Home Blog Page 149

வாடிப்பட்டி சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை!

goat sales in vadipatti - 2026
#image_title

வாடிப்பட்டி : கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாமக்கல் சேலம் புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்த ஆடுகளை அதிக விலைக்கு வாங்கிச் சென்ற வியாபாரிகள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் தீபாவளி திருநாள் இரண்டு தினங்களே உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை ஆன இன்று ஆயிரக்
கணக்கில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது

குறிப்பாக செம்மறி ஆடுகள் மயிலம்பாடி ஆந்திரா வகை கர்நாடகா வகை போன்ற ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்காக வந்திருந்தது. தமிழகத்தின் நாமக்கல் சேலம் புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களிலிருந்தும் தேனி மதுரை திண்டுக்கல் ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில், 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடுகள் கிலோ 800 ரூபாய்க்கும்
25 கிலோ ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும் 25 கிலோ எடையுள்ள ஆட்டுக்கிடாய் 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதேபோல், சேவல் கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது

கோழி கிலோ 400 ரூபாய்க்கும் சேவல் ₹600 க்கும் நாட்டுக்கோழி 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அதிகாலை 3 மணி முதல் வர்த்தகர்கள் டாட்டா ஏசி மினி வேன் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில், ஆடு மற்றும் கோழிகளை வாங்கிச் சென்றனர் .

அங்கிருந்த வியாபாரிகள் கூறுகையில், பொதுவாக 50 லட்சத்திற்கு விற்பனையாகும் வார சந்தையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது. முக்கியமாக ஆந்திரா கர்நாடகா வகை ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது  என்று கூறினார்.

செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை, இனிப்பு வழங்கல்!

ce1b0b3c87a24fb6abe02533c5b20b54 e1730207107371 - 2026


செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கல்.

செங்கோட்டை வம்பளந்தான் முக்கு அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து ஜனசேவா டிரஸ்ட் சார்பில் ஏழை,எளிய, ஆதவரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஜனசேவா டிரஸ்ட் ஆலோசனை குழு கௌரவத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி .மீனாகுமாரி, நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜன், சமூக ஆர்வலா் ஹரிஐயர் ஆகியோர் முன்னிலைவகித்தனா். டிரஸ்ட் நிறுவனத் தலைவா் நாணய கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேசன் நிறுவனத் தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் வழக்கறிஞா் பால்ராஜ் சமூக சேவகர் ஓவிய ஆசிரியர் முருகையா லதா முருகையா. .சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜனசேவா
டிரஸ்ட் செயலாளர் ஐயப்பன் நன்றியுரையாற்றினார்.

அமெரிக்க தேர்தல் அரசியல்; முந்துவது யார்?

donald trump vs kamala - 2026
#image_title

அமெரிக்க அரசியல் – 2024

கடந்த ஜூலை மாதத்தில் அதிபர் ட்ரம்பை மிகவும் கேவலமாகச் சாடி நான் எழுதி இருந்தேன். ஆனாலும், கமலா ஹாரிஸின் அரைவேக்காட்டுத்தன பித்துக்குளி அரசியல் பற்றியும் கவலைப்பட்டு, அமெரிக்காவுக்கு இது ஒரு கெட்ட காலம், We Are Stuck Between The Devil And The Deep Sea என்று நான் விசனப்பட்டிருந்தேன்.

அதற்குப் பிறகு கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க அரசியலில் நடந்தது என்ன?

மேடையில் கோர்வையாகவும் சாதுர்யமாகவும் பேசத் தெரியாத ட்ரம்ப், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்ட ஹாரிஸ்-ட்ரம்ப் டிபேட்டில் தோல்வியையே தழுவினார்.

என்றாலும் …

மிகச் சமீபகால நடவடிக்கைகளில் ஹாரிஸின் அரைவேக்காட்டுத்தனம், அரசியல் முதிர்ச்சியின்மை, எதற்கெடுத்தாலும் ஒரு அசட்டுக் குதிரைச் சிரிப்பு, எந்தவொரு முக்கியமான பிரச்னை பற்றியுமே ஆழ்ந்த அறிவின்மை- இவை எல்லாமே ஓட்டு போடும் மக்களை திடுக்குறச் செய்துள்ளன என்றால் அது மிகையல்ல.

Trump is a known bad factor என்றால் Kamala is proving to be worse in almost all internationally sensitive issues as well as issues that matter at home.

ஜனநாயக் கட்சியின் தொடர் ஆதரவில் நாடெங்குமே ஒரு புதிய வன்முறை கலாச்சாரம், சாதாரண மக்களும் சட்டத்தைத் துச்சமென மதிக்கும் போக்கு, San Francisco, New York, Chicago, Philadelphia, Los Angeles போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே Louie Vitton, Nordstrkm’s, Rolex, Cartier போன்ற மோல்தட்டுக் கடைகளிலும், Seven Eleven போன்ற சாதாரணக் கடைகளிலும் கூட்டமாகப் புகுந்து Smash and Grab ரௌடியிசம், அரசெயல் தலையீட்டால் போலீஸ் எந்தவொரு ஆக்‌ஷனுமே எடுக்காமல் கை பிசைந்து நிற்கும் அவல நிலை, நாடெங்கும் மிக அதிகமான பணவீக்கம், போதைப் பொருட்களின் சகஜமான நடமாட்டம், வோட்டு போடுவதற்கு ஐடி எதுவுமே தேவையில்லை என்றொரு திடீர் பாலிசி, அமெரிக்காவின் சர்வதேச எல்லைகளில் பிற நாடுகளின் கிரிமினல்கள் கூட்டம் ….
அமெரிக்கா மூன்றாவது உலகப் பிரஜையாகி விட்டது என்பதே மிகுந்த வருத்தம் தரும் உண்மை.

Under Democratic Party rule, The Great USA is fast becoming a lawless Banana Republic like Zaire.

“If you want to see how America has culturally degraded, come to San Francisco downtown” என்கிறார் எலான் மஸ்க்.

மிக மிக மோசமாகிவிட்ட கள நிலவரம்.

இது பற்றியெல்லாம் கமலா ஹாரிசுக்குக் கவலை ஏதுமில்லை. She is controlled by the Deep State 100%. ஏற்கனவே அந்த அம்மணிக்குச் சுய புத்தியோ, சொல்பேச்சு கேட்கும் திறனோ இல்லை என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

அவர் ஒரு மோசமான டம்மி என்பது அனைவருக்கும் புரிய ஆரம்பித்து விட்டது.

சர்வதேச அரங்கில் கூட கமலாவை மதிப்பார் யாருமில்லை, ரஷ்யா, இஸ்ரேல் உட்பட.

கமலாவிடமும் உக்ரைன் போரை நிறுத்தவோ, இஸ்ரேல்-ஹெஸ்போல்லா-இரான்-ஹமாஸ் சிக்கல்களைத் தீர்க்கவோ, போரின் உக்கிரத்தைக் குறைக்கவோ தொலைநோக்குத் திட்டங்கள் ஏதுமில்லாதது மட்டுமல்ல, அமெரிக்க மிலிட்டரி ஸ்டேட்டின் கைப்பாவையாக மட்டுமே அவர் விளங்குகிறார்.

“நான் இந்தியாவின் நண்பன், ஹிந்துக்களின் நண்பன், மோடி என் சூப்பர் ஹீரோ, உலகெங்கும் பயங்கரவாதிகளுக்கு நான் சிம்ம சொப்பனமாவேன்” என்று ட்ரம்ப் ஓப்பனாகவே முழங்குகிறார்.

கமலா ஹாரிஸ்? மூச்! இது பற்றி அம்மணி வாயே திறப்பதில்லை. பாகிஸ்தானுடனான அமெரிக்க ரகசிய கள்ள உறவு, இந்தியாவுக்கு எதிரான போக்கு, கமலாவின் மேற்பார்வையில் தொடரும் என்பது தீர்க்கமாகத் தெரிகிறது.

பிரபல பத்திரிகைகள் தேர்தல்களுக்கு முன் தங்கள் தேர்வாளர்களை வெளிப்படையாகச் சொல்வது இங்கே ஒரு நல்ல பழக்கம்.

கடந்தகால அதிபர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியை சப்போர்ட் செய்த, ஆதரித்த வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற பிரபல பத்திரிகைகள் இந்த முறை “யாருக்கும் ஆதரவில்லை” என்று கையை விரித்து விட்டன அல்லது ட்ரம்பை சப்போர்ட் செய்கின்றன என்பது கவனிக்கத் தக்கது.

குறிப்பாக கமலாவுக்கு ஆதரவில்லை என்பதே இதில் முக்கிய செய்தி! சமீபத்திய நிலவரப்படி ட்ரம்ப் ஆதரவே நாடெங்கும் பெருகி வருகிறது.

அமேஸானின் ஜெஃப் பெஸோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் போன்ற உலகப் பெரும் பணக்காரர்களும் ட்ரம்புக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி, மில்லியன்ஸ் கணக்கில் அங்கே கட்சி நிதியை அள்ளிக் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள்.

ட்ரம்ப் ஒன்றும் உத்தமரில்லை. இருந்தாலும், இரண்டு மோசமான போட்டியாளர்களையும் சீர்தூக்கிப் பார்க்கையில், அமெரிக்காவின் அவசரத் தேவைகளான சட்டம், ஒழுங்கு, உக்ரைன் போரை உடனடியாக நிறுத்தவேண்டிய கட்டாயம், இந்தியாவுடனான நல்லுறவு, சைனாவுக்கு வைக்க வேண்டிய செக், இஸ்ரேலுடன் சகஜ நிலை, உலக நாடுகளிடம் அமெரிக்க நற்பெயர் மீட்டெடுப்பு, ஆகியவற்றை மனதில் கருதி …

இந்த முறை என் ஓட்டு … அதிபர் ட்ரம்புக்குத்தான்!

  • லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

annamalai bjp tn leader - 2026

“ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” என்று பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகத் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவு….

பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.

நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், “பல ஜீவராசிகள் நம்மோடு வாழ்கின்றன. அவற்றுக்கு தொந்தரவில்லாமல் பட்டாசு வெடியுங்கள்” என்று தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்!

kadeswara subramaniam hindu munnani - 2026

துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். திராவிட ஆரிய இனவாதம் ஆங்கிலேய கிறிஸ்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தைத் கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவர்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிக்க தகுதியற்றவர்.

அந்நிகழ்ச்சியில் பேசும்போது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சங்கிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கல்வியை காவிமயமாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஒரு அப்பட்டமான பிரிவினைவாத புரட்டுக் கருத்துக்களை கூறியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.

