழந்தைக்கும் தெரியும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவையும் தன்னையும் இந்து மத விரோதியாக சித்தரிக்க எதிர்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் தான் முதல்வர் ஆன பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அரசு விழாக்களில் தான் அதிகம் கலந்து கொண்டதாகவும், ஐயாயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை தனது அரசு மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 ஆன்மீக அடையாளமாக இருப்பது திருவண்ணாமலை கோவில் என்று பேசிய முதல்வர் அவர்களே  திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அடித்தளம் அமைத்து கோயில் கோபுரத்தை மறைக்க பார்த்தார்களே, பக்தர்கள் போராடியும் திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தீர்களே இதுதான் முதல்வர் இந்து மதத்தை ஆதரிக்கும் முறையா? 

 300 ஆண்டு பழமையான அம்மணி அம்மாள் மடத்தை இந்து சமய அறநிலையத்துறையே இடித்து தள்ளி அழித்தது தான் முதல்வரின் சீரிய நிர்வாகமா? இதுதான் கோயிலை காக்கும் திராவிட மாடல் ஆட்சியா? 

 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துகளை மீட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவர்களே கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்புக்கு போனது எப்படி?  எந்த ஆட்சியில், எவர் ஆட்சிகாலத்தில் யார் ஆக்கிரமித்தார்கள் என்று சொல்வாரா?

 பக்தர்கள் போற்றும் திராவிட மாடல் அரசாங்கம் அற்பர்கள் கதறும் திராவிட மாடல் அரசாங்கம் என்று எதுகை மோனையோடு பேசும்  முதல்வருக்கு ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழனி என பழமையும் புகழும் பெற்ற திருக்கோவில்களில் எல்லாம் பக்தர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ரத்தம் சிந்தி துடித்தார்களே அதுதான் பக்தர்கள் போற்றும் திராவிட அரசாங்கமா? 

  ஓராண்டு காலமாக மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் சீல் வைத்து பூட்டபட்டுள்ளதே கோவிலை திறக்க பிரச்சனயை முடிக்க முதல்வர் தலைமையிலான அரசு சிறு தீர்வையும் முன்னிறுத்தாமல் கோயிலை தொடர்ந்து சீல் வைத்து பூட்டி வைத்திருப்பதுதான் முதல்வரின் கோவிலை காக்கும் திராவிட மாடல் அரசாங்கமா? 

 முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகமெங்கும் கிட்டதட்ட ஆயிரம் கோயில்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் இடித்து தள்ளி அழிக்கப்பட்டதே.! இதுதான் முதல்வர் பெருமையாக மார்தட்டும் கோவில் சொத்து மீட்பா? 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும் அமைச்சருமான  உதயநிதி அவர்கள் கிறீஸ்தவ மிஷனரிகளின் விழாவில் கலந்துகொண்டு சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா கொசு போன்று ஒழிக்கவேண்டும் என்று பேசினாரே, ஊரெல்லாம் வழக்கு வாங்கி உச்ச நீதிமன்றத்திலே முறையிட்டு காத்திருக்கிறாரே! அந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டாரே அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத முதல்வர்தான் இந்து மத ஆதரவாளார? 

 முதல்வர் ஸ்டாலின் அவர்களே தாங்கள் இஸ்லாமிய திருமண விழாவில் காலந்து கொண்ட போது இந்து திருமண சடங்கு சம்பிரதாயங்களை மிகவும் தரம் தாழ்ந்து பேசி இழிவுப்படுத்தி பேசினீர்களே அதுதான்  இந்து மத ஆதரவா? 

 தேர்தல் வந்தால் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என்றும் என் கட்சியில் 90 % இந்துக்கள் என்று அறைகூவல் விடுத்து அப்பாவி இந்துக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்து மதத்தை ஒழிப்பேன் சனாதனம் கொசு என்பதும் முதல்வர் மற்றும் திமுகவின் வாடிக்கை என்ற நிலையில் வேறு யாரும் முதல்வரையும் திமுகவையும் இந்து மத விரோதியாக சித்தரிக்கவில்லை. திமுகவைச் சார்ந்தவர்களே ஏராளமான முறை இந்து மத விரோதிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். 

 எனவே தேர்தலுக்கு தேர்தல் இந்து மத ஆதரவாளர்களாக மாறும் திமுகவிற்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்த நேரத்தில் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுகொள்கிறது.

தெற்கு ரயில்வேயில் பாதைகள் மேம்படுத்தல்; ரயில்களின் வேகம் அதிகரிப்பு!

railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயில் பாதைகள் மேம்படுத்தல் பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும், எனவே ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதாகவும் இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல்பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறிய போது, தெற்கு ரயில்வேயில் ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம்-ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா என மொத்தம் 413.62 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

1,272 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவா ளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது.

தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்… என்று கூறினர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் சில ரயில்கள் நீட்டிக்கப்படவுள்ளன. பெங்களூர் – சென்னை ரயில் திருச்சி வரையும், கோவை – பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் பாலக்காடு வரையும், தன்பாத் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் கொச்சுவேலி வரையும், திருச்சி – ஹவுரா ரயில் திருநெல்வேலி வரையும், சென்னை – நாகர்கோவில் ரயில்கள் கன்னியாகுமரி வரையும் நீட்டிக்கப் படவுள்ளன.

புதிய ரயில்களின் முன்மொழிவு –

  1. நாகர்கோவில் LTT மூன்றுவார எக்ஸ்பிரஸ் (via TEN – MDU – TPJ – WADI)
  2. திருநெல்வேலி – ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இருவார எக்ஸ்பிரஸ்
  3. திருநெல்வேலி – ஜோத்பூர் வார எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் வழியாக)
  4. தாம்பரம் – சான்றகச்சி வார எக்ஸ்பிரஸ்
  5. ராமேஸ்வரம் – மால்டா டவுன் வார எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் வழியாக)