Home Blog Page 127

பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக: அண்ணாமலை காட்டம்!

annamalai bjp tn leader - 2026

பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளியுள்ளது, டிராமா மாடல் திமுக என்று, பாஜக., தமிழக மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த, ASER (Annual Status of Education Report – Rural) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, தமிழகம் பல பிரிவுகளில், நாட்டின் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, விளம்பரம் செய்வதில் மட்டுமே நம்பர் ஒண்ணாக இருக்கும் டிராமா மாடல் திமுக அரசு, தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து கூறி வருவதற்கு நேர்மாறாக, இந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதும், பாத்திரங்களைக் கழுவ வைப்பதும், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல பயன்படுத்துவதும் எனத் தொடர்ந்து மிகவும் தரக்குறைவான முறையில் நடத்தி வரும் பள்ளிக் கல்வித் துறையின் செயலிழந்த தன்மையால், தமிழகப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ASER அறிக்கை தமிழகத்தில், 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட பள்ளிக் ஆய்வின்படி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் குறிப்பிடத்தக்க புள்ளி விவரங்கள் பின்வருமாறு.

கடந்த 2018 ஆம் ஆண்டு, 59.9% பள்ளிகளில், மாணவர்களுக்குப் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் தற்போது, மாணவர் ஆசிரியர் விகிதத்தில், தமிழகத்தில் வெறும் 51.8% பள்ளிகளாகக் குறைந்து, இந்தியாவிலேயே கடைசி வரிசையில் இருக்கிறது. குஜராத்தில் 78.7%, உத்திரப்பிரதேசத்தில் 64.2%, மகாராஷ்டிராவில் 76.5% என, அனைத்து மாநிலங்களுமே, தமிழகத்தை விட அதிகமான மாணவர் ஆசிரியர் விகிதத்தைப் பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் 68.7% மட்டுமே. 2022ஆம் ஆண்டு 75.7% ஆக இருந்த சேர்க்கை 2 ஆண்டுகளில் 7 சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இரண்டாம் வகுப்பு பாடத்திட்டம் – எழுத்து தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 13.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், 27.9%, குஜராத்தில் 24.7%, மகாராஷ்டிராவில், 37%, பீகாரில், 20.1% என, பல வட இந்திய மாநிலங்களும், தமிழகத்தை விட முன்னணியில் இருக்கின்றன.

தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர்.

குஜராத்தில் இது 44.6%, மகாராஷ்டிராவில் 57.9%, உத்திரப் பிரதேசத்தில் 50.5%, பீகாரில் 41.2% என, ஐந்தாம் வகுப்பு கல்வித் தரத்திலும், வட இந்திய மாநிலங்களை விட பின்தங்கி இருக்கிறது தமிழகம்.

தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 62.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். குஜராத்தில் இது 74.7%, மகாராஷ்டிராவில் 70.9%, உத்திரப் பிரதேசத்தில் 67.3%, பீகாரில் 71.7% ஆக இருக்கிறது.

தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 27.6% மாணவர்களே கணக்குப் பாடத்தில், கழித்தல் பற்றித் தெரிந்துள்ளனர். உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் 31.6%, பீகாரில் 28.2% ஆகவும் இந்த விகிதம் இருக்கிறது.

தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 20.2% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 31.8% மாணவர்களுக்கும், மாணவர்களுக்கும், 26.1% மகாராஷ்டிராவில் பீகாரில் 32.5% மாணவர்களுக்கும், வகுத்தல் கணக்கு தெரிந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37.8% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 45.6% மாணவர்களுக்கும், பீகாரில் 62% மாணவர்களுக்கும் வகுத்தல் கணக்கு தெரிந்திருக்கிறது.

பள்ளி அடிப்படை வசதிகள்

அரசுப் பள்ளிகளில், 77.7% பள்ளிகளில் மட்டுமே, பயன்படுத்தத் தகுந்த குடிநீர் வசதி உள்ளது என்றும், 81.4% பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன என்றும், 77.5% பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்குத் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 64.3% பள்ளிகளில் மட்டுமே, நூலக வசதியை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும், வெறும் 58.7% பள்ளிகளில் மட்டுமே, கணினி வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தையும், நாட்டையும் அடுத்த ஐம்பது ஆணடுகளுக்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவிருப்பது, இன்று பள்ளியில் பயிலும் நம் குழந்தைகளே. அவர்களுக்கான கற்றல் அடித்தளம் எத்தனை வலிமையாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்?

