எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பாகிஸ்தான் உக்ரைனுக்கு விற்று பணம் பெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு முக்கிய ஆயுதங்கள். ● M109 Howitzers – ஹோவிட்சர்கள் ● BM 21 Grad – Boyevaya Mashina ராக்கெட் லாஞ்சர்கள்.
இவை இரண்டும் 1960-70 காலத்திய ஆயுதங்கள். இவை தவிர இதில் பயன்படுத்தும் 122 மி.மீ ராக்கெட்டுகள்.
ஹோவிட்சர்கள் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட வகையின என்று அழைக்கப்படுகின்றன.
M109 அமெரிக்க தயாரிப்பு. நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை அனுப்பும் வல்லமை கொண்டது. சுமார் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இவை 45° கோணத்தில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என்று இலக்கை திசை மாற்றிச் சுடும் வகையினது.
NATO நாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை பழைய ஆயுதங்கள் என்றும் இவற்றின் நவீன வடிவங்கள் வந்துவிட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.
BM 21 – Combat Vehicle Hail என்று பொருள். ரஷ்யா தயாரிப்பான இந்த இயந்திரம் மிக வேகமாக ராக்கெட்டுகளை அனுப்பும் திறன் கொண்டது. துல்லியமான தாக்குதல் செய்வது இதனால் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இடைவிடாமல் குண்டு மழை பொழிய இது உதவும். ஒரு விசையில் 720 கணைகளை ஏவும் வல்லமை பெற்றது. காலம் காலமாக எதிரிகளை பயமுறுத்தும் ஆயுதம்.
இந்த போர்க் கருவிகளை மட்டுமே பாகிஸ்தான் விற்றதாகத் தகவல்கள் உள்ளன. அதே வேளையில் துருக்கியிடம் இருந்து டிரோன்களும், சீனாவிடம் இருந்து பெரும்பான்மையான ஆயுதங்களையும் அது இறக்குமதி செய்துள்ளது. போர் நடந்தால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் அதனிடம் உள்ளன என்பது சரியான வாதம் இல்லை.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ரஷ்யா ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியது மற்றும உக்ரைனைக்கு ஆதரவான ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலை என்பதை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன. OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நமக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நாம் நம்ப முடியாது. #OperationSindoor விபரங்களை பொது வெளியில் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பாக்.கின் பாதிப்பு என்ன என்பது தெரியாமல் இங்கு பலர் நாம் பின் வாங்கி விட்டோம் என்று நினைக்கிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் எந்த வகையில் முடிக்கப்பட்டிருந்தாலும், முடிவுக்கு வந்தது நல்லதுதான்.
இந்திய ராணுவம் தன் வலிமையை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே நிரூபித்து விட்டது. அப்படியே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்தும் பாகிஸ்தானைத் துரத்திவிட்டு நம் வசமாக்கியிருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. காஷ்மீர் நமதே என்பதால், பாஜக அரசுக்கும் அந்த இலக்கு உண்டு.
ஆனால், மத்தியஸ்தம் செய்ய முயன்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏனோ அதை விரும்பாததால் இந்தியாவும் தன் எண்ணத்தை தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளது.
இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததே தவிர, இந்தியா யுத்தத்தை விரும்பும் எண்ணம் கொண்டதல்ல.
எந்த இரு நாடுகள் மோதினாலும்,உலகின் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும் என்பதால், சமரச முயற்சிக்கு மோடியும் இடம் கொடுத்தார். இது அமெரிக்காவின் வெற்றியல்ல. இந்தியாவின் சாத்வீக உணர்வின் அடையாளம்.
அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைத் தாக்கியது இந்தியா. ஆனால், தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் தாக்குதலில் இறங்கியது பாகிஸ்தான். இந்த வித்தியாசம் எல்லா நாடுகளுக்கும் தெரியும்.
சண்டை தொடர்ந்திருந்தால், மீள முடியாத பேரழிவை பாகிஸ்தான் சந்தித்திருக்கும். அதனால்தான், இந்தியாவைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்காவிடம் அந்நாடு கெஞ்சியது.