உதயநிதி அவர்கள் துணை முதல்வராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுக்கும் போது தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் துணை முதல்வராக பதவியேற்றாரே தவிர அவரின் கட்சி நிலைப்பாடான திராவிட கருத்தியல்கள் கொண்ட இயக்கத்தினர்களுக்கு மட்டுமே துணை முதல்வராக பதவி ஏற்க வில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவர் துவக்கி வைத்த திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சில நபர்கள் நக்சல் சிந்தனை கொண்டவர்கள் என்றும், பல்வேறு வழக்குகளில் உள்ளவர்கள் என்றும், ஆசிரியர்களாக பொறுப்பு வகிக்க தகுதி இல்லாதவர்கள் என்றும் அரசாங்கத்தால் பலமுறை தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்களைக் காப்பாற்ற திராவிட கருத்தியல் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் ஆளும் கட்சியான திமுகவின் ஆதரவோடு அந்த வழக்குகளில் தப்பிக்க உதயநிதி துணைபோகிறார் என்று கூறப்படுகிறது.

தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன திராவிட கருத்தியல்களை இதுபோன்ற நபர்கள் மூலமாக மீண்டும் வலுக்கட்டாயமாக மாணவர்கள் மத்தியில் புகுத்துவது உள்நோக்கம் கொண்டது.

தமிழகம் என்றுமே தேசியத்தின் தெய்வீகத்தின் பக்கம் தான் இருந்துள்ளது என்பது தமிழக மக்கள் தங்கள் செயல்களின் மூலமாக பல்வேறு தடவை நிரூபித்துள்ளனர்.

துணை முதலமைச்சராக இருந்து கொண்டு பொதுவெளியில் பேசும்போது. பல அறிஞர்களால் ஆதாரப்பூர்வமாக பொய் என்று நிரூபிக்கப்பட்ட ஆரிய திராவிட இனவாதத்தை ஆதரித்து பேசியது திட்டமிட்ட சதி.

மேலும் அவர் பேசும்போது மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் தொழில் தொடங்குவதற்கான விஸ்வகர்மா திட்டத்தை குலத்தொழில் என்று பொய் பிரச்சாரத்தை செய்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொழில் முனைவோருக்கான விஸ்வகர்மா திட்டம் ஏதோ தாத்தா முதலமைச்சர் அப்பா முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சர் என்ற குலப் பதவி போன்றது அல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் அனைத்து தொழில்களும் வளர்ச்சி அடையும் நோக்கத்தோடு செய்யப்பட்ட திட்டம் என்பதை உதயநிதி நினைவில் கொள்ள வேண்டும்.

யார் தொழில் செய்தாலும் விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக பயனடையலாம். தமிழகத்தில் தொழில் திறமையை வளரவிடாமல் திமுக அரசுதான் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. அரசியலை குலத்தொழிலாக செய்யும் திமுகவினர் தான் பிற்போக்கு வாதிகள் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் தமிழக அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளனரோ அப்போதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற திமுக கையில் எடுப்பதுதான் திராவிட கருத்தியல், குலத்தொழில், ஆரிய திராவிட இனவாதம், இந்தி எதிர்ப்பு, மொழி வெறி அரசியல் என்பதை தமிழக மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

இனியும் இவற்றையெல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசாங்கத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு தங்களின் இயக்க கருத்துக்கு மாற்றானவர்களை சகித்துக் கொள்ள இயலாமல் பொதுவெளியில் பொய்யான கருத்தினை கூறி, அநாகரிகமாக பேசி தாக்குவது இவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

ஆகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தங்களது கட்சி சார்பில் பேசட்டும். மக்கள் அப்போது இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.

செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

1 scaled e1730105404441 - 2026


செங்கோட்டையில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்.

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கடந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள்
வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு இன்றுவரையில் வழங்கி வருகிறது.

மேலும் பல்வேறு சமூக செயல்பாடுகள் மூலம் சிறந்த சேவையின் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 5ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வருகிறது. இந்தாண்டு நடந்த புத்தாடை வழங்கும் நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி ஆசிரியா் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

நகராட்சி சுகாதார அலுவலா் ரெங்கநாதன், தென்காசி ரோட்டரி கிளப் (சக்தி)தலைவி விஜயலெட்சுமி, பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அரசு பள்ளி ஆசிரியை அமுதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி விவேகானந்தா ஆசிரம
ஸ்தாபகர் அகிலானந்த மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலா்கள் ஆவுடையப்பன், தங்கராஜ், மற்றும் தாயின் மடியில் அறக்கட்டளையினுடைய நிர்வாகிகள் உறுப்பினா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பேரிடர் காலங்களில் கட்சிகள் செய்யும் அரசியல்!

mandus cyclone dec8 - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னையில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி அதி கன மழை ஓரிரு இடங்களில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதற்கான ரெட் அலர்ட்டையும் அது கொடுத்திருந்தது. தமிழகத்தில் உள்ள பல தனியார் ஆர்வலர்கள் இந்த அலர்ட்டை தங்கள் மொழியில் உறுதி செய்திருந்தார்கள். ஆனால் 16 அன்று மழை பெய்யவில்லை. 15ஆம் தேதி பல இடங்களில் கன மழை பெய்தது.

இந்த நிகழ்வு முடிந்ததும் தொலைக் காட்சி ஒன்றில் இந்த வானிலை ஆய்வு மையம் தவறான வானிலை எச்சரிக்கைகள் கொடுக்கிறது. அதன் தலைம அதிகாரி சரியாகச் சொல்வதில்லை என பொதுமக்கள் சொல்லும் ஒரு விடியோவை ஒளிபரப்பியது. இவ்வாறு வானிலை மைய அதிகாரிகளைப் பழிக்கும் வழக்கம் ஆட்சியாளர்களிடமிருந்து ஊடகங்கள் வரை அனைவரிடமும் உள்ளது. ஆனால் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஒரு வியாதி.

செப்டம்பர் 2024 இன் பிற்பகுதியில், முன்பு அமைதியாக இருந்த அட்லாண்டிக் பெருங்கடலில் புயல் பருவம் தொடங்கியது. அமெரிக்காவில், அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றும் இப்புயல்கள் ஹரிக்கேன் என அழைக்கப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில், இரண்டு வார இடைவெளியில் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு மிக மோசமான மற்றும் கொடிய புயல்களால் (ஹெலன் மற்றும் மில்டன்) இப்பருவம் எழுச்சியுற்றது.  இது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்தது.

மில்டன் சூறாவளிக்குப் பிறகு புளோரிடாவில் பேரழிவு

அக்டோபர் மாதத்தில் ஹரிக்கேன் பருவ எழுச்சியின் போது, ​​ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளிகளின் தன்மை மற்றும் புயலுக்குப் பிந்தைய பேரழிவு மீட்பு பற்றி பல சதிக் கோட்பாடுகள் பரவத் தொடங்கின. பல தீவிர வலதுசாரி செல்வாக்கு செலுத்துபவர்கள், குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரால் ஏராளமான பொய்கள் மற்றும் சதிகள் பரப்பப்பட்டன. இந்த பரவலான வதந்திகள் முதல் பதிலளிப்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ மீட்பு பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன, மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளன, மேலும் சில அதிகாரிகள் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகை மற்றும் ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி ஆகியவை இந்த கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புயல் பருவம் முழுவதும் அறிக்கைகளை வெளியிட்டன.

பின்னணி

2024ஆம் ஆண்டின் முற்பகுதியில், புயல் முன்னறிவிப்பாளர்கள் லா நினா விளைவு மற்றும் சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலையை மேற்கோள் காட்டி மிகவும் ஆக்டிவான பருவத்தை முன்னறிவித்தனர். விதிவிலக்காக ஆரம்பகால பெரில் புயலுக்குப் பிறகு, அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆகஸ்ட் வரை இந்த கணிப்பை பராமரித்தது. எவ்வாறாயினும், உச்ச பருவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், சில புயல்கள் இருந்தன, மேலும் சிலர் சீசனை “வெடிப்பு” என்று அழைத்தனர்.

செப்டம்பர் பிற்பகுதியிலும் அக்டோபர் தொடக்கத்திலும், ஹெலேன் மற்றும் மில்டன் புயல்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அமைதியை உடைத்து பாரிய அழிவை ஏற்படுத்தியது. ஹெலேன் தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள வட கரோலினாவில், விதிவிலக்கான வெள்ளத்தை ஏற்படுத்தியது. மில்டன் விரைவாக தீவிரமடைந்து இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்தது. இப்புயல் கேட்டகிரி 5க்கு வலுப்பெற்றது. மற்றும் அதன் காற்றின் வேகம் 24 மணி நேரத்தில் 90 மைல் வேகத்திற்கு அதிகமானது.

காலநிலை மாற்றம்

ஜார்ஜியாவின் 14வது காங்கிரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி மார்ஜோரி டெய்லர் கிரீன் அக்டோபர் 3 அன்று ஒரு ட்வீட்டில் புயலைப் பாதிக்க வானிலை மாற்றத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, கிரீன் வானிலை மாற்றம் சாத்தியம் மற்றும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறி மற்றொரு இடுகையை வெளியிட்டார். பிரபல வலதுசாரி சதி கோட்பாட்டாளர் அலெக்ஸ் ஜோன்ஸ், மில்டன் மற்றும் ஹெலன் சூறாவளி அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட “வானிலை ஆயுதங்கள்” என்று கூறினார். வானிலை ஆய்வாளர்கள் மாத்யூ கப்புசி, கேட்டி நிக்கோலாவ் மற்றும் ஜேம்ஸ் ஸ்பான் ஆகியோர் அமெரிக்க அரசாங்கம் சூறாவளியைக் கட்டுப்படுத்துவதை மறைப்பதாகக் குற்றம் சாட்டி அச்சுறுத்தல்களைப் பெற்றனர்.

HAARP (High-frequency Active Auroral Research Program – HAARP) ஆராய்ச்சி திட்டமானது வானிலையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்ற கூற்று பல ஆண்டுகளாக பிரபலமாக உள்ளது. ஹெலன் புயலில் HAARP தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்தத் திட்டம் மிகவும் குறைந்த ஆற்றல் கொண்டது மற்றும் வானிலையைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கவில்லை. அதேபோல், NEXRAD எனப்படும் வானிலை ரேடார் அமைப்பு வானிலை முறைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கூறப்பட்டது. ஒரு ரேடார் அமைப்பாக இது ஒரு சிறிய அளவிலான ஆற்றலை மட்டுமே வெளியிடுகிறது மற்றும் வானிலையை பாதிக்காது.