ஒரு திறமையான, தகுதியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சரை பள்ளிக் கல்வித்துறைக்கு நியமித்திருந்தால்தான் இவை எல்லாம் சாத்தியப்பட்டிருக்கும். ஆனால், முதலமைச்சரின் நண்பரின் மகன், முதலமைச்சர் மகனின் ரசிகர் மன்றத் தலைவர் என்பவை எல்லாம் தகுதிகள் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக்கியதன் விளைவு, தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

உண்மையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறையின் முக்கியத்துவம் தெரிந்துதான் செயல்படுகிறாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சரிசெய்யவில்லை. அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் செயல்பாடுகள் இல்லை. பள்ளி மாணவர்களுக்குப் புதுமையான கல்வி முறைகளையோ, திட்டங்களையோ அறிமுகப்படுத்தவில்லை. இவை எதையுமே செய்யாமல், நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பொய்யாகப் பீற்றிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

ஆண்டாண்டு காலமாக, எதற்கெடுத்தாலும் பீகார் மாநிலத்தையும், பீகார் மக்களையும், பின்தங்கி இருப்பதாகக் குறை கூறி அரசியல் நடத்தி வந்த திமுக, இன்று இந்த அறிக்கையின்படி, பள்ளிக் கல்வித் துறையின் பல புள்ளிகளில், பீகார் மாநிலம், தமிழகத்தை விட முன்னேறியிருப்பதைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

திமுக அரசு மற்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்தச் செயல்படா போக்கு தொடருமேயானால், அடுத்த இருபது வருடங்களில், தமிழகம் நமது நாட்டில், கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக வரிசைப் படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”

யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

மஹாகும்பமேளா 2025க்கு வந்திருக்கும்  வெளிநாட்டு பக்தர்கள் யோகி அரசின் கூட்ட மேலாண்மையை பாராட்டுவதாகவும், தாங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

மஹாகும்பமேளா பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப் பட்டதாகவும், தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய உத்தரவ் பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான பக்தர்கள் புனித ஸ்நானத்திற்காக திரிவேணி சங்கமத்தில் கூடி, பரவலான பாராட்டைப் பெறுகிறார்கள்.

2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் பிரம்மாண்டமான மற்றும் தடையற்ற நிர்வாகம் வெளிநாட்டு பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு செய்த முன்மாதிரியான ஏற்பாடுகள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. புனித நீராடலுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் நன்கு திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற கூட்ட மேலாண்மையைப் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாயைச் சேர்ந்த ஒரு பயணி, “இந்த ஆன்மீக சங்கமத்திற்காக இவ்வளவு பெரிய கூட்டம் எவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஏராளமான அளவில் மக்கள் வருகையை எதிர்பார்த்து உள்கட்டமைப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் எல்லாவற்றையும் எவ்வளவு சீராகக் கையாளுகிறது என்பது நம்ப முடியாதது” என்று கூறி தனது ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பக்தர்களிடையே ஒத்துழைப்பு உணர்வும் இந்த நிகழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், மக்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற வகையில் சிறப்பாக உதவுகிறார்கள்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த மரியா, 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளாவைப் பார்க்க வந்திருந்ததாகவும், அந்த அனுபவம் தனக்கு மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதை மீண்டும் காணத் திரும்பியதாகவும் பகிர்ந்து கொண்டார். 

“இது என் வாழ்க்கையின் மிகவும் மறக்கமுடியாத அனுபவம். கடந்த 26 ஆண்டுகளாக நான் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்கு வருகிறேன், அதன் கலாச்சாரத்தை நான் விரும்புகிறேன். காவல்துறை கூட்டத்தை நிர்வகிக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது,” என்றார் அவர். 

ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த ஜூலியா, இந்த ஏற்பாடுகளைப் பாராட்டினார். “மஹாகும்பமேளாவுக்கு இது எங்கள் முதல் முறை பயணம், இங்குள்ள சூழலால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். இங்குள்ள சூழல் பாதுகாப்பானது மற்றும் ஆன்மீகமானது. நிர்வாகம் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்த விதம் நம்பமுடியாதது, ஆச்சரியகரமானது” என்று அவர் கூறினார்.