அமைதியை ஏற்படுத்தி விட்டோம் என்ற பெருமையை அமெரிக்கா விரும்பியது. அந்நாட்டுடனான சுமுக உறவு தொடர்வது இந்தியாவுக்கு நல்லது என்பதால் மோடி அதற்கு இணங்கியிருக்கிறார். எனவே அறிவிக்கப்பட்டது போர் நிறுத்தம்.
தோல்வியில் முடியக் கூடாதே என்ற வீம்பிற்காக, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் கொஞ்சம் தாக்குதலில் இறங்கி அற்ப மகிழ்ச்சி அடைந்தது பாகிஸ்தான். அதற்கும் உடனே பதிலடி தரப்பட்டு விட்டது.
பேச்சு வார்த்தைக்கே லாயக்கற்ற நாடு பாகிஸ்தான். தன்னால் வெல்ல முடியாது என்று தெரிந்தும் மூர்க்கத்தனத்தைக் காட்டுவது அதன் இயல்பு. அதற்கான பலனையும் அது அடைந்து விட்டது.
பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இன்னொரு முறை இந்தியாவுடன் மோதினால் தாங்க மாட்டோம் என்று அதற்கு தெரிந்து விட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது வெற்றிதான்.
சர்வதேச அழுத்தத்துக்கு பணிந்து இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதித்து விட்டதாக செய்யப்படுகிற பிரசாரம் பொறுப்பற்றது.
எதற்கும் பணிய வேண்டிய நிலையில் இந்தியா இல்லை. சிந்து நதி ஒப்பந்த ரத்து அப்படியேதான் உள்ளது. விசா ரத்து திரும்பப் பெறப்படவில்லை. இன்னும் பல விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது. அதன் விளைவுகள் பின்னரே தெரியும்.
உள் நாட்டிலேயே ஒரு மினி பாகிஸ்தான் இருப்பதை பலரது பேச்சும் நடவடிக்கைகளும் உணர்த்தியுள்ளன. மோடி போன்றவர்களின் ஆட்சியில்தான் அத்தகையவர்கள் ஓரளவாவது அடங்கியிருப்பார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவருடைய கை ஓங்கியிருப்பது நல்லது.
தெலுங்கில் – பி.எஸ். சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
அந்த கோலாங்கூல நியாய: அந்த: = பார்வையற்றவன், கோலாங்கூலம் = காளையின் வால்.
துஷ்டர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தால் துன்பத்தில் சிக்க வேண்டி வரும் என்ற நீதியைப் போதிக்கும் நியாயம் இது.
ஒரு வழிப்போக்கன் காதில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி, கையில் கங்கணம், விரல்களுக்கு மோதிரம் எல்லாம் அணிந்துத் தன் உறவினரின் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தான். நடுவழியில் ஒரு காட்டைத் தாண்ட வேண்டி வந்தபோது வழி தவறியதை உணர்ந்து அழத் தொடங்கினான்.
தீயவன் ஒருவன் அவனுடைய அழுகையைக் கேட்டு அங்கு வந்தான். வழிப்போக்கனின் உடலில் இருந்த பொன் நகைகளின் மேல் அவன் பார்வை சென்றது. “ஐயோ ஏன் அழுகிறாய்? என்னோடு வா. உன்னுடைய உறவினரின் வீட்டுக்கு வழி காட்டுகிறேன்” என்று கூறி அவனை நம்பச் செய்தான். சரி என்று கூறிய வழிப்போக்கன் களைப்போடு சற்றுநேரம் கண்ணயர்ந்தான். தீயவன் அவனுடைய கண்களில் விஷ இலைகளின் சாரைப் பிழிந்து அவனைக் குருடனாக்கி நகைகளைத் திருடிச் சென்றான்.
அப்பாவியான அந்த வழிப்போக்கனின் கையில் ஒரு காளை மாட்டின் வாலைக் கொடுத்து, “இதைப் பிடித்துக் கொண்டு மாடு எங்கு போகுமோ நீயும் அதே வழியில் போ. அது உன்னை உறவினரின் வீட்டுக்கு இட்டுச் செல்லும்” என்றான். வழிப்போக்கன் அவனுடைய சொற்களை நம்பி வாலைப் பிடித்துக் கொண்டு மாடு போகும் வழியில் சென்றான்.
