Home Blog Page 57

டிரம்பின் வரிக் கொள்கை! பாரதத்துக்கு பாதிப்பா?

modi and trump - 2026
#image_title

இந்தியா மீது அமெரிக்க விதிக்க இருப்பதாக திரு. டிரம்ப் அறிவித்துள்ள 25% இறக்குமதி வரி குறித்து கவலை கொள்வதற்கு முன் சில விஷயங்களைப் புரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்கப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. நுகர்வுக் கலாசாரத்தை வைத்து முன்னேறிய நாடு அது. தங்களை வைத்து வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும், பரஸ்பரமாக அமெரிக்க வளர்ச்சிக்கு உதவவில்லை என்று அதன் அதிபர் கருதுகிறார்.

அமெரிக்காவின் வளம், தொழில்நுட்பம், தாராளமயமான பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு விளைபொருள்களை, உற்பத்தியை, மனித வளத்தை மேம்படுத்திய(தும்) உலகின் பெரும்பாலான நாடுகள், தங்கள் நாடு என்று வரும் போது சமமான போட்டிக்குச் சந்தையை அமெரிக்காவிற்குத் திறந்து விடுவதில்லை என்பது அவர் குற்றச்சாட்டு. அது ஓரளவு உண்மையும் கூட.

உள்ளூர் தொழிற்சாலைகள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக வரி விதித்து தங்கள் நாட்டுச் சந்தையைத் தக்க வைக்கிறார்கள். இதனை உடைக்க அவர் “நீ எனக்கு விதிப்பதை விட உனக்கு அதிக அளவு வரி” எனும் ஆயுதத்தை எடுத்து மிரட்டுகிறார்.

MAGA – Make America Grea Again என்கிற கோஷத்தோடு பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றவர் திரு. டிரம்ப். அவர் முதன்மையில் ஒரு தொழில் அதிபர், பின்னர் தான் அரசியல்வாதி. அவருக்குத் தான் ஆடும் சதுரங்க விளையாட்டுகளில் காய் நகர்த்தல்கள் குறித்த தெளிவு எப்போதும் உள்ளது. அவர் பொது வெளியில் பேசும் சில அசட்டுத்தனமான கருத்துகளும், வேண்டுமென்றே விளைவிக்கும் குழப்பங்களும் கவனத்தைத் திசை திருப்பும் யுக்திகள் என்றே நான் கருதுகிறேன்.

ஒரு வியாபாரியாக அவர் அமெரிக்க தொழில்துறை – முக்கியமாக ஆயுதங்கள் + பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்திச் சந்தை, பால், சோளம், சோயா, உட்பட குறைந்த விலையில் உற்பத்தியாகும் விவசாயப் பொருள்கள், கச்சா எண்ணெய் மற்றும் அதன் உபபொருள்களான எரிவாயு ஆகியவற்றை உலகளாவிய சந்தைக்கு விரிவாக்க விரும்புகிறார். இந்த சதுரங்க ஆட்டத்தில் தனது குதிரைகள், யானைகள், மந்திரிகளைக் காவு கொடுப்பது போல காட்டிக் கொண்டு, எதிரிகளின் பக்கம் பல சிப்பாய்களைக் கொண்டு சென்று ஒவ்வொருவரையும் மகாராணிகளாக மாற்றும் வித்தையைத் திறம்பட மேற்கொள்கிறார்.

இந்தியா மீதான வரி அறிவிப்புக்கு ஒரு நாளுக்கு முன் 27 நாடுகளின் கூட்டமைப்பு கொண்ட தனது வலதுகரமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் தாக்கங்கள் என்ன என்று பார்க்கலாம்.

● ஏற்கனவே 4.8% வரி என்று இருந்ததை மூன்று மடங்கு அதிகரித்து 15% ஆக உயர்த்தி உள்ளார்.

● இதை விடக் கூடுதல் வரியும் சில பொருள்களுக்கு விதிக்கும் சரத்துகளும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

● பிரெஞ்சு பிரதமர் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள் “ஐரோப்பாவிற்கு ஒரு கறுப்பு தினம்” என்று அறிவித்துள்ளார்.

● இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான சவால்களைச் சந்திக்கும் என்று அந்நாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

● ஹங்கேரி இந்த ஒப்பந்தத்தை 15 -0 கோல் கணக்கில் அமெரிக்கா வென்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.