கஜகஸ்தானின் அல்மாட்டியைச் சேர்ந்த அலீனா, தனது பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், ‘எனது கனவு நனவானது’ என்று ஆச்சரியத்துடன் விவரித்தார். “கும்பமேளாவில் கலந்துகொள்வது எனது கனவு. பகவான் சிவனின் அருளால், நான் இங்கே இருக்கிறேன், இந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது,” என்றார் அவர்.

பஞ்சாபின் பதான்கோட்டைச் சேர்ந்த அஞ்சு, யாத்ரீகர்களுக்கு உதவுவதில் நிர்வாகத்தின் முயற்சிகளை எடுத்துரைத்தார். “அதிகாரிகள் பக்தர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள். வதந்திகளில் நாம் கவனம் செலுத்தக்கூடாது,” என்று அவர் அறிவுறுத்தினார்.

பயணிகளுக்கான பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்த, அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூட்டத்தை நிர்வகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிக்கவும், எந்தவொரு அவசர நிலையிலும் விரைவாகச் சென்று உதவவும் முடியும்.

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: கபி முஷ்டி ந்யாய:

samskrita nyaya - 2026

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 48  – கபி முஷ்டி ந்யாய:

தெலுங்கில் – பி,எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

கபி முஷ்டி ந்யாய: – கபி – குரங்கு, முஷ்டி – கை முஷ்டி 
குரங்கு பானையில் கை விட்டதைப் போல..

நம் முனிவர்கள் இயற்கையை ஆழ்ந்து கவனித்து, ஆச்சர்யப்படும் நியாயங்கள் பலவற்றை அளித்துள்ளார்கள். அவற்றில் இந்த ‘கபி முஷ்டி ந்யாயமும்’ ஒன்று. இது   தொடர்பான கதை ஒன்று உள்ளது.

குரங்கு ஒன்று இருந்தது. ஒரு ஜாடியில் சுவைமிக்க உணவைப் பார்த்து, தின்ன ஆசை கொண்டது. அந்த ஜாடியின் வாய் மிகக் குறுகியது. குரங்கு தன் கையை அதில் நுழைத்து    உணவைக் கையில் எடுத்து, இறுக்கப் பிடித்துக் கொண்டது. குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியவில்லை. இழுத்துப் பார்த்தது. கையில் இருக்கும் உணவை உதறி விட்டால், கை வெளியே வந்து விடும். ஆனால் அந்த அறிவு குரங்குக்கு இல்லை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டு, ‘கபி முஷ்டி’ ந்யாயத்தை சான்றோர் அளித்தனர். இந்தக் கதையில் ஒரு சிறந்த கருத்து உள்ளது. குரங்கு, உணவு அல்லது தானியத்தைத் தின்ன ஆசை கொண்டு, கைப்பிடியை உதறாததால், கையை வெளியில் எடுக்க முடியாமல் இன்னலுக்கு உள்ளானது. அதே போல், ஆசை காரணமாக செல்வத்தைத் துறக்க இயலாமல், இன்னல் படுகின்றனர் மனிதர்கள் என்பது செய்தி.

அந்த கூஜா அல்லது ஜாடியின் சிறிய வாயில் கையை நுழைத்த போது இல்லாத தொல்லை, கையை வெளியில் இழுக்கும் போது ஏன் ஏற்பட்டது? அந்த வானரம், அந்த கூஜாவில்தான் குறை இருக்கிறது என்று எண்ணி, அதனை நிந்தித்தது. இதுவே இந்த நியாயத்தில் உள்ள சிறப்பு.

குரங்கு கூஜாவின் மேல் குறையை ஏற்றியது போலவே, நம் போராசை காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு, நாம் பிறரைக் குறை கூறுகிறோம். நம்  குறைகளை நாம் உணர்வதில்லை. இதுவே ‘கபி முஷ்டி’ ந்யாயம்’.

சுக போகங்கள், உறவுகள் என்று எதைப் பிடித்துக் கொண்டாலும் துயரமே மிஞ்சும். துறந்து விட்டால் மோட்சம். இதுவே இந்த கதையின் உட்பொருள். பிடிப்பு, விடுப்பு என்ற இரண்டையும் சார்ந்தே வாழ்க்கை உள்ளது.

