Home Blog Page 160

திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா!

thiruparankundram vel edukkum vizha - 2026
#image_title

மதுரை: ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் கோவில், முருகன் சன்னதியில் இருந்து வேல் பல்லாக்கில் எடுத்துச் செல்லப்பட்டு மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர், கீழே கோயிலுக்கு கொண்டு வரப்படும்.

மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கதம்ப சாப்பாடு பிரசாதமாக வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மலைமேல் குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்
களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

இதில், மலை மேல் வேல் எடுக்கும் திரு விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் மலை மேல் எடுக்கும் விழா கொண்டாடப்படும் திருவிழாவாகும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை கொண்டாடப் படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, திருப்பரங்குன் றம் கோவில் மூலஸ்தானத் தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்கரித்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் சன்னதி தெரு பெரிய ரத வீதி கீழ ரத வீதி மேல ரத வீதிவழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபி ஷேகங்கள், அலங்காரங் கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடை பெற்றது.

மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்க ரத்தில் இருக்கும்.
இரவு 7 மணியளவில் பூ பல்லக்கில் வேல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணியசுவாமி திருக்கரத்தில் சேர்க்கப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் பா. சத்திய பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்ம தேவன், மணி செல்வன், ராமையா, கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மழை வேண்டி உசிலம்பட்டி அருகே பெருமாள் கோயிலில் மாபெரும் அன்னதானம்!

annathanam in perumal malai near usilampatti - 2026
#image_title

மதுரை, உசிலம்பட்டி அருகே புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, மழை வேண்டி – 1000 அடி உயர பாறையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, வில்லாணி கிராமத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவார பாறையான வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த பெருமாள் திருக்கோவில்.

தரைமட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்த பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையில் மழை வேண்டி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து நன்கொடையாக நிதி திரட்டி, விழா எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு விழா முடிந்ததும் மாலை நேரத்தில் மழை பெய்து சுற்றியுள்ள கிராமங்கள் செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டும் இன்று புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, ஆதி வழக்கப்படி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விற்காக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் உள்பட உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வில்லாணி, வி.பெருமாள்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, மூப்பபட்டி, மாதரை, நக்கலப்பட்டி மற்றும் நல்லமாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பாறை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்.

செங்கோட்டையில் இலவச இயற்கை யோகா மருத்துவ முகாம்!

yoga campaign in sengottai
yoga campaign in sengottai


செங்கோட்டையில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ விழிப்புணா்வு முகாம்

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மோகன்தாஸ் இயற்கை யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
நிலையம் சார்பில் மனிதநேய பண்பாளா் தெய்வத்திரு செண்பகம் கரையாளா் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடந்தது.

முகாமிற்கு காந்தியத் தலைவா் வி.விவேகானந்தன் தலைமை தாங்கினார். டாக்டர் ராம்குமார், தாயின்மடியில் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம், அசிசி பல் மருத்துவமனை டாக்டர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

டாக்டர் கௌதம் செண்பக் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து காந்தியத்தலைவா் வி.விவேகானந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில் மருத்துவர்கள் டாக்டர் முத்துராஜ், சங்கமித்ரா, பார்த்திபன் மற்றும்
குழுவினா் மருத்துவ சிகி்ச்சை மற்றும் இயற்கை ஊட்டசத்து பானங்கள், இயற்கை உணவு, யோகா பயிற்சி ஆலோசனை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் ராம்மோகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், கடையம் யூனியன் கவுன்சிலர் மாரிக்குமார், மத்தளம்பாறை ஜேம்ஸ், தென்காசி ஜோதிடர் மாடசாமி, பணிநிறைவு பெற்ற பிடிஓ. சண்முகசுந்தரம், கடையநல்லுார் யூசூப் அரசியல் பிரமுகா்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முகாமில் கழிவு நீக்கம், நீராவிக் குளியல், நீர்சிகிச்சை, மண்சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர், வாழை இலைக்குளியல், யோகா & தியான பயிற்சி இயற்கை ஊட்டச்சத்து பானங்கள், இயற்கை உணவுகள் உள்ளிட்டவைகள்
வழங்கப்பட்டது.

முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை
மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். முடிவில் பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் நன்றி கூறினார்.