காளை அவனை முட்களிலும் புதர்களிலும் இழுத்துச் சென்றது. அந்தக் குருடன் வாலை விடாமல் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தானே தவிர சேர வேண்டிய வீட்டைச் சென்றடையவில்லை. இவ்விதம் தீயவர்களின் அறிவுரையை நம்பினால் ஆபத்து நேரும் என்று கூறும் சந்தர்ப்பங்களில் இந்த நியாயத்தை எடுத்துக் காட்டுவார்கள்.
“நாய் வாலைப் பிடித்துக் கொண்டு கோதாவரியைத் தாண்டுவது போல” என்று சுமார் இதே பொருளைத் தரக் கூடிய பழமொழி ஒன்று தெலுங்கு மொழியில் உண்டு. “அல்ப சகவாசம் பிராண சங்கடம்” என்று கூறுவது போல. அற்பமான சாதனங்கள் நம்மை இலக்கில் சேர்க்காது. அற்பர்களாலும் தீயவர்களாலும் காரிய சாதனை நிகழாது. அதோடுகூட, நம்பிக்கை ஊட்டி அடைக்கலம் அளிக்கும் மனிதனிடம் கள்ளம், கபடம், மோசம், தீய நோக்கம் போன்ற குணங்கள் இருந்தால் அதோகதிதான்.
ஆசை காட்டி மோசம் செய்யும் இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகளுக்குப் பிறரை நம்ப வைக்கும் திறமை பிறவியிலேயே இருக்கும். அவர்களை நம்பி ஏமாந்தவர்களின் கதைகள் பலப்பல. இன்றைக்குச் செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் நம்பிக் கெட்டவர்களின் சம்பவங்களே மிகுந்துள்ளன. பேராசையால் பெட்டிங் ஆப்களில் பணத்தைப் போட்டு ஏமாந்து, தற்கொலை செய்து கொண்டவர்களும், மோசக்காரர்களின் வலையில் சிக்கி கடனில் மூழ்கி அழிந்தவர்களும், வீட்டு மனை வாங்கும் ஆசையால் பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் சினிமாவில் வாய்ப்புக்காக வாழ்க்கையை இழந்தவர்களும் கணக்கற்று உள்ளனர்.
இந்த நியாயம் அப்படிப்பட்டவர்களின் கையில் சிக்காமல் கவனமாக இருக்கச் சொல்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சரணடைந்து உலக மக்களைக் கரை சேர்ப்பவராகவும் நாட்டுக்கும் சனாதன தர்மத்திற்கும் மேலும் புகழை ஈட்டித் தருபவராகவும் விளங்குகிறார் சுவாமி விவேகானந்தர். உயர்ந்த குருமார்களை அடைக்கலம் புகுந்தவர் உயர்வைச் சாதித்தனர். அதற்கு மாறாகத் தீயவர்களை நம்பியவர் ஏமாந்தனர்.
அரசியலில், சுயநலமின்றி தேசபக்தியோடு வாழ்ந்து, வாழ்க்கையை தேசத்திற்கே அர்ப்பணித்த சிறந்த மனிதர்களும் அமைப்புகளும் இந்தியாவில் பல தோன்றின. மறுபுறம் சுயநலத்தோடும் அதிகார தாகத்தோடும் பதவி மோகத்தோடும் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் மனிதர்களும் அமைப்புகளும் இல்லாமல் இல்லை. மத வெறியும் பயங்கர வாதமும் தேசத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று அறிந்தும் அவற்றில் இணைந்து செயல்படும் மனிதர்களும் அமைப்புகளும் உள்ளன.