ஒன்றைப் பெற வேண்டும் என்றால், ஒன்றை விட வேண்டும். வாழ்க்கையில் பிடித்துக் கொள்ள வேண்டியவை சில உண்டு. துறக்க வேண்டியவை சில உண்டு. இதைக் கூறும் நியாயமே இது.

விட வேண்டியவற்றை விட்டு விட்டால் துன்பம் நீங்கி விடும். குரங்கின் கதையில் கைப்பிடியின் அளவு பெரியதானதால் இன்னல் ஏற்பட்டது. வெளியில் இருந்து எஜமானி கம்பால் அடித்துத் துன்புறுத்தினாலும், அது கைப்பிடியை விடவில்லை. பாவம். விடத் தெரியவில்லை. விட விரும்பவில்லை. வாழ்க்கையில் இதனால்தான் மனிதனுக்கு கஷ்டம் வருகிறது. ஏதேதோ முட்டாள்தனமான யோசனைகள், விருப்பு, வெறுப்பு, உறவு பகை, இவற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டால், கஷ்டப்படுவார்கள் என்பது செய்தி.

வானரம் என்றால் சஞ்சலமான மனம். அது, பார்க்கும் பொருளின் மேல் எல்லாம் ஆசைப்பட்டு அதைத் தொடவும், சொந்தம் கொண்டாடவும் நினைக்கிறது. அதனால் இக்கட்டில் சிக்கித் தவிக்கிறது.

பர்த்ருஹரி, மனத்தின் இயல்புக் கிரமத்தை விவரிக்கையில், ‘சிருங்கார சதகத்தில்’ இவ்விதம் கூறுகிறார்.

ஸம்ருதா பவதி தாபாய,
த்ருஷ்டா சோன்மாதகாரிணீ
ஸம்ருஷ்டா பவதி மோதாய…

பொருள் – எண்ணிய உடனே தவிப்பை ஏற்படுத்தும். பார்த்தவுடனே பைத்தியம் பிடிக்கச் செய்யும். தொட்டவுடன் மோகத்தை ஏற்படுத்தும்… என்று இந்த நியாயத்தின் கதைக்கு விளக்கம் கூறுவது போல் உள்ளது இந்த சுலோகம்.

பிடித்துக் கொண்டால் பந்தம். விட்டு விட்டால் மோட்சம். இதுவே இந்த நியாயம் கூறும் சூட்சும செய்தி. விட்டு விட வேண்டியவர்களை விடாமல் இருந்ததால் எத்தனை நஷ்டம் ஏற்பட்டது என்று கூறும் சம்பவங்கள் இராமாயண, மகாபாரதத்தில் பல உள்ளன.

புத்திரப் பிரேமை

துரியோதனன் பிறந்த உடனே, கழுதை கத்துவது போல அழுதான். அதைக் கேட்ட கழுதைகளும் நரிகளும் பெரிதாக ஊளையிட்டன. சில அபசகுனங்கள் தென்பட்டன. அந்த தீய சகுனங்களைப் பார்த்து விதுரரும், பிறரும், ‘இந்த மூத்த புதல்வன் பிறந்த உடனே அபசகுனங்கள் காணப்படுகின்றன. உனக்கும் உன் குலத்திற்கும் அமைதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த ஒரு மகனைத் துறந்து விடு. இன்னும் உனக்கு தொண்ணூற்று ஒன்பது புதல்வர்கள் பிறப்பார்கள்’ என்று எடுத்துச் சொன்னாலும் திருதராஷ்டிர மகாராஜா கேட்கவில்லை. புத்திரப் பிரேமை என்ற மோகத்தின் காரணனமாக, விட வேண்டியை குறித்து விதுரன் கூறிய இந்த சுலோகம் புகழ் பெற்றது.

த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
க்ராமம் ஜனபதஸ்யார்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத் ||

(மகாபாரதம் – ஆதிபர்வம் – 114/38)

பொருள் – குலத்தின் நலனுக்காக ஒரு மனிதனைத் துறக்க வேண்டும். கிராமத்தின் நலனுக்காக குலத்தை விட்டு விட வேண்டும். தேசத்தின் நலனுக்காக கிராமத்தையே துறக்க வேண்டும். தன் ஆத்ம நலனுக்காக பூமியையே துறக்க வேண்டும். ஆனால் மோகம் அத்தனை எளிதாக விடக் கூடியதா?

