Home Blog Page 5606

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?”

10482143 599228513527816 46027082804070919 n 2 - 2026

“ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?” (“ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய
சம்பவம்.-கண்டிப்பு,கருணை,அருள்,ஞான திருஷ்டி ஒருங்கே சேர்ந்த இந்த நிகழ்ச்சி
எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.)

((நான் தட்டச்சு செய்த முதல் பெரிய கட்டுரை-இது எனக்கு மிகவும் பிடித்த
கட்டுரை-10-01-2012ல் பதிவானது)

கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்,

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது.
காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா
பெரியவா.தரிசனத்துக்குவந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்
செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதானபாட்டியும், இளம் வயதுப் பெண்
ஒருத்தியும் வேக்வேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று
கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல
வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…பேரென்ன?” என்று வினவினார்
ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி..”பெரியவா, நா எத்தனையோ வருஷமாமடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம்
பண்ணிண்டிருக்கேன். இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி
தெரிவிச்சுண்டதில்லே…அதுக்கான
சந்தர்ப்பம் வரலே.. ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ எம் பொண்
வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே
பொண்ணு..அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே, இவளை எங்கிட்ட விட்டுட்டு
கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன் மாரடைப்புல
போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன்.பள்ளிக்கூடத்துல சேத்துப்
படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே. அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு
ஆறது..இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா எங்கடமை விட்டுது”
என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து
பத்தரை மணி சுமாருக்கு சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ,
இன்னிக்கு விடிய காலம்பற வந்து
நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத
புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த
ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம். நல்ல
குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி
இருக்குனு சொல்றா. எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…”
என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி
வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.அடுத்த சில
வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு
ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி முடுச்சுடுவேன்.
ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி,நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது
பண்ணுவேளோ..ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு
போட்டே ஆகணும்’னு கண்டிஷனா சொல்லிப்டா. பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல
இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே. தலா ஒரு பவுன்ல இவ ரண்டு கைக்கு
மாத்ரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்…அதான் என்னால முடிஞ்சது. நா எட்டு
பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று
முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?”
என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில்
போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம்பெ ரியவா,நா அப்டி சொல்ல வரலே.ஒங்களை
தரிசனம்ப ண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய மனுஷாள்ளாம்
வராளே..அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரட்ட வட
சங்கிலிய பூர்த்தி பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது?அப்டியெல்லாம் கேக்கற
வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன்சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு..பத்து பவுன்
கேக்காத எடமாபார்த்துக்கோ.அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார்
ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டுபோகக்கூடாதுனு
பிரார்த்திக்கிறேன்.இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன்
தங்கமான குணம்,அவாத்துலரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே
எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா..வேறு
இண்ணுமில்லே பெரியவா,நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்யோசனையில்
ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார்,

“நா ஒரு கார்யம் சொல்றேன்….பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன்.என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாட்சியம்மன்
கோயிலுக்குப் போ.ரெண்டு பேருமாசேந்து, “எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு
கல்யாணம்ஜாம்ஜாம்னு நடக்கணும்….நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு
பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம்பண்ணுங்கோ,
அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.இப்டி
அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ…ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி
வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா
சொல்றேளே.அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி
வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே.அம்பாளுக்கு, ‘பஞ்ச
ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு
அனுக்கிரகம்பண்றவ அவ,அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச்
சிரித்துக்கொண்டே சொன்னார்.

“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு
வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன்நகர்ந்தார்.பெரியவா
எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய
சீக்ரஹனுசொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன்,
இன்னிக்கேஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா
எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள்பாட்டி.
வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.அன்னை காமாட்சி அன்று விசேஷ
அலங்காரத்தில் ஜொலித்தாள்.

இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே பிரார்த்தித்துக் கொண்டனர்.
பேத்தியின் நட்சத்திரத்துக்கு ஓர்அர்ச்சனை செய்து பிரசதம் வாங்கிக்கொண்டாள்
பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரட்டவட சங்கிலி’யையே
பிரார்த்திதபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு
முன்பாக ஐந்து நஸ்காரம்பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டுவீட்டைவிட்டுப் புறப்பட்ட
மீனாட்சி பாட்டி,பாரிஜாதபுஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம்
நோக்கிவிரைந்தாள்.மடத்தில் ஏகக் கூட்டம்.மீனாட்சி பாட்டி இருபது முப்பது
பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நட்சத்ரம். பெரியவாளோட நட்சத்ரமாம். அதனால் ஸ்வாமிகள்
இன்னக்கி மௌன விரதம்.யாரோடயும் பேசமாட்டாராம்.முக தரிசனம் மட்டும்தான்” என்று
விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாட்சி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து
எட்டு பவுன் ரட்ட வட சங்கிலியபத்திஞாபகப்படுத்தலாம்னுநெனச்சுண்டிருந்தேனே,அது
இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து
எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றிஅப்படியே அமர்ந்திருந்தது,அந்த பரப்
பிரம்மம்.”எட்டு பவுன்ரட்டவட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து
ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.

மகா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர்
சற்றுக்கடுமையாக,”பாட்டி,நகருங்கோ…நகருங்கோ..பெரியவாஇன்னிக்கு மௌன விரதம்
பேசமாட்டார்.பின்னாலே எத்தனபேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று
விரட்டினார்.காமாட்சியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன்
நடையைக்கட்டினாள்.அன்றைக்கும் காமாட்சியம்மன் சந்நிதியில் பெரியவா
கூறியபடி ‘பஞ்ச ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர்
இருவரும்.அடுத்தடுத்து ஞாயிறு,திங்கள் இரு நாட்களும் மகா ஸ்வாமிகள் மௌன விரதம்
மேற்கொண்டார்.

இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம்மட்டும் செய்துவிட்டுத்
திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள்.”பெரியவா
சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே,ஒண்ணுமே
நடக்கலியே…அம்மா காமாட்சி கண் திறந்து பாப்பாளா,மாட்டாளா?” என்று
தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது.அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்மிகவும் கலகலப்பாக
இருந்தது.ஆரணியிலிருந்து வந்திருந்தபஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப்
பரவாத்தில்ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா
முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்!

இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம்.
வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி,முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு
முன் வந்து நமஸ்கரித்து
எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான்கொண்டு வந்திருந்த
பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத்தேங்காய்கள்,சாத்துக்குடி,ஆரஞ்சு,பூசணி,மொந்தன்
வாழைக்காய்வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு,மீண்டும் ஒரு
தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்டஸ்வாமிகள்
சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டுஅந்த அம்மாவையே கூர்ந்து
நோக்கியவர்,

நீ நீடாமங்கலம்மிராசுதார்கணேசய்யரோடஆம்படையா [மனைவி] அம்புஜம்தானே? ரெண்டு
மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லிதுக்கப்பட்டுண்டே..இப்போ
சந்தோஷமா பெரிய வாழத்தாரோடநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில
அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு,”வாஸ்தவந்தான்
பெரியவா. மூணு வருஷமாஎங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி
வெச்சிருந்தா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்தஅவலத்தைச்
சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர்காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு
பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு
நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடாஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள
ராதாகிருஷ்ணனே திடீர்னுவந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம்
அந்த காமாட்சி
கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக்
கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம்.தம்பதி க்ஷேமமா இருக்கட்டும்.
ஆமா…இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று
கேட்டுவிட்டு
இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது
பெரியவா.அதான் அப்டி பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி..ஒம் பொண்ணு,மாப்ளய திருப்பியும் அம்மா
காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு
போயி அவளுக்குஅர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு”
என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா…இது இந்த சந்நிதானத்துலயே
இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு
வந்திருக்கேன்.பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு
பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்
.
“பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான்
ஊருக்கு திரும்பணும்..ஞாபகம் வெச்சுக்கோ”என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி
வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக
நடையைக்கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டுவியாபாரம்
செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம்,”அடியே காமாட்சி, இன்னிக்கு
பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா
பண்ணிடுவோம்.

நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி வாழப்பழம்,வெத்தல
பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக்
கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடி யே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி,
கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்

பாட்டி: “அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன்.
ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டாவேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது
அந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து பேத்தி
கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின் தொடர
இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர்
இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக்
கேட்டுத்திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே? என்ன
பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று
சொல்லி பாட்டியை ஓரமாக அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள்.

பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி,,”நோக்குப் பின்னால
குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா.. அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல
பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே! இது
அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அ’தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி,”பவுனாத்தான்
இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி,எட்டு..எட்டரை பவுன் இருக்கும்னு
நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைலகாமாட்சியேநமக்குஅனுக்கி
ரகம்பண்ணியிருக்கா.சரி…சரி….வா,வெளியே போவோம்,மொதல்லே” என்று சொல்லியபடி
அதைத்தன்புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாகவெளியே
வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், “பஞ்சஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம்
வருவதை] மறந்து விட்டாள்.

மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ
காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து
எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன்
சங்கிலி கண்டெடுத்தவிஷயத்தைச் சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்குகாமாட்சியம்மன் கொயில்ல
பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..ஆனா ஒம்
பேத்தி கைலகெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!அந்த
சந்தோஷம்….நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்னபண்ண விடலே. காமாட்சி பூர்ணமா
அனுக்கிரகம்பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே..என்ன நான் சொல்றது
சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை.
“ஸ்வாமிகள் என்னை தப்பா எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே,
அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச்சொல்லியிருக்கானு
நெனச்சுண்டுட்டேன்….அந்த சந்தோஷத்துலஇன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும்
மறந்துட்டேன்” என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய்
காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட எட போடறத்துக்கோ….அறுந்தத பத்த வக்கறத்துக்கோ
மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு,

“அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என
முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். நீங்க சொன்னதெல்லாம்
சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச்
சொந்தம்?”

“அம்பாள் காமாட்சிக்கு.”

“நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று
மிகவும் வருத்தப்பட்ட பாட்டி, அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை
நடுங்க ஸ்வாமிகளுக்கு
முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணிஇரண்டு,மீனாட்சிபாட்டியையும், பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார்
ஸ்வாமிகள்.. அப்போது,கலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின்
தர்மபத்தினிஅம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்துஆச்சார்யாளை
நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த
ஸ்வாமிகள்,

“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே,

“வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடிஒங்க உத்தரவுபடி
காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவைபண்றச்சே,’பிரிஞ்சிருக்கிற எம்
பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா,எங்கழுத்துல
போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு
அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடிஅந்த ரட்ட வடத்த
சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி
எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.

ஒரு எடத்லயும் கிடைக்கலே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?”என்று புலம்ப
ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின்பக்கம் தன் பார்வையைத் திருப்பி,
அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.

ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி.
பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக்
கையில் எடுத்தாள்.

மகிழ்ச்சியுடன், “அம்மா பங்கஜம்… நீ தவறவிட்ட ரட்ட வடம்இ துவா பாரு?” என்று
காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்
“இதேதான்….இதேதான்…..பாட்டி..இது எப்படி இங்கே வந்தது? ஆச்சரியமா
இருக்கே!” என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள்அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி
முடித்தாள் பாட்டி.

மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள்….

“பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத்
தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி
போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த
ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு
சாயந்தரமேஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு
போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன்.அதோட கல்யாணச்
செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்”

என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாட்சியாக
அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து
எழுந்தனர்.

ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,,”இன்னிக்கு நீயும்ஒம் பேத்தியும்
கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு
நமஸ்காரம்பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.மீனாட்சி
பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும்
வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.

நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம்

supremecourt - 2026

நீர் தேர்வு முடிவுகள் வெளியீடு: நீட் வழக்குகளை மாநில நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்கிறது  உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட்  மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதுவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகவும் இருந்தது. இந்தத் தேர்வு குறித்து பலத்த சர்ச்சை எற்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்  தமிழகத்தில் மாணவர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை நீதிமன்ற கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இந்த  மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. மேலும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளதை அடுத்து நீட் தேர்வு முடிவுகள் நாடுமுழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in மற்றும் cbseneet.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது கட்-ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் விட்ட சாபம்!

nitish_lalu

புது தில்லி:

பாஜக.,வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தன் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அவர் மீரா குமாரை ஆதரிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக, பாஜக., தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரது தேர்வை வரவேற்ற பீகார் முதல்வர் நிதீஷ் குமார், அவரை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதீஷ் குமாருடன் பீகாரில் கூட்டணியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமாரின் முடிவை கடுமையாக விமர்சித்ததுடன், அவரது முடிவுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்துள்ள மீரா குமாரை நிதீஷ் குமார் ஆதரிக்க வேண்டும் என்று நிதீஷிடம் கேட்டுக் கொண்டுள்ள லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமாரிடம் இது குறித்து நேரில் பேசுவேன். அவசரப்பட்டு நிதீஷ் குமார் பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரித்துவிட்டார். இந்தத் தவறான முடிவுக்கான பலனை நிதிஷ் அனுபவிப்பார் என்று லாலு சாபம் கொடுத்துள்ளார்.
ராம்நாத்தை ஆதரித்து ஒரு வரலாற்றுப் பிழை செய்த நிதீஷ் குமாரை மன்னிக்க மாட்டார்கள் என்று பொருமித் தள்ளியுள்ளார் லாலு.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

MK-Stalin-warns-BJP

சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம் என்று கூறிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் மீரா குமார் வெற்றிபெற திமுக சார்பில் வாழ்த்துகள் என்றும் கூறினார்.

திமுக., செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியது..

  • எதிர் கட்சிகளின் சார்பில் நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டு இருக்கிறாரே…

அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் குறித்து திமுக எந்த உணர்வுடன் இருந்ததோ, அதேபோன்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் வெற்றிபெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • பாஜக சார்பில் ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறாரே?

எதிர்க் கட்சிகளுடன் கலந்து பேசி, அதன் பிறகு தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம் என்று பாஜக வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதனை செயல் வடிவத்துக்குக் கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தினார்களே தவிர, இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அதனால் தான் எதிர் கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

  • இந்திய குடியரசுத் தேர்தலில் மதச்சார்பு வேட்பாளருக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களே?

எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுத்திருப்பது மதச்சார்பு மிக்கவர்களுக்கு மட்டுமல்ல, தாங்கள் அனைவரும் வருமான வரித்துறை ரெய்டில் இருந்து தப்பிக்க வேண்டும், அமலாக்கத்துறையில் இருந்து தப்பிக்க வேண்டும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பது தான் உண்மை.

  • தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை எழுப்புமா?

எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ள வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, அதனடிப்படையில் ஆதரவு கேட்க தயாராக இருக்கிறோம்.

  • திமுக தலைவரின் வைர விழாவில் பங்கேற்ற நிதிஷ்குமார், பாஜக., வேட்பாளரை ஆதரிப்பது குறித்து…

தலைவரின் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி குடியரசுத் தேர்தலை முன்னிட்டு நடந்த விழாவல்ல. அது தலைவருக்காக மட்டுமே நடைபெற்ற விழா. அதனால் தான் அவர் விழாவில் பங்கேற்றபோதும் தலைவரைப் பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன்: மௌனம் கலைத்த கோலி

virat-kholi

அனில் கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன் என்று தனது மௌனத்தைக் கலைத்து வாய் திறந்துள்ளார் விராட் கோலி. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விராட் கோலி முதல்முறையாக மௌனம் கலைத்து பதில் அளித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள கோலி, செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது,

கும்ப்ளே சில விஷயங்களை பொதுப்படையாகக் கூறி, தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் கும்ப்ளே மீது நான் மரியாதை கொண்டிருக்கிறேன். நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளை எவரும் பறித்துவிட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முடிந்ததும் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார். வீரர்களின் ஓய்வறையில் எது நடந்தாலும் அது நமக்குள் இருக்க வேண்டும். அவற்றை வெளியில் கசிய விடக் கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறோம். எனவே எங்கள் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாகக் கூற முடியாது என்று கூறினார்.

அரசியலுக்கு வந்தால்… தெரியப்படுத்துவேன்: ரஜினி பேட்டி!

IMG 20170528 020642 - 2026

நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுத்தால் உடனடியாக உங்களுக்கு
தெரியப்படுத்துவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் பங்கேற்க மும்பை செல்லும் முன்னர்,
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி
அளித்தார்.

அப்போது அவர் கூறிதாவது: செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில்
ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்.

அரசியல் தொடர்பாக பலரும் தன்னிடம் பேசி வருவதாகவும், தான் இன்னும் அதுகுறித்து
முடிவெடுக்கவில்லை.

நான் அரசியல் தொடர்பாக முடிவெடுத்தால் உடனடியாக உங்கள் கேள்விகளுக்கு பதில்
அறிவிப்பேன் என்றும் கூறினார்.

நீயும் நானும்: கோபால்தாசனின் கவிதை நூல் விமர்சனம்!

nanumneeyum - 2026
நீயும் நானும் : கவிஞர் கோபால் தாசன் எழுதிய கவிதை நடையிலான சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை: அறிமுக உரை!
***
சென்ட்ரலில் மையம் கொண்ட மனப் புயல்!
 