புளோரிடா மக்கள் மீது உள்ள கோப உணர்வுகளால் புயலின் பாதைகளை திசைதிருப்புவதற்கான வானிலை மாற்றத்திற்கான முன்மொழிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கம் 1963ஆம் ஆண்டில் புயல் விதைப்பு (Hurrican seeding) சோதனைகளை நிறுத்தியது, முயற்சிகள் பயனற்றவை என்பதை நிரூபித்த பின்னர், வானிலை ஆய்வாளர்கள் அதை இனி சாத்தியமில்லை என்று கருதுகின்றனர். ஆனால் இன்னமும் அமெரிக்க ஊடகங்களில் சில இதனை ஒரு காரணமாகச் சொல்கின்றன.

நில அபகரிப்புக் குற்றச்சாட்டுகள்

ஒரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், அமெரிக்க அரசாங்கம் நிலத்தை, குறிப்பாக அழிக்கப்பட்ட வீடுகளைக் கைப்பற்ற பேரழிவைப் பயன்படுத்துகிறது என்பதாகும். ஹெலேன் சூறாவளியைத் தொடர்ந்து, வட கரோலினாவில் உள்ள சிம்னி ராக் என்ற பூங்கா வேண்டுமென்றே ‘மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதாக” வந்த அறிக்கையை மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதனால் கூட்டாட்சி அரசாங்கம் குடியிருப்பாளர்களை வெளியேற்றிய பிறகு அல்லது குடியிருப்பாளர்களை இறந்த பிறகு, அந்தப் பகுதிகளை லித்திய சுரங்கமாக மாற்றலாம் என அரசு எண்ணுகிறது. மாவட்ட அதிகாரிகள் அத்தகைய திட்டங்களை மறுத்தனர். புளோரிடாவில் மில்டன் சூறாவளி நிலச்சரிவுக்கு வழிவகுத்த நாட்களில் இதேபோன்ற வதந்திகள் பரவியது, இது ஃப்ளோரிடியர்களின் வீடுகளை FEMA கைப்பற்றியதாகக் கூறப்பட்டதை ஆளுநர் அலுவலகம் மறுதலிக்க வழிவகுத்தது.

AI- செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்கள்

சமூக ஊடகங்களில் புயலால் ஏற்படும் தாக்கம் மற்றும் அதனைச் சமாளிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிச் சித்தரிக்கும் பல வைரஸ் AI-உருவாக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றன. வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தின் ஒரு படம் டென்னசி, காட்லின்பர்க் என்று கூறப்பட்டது, நகரம் வெள்ளத்தில் மூழ்கவில்லை மற்றும் பார்வையிட பாதுகாப்பானது என்று நகர அதிகாரிகள் பதிலளிக்க வேண்டியிருந்தது.

ஹெலன் புயலுக்குப் பிறகு, வெள்ள நீரில் மிதக்கும் படகில் அமர்ந்து நாய்க்குட்டியை வைத்திருக்கும் ஒரு சிறுமியின் AI-உருவாக்கிய படம் குடியரசுக் கட்சியினரிடையே பரவியது, அவர்கள் பேரழிவிற்கு பதிலளிக்க பிடன் நிர்வாகத்தின் தோல்விக்கான சான்றாக அதைப் பயன்படுத்தினர். சில ஆதாரங்கள் படம் போலியானது என்று தெரிந்த பிறகு அதை திரும்பப் பெறவில்லை. ட்ரம்ப் எந்தவிதமான நிவாரணப் பணிகளையும் செய்யாத போதிலும், மக்களை மீட்பதற்காக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளத்தில் தத்தளிப்பது மற்றொரு படம் வெளியானது.

புளோரிடா முழுவதும் மில்டன் புயலின் பாதையைத் தொடர்ந்து, வால்ட் டிஸ்னி வேர்ல்டில் வெள்ளப்பெருக்கை சித்தரிக்கும் AI-உருவாக்கிய படங்கள் ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டியால் டெலிகிராமில் வெளியிடப்பட்டது, பல ரஷ்ய செய்தி நெட்வொர்க்குகளால் விரைவாக மறுபிரசுரம் செய்யப்பட்டு ஆங்கிலம் பேசும் இணையத்தில் பரவலாக பரவியது. அக்டோபர் 9 சூறாவளி வெடித்ததை ஆவணப்படுத்துவதாகக் கூறப்படும் AI-உருவாக்கப்பட்ட மற்றும் CG படங்கள் பிரிட்டிஷ் டேப்ளாய்ட் தி மிரர் உட்பட பரவலாகப் பகிரப்பட்டன.

பேரிடர் கால நிதி பற்றிய புகார்கள்

சென்னையில் வெள்ளம் வந்தது; மத்திய அரசு அதற்கான நிவாரண நிதியைத் தரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வந்தது; மத்திய அரசு அதற்கான நிதியைத் தரவில்லை என்ற குற்றச் சாட்டை தமிழகத்தில் நாம் பார்த்தோம். அமெரிக்கவிலும் இத்தகைய நிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அக்டோபர் 3 அன்று, டொனால்ட் டிரம்ப், பிடென் நிர்வாகம் “சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான” வீட்டுவசதிக்காக FEMA (Federal Emergency Management Agency)  பேரழிவு நிவாரண நிதியைச் செலவழிப்பதாகக் குற்றம் சாட்டினார், மேலும் பேரிடர் மீட்பு முயற்சிகளுக்கு ஏஜென்சியிடம் நிதி இல்லை என்று கூறினார்.

ஓஹியோ பிரதிநிதி ஜிம் ஜோர்டானும் இதேபோல், குடியேற்றவாசிகளின் வீடுகளுக்கு பேரிடர் நிதி சென்றதாகக் கூறினார். எலோன் மஸ்க் இந்த கூற்றை பெரிதுபடுத்தினார், அவர் FEMAவின் நடவடிக்கைகளை “தேசத்துரோகமாக” கருதுவதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் கைது செய்யப்பட வேண்டும் என்ற அழைப்பை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். FEMA எந்த பேரிடர் நிவாரண நிதியையும் புலம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றத்திற்கு திருப்பி விடவில்லை, மேலும் FEMA தொடர்ந்து நிவாரண முயற்சிகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறது.

பேரிடர் கால உதவிகளில் பிரச்சனை

FEMA அதிகாரிகள் தனியார் தன்னார்வலர்கள் செய்யும் உதவிகளை பறிமுதல் செய்வதாகவும், வட கரோலினாவின் குடியரசுக் கட்சியின் பகுதிகளில் தன்னார்வ முயற்சிகளை வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின.

FEMA ஊழியர்கள் மற்ற சதி நோக்கங்களுக்காக நிவாரணப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தூக்கிலிடப்பட்டதாக வதந்தி பரவியது. எலோன் மஸ்க், FEMA உதவிப் பொருட்களை அபகரித்தது, தனியார் குடிமக்கள் உதவி வழங்குவதைத் தடுப்பது, மற்றும் வட கரோலினாவில் உள்ள ஷெரிப்கள் FEMA ஊழியர்களைக் கைது செய்வதாக அச்சுறுத்தியது என்று பொய்யான கூற்றுக்களை பிரச்சாரம் செய்ததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.

FEMA ஊழியர்களைக் கொல்ல அமெரிக்க மரைன் கார்ப்ஸ் துப்பாக்கி சுடும் வீரர்களைப் பயன்படுத்துகிறது என்று ரியல் ரா நியூஸ் பொய்யாகக் கூறியது. DHS செயலர் அலேஜான்றோ மேயர்காஸ் (Alejandro Mayorkas), FEMA பொது விவகார இயக்குனர் ஜாக்லைன் ரொதன்பெர்க் (Jaclyn Rothenberg) மற்றும் ஆஷ்வில்லியின் (Asheville) மேயர் எஸ்தர் மன்ஹைமர் ஆகியோர் ஆன்லைனில் ஆண்டிசெமிடிக் தாக்குதல்களைப் பெற்றனர், இதன் விளைவாக பதில் பணியில் தங்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சியுள்ளனர்.

FEMA ஆனது அதன் ஊழியர்களுக்கு நம்பகமான அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளது, இதில் அவசரகால பேரிடர் துயர் நீக்கும் பணியில் ஈடுபடுபவர்களை சுடுவதற்கு போராளிகளுக்கான அழைப்புகளும் அடங்கும். FEMA ஊழியர்களை வேட்டையாடும் போராளிகள் பற்றிய அறிக்கை, வட கரோலினாவின் ரூதர்ஃபோர்ட் கவுண்டியில் உதவிப் பணியாளர்கள் தங்கள் வேலையை இடைநிறுத்த அல்லது இடமாற்றம் செய்ய வழிவகுத்தது; 2024ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுதமேந்திய ஒருவர் தனியாகச் செயல்பட்டார்.

விளைவுகள்

குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இந்தக் கூற்றுகளை ஊக்குவிப்பது 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஒரு ஆதாயத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது என்று பல வர்ணனையாளர்கள் குற்றம் சாட்டினர். கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கான ஆதரவைக் குறைக்க பிடன் நிர்வாகத்தின் பதில் முயற்சிகள் பற்றிய கூற்றுகளைப் பயன்படுத்தி, தி பாஸ்டன் குளோப்பில் ஜிம் புசாங்கேரா, புயலால் தாக்கப்பட்ட ஜார்ஜியாவில் GOP “ஒரு விளிம்பைத் தேடுகிறது” என்று கூறினார். கார்டியன் தவறான தகவல் நிருபர் ரேச்சல் லீங்காங், தேர்தலுக்கு அருகாமையில் இருப்பதால் தவறான தகவல்கள் பரவியிருக்கலாம் என்று குறிப்பிட்டார், அமெரிக்க குடிவரவு கவுன்சிலில் உள்ள ஒரு சக ஊழியரை மேற்கோள் காட்டி, “தேர்தல் இல்லை என்றால் இந்த அளவு பொய்கள் பரப்பப்படாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

உள்ளூர் அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதற்கு வளங்களைச் செலவழிக்க வேண்டியிருந்தது, FEMA மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிறர் தவறான தகவல்களால் ஏஜென்சியிடம் இருந்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதிலடியாக, வெள்ளை மாளிகையானது, சமூக ஊடகங்களில் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மத்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது, அரசாங்கம் நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கு ஆதாரத்துடன் உள்ளது. FEMA தனது இணையதளத்தில் வைரலான பொய்களை மறுப்பதற்காக ஒரு பக்கத்தைச் சேர்த்தது. ஹெலேன் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் சக் எட்வர்ட்ஸ், பல தவறான கூற்றுகளை மறுத்து தனது தொகுதியினருக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

எலோன் மஸ்க்கின் கீழ் ட்விட்டருக்குக் குறிப்பிட்ட விமர்சனம் கொடுக்கப்பட்டது, அங்கு உள்ளடக்க மதிப்பீட்டில் சமீபத்திய மாற்றங்கள் நம்பகமான ஆதாரங்களைக் கண்டறிவதை மிகவும் கடினமாக்கியது.