காமாசுரன்

சீதா தேவியை சிறையில் அடைத்த ராவணனுக்குப் பலர் அறிவுரை கூறினர். ‘தவறு செய்கிறாய். அந்த மகா சாத்வியை விட்ட விடு’ என்றனர். அவன் கேட்கவில்லை. கண் முன்னால் படைத் தளபதிகளும் அன்பான சகோதரர்களும், உயிருக்குயிரான புதல்வர்களும் மாண்ட போதிலும், அவனுடைய கண்களை மூடிய காமப் புரை விலகவில்லை.

ராம பாணத்தால் அடிபட்டு வீழ்ந்த ராவணனின் அருகில் வந்த மனைவி மண்டோதரி, ‘சீதாவை விட்டு, ராமனோடு நட்பு கொள் என்று நான் கூறிய சொற்களைக் கேட்டகாமல் போனாயே’ என்று அழுது புலம்பினாள்.

‘சீதையின் மேல் நீ கொண்ட மோகமே உன்னைக் கொன்றது. உண்மையில் அந்த பதிவிரதையின் தவம் உன்னை எரித்தது’ என்று புலம்பினாள்.

‘கபி முஷ்டி’ ந்யாயத்திற்கு எடுத்துக்காட்டாக, விட்டுக் கொடுக்காத பிடிவாதமான காம, மோக அசுரர்களின் கதைகளை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். இவற்றின் செய்தி –புலனின்பங்களும், தளைகளும் பிடித்துக் கொண்டால் துக்கம், விடாவிட்டால் அழிவு, விட்டால் மோட்சம்.

பிடிப்பும் விடுப்பும்!

ஸ்ரீசைலம் காடுகளில் ஒரு சாது வசித்தார். தன்னை தேடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கூறி உதவினார். ஒரு நாள் அவருடைய  தரிசனத்திற்காக ஒரு ஜமீன்தாரின் மனைவி வந்தாள். தன் கணவனின் உடல்நலக் குறைவு பற்றிக் கவலையோடு கூறினாள்.

‘அவருக்கு நுரையீரல் கோளாறு. மருத்துவர்கள் சிகிச்சை செய்கின்றனர். சிக்கல் என்னவென்றால், ஜமீன்தார் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். அவரால் அதை விட முடியவில்லை. மருத்துவர்கள் எடுத்துரைத்தாலும், தீய பழக்கம் என்னை விடாமல் பிடித்துக் கொண்டது என்கிறார்’ என்று வருத்ததோடு கூறி அறிவுரை கேட்டாள். 

சாது சற்று யோசித்து, அவரை அழைத்து வரச் சொன்னார். மறு நாள் காலை ஜமீந்தார் வரும் நேரத்தில், அந்த சாது, ஆசிரம வாயிலில்  இருந்த ஒரு தூணை இறுகப் பிடித்து  அணைத்தவாறு நின்றிருந்தார்.

‘ஜமீந்தார் அவர்களே, உங்களுக்கு வரவேற்பு கூறக் கூட என்னால் முடியவில்லை.   இந்தத் தூண் என்னைப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறது’ என்றார் சாது.

ஜமீந்தாருக்கு வியப்பு ஏற்பட்டது. ‘சுவாமி, அது எப்படி சாத்தியம்? நீங்கள் அல்லவா   தூணைப் பிடித்து அணைத்துக் கொண்டுள்ளீர்கள்?” என்று கேட்டார்.

அதைக் கேட்டு சாது சிரித்து, ‘ஜமீந்தார் அவர்களே, உங்களை புகைப் பழக்கம் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது என்று நீங்கள் கூறினீர்களே… அதே போலத்தான் இதுவும்’ என்றார்.

அந்த கிண்டலைப் புரிந்து கொண்ட ஜமீந்தார், புகைப் பழக்கத்தை விட்டார். உடல் நலத்தைப் பெற்றார். 

ஹைந்தவ சங்கராவம்: சனாதன தர்ம மீட்பின் விடிவெள்ளி!

telangana haindava sangaravam - 2026

சங்கொலியில் இருந்து லட்சியத்தை நோக்கி…

தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
 

அண்மையில் தெலுங்கு மாநிலத்தில் ஹைந்தவ சங்கராவம் என, ‘ஹிந்து சங்கராவம்’ என்ற பெயரில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு, ஹிந்துக்களின் ஒற்றுமையை அறிவித்தார்கள். அதில் பங்குகொண்ட பேச்சாளர்களும் பிரமுகர்களும் அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். அதனை ஒரு வெற்றிகரமான, மகிழ்வான நிகழ்வாக   வர்ணிக்கலாம்.