தவறான சிந்தனையோடும் சாதிக்கச் சாத்தியமில்லாத இலக்குகளோடும் நல்லனவற்றைத் தடுத்தும் தீயனவற்றை இறுகப் பிடித்தும் தேசத்திற்கும் தனி மனிதனுக்கும் கேடு விளைக்கும் வர்க்கங்கள் உள்ளன. அவர்களுடைய கோட்பாடுகளை மெச்சி, அவர்களை நம்பி ஏமாந்தவர்களும் இல்லாமல் இல்லை. மனிதர்களை நம்பி ஏமாந்தது போலவே சில பெரிய தேசங்களை நம்பிச் சிறிய தேசங்கள் ஆபத்தில் சிக்கிய கதைகளையும் கேட்டு வருகிறோம்.
‘அந்த கோலாங்கூல’ நியாயம், “தீயவர்களின் அறிவுரையைக் கேட்காதே. கெட்டவர்களிடம் சென்று உதவி கோராதே” என்று உரக்கச் சொல்கிறது.
OPERATION SINDOORக்குப் பிறகு இப்போது நம் அரசு செய்லபடுத்த வேண்டியது – OPERATION INDOOR
உள்நாட்டு துரோகிகளை களையெடுக்க வேண்டியதை அரசு அமைப்புகள் கவனித்துக் கொள்ளட்டும்!
வெளிவிவகாரத் துறை / வணிகத் துறை இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது –
வருங்காலங்களில், துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகளுக்கான இந்தியர்களின் சுற்றுலாவை பாரதம் நிறுத்த வேண்டும்.
சீனாவின் பொருள்கள் இந்தியாவில் குவிவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்றவை வெளிநாட்டு நிறுவனங்களாயிற்றே என்று, மீஷோ (Mera shopping என்பதன் சுருக்கமாம்) போன்ற உள்நாட்டு ஆப்களில் பொருள்கள் வாங்கத் தொடங்கினேன். அதிலும் மிகவும் தேடி, சைனா பொருள் இல்லையா, எந்த தயாரிப்பு நிறுவனம் அல்லது மார்கெடிங் செய்கிறான் என்றெல்லாம் பார்த்து, விலை சற்று முன்னேபின்னே இருந்தாலும் ஆர்டர் போடுவேன்.
ஆனால் வீட்டுக்கு வரும் பொருள்களைப் பார்த்தால்…தெரிந்து கொண்டது – எல்லாம் சீனா பொருள்கள் தான். சாதாரண பிளாஸ்டிக் பொருள்கள் தான் இந்தியாவில் தயாராகி வருகிறது..
முக்கியமாகப் பார்த்தால், எல்லாமே ஒரே மாதிரியான தயாரிப்பு பொருள்கள் தான்! ஒட்டுமொத்தமாக ரொம்ப ரொம்ப மலிவு விலையில் கண்டெய்னர் கண்டெய்னர்களாக இறக்குமதி செய்து, அதை இந்தியாவில் உள்ள பல்வேறு மார்கெடிங் நிறுவனங்கள் அவர்களின் பெயரை அச்சிட்டு, அல்லது பெயரில்லாமல் தங்கள் நிறுவனத்தின் இன்வாய்ஸில் – ஓரளவு மார்ஜின் வைத்து விற்கிறார்கள்… என்பது புரிந்தது. இதை எப்படி நிறுத்துவது என்பதை அரசு யோசிக்கட்டும்!
ஆத்ம நிர்பார் பாரத் என்பது ஒரு திட்டமாக இருந்தாலும் திடமாக இதனை விரிவு படுத்த வேண்டும். இங்கே சிறு குறுந்தொழில் ஊக்குவிப்புக்கு நிறைய நிதி ஒதுக்குகிறார்கள். MSMEல் இருந்து எனக்கும் நிறைய மெயில்கள் வருகின்றன. கடன் ஊக்குவிப்பு, தொழில்கள் விரிவாக்கம் என… ஆனால் இதனை எத்தனை பேர் சரியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறது.