நீயும் நானும் – ஏதோ ஒரு சிறு கவிதைக்கான தலைப்பாக நினைத்துத்தான் படிக்கத் தொடங்கினேன். சிறு கதையைக் கூட குறுநாவலாக சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்று கவிஞர் கோபால்தாசன் இதில் நிரூபித்திருக்கிறார்.
அவளும் அவனும் ஏதோ ஒரு சூழலில் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பு முழுதாக இழுத்துச் செல்கிறது. காதலா நட்பா என்று திகைக்க வைக்கும் பேச்சுக்கள். முடிவு அந்த இணைக் கதாபாத்திரங்கள் வாயிலிருந்தே வெளிப்பட்டு விடுகிறது ஒரு கட்டத்தில்!
இது ஒரு காதல் கவிதை என்று எடுத்தவுடனே தோன்றுகிறது. கதாபாத்திரங்களின் பெயரை எங்குமே சொல்லாமல், நான், அவள் என்று கவிஞரே தன்னை முன்னிலைப் படுத்தி அவளை அறிமுகப் படுத்தி கவிதையை அத்தியாயமாக நகர்த்துகிறார்.
சினிமாக் கதாசிரியர்களைப் போல் காட்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் விளித்து, அத்தியாயத்தில் விரித்து சொல்லாடல்களை சுவைகுன்றாமல் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
காதலர்கள் என்றால்…? எப்போதும் செல்போன் பேச்சுதான்! அடையாளம் அப்படி ஆகிவிட்டது. சாலையில் நடக்கும்போதும், படுக்கையில் புரளும்போதும், காலையில் விழிக்கும்போதும், பேச்சு பேச்சு.. பேச்சுத்தான்! இப்படி ஒரு அடையாளத்தை நவீன தொழில்நுட்ப உலகு வழங்கியிருக்கும்போது… அப்படி என்னதான் பேசுவார்கள் இருவரும்!? எனக்குள் மட்டுமல்ல… காதலின் சுவை அறியா எவருக்குள்ளும் எழும் கேள்விதான் அது!
இந்தக் கேள்விக்கான பதிலை உரைநடைக் கவிதையாக கோபால்தாசன் காட்டி விடுகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் செல்போன் சிணுங்கலில் அவளின் சிணுங்கல் மொழியும், வாடா போடா ஒருமைப் பேச்சும், எப்படி காதலை வெளிப்படுத்துகிறது என்பதை இதில் உணர முடிகிறது. இது கற்பனையா, அனுபவமா என்பதை இந்தக் கவிதை வசனங்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் கவிஞர் கோபால்தாசனிடம் கேட்கத்தான் செய்வார்கள். கவிதைக்கு அனுபவமும் ரசனையும் தேவை. நிகழ்வின் அனுபவத்தை ரசித்து நோக்கக் கற்றுக் கொண்டால் கவிதைப் பூ மலரும். கோபால்தாசனின் இந்தக் கதாபாத்திர வெளிப்பாடும் அனுபவத்தையே காட்டுகிறது.
குறுகிய கால நட்புக்கு ரயில் சிநேகிதம் என்பார்கள். இங்கும் அப்படித்தான்..! அவனுக்கும் அவளுக்குமான முதல் பார்வை உள்ளூர் ரயிலில் தொடங்கி அத்யாயத்தின் இறுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிற்கிறது.
இந்த ரயில் சிநேகம், ஒரு அக்டோபர் 2ல் அறிமுகமாகி, இன்னொரு நாள் சந்திப்பில் முகவரி கேட்டு, போரூர்ப் பேருந்தின் நெருக்கடியில் மீண்டும் கண் கலந்து, பேருந்துக்காகக் காத்திருப்பில் கடந்து மீண்டும் மீண்டும் வலுவில் அமைத்துக் கொள்ளும் சந்திப்புகளில் வளர்கிறது.
பேருந்தில் அருகருகே இருக்கையில் அமர்ந்து கொள்ளும் அன்னியோன்னியம் அடுத்த கட்டம். வழக்கம்போல் செல்பேசி எண் கேட்டுப் பெறுவதும், போரடிக்கும்போது மிஸ் மிஸ்டு கால் கொடுப்பதுமாக நகர்கிறது வாழ்க்கை.
உன் பிறந்த தேதி எதுவெனக் கேட்பதும், எப்படியும் நீங்க சின்னவங்கதான்.. அதுக்காக அண்ணா தங்கச்சின்னெல்லாம் பாச மழை கொட்டி நெஞ்சை நக்குற சென்டிமெண்ட் எல்லாம் வேண்டாம் என்று அவன் சொல்வதும்… காதலின் கருத்தைப் புகல்கிறதா அல்லது வெறும் நட்புத்தானா என்ற நெருடலை விதைக்கிறது.
சேலை, சுடிதார் என்று அவளின் தோற்றத்தில் இவன் மனம் காணாமல் போகும் அடுத்த கணம், இவன் ஒரு பெண்ணை ரசிக்கும் கவிஞனா, இல்லை அவளைக் காதலில் கண்டு நெஞ்சில் தேக்கும் நிலையில் உள்ளானா என்ற சஞ்சலத்தை வாசகனுக்கு அளிக்கிறது.
உன் தோற்றமும் கோபமும் உனக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று அவன் கேட்க… குடும்பச் சொத்து அது என்று அவள் சொல்லிச் சிரிக்க, அவளின் பின்னணியில் ஏதோ ஒரு சோகம் உள்ளதை அங்கே கவிஞர் கோடிடுகிறார்.
அடுத்தடுத்த காட்சிகளில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறாள்.. அநாதையாக விடப்பட்ட பெண் தான் என்றும், சித்தியின் தயவில் வளரும் சோக நிலையையும் புரிய வைக்கிறாள். அவன் மனம் அங்கே இரங்கித் தவிக்கிறது.
மாநகரப் பேருந்தின் பயணங்களில் எத்தனையோ காட்சிகள் தினந்தோறும். அதில் ஒரு காதல் ஜோடிக்குள் என்ன வார்த்தைப் பரிமாறல் இருக்கும் என்பதை ஒரு பஸ்பயண பிரேக் காட்சியில் காட்டுகிறார். மறுநாள் பஸ் பயணம். இடையில், அலுவலகம் வா என அழைத்தேன். வரேன் என்றாய். விளையாட்டுக்கு என்றேன். சீரியஸ் என்றாய். எழுந்தேன். நீயும் எழுந்தாய். பஸ் பிரேக் போட்டதில் நீ என் மார்பில் விழுந்தாய். என் கால் உன் செருப்பினடியில் மாட்டிக் கொண்டது. கத்தினேன். பஸ்ஸே திரும்பிப் பார்த்தது என்று காட்சிப் படுத்துகிறார்.