இதன் பின்னணியில் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஆலயங்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் கைகளுக்கு ஏன் சென்றது? அந்த நேரத்தில் அரசாங்கம் அன்றி வேறு யாரும் கோவில்களை நிர்வாகம் செய்ய இயலாமல் போனார்களா? மீண்டும் அந்தக் குறைகள் எதுவும் எழாமல் தனியார் அமைப்புகள் நிர்வாகம் செய்ய இயலுமா?

அபரிமிதமான செல்வமும், சொத்துக்களும் கொண்ட நம் கோவில்களை, ‘சனாதன போர்டு’ ஒன்று ஏற்பட்டு சரியாக நிர்வாகம் செய்யக் கூடிய நிலை உள்ளதா? ஊழல் காரர்கள் நெருங்கமுடியாமல், பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இன்றி, இணக்கத்தோடும், சிநேகத்தோடும் நடத்த இயலுமா? அரசியல் தலையீடு இல்லாமல் தொடர இயலுமா? இவற்றுக்குத் தெளிவான பதிலை ஏற்படுத்திக் கொண்டு திட்டப்படி நடத்த வேண்டும்.

அரசாங்க நிர்வாகத்தில் கோவில் ஒழுங்கு முறை மிகவும் சேதமடைந்தது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பிற மதத்தவர் ஊழியர்களாகவும் வியாபாரிகளாகவும் சேர்வது விரும்பத்தகாத செயல். அதோடு பிற மதத்தவருக்கு ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து தெய்வங்களின் மீதும் நம்பிக்கை இருக்காது என்பதோடு, வெறுப்பும், மதம் மாற்றும் சுபாவமும் இயல்பாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்டவர்களின் கையில் கொடுக்கப்படும் கோவில் நிர்வாக முறைகள் குழப்பத்தில் ஆழும் என்பதில் சந்தேகம் இல்லை. அளவுக்கதிகமான அரசியல் தலையீடும், கோவில் நிதிகளின் வெளியேற்றமும் எண்ணிலடங்காதவை. ஆலயங்களின்   வளர்ச்சிக்கும், ஹிந்து தர்மத்திற்கும் அன்றி பிற மதத்தவருக்காகவும், வேறு பல  செயல்பாடுகளுக்காகவும் கோவில் வருமானத்தைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.

அரசாங்கம் மாறும் போதெல்லாம் கோவில் நடைமுறைகளில் ஏற்ற இறக்கங்களும், மாற்றங்களும் ஏற்பட்டு ஆலய அமைப்பு சேதமடைகிறது. அதே போல், மாநிலங்களில் ஹிந்து எதிர்ப்பு அரசுகள் அமைந்தால், ஆலயங்களின் நிலைமை மேலும் மோசமாகிறது. கோவில்களின் நல்லது கெட்டதுகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதோடு, புதுப்புது தொல்லைகளை உருவாக்குவார்கள்.

இந்தப் பின்னணியில் மிகவும் கவனமாக ‘சனாதன போர்டை’ உருவாக்கி, நடத்துவது என்பது சிக்கலான செயலே. தன்னலமின்மை, நிர்வாகத் திறன், கடவுள் பக்தி, உள்ளத் தூய்மை எல்லாம் நிறைந்த, ஆலய வரலாறு, ஆகம முறைகள் எல்லாம் தெரிந்த, திடமான குழுக்கள் உருவாக வேண்டும்.

பிற மதத்தவர் தம் மத போர்டுகளை ஏற்படுத்திக் கொண்டு, சுயமாக நிர்வாகம் செய்து கொண்டு, தம் மத நிலையங்களின் வருமானத்தைத் தம் மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய ஒன்றுபட்ட உணர்வு இந்து மதத்தவருக்கு சாத்தியமா?

ஜாதிச் செருக்கு, மடாதிபதிகளின் மோதல்கள், சைவ, வைணவர்களின் வேறுபட்ட கருத்துகள் போன்றவை ஆழமாக வேர்விட்ட நிலையில், ஒன்றுபட்ட கூட்டு  இலட்சியத்திற்காக கருத்தொற்றுமையும், சமரசமும் காட்டுவதில் இந்துக்கள் ஒன்றுபடுவர்களா?