சாதாரண செல்போன் உதிரி பாகங்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் வகையறாக்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மைக்ரோபோன், வீட்டு உபயோக பொருள்கள், பசை, ஒட்டும் டேப், சிலிகா அடிப்படை பொருள்கள் என எக்கச்சக்கம்… சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுக்கான தேவைகள் இந்திய சந்தையில் அதிகம். நாம் உற்பத்திக்கு இலக்கை நிர்ணயித்து, குறைந்த பணியாளர்களுடன், மலிவு விலையில், இதே போன்ற ஆப்கள் மூலம் அதை மார்கெடிங் – விற்பனை செய்யலாம். நியாயமான லாபமும் பெறலாம் என்ற சிந்தனை நம் இளைய தலைமுறையிடம் வளரட்டும்! ஒரு பொருள் சந்தைக்கு வரும்போதே அதை எப்படி நாமும் மலிவாகத் தயாரித்து போட்டியாளர் ஆக வேண்டும் என்பதை துடிப்புடன் யோசிப்போமே!
அதற்கு சாதாரண தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளை ஐஐடி போன்றவை அரசுத் துறைகளுடன் இணைந்து அளித்து, பயிற்சியும் முயற்சியும் மேற்கொள்ளட்டும்!
அதாவது – தொழில்நுட்பம், முதலீடு, சந்தை வாய்ப்பு இவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, உற்பத்தியாளரை உருவாக்கும் பணியில் அரசுத் துறைகள் இன்னும் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு, தற்சார்பை உருவாக்க வேண்டும் என்பது நம் குறிக்கோள்!
நாமே உற்பத்தி! நாமே சந்தை! மீண்டும் ஒரு சுதேசியச் சிந்தனையை பள்ளிப் பிள்ளைகளில் இருந்து உரமிட்டு வளர்ப்போமே!
ஆபரேஷன் சிந்தூர் :- 90 நிமிடங்களில் பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிவைத்து தாக்கியது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துல்லிய, முன்னெச்சரிக்கை தாக்குதல் பாகிஸ்தான் விமானப் படையின் பலத்தை, தேசிய பாதுகாப்பின் ஒருங்கிணைப்பை, எதிர் தாக்குதலுக்கான தயார் நிலையை பலவீனமாக்கியதோடு, ராணுவத்தின் உறுதியை குலைத்தது.
1. நூர் கான் (ராவல்பிண்டி) :
இஸ்லாமாபாத்திற்கு அருகேயுள்ள இந்த விமான தளத்திலிருந்து தான் வான் தாக்குதல் மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், ராணுவ தளவாடங்கள் போக்குவரத்து, மிக முக்கிய நபர்களின் நடமாட்டம் ஆகியவை இந்த விமான தளத்தை பலவீனமாகியதால் தடைபட்டது.
2. ரஃபிக்கி விமான தளம் (பஞ்சாப்) :-
மத்திய பஞ்சாபிலிலுள்ள இந்த விமானதளத்தின் ஓடுதளத்தை இந்திய விமானங்கள் தாக்கி அழித்ததால் இந்த விமானதளத்திலிருந்து எதிர்வினையாற்ற முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
3. முரித் விமான தளம் (சக்வால் மாவட்டம்)
9000 அடி ஓடுபாதையை கொண்ட இந்த விமானதளத்தை தாக்கியதன் மூலம் ஆளில்லா வான் வழி தாக்குதலை மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தானின் திட்டம் தவிடு பொடியாகியது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த விமானதளத்தை சீர்செய்ய பல காலம் பிடிக்கும்.
4. சுக்கூர் விமான தளம் (சிந்து) :-
சமீபத்தில் திறக்கப்பட்ட விமானதளத்திலிருந்து தான் 19 படைப்பிரிவு மற்றும் செயல்பாட்டு மாற்றப் பிரிவையும் கொண்டுள்ள இந்த தளத்திலிருந்து தான் F-16 A/B பிளாக் 15 ADF விமானங்களை பாகிஸ்தான் இயக்குகிறது. இந்த தளத்தை இந்தியா தாக்கியதால் தெற்கு திசையிலிருந்து பாகிஸ்தானை தாக்க முடியவில்லை. மேலும் ஆயுதங்களின் போக்குவரத்து தடைபட்டது.