மொத்தத்தில் பார்க்கும்போது உலக அளவில் வானிலையாளர்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். ஒருகுறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்க் மற்ற கட்சிகளின் மீது மிகச் சுலபமாக அவதூறு பரப்பமுடிகிறது. அதற்கென தனித்தனி பிரிவுகளை கட்சிகள் வைத்துள்ளனர். வானிலையாளர்களைத் திட்டுவதற்கும் கட்சிகள் தனி ஐ.டி விங் தொடங்கினாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.

11ம் ஆண்டில் ‘மன் கி பாத்’: ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி மக்களை எச்சரித்த பிரதமர் மோடி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல், 115ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்:  27.10.2024
ஒலிபரப்பு : சென்னை வானொலி நிலையம்
தமிழில்/குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே வணக்கம்.  இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு.  உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது.  இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.  பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது.  அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும்  நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது.  மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.

நண்பர்களே, பாரத நாடு அனைத்துக் காலகட்டங்களிலும் ஏதாவது ஒரு சவாலை சந்தித்து வந்திருக்கிறது, அந்தக் காலங்களில் எல்லாம் அசாதாரணமான வல்லமை படைத்தோர் தோன்றினார்கள், சவால்களைத் திறம்பட எதிர்கொண்டார்கள்.  இன்றைய மனதின் குரலில், வல்லமையும், தொலைநோக்கும் உடைய இப்படிப்பட்ட இரண்டு மகாநாயகர்களைப் பற்றியே நான் உங்களோடு கலந்து கொள்ள இருக்கிறேன்.  இவர்களின் 150ஆவது பிறந்த நாளை தேசம் கொண்டாட முடிவு செய்திருக்கிறது.  அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்த ஆண்டின் தொடக்கமாக இருக்கும்.  இதன் பிறகு நவம்பர் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் 150ஆவது பிறந்த ஆண்டுத் தொடக்கம் வரும்.  இந்த இரண்டு மாமனிதர்கள், வேறுபட்ட சவால்களை சந்தித்தார்கள் என்றாலும், இருவரின் தொலைநோக்கும் ஒன்றாகவே இருந்தது, அது தான் தேசத்தின் ஒற்றுமை.

நண்பர்களே, கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட மாமனிதர்களின் பிறந்த நாள்களை, புதிய சக்தியோடு தேசம் கொண்டாடியது, புதிய தலைமுறையினருக்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியது.  நாம் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில் அது எத்தனை விசேஷமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் தொடங்கி, ஆப்பிரிக்காவின் சின்ன கிராமம் வரை, உலக மக்கள் யாவரும் பாரதத்தின் வாய்மை மற்றும் அகிம்ஸை பற்றிய செய்தியைப் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், அதை வாழ்ந்தும் பார்த்தார்கள்.  இளைஞர்கள் முதல் வயதானோர் வரை, இந்தியர்கள் முதல் அயல்நாட்டவர் வரை, அனைவரும் காந்தியடிகளின் உபதேசங்களை, புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டார்கள், புதிய உலக சூழ்நிலையில் அதை அறிந்து கொண்டார்கள்.  நாம் ஸ்வாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய வேளையில், தேசத்தின் இளைஞர்கள் பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார சக்தியின் புதிய அர்த்தங்களைப் புரிந்து கொண்டார்கள்.  நமது மகாபுருஷர்கள் கடந்த காலத்தோடு கடந்து சென்று விடப்போவதில்லை, அவர்களின் வாழ்க்கை நமது தற்கால வாழ்க்கைக்கு, வருங்காலப் பாதையை இவை துலக்கிக் காட்டுகின்றன.

நண்பர்களே, அரசு இந்த மாமனிதர்களின் 150ஆவது பிறந்த ஆண்டினை தேசிய அளவில் கொண்டாட முடிவு செய்திருந்தாலும் கூட, உங்களின் பங்களிப்பு மட்டுமே இந்த இயக்கத்தில் உயிர்ப்பை அளிக்கும், இதை உயிர்பெறச் செய்யும்.  நீங்கள் அனைவரும் இந்த இயக்கத்தோடு உங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என்று நான் உங்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இரும்பு மனிதர் சர்தார் படேலோடு தொடர்பான கருத்துக்கள்-செயல்களை #Sardar150 என்பதிலே பதிவு செய்யுங்கள்; மண்ணின் மைந்தன் பிர்ஸா முண்டாவின் கருத்தூக்கங்களை #BirsaMunda150 என்பதிலே பதிவு செய்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.  வாருங்கள், நாமனைவரும் ஒன்றுபட்டு, பாரதத்தின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம், மரபு தொடங்கி முன்னேற்றம் என்ற இந்த விழாவை முன்னெடுப்போம்.

எனதருமை நாட்டுமக்களே, தொலைக்காட்சியில் சோட்டா பீம் தொடங்கப்பட்ட நாளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள், இல்லையா?  குழந்தைகளால் இதைக் கண்டிப்பாக மறக்க இயலாது, சோடா பீம் தொடர்பாக எந்த அளவுக்கு ஆர்வம் இருந்தது!!  டோலக்பூரின் இந்த மேளம், பாரத நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்து இழுக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். 

இதைப் போலவே நமது வேறு பிற அனிமேஷன் செய்யப்பட்ட தொடர்களான கிருஷ்ணன், அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.   பாரதநாட்டின் அனிமேஷன் செய்யப்பட்ட பாத்திரங்கள், நம் நாட்டின் அனிமேஷன் செய்யப்பட்டத் திரைப்படங்கள், நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. 

நீங்களே கூட கவனித்திருக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வெள்ளித் திரை வரை, கேமிங் கன்சோல் தொடங்கி, virtual reality, அதாவது மெய்நிகர் காட்சி  வரை, அனிமேஷன் என்பது அங்கிங்கெனாதபடி பரவியிருக்கிறது.  அனிமேஷன் உலகத்தில், பாரதம் புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது.  பாரதநாட்டின் கேமிங் துறையும் கூட மிக வேகமாக வளர்ந்து வருகிறது.  சில மாதங்கள் முன்பாக, பாரதத்தின் முன்னணி கேமர்களோடு நான் சந்திக்க நேர்ந்தது, அப்போது தான் இந்திய விளையாட்டுக்களின் ஆச்சரியம் கொள்ளவைக்கும் படைப்புத்திறன் மற்றும் தரம் பற்றித் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது. 

உண்மையிலேயே, தேசத்தில் படைப்பாற்றல் அலை ஒன்று வீசிக் கொண்டிருக்கிறது.  அனிமேஷன் உலகில் இந்தியாவில் தயாரிப்பது, இந்தியர்களால் உருவாக்கப்படுவது என்பது விரவிக் கிடக்கிறது.  இன்று பாரதத்தின் திறமைகள், அயல்நாட்டுத் தயாரிப்புக்களில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.  இப்போதிருக்கும் ஸ்பைடர்மேனாகட்டும், ட்ரான்ஸ்ஃபார்மர்களாகட்டும், இந்த இரண்டு படங்களிலும் ஹரிநாராயண் ராஜீவின் பங்களிப்பினை மக்கள் மிகவும் மெச்சியிருக்கிறார்கள்.  பாரதத்தின் அனிமேஷன் ஸ்டூடியோக்கள், டிஸ்னி மற்றும் வார்னர் சகோதரர்களைப் போலவே, உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.

நண்பர்களே, இன்று நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் பிரதிபலிக்கும் புத்தம்புது இந்திய உள்ளடக்கம்-விஷயங்களைத் தயாரித்து வருகின்றார்கள்.   இவை உலகம் நெடுகப் பார்க்கப்பட்டும் வருகின்றன.  அனிமேஷன் துறை இன்று எப்படிப்பட்டத் துறையாக ஆகிவிட்டது என்றால், பிற துறைகளுக்கு அது பலமூட்டி வருகின்றது.  எடுத்துக்காட்டாக,  இப்போதெல்லாம் வீ ஆர் டூரிஸம் மிகவும் பிரபலமாகி வருகிறது.  நீங்கள் மெய்நிகர் சுற்றுலா வாயிலாக, அஜந்தாவின் குகைகளுக்குச் சென்று பார்க்கலாம், கோணார்க் ஆலயத்தின் இடைக்கழியில் உலவிவிட்டு வரலாம் அல்லது, வாராணசியின் துறைகளின் ஆனந்தமாகக்  கழிக்கலாம். 

இந்த அனைத்து வீஆர் அனிமேஷனையும், பாரதத்தின் படைப்பாளிகள் தாம் தயார் செய்திருக்கின்றார்கள்.  இந்த வீஆர் வாயிலாக, இந்த இடங்களைக் கண்டு களித்த பிறகு பலர் மெய்யாகவே இந்தச் சுற்றுலா இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்புகிறார்கள், அதாவது சுற்றுலா இடத்தை மெய்நிகர்க் காட்சி வாயிலாக சுற்றிப் பார்த்த பிறகு மக்களின் மனங்களிலே மெய்யாகவே அங்கே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் கருவியாக இது ஆகி இருக்கிறது.  இன்று இந்தத் துறையில் அனிமேட்டர்களோடு கூடவே கதை சொல்பவர்கள், எழுத்தாளர்கள், குரல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கேம் டெவலப்பர்கள், வீஆர் மற்றும் ஏஆர் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

ஆகையால், பாரத நாட்டு இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுடைய படைப்புத் திறனுக்கு இறக்கை அளியுங்கள்.  உலகின் அடுத்த சூப்பர்ஹிட் அனிமேஷன் உங்களுடைய கணிப்பொறியிலிருந்து கூட பிறப்பெடுக்கலாம், யார் அறிவார்கள்!!   அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டு தீயாய்ப் பரவும் அடுத்தப் படைப்பு உங்களுடையதாக இருக்கலாம்!!  கல்விசார் அனிமேஷன்களின் உங்களுடைய புதுமைகள், பெரும் வெற்றியை ஈட்டலாம்.  வரும் அக்டோபர் 28ஆம் தேதி, அதாவது நாளைய தினம் உலக அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  வாருங்கள், நாம் பாரதத்தை உலக அனிமேஷன் ஆற்றல் மையமாக மாற்றும் உறுதிப்பாட்டை ஏற்போம். 