இலவச யோகா விழிப்புணர்வு முகாம்!

0
yoga campaign in sengottai
yoga campaign in sengottai


செங்கோட்டையில் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ விழிப்புணா்வு முகாம்

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மோகன்தாஸ் இயற்கை யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
நிலையம் சார்பில் மனிதநேய பண்பாளா் தெய்வத்திரு செண்பகம் கரையாளா் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடந்தது.

முகாமிற்கு காந்தியத் தலைவா் வி.விவேகானந்தன் தலைமை தாங்கினார். டாக்டர் ராம்குமார், தாயின்மடியில் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோமதிநாயகம், அசிசி பல் மருத்துவமனை டாக்டர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

டாக்டர் கௌதம் செண்பக் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து காந்தியத்தலைவா் வி.விவேகானந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

முகாமில் மருத்துவர்கள் டாக்டர் முத்துராஜ், சங்கமித்ரா, பார்த்திபன் மற்றும்
குழுவினா் மருத்துவ சிகி்ச்சை மற்றும் இயற்கை ஊட்டசத்து பானங்கள், இயற்கை உணவு, யோகா பயிற்சி ஆலோசனை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் ராம்மோகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ், கடையம் யூனியன் கவுன்சிலர் மாரிக்குமார், மத்தளம்பாறை ஜேம்ஸ், தென்காசி ஜோதிடர் மாடசாமி, பணிநிறைவு பெற்ற பிடிஓ. சண்முகசுந்தரம், கடையநல்லுார் யூசூப் அரசியல் பிரமுகா்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முகாமில் கழிவு நீக்கம், நீராவிக் குளியல், நீர்சிகிச்சை, மண்சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபஞ்சர், வாழை இலைக்குளியல், யோகா & தியான பயிற்சி இயற்கை ஊட்டச்சத்து பானங்கள், இயற்கை உணவுகள் உள்ளிட்டவைகள்
வழங்கப்பட்டது.

முகாமில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை
மற்றும் ஆலோசனை பெற்று சென்றனா். முடிவில் பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் நன்றி கூறினார்.

ராஜூக்கள் கல்லூரியில் பல்கலைக்கழக மண்டல போட்டிகள்!

university level sports in rajus colleges - 2026
#image_title

மதுரை காமராசர் பல்கலைக்கழக டி மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி மற்றும் பால் பேட்மிட்டன் போட்டிகள் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் விருதுநகர், சிவகாசி, திருமங்கலம், சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் காரியாபட்டி பகுதிகளைச் சார்ந்த கல்லூரிகள் பங்கேற்றன. கல்லூரிகளுக்கு இடையேயான பால் பேட்மிட்டன் இறுதிப் போட்டியில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வெற்றி பெற்றது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக டி மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் முதலிடத்தை விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியும், இரண்டாம் இடத்தை ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியும், மூன்றாம் இடத்தை சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியும் பெற்றது.

பரிசளிப்பு விழாவில் உடற்கல்வித்துறை இயக்குனர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராமகிருஷ்ணன் மற்றும் சுயநிதியை பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமராஜ் வாழ்த்துரை வழங்கி கோப்பை மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை கொடுத்தனர். உடற்கல்வி பேராசிரியர் அபிநயா நன்றி உரை கூறினார்.

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – முதல் நாள்

ind vs ban test - 2026
#image_title

இந்தியாவங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – முதல் நாள் – 27.09.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கனமழையால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

          டாஸ்வென்ற இந்திய அணி வங்கதேச அணியை மட்டையாடச்சொன்னது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அந்தஅணி 3 விக்கெட்டுக்கு107 (மோமினுல் 40*, சாண்டோ 31, ஆகாஷ் தீப் 2-34) ரன் எடுத்திருந்தது. கான்பூரில்இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் மோசமான வெளிச்சம் மற்றும் கனமழை காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே சாத்தியமாகியது,

          26ஆம்தேதி இரவு முழுவதும்பெய்த மழையால் அவுட்பீல்ட் ஈரமாக இருந்ததால், இன்று காலை டாஸ் ஒரு மணி நேரம்தாமதமானது. இறுதியில் டாஸ் நடந்தபோது, ​​நாணயம்இந்தியாவுக்கு சாதகமாக விழுந்தது. மேகமூட்டமான வானத்தின் கீழ், ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டவில்லை – 2015க்குப் பிறகு இந்தியா நம் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் ஒன்றில்அவ்வாறு செய்தது இதுவே முதல் முறை.