கவிதைப் புத்தகம் வழங்கலும் வார்த்தைப் பரிமாறல்களுமாய் சென்ற சிநேகம், திடீரென ஒரு நாள் வாடா போடா என்ற அவளின் ஒருமைப் பேச்சில் தொடர… அங்கே நட்புறவின் நெருடலை நாமும் உணர்கிறோம்.
ஓட்டலில் ஒன்றாகக் காபி குடித்தல், எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற அவளின் திடீர் தாக்குதல், அதற்கு அவனின் பதில், இரவில் செல்பேசியின் செல்லச் சிணுங்கல்.. உனக்குக் கல்யாணம்னா எனக்கு என்ன? உனக்கு என்ன வேண்டும்? என்ற அவனின் கேள்விக்கு, எனக்கு நீதான் வேண்டும் என்று ஒற்றை வாக்கியத்தில் அவள் சொன்ன பதிலால் தூக்கம் கெடல்… என்று காட்சிகள் நகர்கின்றன.
மறுநாள் மௌனப் போராட்டம். பின்னர் பீச்சுக்குப் போலாமா என்ற கேள்வி! அவித்த வேர்க்கடலையுடன் பேச்சு… அடுத்தது சினிமா, பரிசுப் பொருள் பரிமாறல் என்று தொடரும் வழக்கமான காதல் காட்சிகள்.
மணிக்கணக்கில் நீளும் செல்போன் பேச்சுகள்… பஸ்ஸில் புறப்பட்டது முதல் வீட்டுக்குச் சென்று குளித்து சாப்பிட அமர்ந்தது வரை எனத் தொடரும் பேச்சு.
– இவற்றைக் காட்சிப் படுத்தும் விதம், திரைக்கதையாக நம் மனக்கண்ணில் விரிகிறது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு குறித்து அவன் எழுதிய கவிதையை அவள் சிலாகித்துச் சொல்ல… அவனுக்குள் ஒரு கிறுகிறுப்பு..! கவிஞனாயிற்றே! அவன் விரும்பும் அவளே பாராட்டினால்..!
மழைநாளில் ஒற்றைக் குடையில் நனைந்தபடி செல்லும் காட்சியில் அவளின் பேச்சு…
ஒருநாள், “நீ கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?” என்று அவன் கேட்டபோது, ‘என் சுதந்திரம் பறிபோகும்” என்ற அவளின் பதில்..! இங்கேதான் இருவரின் எண்ணமும் ஒரே புள்ளியில் மையம் கொள்வது அவனுக்குத் தெரிகிறது.
இருவரும் மகாபலிபுரம் போகிறார்கள். பிச்சைக்காரன் ஒருவன் வருகிறான். அவள் பிச்சை போடாமல், “எங்க ஆபீஸில் வாட்ச்மேன் வேலை காலி.. நீ வருகிறாயா” என்று கேட்க அவன் நகர்ந்தான் என்ற படி ஒரு பிச்சைக்காரனின் மன இயல்பை காட்சிப் படுத்துகிறார்.
கவிதைத் தொகுப்புகள் குறித்த பேச்சும், மண்டையில் கொட்டு வைத்தலும் என அவளின் செல்லச் சிணுங்கல்களைக் காட்டும் கவிஞர், அவள் தனது பேஸ்புக் கவிதையை ரசித்த விதத்தையும், ஒரு முறை தங்களுக்கு இடையிலான உறவு காதலா? நட்பா? என்ற கேள்விக் கணைக்குள் சிக்குவதை அவன் உணர்வையும் கூறுகிறார்.
அவளிடம் அவன் இதைக் கேட்க, அவளும் அதையே சொல்கிறாள். தங்கைகள் கல்யாணம் முடியணும்; குடும்ப பாரம் இருக்கு. பின்னர் பார்க்கலாம் என்கிறாள்.
அவளின் ஒரே துணை சித்தப்பா இறந்து போனதும் அவனை வீட்டுக்கு அழைத்து உதவச் சொன்னதும்… இப்படியாக நகரும் காட்சி ஒரு கட்டத்தில் நிறைவை சந்திக்கிறது.
அப்போது அவன் சொல்கிறான்…
ஒருதலைக் காதலில் இருக்கும்
வலியை விட
இருதலைக் காதலில் இருக்கும் வலி
அதிகம்…
காதலித்துப் பழகி, பலர் இல்லை இல்லை… நட்புதான் இது! என்று கழற்றிவிடும் நாளில், ஆமாம்.. நானும் காதலித்தேன் எல்லாமே காதலை மையமாகக் கொண்டுதான் என்று சொல்லிவிட்டு, கடமை என்று கைவிட்டுச் செல்லும் அவளை நினைத்துக் கொண்டே நாளைக் கடத்தலாம் என்று அவன் இருக்க…
ஒருதலையாய்க் காதலித்துப் பிரிந்தவன் ரணத்தை விட, இருதலையாய்க் காதலித்துப் பிரிந்தவர் ரணம்… சொல்லி மாளாது என்று அவன் தேற்றிக் கொள்கிறான்.
சென்ட்ரல்… மையம் கொள்கிறது காதல்.. விட்டுப் பிரியும் காதலி… முதல் முறையாகக் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். ரயில் நகர்கிறது.
ரயில் பயணத்தில் இருவராய் பயணம் செய்யத் தொடங்கி ரயில் நிலையத்தில் ஒருவராய் ஊருக்கு ஏற்றி விடும் அந்தக் காட்சியில் உண்மையாய்க் காதலித்தவன் வேதனை உள்ளத்தில் வெளிப்படுகிறது.
ஆணோ, பெண்ணோ.. கடமை என்று வரும்போது, காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்ற சிந்தனையை கவிஞர் விதைக்கிறார்.
ஒற்றை வரியில் சொல்லி விடலாம்தான் இந்தக் காதல் கதையை. ஆனால், கவிதையின் வீச்சும், இரு உள்ளங்களின் பேச்சும் ரசனை உள்ளோருக்கு அற்புத அனுபவத்தைத் தருகிறது. காதல் – ஓர் அனுபவம். அதை அனுபவித்தவர்க்கே அதன் வலிவும் வலியும் தெரியும். இரு உள்ளங்களில் எழும் எண்ணங்களின் இணைப்பு காதலாகத் துளிர்விடும்போது, அது கல்யாணத்தில் முடிந்தால் வெற்றி என்றோ, பிரிவில் முடிந்தால் தோல்வி என்றோ சொல்ல இயலாது. ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நேசிக்கும் உள்ளக் கலப்பே காதல்தான். கவிஞர் கோபால்தாசனின் இந்தக் கவிதைத் தொகுப்பும் இதனை ஆழமாகப் பதியவைத்துவிடுகிறது.
நண்பர் கோபால்தாசனுக்கு வாழ்த்துகள்.