என் மனம்நிறை நாட்டுமக்களே, ஸ்வாமி விவேகானந்தர் ஒருமுறை வெற்றிக்கான மந்திரத்தை அளித்தார்.  அந்த மந்திரம் என்னவென்றால், ஏதோ ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள், அந்த ஒரு கருத்தை உங்கள் வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளுங்கள், அதையே சிந்தியுங்கள், அதைப் பற்றியே கனவு காணுங்கள், அதை வாழத் தொடங்குங்கள்.  இன்று, தற்சார்பு பாரதம் இயக்கத்தின் வெற்றியும் கூட இதே மந்திரத்தை அடியொற்றிப் பயணித்து வருகிறது.  இந்த இயக்கம் நமது சமுக விழிப்புநிலையின் அங்கமாக ஆகி விட்டது.  தொடர்ந்து, ஒவ்வொரு படிநிலையிலும் நமது உத்வேகமாக ஆகியிருக்கிறது.  தற்சார்பு என்பது நமது கொள்கைத் திட்டம் மட்டுமல்ல, நமது பேரார்வமாகவே ஆகியிருக்கிறது.  பல ஆண்டுகள் ஆகி விடவில்லை, வெறும் பத்தாண்டுகள் முன்பான விஷயம் தான், ஏதோவொரு நுணுக்கமான தொழில்நுட்பத்தை பாரதத்தில் மேம்படுத்த வேண்டும் என்று அப்போது யாராவது கூறியிருந்தால், பலருக்கு நம்பிக்கையே இருந்திருக்காது, பலர் பரிகாசம் கூட செய்திருப்பார்கள். 

ஆனால் இன்று அதே மனிதர்கள், தேசத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப் போயிருக்கிறார்கள்.  தற்சார்புடையதாக மாறிவரும் பாரதம், அனைத்துத் துறைகளிலும் அற்புதங்களை அரங்கேற்றி வருகின்றது.  நீங்களே சிந்தியுங்கள், ஒரு காலத்தில் செல்பேசிகள் இறக்குமதி செய்துவந்த பாரதம் இன்றோ, உலகின் மிகப்பெரிய செல்பேசித் தயாரிப்பாளராக ஆகியிருக்கிறது.  ஒரு காலத்தில் மிக அதிக அளவு பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த பாரதம் இன்றோ, 85 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.  விண்வெளித் தொழில்நுட்பத்தில் பாரதம் இன்று, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் தேசமாக அறியப்படுகிறது. 

இவற்றிலெல்லாம் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அது என்னவென்றால், தற்சார்பு நோக்கிய இந்த இயக்கம் இப்போது ஒரு அரசு இயக்கமாக மட்டுமே நின்று போகாமல், இந்த தற்சார்பு பாரத இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருகிறது என்பது தான்.  அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது.  இந்த மாதம் தான் லத்தாக்கின் ஹான்லேவில், நாம் ஆசியாவின் மிகப்பெரிய ஒலிவழி இயல்நிலை வரைவி தொலைநோக்கியான மேஸ், அதாவது ‘Imaging Telescope MACE’ஐ நிறுவினோம்.  இது 4300 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.  இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?  இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 

சிந்தியுங்கள், எந்த இடத்தில் பூஜ்யத்திற்குக் கீழே 30 டிகிரிகள் என்ற வெப்பநிலை இருக்கிறதோ, எங்கே பிராணவாயு என்பதே அரிதாக உள்ளதோ, அங்கே நமது விஞ்ஞானிகளும், உள்ளூர் தொழில்துறையும் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இப்படி ஆசியாவின் எந்த தேசமும் இதுவரை செய்தது இல்லை.  ஹான்லேவின் இந்தத் தொலைநோக்கி தொலைவான உலகை வேண்டுமானால் பார்க்கலாம் ஆனால், இது நமக்கு மேலும் ஒரு விஷயத்தைச் சுட்டுகிறது, அது தான் தற்சார்பு பாரதத்தின் வல்லமை.

நண்பர்களே, நீங்களுமே கூட ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  தற்சார்பு பாரதத்தின் அதிக அளவு எடுத்துக்காட்டுகள், இப்படிப்பட்ட முயற்சிகளை நீங்களும் பகிருங்கள்.  நீங்கள் உங்களுடைய அக்கம்பக்கத்திலே என்ன மாதிரியான புதுமைகளைக் கண்டீர்கள், எந்த உள்ளூர் ஸ்டார்ட் அப் உங்களை அதிகம் கவர்ந்தது, சமூக வலைத்தளத்தில் #AatmanirbharInnovationஇலே தகவல்களை அளியுங்கள், தற்சார்பு பாரதக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள். 

பண்டிகைகளின் இந்தக் காலத்திலே நாமனைவரும் தற்சார்பு பாரதம் என்ற இந்த இயக்கத்தை மேலும் பலமடையச் செய்வோம்.  நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் மந்திரத்தோடு நமது கொள்முதலை இணைப்போம்.  இது புதிய பாரதம், அசாத்தியம் என்பது இங்கே ஒரு சவால் தான், இங்கே இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகிற்காகத் தயாரிப்போமாக ஆகி விட்டது, இங்கே அனைத்துக் குடிமக்களும் புதுமைகள் படைப்போராக ஆகியிருக்கிறார்கள், இங்கே அனைத்துச் சவால்களுமே சந்தர்ப்பங்கள் தாம்.  நாம் பாரதத்தை தற்சார்புடையதாக ஆக்குவது மட்டுமல்ல, நமது தேசத்தை புதுமைகள் படைத்தலின் உலகளாவிய சக்திபீடமாகவும் பலப்படுத்த வேண்டும். 

என் கனிவுநிறை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை ஒலிக்க வைக்கிறேன்.

Fraud Caller 1: Hello    

Victim   : சார் வணக்கம் சார்.

Fraud Caller 1: வணக்கம்.

Victim   : சொல்லுங்க சார்.

Fraud Caller 1: பாருங்க, நீங்க எனக்கு வந்திருக்கற எஃப் ஐ ஆர் நம்பர்ல 17 குற்றச்சாட்டுகள் இருக்கு.  நீங்க இந்த நம்பரையா பயன்படுத்திட்டு இருக்கீங்க?

Victim   : நான் இதை பயன்படுத்தலை சார்.

Fraud Caller 1: இப்ப எங்கிருந்து நீங்க பேசிட்டு இருக்கீங்க?

Victim   : கர்நாடகாவிலேர்ந்து சார். இப்ப நான் வீட்டுல தான் இருக்கேன்.

Fraud Caller 1: ஓகே, உங்க ஸ்டேட்மெண்டை பதிவு செய்யுங்க, அதுக்குப் பிறகு உங்க நம்பர் ப்ளாக் செய்யப்படும்.  எதிர்காலத்தில இதனால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது, ஓகேயா?

Victim   : சரி சார்.

Fraud Caller 1: இப்ப நான் உங்களை கனெக்ட் செய்யறேன், அவரு தான் புலனாய்வு அதிகாரி.  நீங்க அவருகிட்ட உங்க ஸ்டேட்மெண்டை குடுத்திருங்க.  அப்பத் தான் உங்க நம்பர் ப்ளாக் ஆகும். ஓகேயா?         

Victim   : சரி சார்.

Fraud Caller 1: சொல்லுங்க சார். நான் யாரு கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாமா?  உங்க ஆதார் அட்டையை கொஞ்சம் காமிக்க முடியுமா, சரிபார்க்க விவரம் சொல்ல முடியுமா? 

Victim   :  சார், என்கிட்ட என்னோட ஆதார் அட்டை இப்ப இல்லை, ப்ளீஸ் சார்.  

Fraud Caller 1: ஃபோன், உங்க ஃபோன்ல இருக்கும்ல?

Victim   : இல்லை சார்.  

Fraud Caller 1: உங்க ஃபோன்ல உங்க ஆதார் அட்டையோட புகைப்படம் இருக்குமில்லையா?     

Victim   : இல்லை சார்.

Fraud Caller 1: நம்பராவது ஞாபகம் இருக்குமில்லையா?

Victim   : இல்லை சார்.  நம்பரும் நினைவுல இல்லை சார்.

Fraud Caller 1: நாங்க வெறுமனே சரி மட்டும் பார்க்கணும், ஓகே, சரிபார்க்க மட்டும் தான் தேவை.

Victim   : இல்லை சார்.

Fraud Caller 1: நீங்க பயப்படவே வேண்டாம், நீங்க ஒண்ணும் செய்யலைன்னா பயப்படவே தேவையில்லை. சரியா?

Victim   : சரி சார் சரி சார்.

Fraud Caller 1: உங்க கிட்ட ஆதார் அட்டை இல்லைன்னு சொன்னா, சரிபார்க்க எனக்கு ஏதாவது ஒரு ஆவணத்தையாவது குடுங்க!! 

Victim   : இல்லை சார், நான் கிராமத்திலேந்ர்ந்து வந்திருக்கேன், என்னோட எல்லா ஆவணங்களுமே அங்க வீட்டுல தான் சார் இருக்கு.

Fraud Caller 1: ஓகே

Fraud Caller 2: நான் உள்ள வரலாமா சார்?

Fraud Caller 1: வாங்க.

Fraud Caller 2: ஜய் ஹிந்த்

Fraud Caller  1: ஜய் ஹிந்த்

Fraud Caller 1: இந்த ஆளோட  one sided video call பதிவு செய்.  ஓகே.

########

இந்த ஒலிப்பதிவு வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, இது ஏதோ கேளிக்கைக்கான ஒலிக்குறிப்பல்ல, ஆழமான கவலையளிக்கவல்ல ஒலிக்குறிப்பு இது.  நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல்கைது மோசடி தொடர்பானது.  இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது.  டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ சொல்லிக்கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில், போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள். 

மனதின் குரலின் நேயர்கள் பலர் இது குறித்து நான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  வாருங்கள், இந்த மோசடிப் பேர்வழிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், இந்த அபாயகரமான விளையாட்டு என்ன என்பது தொடர்பான விபரங்களை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.  நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், அதே போல மற்றவர்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 

முதல் தந்திரமான உத்தி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள், எடுத்துக்காட்டாக, ”கடந்த மாதம் நீங்கள் கோவா போயிருந்தீர்கள், இல்லையா?, உங்களுடைய மகள் தில்லியில் படிக்கிறாள், இல்லையா?” என்பது போன்று.  இவர்கள் உங்களைப் பற்றி போதுமான அளவு தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் திகைப்பை ஏற்படுத்துகிறார்கள்.  அடுத்த தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள்.  பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும்.  மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம். 

“இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”.  என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல்ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.  டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.  அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள்.  இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்.  எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன்.  ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”.  அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள்.  இதன் பிறகு வருவது அடுத்த கட்டம்.  முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”. 

எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள்.  முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம்.  முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும்,

இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”.  தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.  நிதானியுங்கள், பிறகு சிந்தியுங்கள், அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள், இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும். 

நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன.  இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது.  அமைப்புகளின் தரப்பிலிருந்து இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான காணொளி அழைப்பு எண்கள் அரசு அமைப்புக்களின் தரப்பிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கின்றன.  இலட்சக்கணக்கான சிம் கார்டுகள், செல்பேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளும் கூட முடக்கப்பட்டிருக்கின்றன.  அரசாங்க அமைப்புகள் தங்களுடைய பணியைப் புரிந்து வருகின்றன என்றாலும், டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடந்தேறி வரும் மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.  அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும், அனைத்துக் குடிமக்களும் விழிப்புணர்வோடு செயலாற்ற வேண்டும்.   யாரெல்லாம் இப்படிப்பட்ட சைபர் மோசடிக்கு இரையாகி இருக்கின்றார்களோ, அவர்கள் அதிக அளவு மக்களுக்கு இதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும்.  விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் #SafeDigitalIndia என்பதைப் பயன்படுத்தலாம்.  இந்த சைபர் மோசடிக்கு எதிராக விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள்-கல்லூரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், இதில் அதிக அளவில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுங்கள்.  சமுதாயத்தில் அனைவரின் முயற்சிகள் வாயிலாக மட்டுமே நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.

எனதருமை நாட்டுமக்களே, நமது பல பள்ளிக் குழந்தைகள் calligraphy அதாவது எழுத்துக்கலையில் கணிசமான நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள்.  இதன் வாயிலாக நமது எழுத்து தெளிவாக, அழகாக, ஈர்க்கும் வகையில் இருக்கிறது.  இன்று ஜம்மு-கஷ்மீரத்தில் இதன் பயன்பாடு உள்ளூர் கலாச்சாரத்தை அனைவரும் விரும்பும் வகையில் ஆக்கப் பயன்படுகிறது.  அனந்தநாகின் ஃபிர்தௌசா பஷீர் அவர்கள் எழுத்துக்கலையில் வல்லவர்.  இதன் வாயிலாக உள்ளூர் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார்.  ஃபிர்தௌசா அவர்களின் எழுத்துக்கலையானது, உள்ளூர் மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தன்பால் ஈர்த்து வருகின்றது. 

இப்படிப்பட்ட ஒரு முயற்சியில், உதம்பூரின் கௌரிநாத் அவர்களும் ஈடுபட்டு வருகிறார்.  ஒரு நூற்றாண்டுக்கும் பழைமையான சாரங்கி வாத்தியம் வாயிலாக டோக்ரா கலாச்சாரம் மற்றும் மரபின் பல்வேறு வடிவங்களை அழகுபடுத்துவதில் இவர் ஈடுபட்டு வருகிறார்.  சாரங்கியின் சுரங்களோடு சேர்த்து, இவர் தங்களுடைய கலாச்சாரத்தோடு இணைந்த பண்டைய கதைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்களையும் கூட, சுவாரசியமான முறையில் வெளிப்படுத்துகிறார்.  தேசத்தின் பல்வேறு பாகங்களிலும், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கும் இப்படிப்பட்ட பல அசாதாரணமான மனிதர்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.   டீ. வைகுண்டம் அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக செரியால் நாட்டுப்புறக் கலையை பிரபலமானதாக ஆக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

தெலங்காணாவோடு இணைந்த இந்தக் கலையை முன்னெடுத்துச் செல்ல விழையும் இவருடைய முயற்சி அற்புதமானது.  செரியால் ஓவியங்களை உருவாக்கும் செயல்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.  இது ஒரு காகிதச் சுருள் வடிவத்தில் கதைகளை முன்வைக்கிறது.  இதிலே நமது வரலாறு மற்றும் புராணங்கள் முழுமையாகப் பளிச்சிடுகின்றன.  சத்திஸ்கட்டின் நாராயண்பூரைச் சேர்ந்த புட்லுராம் மாத்ரா அவர்கள், அபூஜ்மாடியா பழங்குடியின மக்களின் கலையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருக்கிறார்.  கடந்த 40 ஆண்டுகளாக இவர் தனது இந்த பெருநோக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  இவருடைய இந்தக் கலை, பெண் குழந்தைகளைக் காப்போம்- அவர்களுக்குக் கல்வியளிப்போம் போன்ற இயக்கத்தோடு மக்களை இணைப்பதில் பேருதவியாக இருந்திருக்கிறது.   

நண்பர்களே, இப்போது நாம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே கஷ்மீரத்தின் பள்ளத்தாக்குகள் தொடங்கி, சத்தீஸ்கட்டின் காடுகள் வரை, நமது கலை மற்றும் கலாச்சாரம் புதியபுதிய வண்ணங்களை இரைத்து வருகிறது என்றாலும், இதோடு இந்த விஷயம் முடிந்து போகவில்லை.  நமது இந்தக் கலைகளின் நறுமணம் தொலைவான பிரதேசங்கள் வரையும் கூட பரவி வருகின்றது. 

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாரதநாட்டுக் கலை மற்றும் கலாச்சாரத்தில் சொக்கி வருகிறார்கள்.  உதம்பூரில் எதிரொலிக்கும் சாரங்கி பற்றி நான் பேசிய வேளையில், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவாக, ரஷியாவின் நகரான யாகூத்ஸ்கிலும் கூட பாரதநாட்டுக் கலையின் இனிமையான இசை எதிரொலிப்பது என் நினைவுக்கு வருகிறது.  கற்பனை செய்து பாருங்கள், குளிர் நிறைந்த ஒன்றிரண்டு நாட்கள், பூஜ்யத்திற்கு கீழே 65 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை, நாலாபுறங்களிலும் பனிப்படலம் ஏதோ வெண்போர்வையை விரித்தது போல இருந்த வேளையில், அங்கே ஒரு அரங்கிலே, பார்வையாளர்கள் மகுடிக்கு முன்பு நாகம் போலே, காளிதாசனின் அபிக்யான சாகுந்தலத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்கள்.  உலகின் மிகவும் குளிர்நிறைந்த நகரான யாகூத்ஸ்கிலே, பாரத இலக்கியத்தின் தண்மையை உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா?  இது கற்பனையல்ல சத்தியம்.  நம்மனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், ஆனந்தத்தையும் நிரப்பக்கூடிய சத்தியம்!!

நண்பர்களே, சில வாரங்கள் முன்பாக நான் லாவோஸ் நாட்டிற்குச் சென்றிருந்தேன்.  அது நவராத்திரி காலம், அங்கே சில அற்புதமான காட்சிகளைக் கண்டேன்.  அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் ஃபலக் ஃபலம், இதை அரங்கேற்றியிருந்தார்கள், இது தான் லாவோஸின் இராமாயணம்.  நம்முடைய மனங்களிலே இராமாயணத்தின்பால் இருக்கும் அதே பக்தி, அவர்களுடைய குரல்களிலே அதே அர்ப்பணிப்பு அகியவற்றை நான் அவர்களுடைய கண்களில் கண்டேன். 

இதைப் போலவே, குவைத்தில் அப்துல்லா அல் பாரூன் அவர்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  இந்தப் பணி வெறும் மொழியாக்கமல்ல, மாறாக இரு மகத்தான கலாச்சாரங்களுக்கு இடையேயான பாலம்.  அவருடைய இந்த முயற்சி, அரபுலகில் பாரதநாட்டு இலக்கியத்தின்பால்  புதிய புரிதலை மேம்படச் செய்து வருகிறது.  பெரூ நாட்டிலிருந்து மேலும் ஒரு கருத்தூக்கமேற்படுத்தும் எடுத்துக்காட்டு – எர்லிண்டா கார்சியா அவர்கள் அங்கே இருக்கும் இளைஞர்களுக்கு பரதநாட்டியக்கலையைக் கற்பித்து வருகிறார், மாரியா வால்தேஸ் அவர்கள் ஒடிசீ நாட்டியத்தைக் கற்பித்து வருகிறார்.  இந்தக் கலைகளால் கவரப்பட்டு, தென்னமெரிக்காவின் பல நாடுகளில் பாரதநாட்டுப் பாரம்பரிய நடனங்கள் அதிக நறுமணம் பரப்பி வருகிறது. 

நண்பர்களே, அயல்நாட்டு மண்ணிலே பாரதத்தின் இந்த எடுத்துக்காட்டுகள், பாரத நாட்டுக் கலாச்சாரத்தின் சக்தி எத்தனை அற்புதமானது என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.  இவை தொடர்ந்து உலகைத் தம்பால் கவர்ந்து வருகின்றன.

எங்கெல்லாம் கலை உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு,

எங்கெல்லாம் கலாச்சாரம் உள்ளதோ, அங்கெல்லாம் பாரதம் உண்டு.

இன்று உலகனைத்தும் பாரதம் பற்றித் தெரிந்து கொள்ள விழைகிறது, பாரதநாட்டவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அவாவுகிறது.  ஆகையால் உங்கள் அருகிலே இப்படிப்பட்ட கலாச்சாரமுன்னெடுப்பு குறித்து #CulturalBridgesஇலே தகவல் தெரிவியுங்கள்.  மனதின் குரலில் நாம் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் குறித்து மேலும் உரையாடுவோம்.

என் இதயம்நிறை நாட்டுமக்களே, தேசத்தின் பல பாகங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது, ஆனால் உடலுறுதி குறித்தப் பேரார்வம், ஃபிட் இண்டியாவின் உணர்வு, இதன் மீது எந்தப் பருவநிலையும் தாக்கமேற்படுத்தாது.  உடலுறுதி மீது உறுதி கொண்ட யாருக்கும், அது குளிர்காலமாகட்டும், மழைக்காலமாகட்டும், எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.  பாரதத்திலே இப்போது மக்கள் உடலுறுதி தொடர்பாக மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக ஆகி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  உங்கள் அருகிலே இருக்கும் பூங்காக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். 