          ரோஹித்மாற்றமில்லாத அணியுடன் அதாவது தனதுமூன்று வேகப்பந்துவீச்சாளகளுடன் களமிறங்கினார்.அதன் மூலம் கள நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்த்தார். ஆடுகளம் கொஞ்சம் மென்மையாகவும், வழக்கமான கான்பூர் மேற்பரப்பை விட சற்று அதிகமானபுல்வெர்களோடும் காணப்பட்டது. வங்கதேசஅணீ நிலைமைகளை முற்றிலும்வித்தியாசமாகப் பார்த்தது. அவர்கள்முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது  மட்டுமல்லாமல்மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் தேர்வு செய்தனர்.

          ஜஸ்பிரித்பும்ரா பந்தை இருபுறமும் அதாவது வலது மற்றும் இடதுபுறங்களில் ஸ்விங் செய்தார். தொடக்கத்தில் மூன்றுமெய்டன் ஓவர்களை வீசினார், ஆனால் விக்கெட் எடுக்க முடியவில்லை. ஷத்மான் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹசன் ஆகியோர் தொடக்கஆட்டங்களில் தப்பித்ததால் முகமது சிராஜ் எந்த வெற்றியையும் காணவில்லை.அந்தக் கட்டத்தில் 20 பந்துகளை எதிர்கொண்ட போதிலும் ஜாகிரால் தனது கணக்கைத் திறக்கமுடியவில்லை.

          ஒன்பதாவதுஓவரில் ஆகாஷ் தீப் அறிமுகப்படுத்தப் பட்டபோது நிலைமை மாறியது. அவரது மூன்றாவது பந்தில், அவர் ஜாகிரை ஆட்டமிழக்கச்செய்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது வலது பக்கம்கீழே சென்று இரு கைகளாலும் அதைத்தூக்கிப் பிடித்தார். கேட்ச்சின் நியாயம் குறித்து டிவி நடுவரிடம் ஆலோசிக்கப்பட்டது.அவருக்கு ஒரே ஒரு நல்லகோணம் மட்டுமே இருந்தது, அந்தக் கோணத்தில் பந்து நேராக ஜெய்ஸ்வாலின் கைகளுக்குச் சென்றது என்பதை ஊகிக்க அவருக்கு போதுமானதாக இருந்தது.

          சிலஓவர்கள் கழித்து ஆகாஷ் தீப் மீண்டும் ஒருவிக்கட் பெற்றார். வீசும் கை விக்கெட்டைச் சுற்றிவர ஆகாஷ் தீப் வீசிய பந்து, ஷாட்மேனின்பேட்டின் உட்புற விளிம்பை அடித்து, கால் பட்டையில் அடிக்க அவர் எல்.பி.டபிள் யூ ஆணார். பெரியஎல்பிடபிள்யூ முறையீட்டை ஆன்-பீல்ட் அம்பயர்மறுத்தார் – பந்து, சிறந்த லெக் ஸ்டம்பில் க்ளிப்செய்யப்பட்டிருக்கும் என்று தோன்றியது. இந்தியா மறுபரிசீலனையைத் தேர்ந்தெடுத்தது, அனைவருக்கும் ஆச்சரியமாக, லெக் ஸ்டம்பின் ஒருநல்ல துண்டில் பந்து தாக்கியதை ப்ரொஜெக்ஷன் காட்டியது.

          சாண்டோஒரு நேர்மறையான மனநிலையுடன் விளையாட வந்திருந்தார். மற்றும்பேட்டின் வெளிப்புற பாதியில் பட்ட எட்ஜுகள் மூலமாக சிலஸ்ட்ரீக்கி பவுண்டரிகளை எடுத்தார். மோமினுலும் தற்காலிகமாகத் நன்றாக ஆடத் தொடங்கினார். பும்ராவைகவர்கள் வழியாக அடித்து ஃபோர் எடுப்பதற்கு முன்அவர் ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ்ஆகியோரிடமிருந்து தலா ஒரு பவுண்டரியை எடுத்தார்.