அன்பன்,

செங்கோட்டை ஸ்ரீராம்

(பத்திரிகையாளர் – எழுத்தாளர்)

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”

19260268 1413356405438193 3315023502090745433 n - 2026

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”

பெரியாவாளே பதில் சொல்கிறார்-“தம்மிடம் இப்படி இனிய
தன்மை கொண்ட ‘ழ’வை உடையது என்பதால் தமிழ் என்று
வந்துவிட்டதோ” என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம் பிரமிப்பு.

கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(44)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவர் பெரும் அருளாளர் மட்டுமல்ல; பெரும் கல்விமான்!
மாபெரும் சிந்தனையாளர்.தன் அந்திமக் காலத்தில்
கிட்டத்தட்ட 96 வயது வரை அவர் படிக்காத நாளே இல்லை.
இவ்வளவுக்கும் முதுமை காரணமாக அவருக்கு ஒரு கண்
பழுதாகி சரியாக தெரியாத நிலை. ஆனால் அதைப்பற்றி
கவலையே படாமல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே
அவர் நிறைய படித்தார்.

பெரும்பாலும் இரவு தூங்கச் செல்லும் சமயங்களில்தான்
அவர் படிப்பார். பெரிதாக விளக்கு போட்டுக்கொண்டு
படிப்பது ஒரு ரகம். தோளுக்கும் கழுத்துக்கும் இடையே
டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு அதன் வட்டமான
வெளிச்சம் கைவசம் திறந்திருக்கும் புத்தகத்தின் மேல்
விழும் நிலையில் அதை வாசிப்பது ஒரு விதம்.பெரியவர்
அடுத்தவருக்கு தொந்தரவு தராமல் டார்ச் லைட்
உதவியோடுதான் வாசிப்பார்.

சமஸ்கிருதம்,ஆங்கிலம்,தமிழ் என்று மூன்றிலும் பெரியவர்
மிகுந்த புலமை உடையவராக திகழ்ந்தார்.எனவே அறிஞர்கள்
பெரியவரை சந்திக்கும் போது அவர்களிடம் அவர்கள்
மலைத்துப் போகும் அளவு பெரியவரால் பேச முடிந்தது.
இந்த மூன்று மொழிகள் அல்லது மற்ற மொழி அறிவும்
பெரியவருக்கு நிறையவே இருந்தது. அதே போல சரித்திர
ஞானம்,விஞ்ஞான ஞானம்,தமிழ் இலக்கிய ஞானம்,
ஆங்கிலத்தில் இலக்கண ஞானம் என்று அவரது ஆற்றலுக்கு
அவர் வாழ்வில் ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக
தமிழ் இலக்கியத்தில் பெரியவர் பெரிதும் ஆழங்கால்பட்டவராக
திகழ்ந்தார்.’கலைமகள்’ என்று ஒரு மாத இதழ் வெளியாகி
வருவதை நாம் அறிவோம்.இப்போதும் அது வெளியாகி
வருகிறது.

அந்த நாளில் அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்
கி.வா.ஜகன்னாதன்.தமிழ் உலகம் அவரை கி.வா.ஜ. என்று
மூன்றெழுத்தில் அழைக்கும்.கி.வா.ஜ.நல்ல மேடைப் பேச்சாளர்
குறிப்பாக சிலேடையாக பேசுவதில் அவர் வித்தகர்.

இரண்டு சிலேடைகள்.

1) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காக ரயிலில் வந்து இறங்கிய
அவரை மாலை போட்டு வரவேற்கிறார்கள்.

அப்போது கி.வா.ஜ. “அடடே காலையிலேயே இன்று மாலையும்
வந்துவிட்டதே!” என்றிட எல்லோரும் அந்தச் சொல்லின் (மாலை)
சிறப்பை (சிலேடை) மிகவே ரசித்தனர்.

2)அதே போல சாப்பிடும் போது மல்லிகைப் பூ போல இட்லியை
பரிமாறினாள் ஒரு பெண்.”என்னம்மா தலையில் வைக்க
வேண்டியத இலையில் வைக்கிற!” என்றார்.அந்தப் பெண்ணுக்கு
பிறகுதான் தெரிந்தது. இட்லி மல்லிகைப்பூ போல இருப்பதையே
அவர் அப்படி கூறுகிறார் என்று.

இப்படி அவரது சிலேடைகளை நூற்றுக்கணக்கில் கூறலாம்.
மிகுந்த தமிழ் அறிவும்,புலமையும் கொண்டவர் கி.வா.ஜ.
இவர் தமிழ்த் தாத்தாவான உ.வே.சா. அவர்களின் மாணவரும்
கூட.
……………………………………………………………………………………………………………..

இப்பேற்பட்ட கி.வா.ஜ.வும் பெரியவரும்-சந்தித்து ஆசி பெற
வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சி.