● ஹங்கேரி பிரதமர் திரு.ஆர்பன், ஒரு படி மேலே போய் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் திருமதி. உருசலா வான் டேர் லேயனை காலைச் சிற்றுண்டியாக திரு. டிரம்ப் உண்டு (செறித்து) விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

● இத்தாலி மட்டுமே இதைத் தாங்கிக் கொண்டு செயல்பட இயலும், ஆனால் முழு விபரங்களையும் படிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

● ப்ரூசேல்ஸூம், வெள்ளை மாளிகையும் ஒப்பந்தத்தில் உள்ள வரிகள் குறித்து முரண்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

● எஃகு, அலுமினியம் போன்ற உலோகங்கள் விஷயத்தில் அமெரிக்க நிறுவனங்களின் கை ஓங்கி உள்ளதாக அமெரிக்க தொழில் துறை வரவேற்றுள்ளது.

● ஐரோப்பிய வாகன உற்பத்தித் துறை, எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை கடுமையான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

● #MAGA என்கிற கோஷத்திற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பர ஒப்பந்தம் நடைபெற சிறிது காலம் பிடிக்கும். அப்படியே 15%-25% வரி விதிப்பு நாளை முதல் அமலானாலும் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 6% – 12% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

● இணைப்பில் உள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி புதிய வரி விதிப்பில் கிட்டத்தட்ட 50% ஐ இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களும், 30% அந்நாட்டு நுகர்வோர்களும், 20% வரை உற்பத்தி அல்லது ஏற்றுமதி செய்யும் நாடு ஏற்றுக் கொள்ளும் என்றும் தகவல்கள் உள்ளன.

ஆக, தமிழக ஊடகங்கள் மற்றும் பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டும் பதிவுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது மனதிற்கு நல்லது. உங்களை மேம்படுத்தும் நல்ல தகவல்களைத் தேடிப் படியுங்கள்.

  • சக்ரவர்த்தி மாரியப்பன்

தென்கரை கோயிலில் ஸ்ரீ முரளீதர ஸ்வாமி பக்திச் சொற்பொழிவு!

muralidara swami kathai in madurai thenkarai - 2026

சோழவந்தான் அருகே , தென்கரை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் பக்தி சிறப்புரை ஆற்றினார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது.

முரளிதர சுவாமிகள் சிறப்புரை ஆற்றும் போது இறைவனை அடைய அவரது நாமங்களை கேட்பது சிறந்த வழி என்றும் தொடர்ந்து கிருஷ்ணர் கதையை கேட்க நமது பிறவி பெருங்கடல் தீரும் என்று கூறினார்.

இதில் , தென்கரை சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி செய்திருந்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரி தரிசனம்!

niraiputhari pooja in sabarimala - 2026

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரிக்காக தரிசனத்துக்குக் கூடினர்

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இருந்த சுபமுகூர்த்தத்தில் பூஜைகள் நடைபெற்றன.

தந்திரி கந்தரரு பிரம்மதத்தன் மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் நெல் கதிர் கட்டுகளை கொடியமரத்தின் அருகில் இருந்து கிழக்கு மண்டபத்திற்கும், பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீகோவிலிற்கும் கொண்டு சென்றனர். அதன் பின்னர் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகள் முடிந்த பின் நெல் கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பூஜைகளை காணவும் நெல் கதிர்களைப் பெறவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதலே காத்திருந்தனர்.

தொடர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் பூஜா பூஜை பஸ் ஸ்டாபிசேகம் உச்சிக்கால பூஜை மாலை தீபாராதனை இரவு புஷ்பாஞ்சலி படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.

திரளான பக்தர்கள் தற்போது கேரளாவில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் நல்ல தண்ணீர் வந்ததால் பக்தர்கள் ஆனந்தமாக நீராடி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் ‌பூஜைகள் முடிந்த பின் இன்று இரவு 10 மணிக்கு கோவில் மூடப்பட்டு இனி ஆவணி மாதம் பூஜைக்கு சபரிமலை நடை திறக்கும்.

இதுபோல் நிறைபுத்தரிசி பூஜை கேரளாவில் பிரசித்தி பெற்ற அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி உட்பட முக்கிய கோவில்கள் அனைத்திலும் இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றது.

தமிழகத்திலும் நிறைபுத்தரிசி பூஜை முக்கிய கோவில்களில் இன்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவில், சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி கோவில், திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் உட்பட முக்கிய கோவில் நிறைபுத்தரசி பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.

அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் முன் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து சுவாமிக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

மதுரை மக்கள் முன்னிலையில் ‘மதுரை 16’ பட ப்ரமோஷன்!

madurai shooting - 2026

மதுரை மண் சார்ந்த திரைப்படம் மதுரை மக்கள் முன்னிலையில் மதுரை 16 படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றது.