பரஸ்பரம் வேறுபட்ட கருத்துகள், அதிகார மோகம், ஊழல் மனப்பான்மை போன்றவை எங்கு பார்த்தாலும் இருக்கத்தான் செய்யும் என்ற விட்டேத்தியான இயல்பில் உள்ளது ஹைந்தவ அமைப்பு. ஆனால், சாமானியர்களிடம் நம்பிக்கையும் ஒற்றுமையும் துளிர்விட்டு வருகிறது.

ஹிந்துக்களின் ஒற்றுமையை சகித்துக் கொள்ள விரும்பாத விரோத சக்திகள் மதவாரியாகவும், அரசியல் வாரியாகவும் சிதைப்பதற்குத் தயாராக உள்ளன. அவர்களின் தீய வியூகங்களில் இருந்தும் இந்த ஆலயப் பேரமைப்பு காப்பாபற்றப்பட வேண்டும்.  

ஒரு பெரிய சுமையை ஒரு தோளில் இருந்து வேறொரு தோளுக்கு மாற்ற வேண்டி வரும்போது, நடுவில் நழுவி விழாமல், புதிய தோள் திடமாகவும், நிலையாகவும் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் அல்லவா?

சில மாநிலங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் நடக்கும் கோவில்கள் சரியாக நடக்கின்றனவா? நன்கு கற்றறிந்து, புரிதலோடு, முழுமையாக ஹிந்துமதப் பிரிவுகளை அரவணைத்துக் கொண்டு, அந்தந்த ஆகம சம்பிரதாய பாரம்பரியங்களைச் சிதறாமல் முன்னெடுக்கும் பலமான அமைப்பு ஏற்பட வேண்டும். சுயநலனை ஒதுக்கி, பரந்த உள்ளத்தோடு சேவை புரியும் அறிஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.

ஹிந்து ஆலயங்கள் தூய்மையாகவும், குறைகளின்றியும், சூரிய, சந்திரன் இருக்கும் காலம் வரை க்ஷேமமாகவும், மேன்மையடையும் காலம் விரைவில் வர வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.

(source – தலையங்கம், ருஷிபீடம், பிப்ரவரி, 2025)

தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

gandhi memorial day - 2026

நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றும், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்றும், ஆங்கிலேயர் சென்றுவிட்டால் இந்தியர்களால் ஒரு குண்டூசிகூடத் தயாரிக்க முடியாது என்றும் கருத்துகளைத் தெரிவித்து, இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு எதிராக இருந்த ஈ.வே.ரா மற்றும் திராவிட இயக்கத்தவர்களின் பெயர்களை தமிழகத்தில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும், பொது இடங்களுக்கும் தெருக்களுக்கும் திராவிட மாடல் அரசு சூட்டி வரும் நிலையில், திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த தெருக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்ட வேண்டும் என, அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசு நல பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிசுதந்திர போராட்ட வீரர்களின்
வாரிசு நல பிரிவு சார்பாக மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமும் தியாகிகள் தினமும் சென்னை எழும்பூரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கில் இயக்கத்தின் பொருளாளர் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைப்பெற்றது.

நிர்வாகிகள் பா.ஞானவேல் கதர் வி. வெங்கடேசன் ஆருண்ரசித் கோவை எஸ்.முத்துவேல், கே. என் சீனிவாசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ். டேவிட் கே.ஜெயக்குமார். லட்சுமிராஜராம் ராயப்பேட்டை எஸ்.கே. அன்பழகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்கள்.

கெளரவ ஆலோசகர் பொன் கிருஷ்ணன மூர்த்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு காந்தியடிகள் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தினர்.