5. சியால்கோட் விமான தளம் (கிழக்கு பஞ்சாப்)
இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள முதன்மையாக வீழ்த்தப்பட்ட விமானதளம் இது. இந்தியாவின் ஜம்மு மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஏவுகணைகளை செலுத்தி வீழ்த்த வியூகம் வகுத்த நிலையில், இந்திய விமானப்படை சாகசம் புரிந்து சியால் கோட் விமான தளத்தை பதம் பார்த்தது.
6. பஸ்ரூர் வானூர்தி ஓடுபாதை : (பஞ்சாப்)
சிறியதாக இருந்தாலும், அவசரகால நிலைக்காக உருவாக்கப்பட்ட ஓடுபாதை இது. அதை முற்றிலுமாக இந்திய விமான படை தாக்கியதால் செயலிழந்து போனது.
7. சுனியன் தொலைக் கண்டுணர்வு தளம் (Radar/ Support Installation)
இந்த தளத்தை தாக்கியதால் வான்வெளி கண்காணிப்பை தொடர முடியாமல் தவித்தது பாகிஸ்தான். ஆகையால் இந்திய விமான வான் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே கணித்து, எச்சரிக்கை விடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தாக்க முடிந்தது.
8. சர்கோதா விமான தளம் : –
இந்த விமான தளத்தின் மீதான தாக்குதல் மிகவும் முக்கியமானது. போர்திறஞ்சார்ந்தது. இங்கு தான் வான் வெளி தாக்குதலுக்கான பல்வேறு பயிற்சிகள், முன்னெடுப்புகள், முக்கிய தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதல்களுக்கான கட்டமைப்பை இந்தியா தகர்த்தது.
9. ஸ்கார்டு விமான தளம் (கில்கிட் – பால்டிஸ்தான்)
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் உள்ள விமான தளம் இது. இந்திய எல்லைக்கருகே அமைந்துள்ள இந்த இடத்தை இந்திய விமானப்படைகள் நிர்மூலமாக்கியதோடு இல்லாமல், இமயமலையில், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள வான்வெளி செயல்பாட்டு இணைப்பை துண்டித்தது. இந்த நடவ்டிக்கையானால் அப்பகுதியில் இந்தியா பலம் பெற்றது.
10. போலாரி வான் தளம் (கராச்சி).
வான் வழி தாக்குதல் மற்றும் கடல் வழித்தாக்குதலுக்கு பயன்படும் இந்த தளத்தை தாக்கியதன் மூலம் பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளை முறியடித்தது இந்திய விமான படை. கடல் வழி தாக்குதலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
11. ஜகோபாபாத் வான் தளம் (சிந்து-பலுச்சிஸ்தான்)
இந்த தளத்தின் மீதான தாக்குதலால் மேற்கு பாகிஸ்தானின் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மேற்கண்ட விரைவான நடவடிக்கை மற்றும் தாக்குதல்கள் தான் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகள். நாங்கள் பலசாலிகள் என்று விமானப்படையின் பலத்தை தம்பட்டம் அடித்து கொண்டிருந்த பாகிஸ்தானின் குகைகளுக்குளே சிங்கம் போல் நுழைந்து அழித்து ஒழித்து சாதித்தது இந்திய விமானப்படை. தொலைகண்டுணர்வு தளங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை தளங்கள் என பாகிஸ்தானின் வான் வெளி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது இந்திய விமானப்படை. இன்றும் எதிர்காலத்திலும் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தானின் விமானப் படை.
இந்தியாவின் திறன், தொழில்நுட்பம், நவீன ஆயுதங்கள், கருவிகள், திட்டமிடுதல் ஆகிய அனைத்தும் ஆசியாவின் மிகப்பெரிய சக்தி இந்தியா என்பதை உணர்த்தியுள்ளது. இந்தியாவை சீண்டினால் அதன் விளைவுகள் எதிரிகளை அழித்து விடும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று தாக்குதலை இந்தியா நிறுத்தியிருந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கினாலோ, பயங்கரவாதிகளுக்கு துணை புரிந்தாலோ, அது இந்தியாவின் மீதான போர் என்பதாக தான் கருதப்படும் என்றும் தீவிர தாக்குதலை இந்தியா மேற்கொள்ளும் என்று இந்தியா குறிப்பிட்டிருப்பது தற்போதைய நிலை என்பது புரிந்துணர்வு தான் போர் நிறுத்தம் அல்ல என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.