          மதியஉணவுக்கு முந்தைய கடைசி ஓவர் நடந்து கொண்டிருந்போது,தூறல் பெய்யத் தொடங்கியது, இதனால் இரண்டாவது அமர்வு 15 நிமிடங்கள் தாமதமானது. ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, ​​ஆர் அஷ்வின் வீசும் கை விக்கட்டின் மேல் வர பந்து வீசி, ஷாண்டோவின்மட்டையின் உள் விளிம்பில் பந்து பட்டு அவரது கால் பட்டையில்தாக்கியது; அதனால் அவர் எல்பிடபிள்யூ 31 ரன்களில்ஆட்டமிழந்தார். இது மூன்றாவதுவிக்கெட்டுக்கான 51 ரன் கூட்டை முடிவுக்குகொண்டு வந்தது.

          அதன்பிறகு மோமினுல் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் சில நிமிடங்கள் பதற்றமாகஆடினர். ஆகாஷ் தீப்முஷ்பிகுரின் வெளிப்புற விளிம்பில் இருந்து பந்து வர ஒரு கேட்ச்வாய்ப்பு கிட்டியது. ஆனால் அதுமூன்றாவது ஸ்லிப்புக்கும் கல்லிக்கும் இடையிலான இடைவெளியில் நான்கு ரன்களுக்குச் சென்றுவிட்டது. மூன்றுஓவர்களுக்குப் பிறகு, மொமினுல் பும்ராவின் பந்த பவுண்டரிக்கு விரட்டினார்.

          அச்சமயத்தில் ஆட்டத்தைத் தொடர முடியாத அளவுக்கு இருட்டாக மாறி, மழை பெய்யத் தொடங்கியது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முன்னதாகவே நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடிவெடுத்தனர்.

On Meetings – Rendezvous or routine?

0
judge grs gr swaminathan - 2026
#image_title

By JUSTICE G.R.SWAMINATHAN


Indian judiciary has had several illustrious Chief Justices    Some of them have written their autobiographies.   M.C.Chagla who became the Chief Justice of the Bombay High Court upon India attaining independence wrote “Roses In December”.    During his tenure, Morarji Desai was the Chief Minister. No chief justice can remain aloof. There will be several issues to resolve. It can range from sanctioning of budget, approval of proposals to appointments.

Chagla and Morarji Desai agreed that instead of exchanging letters and making notes on files, the best way to solve administrative problems was to meet, thrash them out and come to an immediate decision. It became a practice that almost every Sunday, or every other Sunday, Morarji would come and have lunch with Chagla and after lunch, they would sit down with the files which contain outstanding questions to be decided between the High Court and the government. Chagla recalls that they would take their decisions in less than half an hour. The Chaglas turned vegetarian on those occasions.  

Morarji would however protest that they need not feel compelled to become vegetarians and that he was nol all that sensitive. Chagla remarks that he had a selfish reason for giving Morarji a very good lunch since he was more pliant and manageable after a good meal and it was easier for him to obtain Morarji’s assent to his proposals. Both Morarj i and Chagla liked the game of bridge.  One day Morarji suggested that they play a game together. But the idea fell through because Morarji insisted that he would pray only without stakes. Since Morarji made it a matter of principle, Chagla also insisted that it was his principle to play only for stakes

Justice P.B.Gajendragadkar was the Chief Justice of India when Lal Bahadur Shastri was the Prime Minister.   In his autobiography “To The Best Of My Memory’ , he writes that his relations with Shastri became extremely cordial   and almost personal.   Shastri had partaken meals in the home of Gajendragadkar. The Home Minister also would visit the Chief Justice whenever there was need. The Chief Justice would visit the Prime Minister’s bungalow in the evening after his appointments were over so that he should not have to wait. Gajendragadkar narrates an unfortunate incident where Shastri played smart at his expense to secure the resignation of T.T.Krishnamachari, who was his cabinet colleague

Shastri wanted Justice P.B.Gagendragadkar to look into the allegations made against TTK and tell him if they disclosed prima facie case. Justice P.B.Gagendragadkar declined the request on the ground that TTK was his personal friend. He was also not willing to take up the work since he had only a short period of tenure remaining. Shastri was persistent and wanted the CJI to suggest the name of a senior judge. Justice P.B.Gagendragadkar passed on the papers to Justice Wanchoo who looked into the papers and two days later informed the CJI that some of the charges appeared frivolous while some prima facie needed investigation.