…………………………………………………………………………………………………………

கி.வா.ஜ விடம்,”தமிழ் மொழிக்கு ஏன் தமிழ் என்று பெயர் வந்தது?”
என்று பெரியவர் கேட்டார்.

இந்தக் கேள்வியை கி.வா.ஜ. எதிர்பார்க்கவில்லை
என்ன பதில் கூறுவது என்றும் தெரியவில்லை.

‘தமிழின் சிறப்பைச் சொல் என்றால் ஒரு மணி நேரம் கூட
பேசலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன. தமிழுக்கு தமிழ் என்று
ஏன் பெயர் வந்தது என்றால் அதை என்னவென்று சொல்வது?’

உண்மையில் கி.வா.ஜவுக்கு விடை தெரியவில்லை. அதற்கு
உள்ளபடியே ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை.
“எனக்கு தெரியவில்லை.நீங்களே சொல்லிவிடுங்கள்”
என்றார் மிகுந்த தன்னடகத்தோடு.

பெரியவரும் கூறத்தொடங்கினார்.

“நான் சொல்லப் போற பதில் என்னுடைய கருத்துதானே
ஒழிய இதை தமிழ்ப் புலவர்களோ,அறிஞர்களோ யாரும்
சொல்லலை.என் கருத்தை எல்லாரும் ஏத்துக்கணும்கிற
கட்டாயமும் கிடையாது.எனக்கு தோன்றியதைச் சொல்கிறேன்”
என்கிற பீடிகையோடு பெரியவர் சொல்லத் தொடங்கினார்.

“தமிழின் சிறப்பே ‘ழ’ கரம்தானே! வேறு எந்த பாஷையிலும்
இது கிடையாது. ‘ழ’கரம் வரும் சொற்கள் எல்லாமே
பெரும்பாலும் இனியது. நல்ல பொருள் உடையது.
‘மழலை,குழவி,வாழை,யாழ்,பொழிவு,வியாழன்,சூழல்,ஆழி,
மேழி, ஊழி…’ இப்படி ழ,ழி, வரும் சொற்களை வரிசையாக
சொல்லிக் கொண்டே வந்த பெரியவா,”தம்மிடம் இப்படி
இனிய தன்மை கொண்ட ‘ழ’வை உடையது என்பதால் தமிழ்
என்று வந்துவிட்டதோ” என்று கேட்கவும் கி.வா.ஜ.விடம்
பிரமிப்பு.

எவ்வளவு ஆழமான பார்வை.கருத்திலும் அசைக்க முடியாத
வலிமையல்லவா? கி.வா.ஜ. அந்த கருத்தை ஏற்றுக்
கொண்டதோடு, இனி நான் பேசும் தமிழ்க் கூட்டங்களில்
இதை எடுத்துச் சொல்வேன் என்றும் கூறினார்.

ரிபப்ளிக் டிவி.,யால் இடிந்துபோன இடிந்தகரை உதயகுமாரை கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்!

sp udayakumar - 2026

சென்னை:
கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய இடிந்தகரை சுப. உதயகுமார், ரிபப்ளிக் டிவியின் ஸ்டிங் ஆபரேஷனால் இடிந்து போய் உள்ளார். போராட்டங்களுக்கு சர்ச் தூண்டுதலில், பணம் பெறும் வழிமுறைகளைக் கூறிய உதயகுமார் மீது பலரும் கண்டனங்களை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக உதயகுமார், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது முகநூல் பதிவில், ரஜினிக்கு 4 கேள்விகள்.. பதில் கூறுவாரா? என்று கேட்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தனது முகநூல் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்!

  1. ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா?

  2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?

  3. எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?

  4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ஏற்கெனவே ரிபப்ளிக் டிவியின் ஸ்டிங் ஆபரேஷனால் இடிந்து போயுள்ள உதயகுமாருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!

13465968 1121379644601598 8551117235597951082 n - 2026

“யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல
சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும்
வித்யா கர்வம் மட்டும் கூடாது.

(வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!)

நன்றி-குமுதம் லைஃப்-இன்று வெளியான
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகேஸ்வரன்,சனகாதி முனிவர்களுக்கு பாடம்
கற்பிக்கறதுக்காக தட்சிணாமூர்த்தியா அவதாரம்
பண்ணினார்ங்கறது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.

அந்த சமயத்துல கல்லால மரத்துக்குக் கீழே அமர்ந்துண்டு
வார்த்தைகளால் எதுவும் சொல்லாம வெறும்
மௌனத்தாலாயே உபதேசம் பண்ணினார் தட்சிணாமூர்த்தி.

அந்த சர்வேஸ்வரனோட அம்சமாகவே போற்றப்படற
பரமாசார்யா, ஒரு சமயம் ஆலமரத்துக்குக் கீழே
அமர்ந்துண்டு வித்வான் ஒருத்தருக்கு ஞான உபதேசம்
பண்ணின சம்பவம்தான் இப்போ பார்க்கப் போறது.

மகாபெரியவா ஒரு சமயம் மகாராஷ்டிர மாநிலத்துல
இருக்கிற சதாராவுல தங்கி இருந்தார்.

அங்கே ஒரு ஆலமரத்துக்குக் கீழே தன்னோட இருக்கையை
அமைக்கச் சொல்லி அங்கேதான் இருந்துண்டார்,ஆசார்யா.
அவர் இளைப்பாறற சமயத்துல மரத்தோட வேர்ல தலையை
வைச்சுப்படுத்துக் கொள்வார். முன்னால் திரைபோட்டிருக்கும்
பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கற சமயத்துல மட்டும்
திரையை விலக்குவார்கள். அப்படியே மரத்துக்கு கீழேயே
அமர்ந்து தரிசனம் கொடுப்பார் ஆசார்யா.

அந்த சமயத்துல ஒருநாள், சென்னையில் இருந்து
க்ஷேத்ராடனம் வந்திருந்த வீணை வித்வான் ஒருதர்,பெரியவா
அங்கே இருக்கறதைத் தெரிஞ்சுண்டு, தன் நண்பரோட அங்கே
வந்திருந்தார். பெரியவாளை தரிசனம் செய்ததும்,அவர்
முன்னால உட்கார்ந்து கொஞ்சநேரம் வீணை வாசிக்க அனுமதி
கேட்டார்.பரமாசார்யா சம்மதம் சொன்னதும்,வித்வான்
வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சார்.