வாழ்க இந்தியா! வெல்க இந்தியா!
நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி.
Col Sofia Qureshi and Wing Commander Wyomilka Singh from the Army and Air Force are now household names. What presence! Whoever conceptualists this team with Foreogn Secretary Vikram Misri at the helm and Commodore Raghu Nair too was spot on, like the nine strikes on the terror camps in Pakistan on 7th May,2025. It was a strategic Operation Sindhoor with young women officers at the Press Meets with a secular finesse.
Modi’s New India is distinct and different. The enemy ‘now’ knows that cross border terrorist misadventures will not be met with just strong statements of intent but firm and decisive action. After 2016-Surgical Strikes and 2019- Balakote Strike- Pahalgam did not get a similar response. Operation Sindhoor was more focused and on a wider scale to terminate 100 plus terriers literally attached as regiment of the Pakistan Army.
The two young ladies sat and stood tall as they read out vernacular and English versions of the Armed Forces actions on the ground. Just as our Operation was ‘measured and non excalatory’ the read outs were pointed and professional with not a shred of any jingoistic element. It was technical but sharp shooting as the air action was.
While Pakistani briefings were peddling lies as ‘ 5 Rafles downed’ ( proof from their Defence Minister was to refer to wild and imaginary social media posts). And destruction of Airbases in Haryana, Punjab ‘ demolished as false with contemporary photographic evidence from the two women’ made secure and joyful viewing. One felt proud to be Indian!
Operation Sindhoor is a proud moment in India’s military history. It is an ongoing exercise notwithstanding the ‘understanding’ over ‘stoppage of firing’ while the Directors General of Medical Operations engage in interaction come 12th May,2025 at 12 noon.
We have not seen the last of these two ladies yet. Pakistan can never ever be trusted to keep its word. We have lived with their everlasting perfidy for decades on end. The breaches in ‘understanding’ within hours of its going Live was typical of that nation. We were therefore ready not complacent.
There is so much to wax eloquent about our Armed Forces’ unified action. Operation Sindhoor was no one-off strike. It is unique and hugely impactful. Bharat put Pakistan in its isolated place and space. That the terrorists are part of the Pakistan army has been exposed for the world to see.And the two girls on stage every day added to the uniqueness of a resonating New India!
A poignant sight that shall remain etched in our memories for ever to come. Bravo ladies! You have given us more to cheer than just the efficacious Air Defence Systems and the accuracy of our missives.
In such an evolving scenario with uncertainty writ large with Pakistan’s untrustworthy state with a weak government and rogue army at the helm under a Mad Maulana, we in India owe it to our Armed Forces and two ladies symbolizing it, to feel safe and secure!
அமெரிக்காவின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக இந்தியத் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், சொன்ன வாக்கை மீறி இன்று மாலை பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து நடத்தியது. இதை அடுத்து இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும். – இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் சமூகத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
தாக்குதல் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறீத் தாக்குதல் நடத்தியது, இது இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ ரீதியான தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்குப் பிறகு முடிவுக்கு வரும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் கெஞ்சியதன் அடிப்படையில் அமைதி ஏற்படுத்தும் விதமாக, தாக்குதல்களை இந்தியா நிறுத்திய நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் தமது பதிவில் “சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
ராணுவ ந்டவடிக்கையை நிறுத்தும் அறிவிப்புகள் வெளியான அடுத்த 3 மணி நேரத்துக்குள், ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொட்ர்ந்தது. கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதாகத் தகவல் வெளியானது.
பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. ஜம்மு, ரியாஷி ,ஸ்ரீநகர், ரஜோரி, கந்தர்பால் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையக,ம் ஆகியவற்றையும் பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. ஆர்எஸ்புரா பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால், உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அதேபோல் குஜராத்தின் கட்ச் பகுதியில் பல ட்ரோன்கள் வந்துள்ளது. இதில் 3 டுரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாபின் மோகா மாவட்டத்திலும் ட்ரோன் தாக்குதல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பசில்கா, பாட்டியாலாவிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறிய நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியபோது, இன்று மாலை போடப்பட்ட தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை பாகிஸ்தான் மீறியது. அதற்கு தகுந்த பதிலடியை ராணுவம் கொடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி முன்னேற்பாடுகள்!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணியளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம் மிதுனம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியது முக்கியமாகும். விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வர் குரு பெயர்ச்சி நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தருதல் மற்றும் குருவித்துறை முதல் குருபகவான் கோவில் வரை மற்றும் மதுரை மாவட்ட எல்லையான சித்தாதிபுரம் முதல் கோவில் வரை அனைத்து பகுதிகளிலும் குடிநீர் ஏற்பாடுகள் அமைத்தல் காவல் துறையினருக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் வகையில் நிழல் செட்டுகள் அமைத்தல் கோவில் பகுதியில் தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் முக்கியமாக கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல் மருத்துவ உதவிகள் அவசரகால மருத்துவ வானங்களை நிறுத்துதல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு பகவான் சந்நிதி வரை தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோருடன் எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.
சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோவிலில்…
மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதசாமி ஆலயத்தில் மே.11.ம் தேதி மாலை 4.30..மணிக்கு குருப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலில் ஸ்தல நாதர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், சனி,ராகு குருபகவான் இணைந்த புனித திருக்கோயில் ஆகும். இக் கோயிலில் பல ஆண்டுகளாக, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெறுகிறது.
மே.11..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு அபிஷேகமும், நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை , தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில், கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் மதுரை அண்ணாநகர் தாசில்தார் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் மே.11..ம் தேதி ஞாயிறு காலை 9.. மணிக்கு குருப் பிரீத்தி ஹோமம், நவகிரக ஹோமம், அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெறும். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்
ஆண்டாள் சூடிய மாலையை கள்ளழகருக்குச் சாற்றுவது ஒரு பாரம்பரிய வழிபாடு. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அழகருக்கு சாற்றுவது வழக்கம்.
இந்த ஆண்டு, மே 12-ம் தேதி அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக, முந்தைய நாளான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து மாலை கொண்டு செல்லப்பட்டது.
இந்த வழக்கத்தின் படி, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கள்ளழகருக்கு சாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, அழகருக்கு சாற்றுவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அழகருக்கு மாலை சூட்டி கொடுக்கும் ஆண்டாளுக்கு, அழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளும் போது அணிந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும்,
பதற்றத்தைத் தணிக்க நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில், அமைதியைப் பேண இந்தியா முன் வந்ததாகவும், அதன் படி, இன்று மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் இரு தரப்பிலும் நிறுத்தப்படும் என்றும் முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
இந்திய பாகிஸ்தான் இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவியது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதே நேரம் பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைக் குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து நிலை குலைந்த பாகிஸ்தான், இரண்டு நாட்களாகவே இந்தியா தாக்குதலை நிறுத்த வேண்டும், அதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், இந்தியாவை தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கெஞ்சத் தொடங்கியது.
இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை வெளியானது. மேலும் அமெரிக்க மற்றும் சீன வெளியுறவு துறை செயலர், செய்தித் தொடர்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உதவுவதாகக் கூறினர். தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா பேசியதாகவும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிப்பது தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய அரசுஅதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், உளவுப்பிரிவு தலைவர்கள் அனைவருடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். மேலும், தற்போது எழுந்துள்ள சூழல்கள் குறித்தும், இதனை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வருங்காலத்தில் இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் அனைத்தும் போராகவே கருதப்பட்டு, அதற்கு ஏற்ப பதிலடி கொடுக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அப்போதே, இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்திக் கொள்ளப்படலாம் என்று அனுமானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை பாரத வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இரு தரப்பு தாக்குதல்கள் நிறுத்தம் பற்றி அறிவித்தார்.
அதன்படி, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்துப் பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்திக் கொள்வது என இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.