Justice P.B.Gagendragadkar reported to Shastri what Justice Wanchoo thought and went away to Calcutta. When Justice P.B.Gagendragadkar was in Calcutta, Shastri sent for TTK and told him that since Justice P.B.Gagendragadkar had looked into the papers and was satisfied that prima facie case was disclosed, he would request the CJI to hold the enquiry TTK felt offended and made it clear that he would not submit to the enquiry. He left the Prime Minister’s house and sent him a letter of resignation. Frantic calls were received from the Prime Minister’s office and Justice P.B.Gagendragadkar met him the next week.

Justice P.B.Gagendragadkar describes that there was a little twinkle in the eye of Shastri. Shastri said “the induction of your name has had its effect and TTK offered to resign rather than face an enquiry. I offer you unconditional apology for having told him something which was cr//me and which was entirely unfair to you.

Justice P.B.Gagendragadkar did not know what to do. He obviously could not have let down the Prime Minister. He also did not go to TTK and explain the true position. TTK returned to Madras and Justice P.B.Gagendragadkar had no chance to meet him thereafter. TTK subsequently died. Justice P.B.Gagendragadkar felt remorseful that a personal friend of his with whom his relationship was very cordial died under a misapprehension that he was prepared to hold an enquiry against him. He writes, “This is one of the ironies of life and I will carry that regret to my grave”

I cite these two illustrations from the lives of two very illustrious judges to dFiVe home the point that there is nothing amiss in the Chief Justice and the Prime Minister meeting each other in the privacy of their homes.

* JUSTICE G.R.SWAMINATHAN,
JUDGE, MADRAS HIGH COURT.

யூ டூ புருடஸ் – சமூக ஊடகத்தின் கீழ்த்தரமான பிரசாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani - 2026

யூ டூ புருடஸ் எனும் சமூக ஊடகத்தின் கீழ்த்தரமான பிரச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் லட்டு விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்படுத்தி யூ-டூ-புருடஸ் என்ற யூ-டியூப் சேனலில் காணொளி வெளியிட்டுள்ளனர்.

இதே நபர் சிதம்பரம் தில்லை நடராஜரை இழிவுப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியிட்டமைக்கு நடவடிக்கை கோரி, இந்து முன்னணி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த தமிழக காவல்துறை அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது.

வேற்று மதத்தினரின் நம்பிக்கையை பற்றி கேள்வி கேட்டால் தாமாக முன் வந்து வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைக்கும் காவல்துறை, இந்துக்களை இழிவுப்படுத்தி பேசினாலோ, இந்து வழிபாட்டு முறைகளையும் இந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் பேசி சமூக பதற்றத்தை தூண்டினால் கூட நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் என புரியவில்லை.
இந்துக்கள் என்ன பேசினாலும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கடந்து சென்று விடுவார்கள் என்ற எண்ணமா என்றும் தெரியவில்லை.

திருப்பதி நைவேத்ய பிரசாதமான லட்டு தயாரிப்பிற்கு நெய் அளித்த ஒப்பந்ததாரர்கள் மிருக கொழுப்பை அதில் கலந்த விவகாரம் உலகம் முழுவதும் உள்ள வெங்கடேச பெருமாள் பக்தர்களின் மனங்களை மிகவும் வருந்த செய்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி இந்துக்களின் நம்பிக்கையை சிதைத்த இத்தகைய நிகழ்வினை செய்தவர்களுக்கு எதிராக இந்துக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருவதால், இந்த உலகம் இதுவரை பார்க்காத வகையில் இந்துக்களின் எதிர்ப்புக் குரல் ஒலிக்கும் போகிறது என்பது உண்மை.