மதுரை 16 திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா, மதுரை விஷால் தி மாலில் மதுரை மக்கள் முன்னிலையில் ஆடல் பாடலுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்துனர்களாக டாக்டர் சரவணன் மற்றும் வாட்டர்மெலோன் ஸ்டார் டாக்டர் திவாகர் மற்றும் டைகர் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை 16 திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதேவி சின்னயாஜீன் வில்லியம்ஸ், இயக்குனர் ஜான் தாமஸ், கதாநாயகன் ஜெரோம் விஜய், கதாநாயகி நிவேதா தினேஷ் மற்றும் பட குழுவினர்கள் பலர் பங்குபெற்றர். மேலும், இந்த நிகழ்ச்சியை, மதுரை அடங்கா அஜித் குரூப்ஸ் தல சபி தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் , கலந்து கொண்டவர்கள் மதுரை 16 திரைப்பட கலைஞர்களை வாழ்த்தினர் முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கிரைம் திரில்லர் படமாக இந்த திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஆடி நிறை புத்தரிசி பூஜை; மாலை நடை திறப்பு!

sabarimala niraiputharisi pooja - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆடி நிறை புத்தரிசி பூஜை விழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

நாளை புதன்கிழமை காலை நெற்கதிர்கள் கொண்டு பூஜை செய்து சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் நிறைபு த்தரிசி பூஜை விழா விமர்சையாக நடைபெறும்.

கேரளாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஐதீக ஜடங்குகளில் ஒன்று நிறைபுத்தரிசி பூஜை வழிபாடாகும். ஆவணி மாதத்தில் இங்கு விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன்பு விளைந்த கதிர்களை பகவானுக்கு படைத்து பூஜை செய்வது நிறைபுத்தரிசி பூஜை சடங்கு.

இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும். இதற்கான நாள், திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் அரண்மனையில் நாள் குறிக்கப்பட்டு அதே நாளில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பகவானுக்கு நெற்கதிர் படைத்து நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடப்படும்.

இந்த விழா சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சபரிமலையில் நெற்பயிர் பயிரிடப்பட்டாலும் பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து நெற்கதிர்களை கொண்டு வந்து வழங்குகின்றனர்.

இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜை புதன்கிழமை ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, இன்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தை தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். ஐயனின் தவ அலங்காரம் களைந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

இன்று சபரிமலை வந்த ஏராளமான பக்தர்கள் நெற்கதிர்களை அதிக அளவில் கொண்டு வந்தனர். நாளை காலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் 4:00 மணிக்கு நடை திறந்ததும் கணபதி ஹோமம் மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தி தொடர்ந்து காலை 5.30 முதல் 6.30குள் நெற்கதிர்களை சோபன மண்டபத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜிவரு பூஜை செய்து நிறைபுத்தரிசி பூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பிற மாநில பக்தர்களும் சபரிமலைக்கு வந்துள்ளனர். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வழக்கமான பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும். இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை முடித்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு!

madurai adipuram valaikappu utsav - 2026

மதுரை கோயில்களில் ஆடிப்பூரம்: அம்மன்களுக்கு வளையல் காப்பு: அன்னதானம்!

மதுரை பகுதி கோயில்களில் திருவாடிப்பூரத்தை ஒட்டி, கோயில்களில் அம்மனுக்கு, பக்தர்களால் வளையல் காப்பு அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் ரவி பட்டர், வராஹி, துர்க்கை, மீனாட்சி,, மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து, அம்மனுக்கு வளையல் காப்பு அணிவித்தார். கோயில் நிர்வாகிகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், வளையல்கள், திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது.

மதுரை வைகை காலனி கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில், பட்டர் கோபாலகிருஷ்ணன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.
மதுரை யாரணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், அர்ச்சகர் மணிகண்டன், பூஜைகளை செய்து வளையல்களை அம்மனுக்கு அணிவித்தார். கோயில் தலைவர் முருகன், செயலர் சிவா, பொருளாளர் சந்திரன் ஆகியோர்கள் பல வகை உணவுகளை பிரசாதமாக வழங்கினர்.

மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில், அம்பாள், துர்க்கை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை, கோயில் நிர்வாகிகள் செய்தனர். தலைவர் சுதர்சன, நிர்வாகிகள் இந்திரா, கல்யாணி, திலகம், மீனாட்சி, சிகாமணி ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

madurai valaikappu adipuram - 2026

சோழவந்தான் – நாச்சிகுளம் காளியம்மன் கோவில் ஆடிப்பூரம்; அம்மன் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வளைகாப்பு அணிந்து கொண்டாட்டம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் , பகவதி அம்மன் விநாயகர், நாகம்மாள் கோவில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து வளையல் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது‌. தொடர்ந்து கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்தது .

இதில் நாச்சிகுளம் மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை நாச்சிகுளம் கிராமத்தினர் மற்றும் இளைஞர் எழுச்சி மன்றத்தினர் செய்திருந்தனர்.


adipooram valaiyal vizha - 2026

காரியாபட்டி கபால காளீஸ்வரி ஆலயத்தில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை!

காரியாபட்டி அருகே, அம்மன் ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரியப்பட்டி கபால காளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வளையல்கள் வழங்கப்பட்டது. முடுக்கன் குளம் சிவகாம சுந்தரி ஸமேத அம்பலவாணர் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை நடை பெற்றது. அம்மனுக்கு, வளையல் அலங்காரம் செய்யப் பட்டு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப் பட்டது.


ஸ்ரீ வியாச பூஜா குரு வியாச பூஜை மகோத்ஸவம் 2025

வியாச பூஜை மஹோத்சவ விழா சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில், பாடசாலை, அத்யாபகர் வரதராஜ பண்டிட் தலைமையில் பல வேத விற்பன்னர்கள் மற்றும் பாடசாலை மாணவர் களாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

அன்று காலை 09.00 மணிக்கு குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வேத வியாசர் ஆவாஹன அர்ச்சனைகள், வேத பாராயணங்கள், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணங்கள் , அதனை தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம், புருஷ சுக்த ஹோமம், ஸ்ரீ சுக்த ஹோமம், வியாச காயத்ரி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ,மஹா பூர்ணாஹுதி, புணர் அர்ச்சணை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம், நாத கீத வாத்திய உபச்சாரங்கள் , தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கான நெற்கதிர் வாகனம்; செங்கோட்டை அருகே வரவேற்பு!

niraiputharisi urvalam near sengottai - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நிறைபுத்தரி பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அச்சன்கோவிலிருந்து புளியரைக்கு வந்த நிறைபுத்தரி நெற்கதிர் வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இந்தநிலையில், இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில், அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் AGS. ஹரிஹரன் குருசாமி மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் நிறைபுத்தரி நெற்கதிர் கட்டுக்களை அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டது.

இந்த வாகனம் சபரிமலைக்கு செல்லும் வழியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் உள்ள பண்பொழி திருமலைக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு இன்று காலை வந்தது. அப்போது நிறைபுத்தரி நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து காலையில் நடந்த சிற்றுண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து அந்த வாகனம் கோட்டைவாசல் கருப்பசுவாமிகோயில், ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில், புனலூர் கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றடைகிறது.

niraiputharisi poojai in achankoil - 2026

முன்னதாக, சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு கோயில்களில் நிறை புத்தரிசி பூஜைக்காக அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுவதை முன்னிட்டு, நேற்று திங்கள் கிழமை இரவு நெற்கதிர்களை கொண்டு செல்லும் திருவாபரண வாகனத்திற்கு அச்சன்கோவில் மேல்சாந்தி பூஜை செய்தார்.!

கருட, நாக பஞ்சமி! சிறப்புகளும் வழிபாட்டின் பலன்களும்!

garuta panchami - 2026
  • கே.ஜி. ராமலிங்கம்

கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பது. சிறகுகளைக் கொண்டு பறப்பதாலேயே….அவர் கருடன். அனைத்து பறவைகளும் அப்படித் தானே பறக்கின்றன. ஆம். ஆனால்…. கருடனுக்கு மட்டும் இந்த பெயர் அமையக் காரணம்….கருடன் தன் சிறகுகளைக் கொண்டு… நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருப்பதால்.

அதாவது….ஒருமணி நேரத்தில் 125 முதல் 200 மைல்கள் வரை வேகமாக பறக்கும் திறமை கொண்டவர் கருடன்.

மேலும் அவரின் பார்வை மிகவும் கூர்மையானது. எவ்வளவு கூர்மை என்றால் ஒரு 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருடனால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை பார்க்க முடியும். மேலும் கருடனால்….340 டிகிரி வரை கண்களை சுழற்றி பார்க்க முடியும் . அதாவது அவரின் தலைக்கு நேர் பின்னால் இருப்பவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடியாது .

கருடனை வழிபடுவதால் ஏற்படும் முக்கிய பலன்களில் ஒன்றாக கண் குறைபாடுகள் நீங்குதல் கூறப்பட்டு இருக்கிறது. கருடனின் பார்வை சிறப்பை அறிகையில் அதில் வியப்பேதுமில்லை.

அதே பார்வை குறைபாட்டை நீக்க யோகாசனங்களில்….கருடாசனமும்……யோக முத்திரைகளில் கருட முத்திரையும் பெயர் பெற்றவை.

கருட முத்திரை என்றதும் குறிப்பிடப்பட வேண்டியது…..அது ரகுகுலத்தின் முத்திரை என்பது.

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினைபோக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப
–அயோத்தியா காண்டம்

இங்கு…. உவணம் என்பது கருடனைக் குறிக்கும். இதிலிருந்து… ரகுகுலத்தின் முத்திரை…. கருட முத்திரை என்பதை அறியலாம்.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனை போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமி திதியில் ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப் படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவை அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம்.

அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த நோன்பு கூடப்பிறந்த சகோதரர்கள் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெறலாம். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம்.

கருடாழ்வாரை வணங்குவோம்: இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகள் கண் பார்வை குறைபாடுகள் அகலும், பகையும் பிணியும் நீங்கும். செல்வம் செழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திர ஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்பதை பத்ம புராணம் கூறுகிறது.

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிசெல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

Ind Vs Eng Test: இளம் இந்தியப் படை ஏற்படுத்திய ஆச்சரியங்கள்!

Ind vs eng test - 2026

இந்தியா – இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் – மான்செஸ்டர் –– 23 மற்றும் 27 ஜூலை 2025 இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (358, யசஷ்வி ஜெய்ஸ்வால் 58, கே. எல். ராகுல் 46, சாய் சுதர்ஷன் 61, ஷுப்மன் கில் 12, ரிஷப் பந்த் 54, ஷர்துல் தாகூர் 41, பென் ஸ்டோக்ஸ் 5/72, ஆர்ச்சர் 3/73, வோக்ஸ் மற்றும் டாசன் தலா ஒரு விக்கட்), இரண்டாவது இன்னிங்க்ஸ் (425/4, ஷுப்மன் கில் 103, வாஷிங்க்டன் சுந்தர் 101, ரவீந்தர் ஜதேஜா 107, ராகுல் 90,  வோக்ஸ் 2/67, பென் ஸ்டோக்ஸ் 1/33). இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (669, க்ராலி 84, பென் டக்கட் 94, ஒலி போப் 71, ஜோரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141, ப்ரைடன் கார்சே 41, ஜதேஜா 4/143, சுந்தர் 2/107, பும்ரா 2/112, காம்போஜ் 1/89, சிராஜ் 1/140) ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (107 பந்துகளில் 58 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (98 பந்துகளில் 46 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த சாய் சுதர்ஷன் (151 பந்துகளில் 61 ரன்) நன்றாக விளையாடினார்.

அவரோடு இணைந்த ஷுப்மன் கில் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் (75 பந்துகளில் 54 ரன்), ரவீந்தர் ஜதேஜா (40 பந்துகளில் 20 ரன்), ஷர்துல் தாகூர் (88 பந்துகளில் 41 ரன்) எடுத்தனர் இதனால் முதல் இன்னிங்க்ஸில் 114.1 ஓவர்களில் 358 ரன் எடுத்து இந்திய அணி அனைத்துவிக்கட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்சில் ஜோ ரூட் (248 பந்துகளில் 150 ரன்), பென் ஸ்டோக்ஸ் (198 பந்துகளில் 141 ரன், தொடக்க வீரர் க்ராலி (113 பந்துகளில் 84 ரன்) பென் டக்கட் (10 பந்துகளில் 94 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். 157.1 ஓவர்கள் ஆடி அந்த அணி 669 ரன் சேர்த்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் சுமாராக பந்துவீசினர். ஆட்டக்களமும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. ஜதேஜா நாலு விக்கட்டுகள் எடுத்தார்.

நான்காம் நாள் உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்டது. இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க 311 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம். இதற்கு முந்தைய டெஸ்டில் 192 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது. எனவே நிச்சய வெற்றி என்ற மனப்பான்மையோடு இங்கிலாந்து அணி களமிறங்கியது .