பூங்காக்களில் நடைபயிலும் மூத்தோர், இளைஞர்கள், மற்றும் யோகக்கலையில் ஈடுபட்டு வரும் குடும்பங்களைப் பார்த்து, எனக்கு நன்றாக இருக்கிறது.  யோகக்கலை தினம் தொடர்பாக சில நாட்கள் முன்பாக நான் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது.  அங்கே மாரத்தான் போட்டி நடந்தது, அதிலேயும் கூட இந்த உடலுறுதி மீதான ஆர்வத்தை என்னால் காண முடிந்தது.  ஃபிட் இண்டியா, அதாவது உடலுறுதியான இந்தியா என்ற இந்த உணர்வு, இப்போது ஒரு மக்கள் இயக்கமாக ஆகி வருகிறது.

நண்பர்களே, நமது பள்ளிகள், குழந்தைகள் எல்லாம் உடலுறுதி மீது இப்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள் என்பதைக் காணும் போது நான் உவப்பெய்துகிறேன்.  ஃபிட் இண்டியா ஸ்கூல் அவர்ஸ் என்பதும் கூட மிக வித்தியாசமான முன்னெடுப்பு.  பள்ளிகள் தங்களுடைய முதல் வகுப்புக் காலத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உடலுறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

எத்தனையோ பள்ளிகளில், ஏதோ ஒரு நாளன்று பிள்ளைகளுக்கு யோகக்கலையைப் பயிற்றுவிக்கிறார்கள், சில நாட்களில் ஏரோபிக்ஸ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது, ஒரு நாள் விளையாட்டுத் திறன்கள் தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஏதோ ஒரு நாளன்று கபடி-கோகோ போன்ற பாரம்பரியமான விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன, இவற்றின் தாக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது.  வருகை சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளின் மனச்செறிவும் அதிகரிக்கிறது, அவர்களும் குதூகலம் அடைகிறார்கள்.

நண்பர்களே, இந்த உடல்நலத்தின் சக்தியை என்னால் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது.   மனதின் குரலின் பல நேயர்களும் கூட என்னோடு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  சிலர் மிகவும் சுவாரசியமான பிரயோகங்களையும் அனுப்பி இருக்கிறார்கள்.  எடுத்துக்காட்டாக, குடும்ப உடலுறுதி மணிநேரம் பற்றி, அதாவது ஒரு குடும்பம், ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு மணிநேரத்தை குடும்பத்தின் உடலுறுதிக்காக ஒதுக்குகிறது.  மேலும் ஒரு எடுத்துக்காட்டு, உள்நாட்டு விளையாட்டுக்களின் மறுமலர்ச்சி தொடர்பானது, அதாவது சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமான விளையாட்டுக்களைக் கற்பித்து வருகிறார்கள், அவர்களோடு விளையாடியும் வருகிறார்கள். 

நீங்களும் கூட உங்களுடைய உடலுறுதி வாடிக்கை தொடர்பான உங்களுடைய அனுபவங்களை #fitIndia  என்ற பெயரிலான சமூக ஊடகத்தில் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான தகவலை அளிக்க விரும்புகிறேன்.  இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் படேல் அவர்களின் பிறந்தநாளன்று, தீபாவளித் திருநாளும் வருகிறது.  நாம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதியான தேச ஒற்றுமை தினத்தன்று, ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்வது வழக்கம்.  தீபாவளி காரணமாக இந்த முறை, அக்டோபர் 29ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமையன்று இந்த ஒற்றுமை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அதிக அளவில் மக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  தேசத்தின் ஒருமைப்பாட்டின் மந்திரத்தோடு கூடவே உடலுறுதி மந்திரத்தையும் அனைத்துத் திசைகளிலும் பரப்புங்கள்.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இவ்வளவே.  நீங்கள் உங்கள் பின்னூட்டங்களைக் கண்டிப்பாக அனுப்பி வாருங்கள்.  இது பண்டிகைக்காலம்.  மனதின் குரல் நேயர்களுக்கு தன்தேரஸ், தீபாவளி, சட்பூஜை, குருநானக் பிறந்தநாள் மற்றும் அனைத்துத் திருநாட்களுக்குமான என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நீங்கள் அனைவரும் முழு உற்சாகத்தோடு பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை என்றும் நினைவில் கொள்ளுங்கள், பண்டிகைக் காலத்தில் உங்களுடைய இல்லங்களிலே உள்ளூர் கடைக்காரர்களிடம் பொருட்களைக் கண்டிப்பாக வாங்க முயற்சி செய்யுங்கள்.  மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் வரவிருக்கும் திருநாட்களை முன்னிட்டு பலப்பல நல்வாழ்த்துக்கள்.   நன்றி.

IND Vs NZ: தொடரை வென்ற நியூசிலாந்து!

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் –  புனே – மூன்றாம்நாள் – 26.10.2024

வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து

முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்

          நியூசிலாந்துஅணி (முதல் இன்னிங்க்ஸ் 259, டெவன் கான்வே 76, ரச்சின் ரவீந்த்ரா 65, மிட்சல் சாண்ட்னர்33, வாஷிங்க்டன் சுந்தர் 7/59, அஷ்வின் 3/64, இரண்டாவது இன்னிங்க்ஸ் 255, டாம் லேதம்86, டாம் புளண்டல் 41, கிளன் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 48, வாஷிங்க்டன் சுந்தர்4/56, அஷ்வின் 2/97, ஜதேஜா 3/72); இந்தியாஅணி (முதல் இன்னிங்க்ஸ்156, ஜெய்ஸ்வால் 30, கில் 30, ஜதேஜா38, மிடஸ்ல் சாண்ட்னர் 7/53, கிளன் பிலிப்ஸ் 2/26, டிம் சௌதீ 1/4; இரண்டாவது இன்னிங்க்ஸ் 245, ஜெய்ஸ்வால்77, ஜதேஜா 42, கில் 23, கோலி 17, வாஷிங்க்டன் சுந்தர் 21, அஷ்வின் 18, பும்ரா 10, சாண்ட்னர்6/104, அஜாஸ் படேல் 2/43, கிளன் பிலிப்ஸ் 1/60) நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில்வென்றது.

69 ஆண்டு கால வரலாற்றை புரட்டிப் போட்ட நியூசிலாந்து

          69ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில்நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைமுதன்முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை செய்து இருக்கிறது. 1955இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள்கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது நியூசிலாந்து. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில்பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல்இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என தொடரை கைப்பற்றிஇருக்கிறது நியூசிலாந்து அணி. இந்தத் தொடரின்முதல் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. புனேவில் கிடைத்த இந்த வெற்றியே நியூசிலாந்துஅணி இந்திய மண்ணில் பெரும் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.

          இந்த தொடரை கைப்பற்றியதன்மூலம் பல வரலாற்று சாதனைகளைநிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாகசொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது இந்தியா. வேறு எந்த அணியும்சொந்த மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை. அந்த பிரம்மாண்ட சாதனையைஇந்திய அணி படைத்து அதைதொடர நினைத்தது. ஆனால், அந்தச் சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது நியூசிலாந்து. மேலும், இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆறாவது அணி என்ற பெருமையையும்நியூசிலாந்து பெற்று இருக்கிறது.

          நேற்றைய ஆட்டநேர முடிவில் 198/5 என்றஸ்கோரில் இருந்த நியூசிலாந்து அணி இன்று 9 ஓவர்கள் மட்டுமே விளையாடி மீதமுள்ள 5 விக்கட்டுகளையும்இழந்து 255 ரன் எடுத்தது. 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட்வந்தது. கிட்டத்தட்ட இரண்டரை நாள்கள் ஆட்டம் பாக்கியிருந்தது. அணித்தலைவர் ரோஹித்ஷர்மா (16 பந்துகளில் 8 ரன்), இளம் வீரர் ஜெய்ஸ்வால் (65 பந்துகளில் 77ரன்), ஷுப்மன் கில் (31 பந்துகளில் 23 ரன்), ரிஷப் பந்த் (ரன் அவுட்,பூஜ்யம் ரன்), விராட் கோலி (40 பந்துகளில் 17 ரன்), ஸர்ஃப்ராஸ் கான்(15 பந்துகளில் 9 ரன்) என முக்கியமான பேட்டர்கள் (ஜெய்ஸ்வாலைத் தவிர) அனைவரும் டெஸ்ட்மேட்சில் நீண்ட நேரம் நிலைத்து ஆடவேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை மறந்து ஆடினர். வாஷிங்க்டன்சுந்தர் (47 பந்துகளில் 21 ரன்) மர்றும் ரவீந்தர் ஜதேஜா (84 பந்துகளில்42 ரன்) இருவர் மட்டும் டெஸ்ட் மேட்ச் மனப்பான்மையுடன் ஆடினர்.  60.2 ஓவர்களில் 245 ரன் எடுத்து இந்திய அணி தோவியைத்தழுவியது.

          இந்த மேட்சில் 13 விக்கட்டுகள் எடுத்த மிட்சல்சாண்ட்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். உலக டெஸ் சாம்பியன்ஷிப் பொட்டியில்இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் இன்னமும் முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இறுதிப்போட்டியில் ஆடுவது சந்தேகம்தான்.

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (45): அன்யோன்யாஸ்ரய ந்யாய:

samskrita nyaya - 2026

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 45

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

அன்யோன்யாஸ்ரய ந்யாய: – அன்யோன்யம் – ஒருவருக்கொருவர். ஆஸ்ரயம் –சார்ந்திருப்பது.

ஒன்றை மற்றொன்று சார்ந்திருப்பது அன்யோன்யாஸ்ரயம். மக்கள் அரசனைச் சார்ந்திருப்பதும், அரசன் பிரஜைகளைச் சார்ந்திருப்பதும் இதற்கு உதாரணம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ‘ராஜா’ என்ற சொல்லே பிரஜைகளின் மேல் அவனுக்கு இருக்கவேண்டிய பொறுப்பைக் காட்டுகிறது. ‘ரஞ்ஜனத்வாத் ராஜ:’ – அதாவது, அரசாட்சியால் மக்களை மகிழ்விப்பவன் ராஜா. மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்றால் அரசன் நல்லவனாக இருக்க வேண்டும் அப்படிபட்ட அரசனை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘அன்யோன்யம்’ என்ற சொல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கிறது.

மகாபாரதத்தில் ஒரு சுலோகம் ‘அன்யோன்யாஸ்ரயம்’ பற்றி சிறப்பாகக் கூறுகிறது.
ராஜானாம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் !
ராஜஸ்ய ஸதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் !!