இந்த நேரத்தில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்து முன்னணி தெரிவிப்பது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் இந்துக்களின் நம்பிக்கை மீது தாக்குதல் தொடுத்த போதெல்லாம் இந்து சமுதாயம் அதனை வெற்றிகரமாக முறியடித்து முன்னேறியே வந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அது பீட்டா (Peta) போன்ற சர்வதேச சதியால் ஏற்படுத்தபட்ட தமிழகத்து ஜல்லிக்கட்டு தடையானாலும், காஷ்மீர் அமர்நாத் பனி லிங்கத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏற்படுத்திய நெருக்குதல் ஆனாலும், கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க நடந்த சதியானாலும் எல்லாவற்றையும் முறியடித்து வரலாறு படைத்தது இந்து சமுதாயம்.

எனவே திருப்பதி லட்டு பிரசாதத்தை களங்கப்படுத்திடும் கயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நெருக்கடியான தருணத்தை இந்து விரோதிகள் பயன்படுத்தி இந்துக்களின் நம்பிக்கைகளை கிண்டலும் கேலியும் செய்து வருவதை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூ டூ புருடஸ் என்ற சேனல் அதில் பேசிய நபர் மீதும் இந்து முன்னணி தமிழகமெங்கும் புகார் அளிக்கும். அதனை வாங்கி வைத்துக் கொண்டு புகாரை கிடப்பில் போடாமல் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்கினால், மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கும் சூழல் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்து முன்னணி.

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய போது, எப்படி இந்துக்கள் தாமாக முன்வந்து போராடினார்களோ அதே போல் ஏழுமலையான் வெங்கடேச பெருமாளை இழிவுப்படுத்திடும் கயவர்களுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் போராட முன்வர வேண்டும்.

அப்போது மட்டுமே இந்து மதத்தையும், இந்து வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் இழிவுப்படுத்திட சமூக விரோதிகள் அஞ்சுவர். அது மட்டுமல்லாது இந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஏழுமலையான இழிவுபடுத்திய யூ டூ புருடஸ் சேனல் மீதும் அதில் பேசியவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிப்போம்.

அப்போதும் காவல்துறையின் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்துமுன்னணி இந்துக்களை ஒன்று திரட்டி மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனவே காவல்துறை உடனடியாக திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலை இழிவுபடுத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்…

மதுரையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைப்பு!

madurai cooptex deepavali sales - 2026
#image_title

மதுரை மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார்.

மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் இன்று (27.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்ததாவது:-
கோ-ஆப்டெக்ஸ் என, அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி, மதுரை எம்போரியம், மல்லிகை, அழகப்பன்நகர் ஆகிய நான்கு விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.251.56 இலட்சங்கள் ஆகும். தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.345.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம் திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புகோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள் /பருத்தி (Linen/Cotton) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் உள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது என, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.

இவ்விழாவில், மண்டல மேலாளர் (கூ/பொ) ஆர்.செந்திவேல் , மேலாளர் எஸ்.பாடலிங்கம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

srivilliputhur mini bus accident - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து ஒரு மினி பஸ் நேற்று 27ந்தேதி காலை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் வேலைக்கு செல்லும் ஆண் பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் நிதிஷ் மைக்கேல் ராஜ் வயது 45 என்பவர் ஓட்டி வந்தார்.

பஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடிசாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்த பஸ்ஸில் பயணம் செய்தோர் அலறி அடித்துக் கொண்டு கூச்சல் போட்டுக்கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பஸ்ஸை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் பஸ் கவிழ்ந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ராஜபாளையம் வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் இருந்தும் 108 உயிர் மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. விபத்து வாகன மீட்பு வாகனம் வந்து கவிழ்ந்து கடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தியது

இந்த விபத்தில் மம்சாபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் நிதீஷ் குமார் வயது 16, வாசு ராஜா வயது 14 ஆகியோரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வயது 20, காந்திநகர் மாடசாமி வயது 28 கிருஷ்ணன் கோவில் கல்லூரி ஊழியர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட ஆண் பெண் பஸ் பயணிகள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சாரை சாரையாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்ததாக இவர்கள் நான்கு பேரும் மம்சாபுரம் சுற்று பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும் இந்த பஸ்ஸில் பயணம் செய்த 30க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆண்கள் பெண்கள் ஆகியோர் பலத்த காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இதில் 20 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியபடி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர் மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். பஸ் கவிழ்ந்து ஒரே ஊரை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.