ரிஷப் பந்த் ஏற்கனவே கையில் எலும்பு முறிவு காரணமாக ஆடமாட்டார் என அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர் ஆடினார். இந்த முறை ஆடும்போது ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது அவரது கால் விரலில் பந்து பட்டு, காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அவர் மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் மீண்டும் வந்து முதல் இன்னிங்க்ஸில் ஆடி, 54 ரன் எடுத்தார். இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் ஆடமாட்டார் என அறிவித்திருந்தார்கள்.

எனவே ஜெய்ஸ்வால், ராகுல், சுதர்ஷன், கில், சுந்தர், ஜதேஜா, ஷர்துல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் அதன் பின் வெற்றி நமதே என இங்கிலாந்து அணி நினைத்திருந்தது. அதற்கு ஏற்றாற்போல முதல் ஓவரில் ஜெய்ஸ்வால், சுதர்ஷன் இருவரும் பூஜ்யத்தில் ஆட்டமிழந்தார்கள். அதன் பின் நடந்தது கதையின் முக்கியத் திருப்பம். நான்காம் நாள் முடிவில் ராகுல் 87 ரன்னுடனும், கில் 78 ரன்னுடனும் இந்திய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 174 ரன்னுடனும் ஆட்டத்தை முடித்தது.

ஐந்தாம் நாளில் ராகுல் 7 ஓவர்கள் விளையாடி 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அன்றைய தினம் 17 ஓவர்கள் விளையாடி ஷுப்மன் கில் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி வெற்றி நிச்சயம் என உற்சாகமடைந்தது. அதன் இன்னர் வாஷிங்க்டன் சுந்தர் (206 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்) மற்றும் ரவீந்தர் ஜதேஜா (185 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 107 ரன்) சிறப்பாக ஆடி ஆட்டத்தைச் சமனில் முடித்தனர்.

ஐந்தாவது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூலை 31 முதல் ஆகஸ்டு 4 வரை நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.    

Chola Empire reflects the strength and true potential of our great Nation!

0
gangaikondachozhapuram - 2026
  • B.L. Santhosh

Yesterday, our Hon’ble PM, Shri Narendra Modi spoke at the Aadi Thiruvathirai Festival at Gangaikonda Cholapuram reminding us that the “legacy of the Chola Empire reflects the strength and true potential of our great nation.” The ceremony was held to commemorate the 1000th year of the expeditions of Shri Rajendra Chola to South East Asia and commencement of the construction of the Gangaikonda Cholapuram temple.

Under the Chola regime, Tamil Nadu had become a bastion of military strength and religious depth. With visionary rulers like Rajaraja Chola I and his son Rajendra Chola I, the empire reached unprecedented heights, stretching its influence all the way from Southern India to Southeast Asia.

The Cholas were not only kings of land, but also were rulers of seas and visionaries well-tuned to the beat of commerce and culture. The greatest testimony to the same is that even centuries prior to Europe’s Magna Carta, the Cholas had institutionally established local self-rule, and that too through a public ballot pot process known as the “Kudavolai Amaippu system.”

Rajaraja Chola I, who reigned between 985 and 1014, set the stage for this golden era, and his campaigns spanned from Southern India to Northern Sri Lanka. Though he was a great military leader and enjoyed exalted titles, Rajaraja preferred to be remembered as “Sivapatha Sekaran” (one who bears Lord Shiva’s feet on his head), demonstrating once again that Tamil Nadu has always been a land of spirituality. This devotion was also the motivating force behind constructing the magnificent Brihadeshwara Temple at Thanjavur, which is a towering epitome of Chola architectural grandeur and spiritual ethos that remains a work of art even today.

His son, Rajendra Chola I (1014-1044 CE), succeeded in taking this legacy even beyond the Indian subcontinent. He sent out a grand naval campaign against the Srivijaya Empire in 1025 and established India’s maritime dominance in international waters by securing key trade routes. Under his reign, the Cholas had also claimed present-day Andaman and Nicobar Islands, Maldives, Lakshadweep, Coastal Burma and Thailand, as a result of which even ‘Coromandel’ bears the name of their land – “Chola Mandalam.” His victory over the Pala dynasty in Bengal was etched in history by the building of Gangaikonda Cholapuram and the bringing of sacred Ganga water to their Kingdom, epitomising Bharat’s civilisational strength from the Ganga to the Cauvery.

It is also essential to note that Rajendra Chola’s humility remained evident despite his vast conquests. In a touching gesture of respect to his father, the temple Gopuram he built at Gangaikonda Cholapuram was made slightly shorter than that of Gopuram of the Brihadeshwara Temple in Thanjavur. Therefore, the Cholas left their tale not just on stone but on seas and centuries with their extensive campaigns.