பொருள் – முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பிறகுதான் மனைவியைத் திருமணம் செய்து கொள்வதோ, செல்வம் சம்பாதிப்பதோ செய்ய வேண்டும். அரசன் கெட்டவனாக இருந்தால் பிரஜைகளுக்கு மனைவி எங்கே? செல்வம் எங்கே? (அவை
அவனிடம் நிலைக்காது).

‘அவினாபாவ சம்பந்தம்’ (விட்டு நீங்காமை) என்று கேள்விப் பட்டிருக்கிறோம். “நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை” என்ற பதங்களும் பாடல்களும் கூட கேட்டிருக்கிறோம். அவற்றின் உண்மை நிலையும் பொய் நிலையும் கூட நாமறிந்ததே.

‘அன்யோன்யாஸ்ரயம்’ என்ற சொல்லில் சார்ந்திருப்பது, ஆதரிசமாக வாழ்வது, சுயநலம், அனுகூலம், தர்மத்தைக் கடைப்பிடிப்பது, பலனடைவதில் விருப்பம் என்று பல உணர்ச்சிகள் உள்ளன என்பர் ஆய்வாளர்.

‘தர்மோ ரட்சதி ரட்சித:’ – ‘தர்மம் காக்கப்பட்டால், காத்தவரை தர்மம் காக்கும்’ என்பது மகாபாரதக் கூற்று. “வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் விதிக்கப்பட்ட, உலக நலனுக்கான செயல்களின் தொகுப்பை தர்மம் என்பார்கள்” என்பது அறிஞர்களின் விளக்கம். இது ‘அன்யோன்யாஸ்ரயம்’ என்பதற்கான உதாரணம்.

பரஸ்பரம் சார்ந்திருப்பது

நிர்வனோ பத்யதே வ்யாக்ரோ நிர்வ்யாக்ரம் சித்யதே வனம்
தஸ்மாத் வ்யாக்ரம் வனம் ரக்ஷேத் வ்யாக்ரம் ச பாலயேத் !!
(மகாபாரதம் – உத்தியோக பர்வம் 29/55)

பொருள் – வனத்திலிருந்து வெளிவந்த புலி கொல்லப்படுகிறது. புலி இல்லாத வனம் மக்களால் அழிக்கப்படுகிறது. அதனால் வனத்தைப் பாதுகாக்க வேண்டும். வனம் புலியைப் பாதுகாக்கும். இது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா திருதராஷ்டிரனுக்குக் கூறிய உதாரணம்.

விதுரரும் இதே பொருள்படும் சுலோகங்களை திருதராஷ்டிரனுக்குக் கூறுகிறார். (உத்தியோக பர்வம் – 37/45,46). பாண்டவர்களையும் கௌரவர்களையும் சேர்ந்து வாழச் சொல்லி அறிவுறுத்துகிறார். அந்த சந்தர்பத்தில் ‘பரஸ்பரம் அன்யோன்யம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக,

சஹாய பந்தனா ஹ்யர்தா: சஹாயாஸ்யர்த பாந்தவா:
அன்யோன்ய பந்தனா வேதா வினான்யோன்யம் ந ஸித்த்யத: !!
என்ற சுலோகத்தைக் கூறுகிறார்.

பொருள் – செல்வம், துணை நிற்பவர்களோடு முடியிடப்பட்டு உள்ளது. உதவியும் செல்வத்தோடு முடியிடப்பட்டே கிடைக்கும். செல்வம், உதவுபவர்கள் – இந்த இரண்டும் பரஸ்பரம் சேர்ந்திருப்பவை. பிரிந்திருந்தால் பலனளிக்காது என்று விதுரர், கௌரவர்களும் பாண்டவர்களும் அன்யோன்யமாக இருந்தால் கிடைக்கும் பயன்களை
குறித்துக் கூறுகிறார்.

பரஸ்பர அனுகூலம் – கணவனும் மனைவியும் இணைந்திருக்கும் குடும்பம் அன்யோன்யாஸ்ரயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. “பாரத தேசத்தின் திருமண அமைப்பு புராதனமானது, மிகச் சிறப்பானது” என்று உலகமே புகழ்ந்து பாராட்டுகிறது.

வாழ்வின் விழுமியங்களோடு மிக உன்னதமான சிகரங்களை எட்டும் இந்த திருமண அமைப்பு அன்யோன்யாஸ்ரயத்தால் தான் பரிகாசமாக விளங்குகிறது. ஆதி தம்பதிகளான பரமசிவன், பார்வதியின் அன்யோன்யத்தைப் பற்றி ‘’ஜகத்குரு சங்கராச்சாரியார்
சௌந்தர்யலஹரியில் கூறிய முதல் சுலோகம் …

சிவசக்த்யாயுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சே தேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திதுமபி !
அதஸ்த்யாமாராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி !!

பொருள் – ஹே பகவதி! ஈஸ்வரன், சக்தியான உன்னோடு சேர்ந்தால்தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்ய இயலும் .

நான்கு ஆசிரமங்களின் அன்யோன்யம் –

பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சன்யாசம் எனப்படும் வர்ணாசிரமங்கள் தனித்தனியாக அன்றி, ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதால், வாழ்வின் சாதனைகளை மெருகேற்றிக் கொள்வதற்கு ஏதுவாகிறது. இந்த நான்கு ஆசிரமங்களின் இடையே உள்ள அன்யோன்யம், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற புருஷார்த்தங்களை அடையச் செய்யும் மார்க்கமாகத் திகழ்கிறது.

பரஸ்பரம் அனுகூலமாகத் திகழ்வதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனன் ஆகிய இருவரின் நட்பைக் கூறலாம். இவ்விருவருடைய நட்பு சுயநலமற்றது. தர்ம ரட்சணையை நோக்கமாகக் கொண்டது.

‘தர்மத்தோடு கூடிய குறிக்கோள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்’ என்று கூறும் இந்த கீதையின் சுலோகம் (18/78) ‘அன்யோன்யாஸ்ரய’த்தின் பலனை எடுத்துரைக்கிறது.

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ: யத்ர பார்தோ தனுர்தர:
தத்ரஸ்ரீ விஜயோ பூதி: த்ருவா நீதிர்மதிர்மம: !!

பொருள் – எங்கே யோகேஸ்வரனான ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறாரோ, எங்கே வில்லேந்திய அர்ஜுனன் இருக்கிறானோ, அங்கே செல்வம், வெற்றி, ஐஸ்வர்யம், திடமான நீதி ஆகியவை இருக்கும்.

துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரின் நட்பு இதற்கு முற்றிலும் மாறானது. ராவணன், வாலி ஆகிய இருவரின் நட்பும் சுயநலத்தோடு கூடியது. அவர்களுடைய நட்பு, அதர்மத்திற்காக செய்து கொண்ட ஒப்பந்தம்.

நிகழ்கால உதாரணங்கள்

–சுயநலத்தோடு கூடிய, கள்ளமான அன்யோன்யாஸ்ரயத்திற்கு (INDI –A) இந்தி கூட்டணி அரசியல் கூடாரத்தின் உறுப்பினர்களை உதாரணமாகக் கூறலாம். சைனா, பாகிஸ்தான் இடையேயான நட்பும் அப்படிப்பட்டதே. அமைச்சர்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே இருக்கும் அன்யோன்யாஸ்ரயத்தின் குறிக்கோள் நல்லதானால் நன்மையான பலன் விளைகிறது.

‘அன்யோன்யாசிரயம்’ – இந்துமதக் கொள்கை –

சுற்றுச்சூழலும் மனிதனும் பரஸ்பரம் சார்ந்திருக்க வேண்டும் என்பது பாரதிய சித்தாந்தம். இதுவே இந்தியர்களின் வாழ்க்கைமுறை. மனித வாழ்வு, பூமியைச் சார்ந்துள்ளது. விலங்கினம், பறவைகள், பூச்சிகள், பூகோளம், காற்று, நீர் – இவை அனைத்தும் பரஸ்பரம் பிரிக்க முடியாதவை. உயிரினங்கள் அனைத்தும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. “ஈஸாவாஸ்யமிதம் சர்வம்” – ஜகம் அனைத்தும் பகவானின் சொரூபம். இதுவே ஹிந்து மத தத்துவம்.

பிற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல நம் ஹிந்து தர்மத்தில் உள்ளன. அதற்கு மாறானது சைனாவின் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவின் சித்தாந்தம். 1958ம் ஆண்டு மாவோ, அஞ்ஞானத்தால் மக்களுக்கு ஒரு பாவம் நிறைந்த உத்தரவைப் பிறப்பித்தான். சைனா நாட்டில் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவை தானியங்களைத் தின்று விடுகின்றன என்று கண்டுபிடித்து ஒவ்வொரு பறவையும் எத்தனை தானியங்களைத் தின்கின்றன என்று கணக்கிட்டு மொத்தத்தில் தேசத்தில் எத்தனை தானியங்கள் நஷ்டமாகின்றன என்று கணக்கிடச் செய்தான். பறவைகளைக் கொன்று எடுத்து வருபவருக்கு அந்த கொடூரன், பரிசுகளும், பண வெகுமானங்களும் அறிவித்தான். அதனால்
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், உத்யோகிகள் எல்லோரும் அத்தகு மரண இயக்கத்தை இரண்டாண்டு காலம் தொடர்ந்தனர்.

இத்தகு மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலால் சைனாவில் பசிக் கொடுமை தலைவிரித்தாடியது. மனித இறப்புகள் பல நேர்ந்தன. சோறின்றி ஆயிரக்கணக்கானவர் மரணித்தனர். அப்போதுதான் அந்த நாத்திக சக்ரவர்த்தியின் கண் திறந்தது. பறவைகள் இல்லாததால் பயிர்களை வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் தாக்கி சாகுபடி குறைந்து
போனது.

படைப்பில் ஒன்றின் மீது ஒன்று சார்ந்து வாழ்வதே இயற்கை. பாரத தேசத்திற்கு மட்டுமே இந்த ‘அன்யோன்ய ஆஸ்ரயம்’ பற்றித் தெரியும். பாரத மக்கள் இயல்பாகவே ஏழை எளியவர், பறவைகள் விலங்குகள் என்று அனைத்து உயிரினங்களிடமும் கருணையும் அன்பும் கொண்டவர்கள். பறவைகளுக்காக வீட்டின் முன்னால் நெற்பயிர்களைக் கட்டித் தொங்க விடுவார்கள். எறும்புகளுக்கு மாவும் சர்க்கரையும் தூவுவார்கள். கோ
சாலைகளைக் கட்டி கால்நடைகளை ஆதரிப்பார்கள். அன்ன சத்திரங்களை ஏற்படுத்தி, ஏழை எளியவர்களை ஆதரிப்பார்கள்.