விதவிதமான ராகங்கள்ல அபூர்வமான கிருதிகளை எல்லாம்
அவர் வாசிக்க வாசிக்க, அங்கே இருந்த பக்தர்கள் எல்லாரும்
அந்த இசை மழையில் நனைஞ்சுண்டு இருந்தா.கிட்டத்தட்ட
முக்கால் மணிநேரம் வாசிச்சு முடிச்சுட்டு, வீணையை
உறையில் வைச்சு மூடி கட்டப் போனார் வித்வான்.

அப்போ, பெரியவா “கொஞ்சம் பொறு.வீணையை
மூடிவைக்காதே.அதை எங்கிட்டே குடு. நான் அதை
வாசிக்கலாம் இல்லையா?” என்று கேட்டார்.

‘பெரியவா வீணை வாசிக்கப் போறாரா?’ என்று எல்லாருக்கும்
திகைப்பு. வித்வான் உட்பட…! ஆனால் எதற்காக வாசிக்க
இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.

வீணையை வாங்கிண்ட ஆசார்யா,அதை ஸ்ருதி கூட்டி,
லேசா மீட்டினார்.

வித்வான்கிட்டே..”நான் ஸ்ருதி கூட்டியிருக்கிறது
சரியா இருக்கான்னு பாரு!” என்றார்.

“சரியா இருக்கு!”ன்னு சொல்லி வித்வான் ஆமோதிச்சு
தலைய ஆட்ட,மறு கணமே வீணையை வாசிக்க
ஆரம்பிச்சுட்டார் ஆசார்யா. ஒரு சில நிமிஷம் ஆகியிருக்கும்.

வீணை வாசிச்சுண்டு இருந்த பெரியவா முன்னால,சரணாகதி
பண்றப்புல அப்படியே விழுந்தார்,வித்வான். எழுந்து நின்னு
கன்னத்துல ‘பட் பட்னு போட்டுண்டு, “பெரியவா என்னை
மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்!தப்பு பண்ணிட்டேன்!
ன்னு திரும்பத் திரும்பச் சொல்லிண்டே கதறி அழ
ஆரம்பித்து விட்டார்.

வதனத்துல எந்த சலனத்தையும் காட்டாம,வாசிச்சுண்டு
இருந்த கிருதியை முழுசாவாசிச்சு முடிச்சார்,மகாபெரியவா.
பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து,
“வித்யா கர்வம் ஒருத்தருக்கு இருக்கவே கூடாது,
இனிமேலாவது கவனமா இரு!” அப்படின்னு சொல்லி
ஆசிர்வாதம் செய்தார்.

என்ன நடக்கிறது.பரமாசார்யா திடீர்னு வீணை வாசிக்கறதா
சொல்லி வாசித்தது ஏன்? இப்போ வித்வானுக்கு அட்வைஸ்
செஞ்சது ஏன்? இதெல்லாம் அங்கே இருந்தவா யாருக்குமே
புரியலை.வித்வான் கூட வந்திருந்த அவரோட நண்பருக்கோ
என்ன நடக்கறதுன்னே புரியலை.

“இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே!
ஆசார்யா அட்வைஸ் பண்ணினார். அப்படி என்னதான் தப்பு
பண்ணினே”–வித்வானிடம் நண்பர்.

“என்னோட வாசிப்பை எல்லாரும் ரசிச்சா இல்லையா?
அதைப் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் கர்வமா இருந்தது.
ராவணன் சாமகானம் வாசிச்சு ஈஸ்வரனையே
மயக்கினமாதிரி, நாமளும் சாமகானத்துல இசைச்சு
எல்லாரையும் மயக்கிடணும்னு நினைச்சு, அந்த ராகத்துல
ஒரு கிருதியை வாசிக்க ஆரம்பிச்சேன்.தொடங்கிட்டேனே
தவிர, பாதியில அதுக்கான ஸ்வரங்கள் மறந்து போயிடுத்து.
மாத்தி வாசிச்சா யாருக்குத் தெரியப் போறதுன்னு நினைச்சு,
வேற ஸ்வரவரிகளை வாசிச்சு எப்படியோ ஒருவழியா நிறைவு
செஞ்சுட்டேன்.மத்தவா யாரும் இதை தெரிஞ்சுக்கலைன்னதும்
ரொம்பவே சாமர்த்தியமா வாசிச்சுட்டதா மனசுக்குள்ளே
கர்வப்பட்டுண்டேன்.

மகாபெரியவா நான் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சுட்டதோட,
வீணையை வாங்கி,நான் எந்த இடத்துல ஸ்வரத்தை மாத்தி
வாசிச்சேனோ அந்த பகுதியில வரவேண்டிய சரியான
ஸ்வரத்தை கொஞ்சமும் பிசகாம வாசிச்சு நிறைவு செய்தார்.

ஆசார்யா ஸர்வக்ஞர்.அவருக்கு எல்லாம் தெரியும்கறதை
மறந்து,யாருக்குத் தெரியப்போறதுன்னு நினைச்சு,தப்பா
வாசிச்சதோட இல்லாம,மாத்தி,மாத்தி வாசிச்சு, வித்யைக்கே
அபச்சாரம் பண்ணிட்டேன். அதனாலதான் மகாபெரியவாகிட்டே
மன்னிப்பு கேட்டேன்!” அப்படின்னார் வித்வான்.

வீணை வித்வானுக்கு மட்டுமல்ல. யாரா இருந்தாலும்
கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும்,
எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது. அது
இருந்தா கத்துண்ட கலையே மறந்திடும்.அப்படின்னு
ஆலமரத்துக்குக் கீழே உட்கார்ந்து ஆசார்யா நடத்தின பாடம்
அங்கே இருந்த எல்லாருக்கும் பரிபூரணமா புரிஞ்சுது.