நிகழ்ச்சியில்,தியாகிகள்இருசாகவுடர், பெருமாள், சித்தா சாமி மற்றும் பண்ருட்டி ஆர்.நிஜார் அகமது, சி.சின்னையா டி. புஷ்பராஜ், இ.ரிச்சர்ட் , மேலூர் ஜெயபால்உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் அலங்கரிப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. மறைந்த தியாகிகள் வாழ்ந்த தெருவுக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்டி அவர்களின் தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக., கொடி கட்டிய காரில் வந்து பெண்களைத் துரத்தி மிரட்டிய நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

dmk goondas in a car tracing girls - 2026

சென்னை அருகே இரவு நேரத்தில் காரில் வந்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய 2 கார்களில் துரத்தி வந்து சிலர் மிரட்டிய வீடியோ காட்சிகள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்றில் சில பெண்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களின் காரை 2 கார்களில் வந்த இளைஞர்கள் சிலர் கண்டுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. பெண்களை கேலி செய்த அவர்கள், ஒரு கட்டத்தில் பெண்கள் வந்த காரை துரத்தியுள்ளனர்.

இதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதே புரியாமல், பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் ஓட்டியுள்ளனர். பின்னால் இரண்டு கார்களில் அதிவேகத்தில் துரத்திக் கொண்டு வந்த அந்த நபர்கள், பெண்கள் வந்த காரை முந்திச்சென்று சாலையின் நடுவழியில் மறித்துள்ளனர். அச்சத்தில் இருந்த பெண்கள், காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தியுள்ளனர். அந்தப் பெண்கள் காரை நிறுத்த, திமுக., கொடி கட்டிய காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் அவர்களை நோக்கி வேகமாக வந்து, ஆவேசமாக தட்டி ஏதோ கூறி மிரட்டியுள்ளார். 

நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்களில் ஒருவர், தமது செல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கானாத்தூர் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இளைஞர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் திமுக., கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களை சாலையில் மிரட்டியதுடன், தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஜன.25ஆம் தேதி இரவு நடந்ததாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 

இந்தப் புகாரின் பேரில்  வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில்,  கார் சேஸிங்கில் நடந்தது என்ன? என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில், 

கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து பெண்களின் வீடு வரை காரை துரத்திச் சென்ற இளைஞர்கள் தொடர்பில், முட்டுக்காடு அருகே ஜன.25ம் தேதி தனது காரை 2 கார்கள் இடைமறித்ததாக பெண் புகார் அளித்தார். இரு கார்களில் இருந்தவர்கள் அப்பெண்களின் வீடு வரை துரத்தி வந்ததாக புகாரில் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.  

அந்தப் பெண்கள் தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்த போது, தங்களின் வாகனத்தை இடித்ததாகவும், ஆனால் அது தொடர்பாக மன்னிப்பு கூட கோரவில்லை என்றும் கூறி அப்பெண்ணின் வீட்டருகே அந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். 

ஆனால் அந்த இளைஞர்களின் காரை தாங்கள் இடிக்கவில்லை என்றும், இது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்ந்தால் உண்மை தெரியும் என்றும் புகார் அளித்த பெண் மறுப்பு தெரிவித்து ஊடகத்திடம் பேசியுள்ளார். இருப்பினும், பெண்கள் சென்ற காரை விரட்டியதாகக் கூறப்படும் கார்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் என்ன நடந்தது என ஆய்வு செய்து வருகிறோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 

அண்ணாமலை கண்டனம்! 

இந்நிலையில், தி.மு.க. கொடி கட்டிய காரில் அத்துமீறியுள்ளனர் என்று பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை இ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்திய வீடியோ பார்க்கும் போது பதறுகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இ.சி.ஆர். சம்பவமும் ஓர் உதாரணம் என்று, அவர் கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி என்பது லைசன்சா? என்று,  எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பதிவு: 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த  பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய  காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு  துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது?  மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா?  அல்லது  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா?  என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது  காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத் தளத்தில் ஒரு குரல்

இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகத் தளங்களில் தமிழக போலீஸை விமர்சித்து, பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றன. அதில் ஒருவர் வெளியிட்ட கருத்து… 

ஆனா… காரை துரத்தின குருப்ல ஒருத்தனை கூட பிடிக்காமலேயே “காரை ஏன் துரத்தினார்கள்?”னு காரணத்தை கண்டுபிடிச்சு சொன்னான் பார்த்தியா… உலகத்துலேயே “திராவிட போலீஸை” அடிச்சிக்க ஆளே இல்லய்யா… 

   காரை விரட்டிய குண்டர்களில் ஒருத்தனைக் கூட இன்னமும் பிடிச்சு விசாரிக்கலை…,

   “காரை நாங்க இடிக்கவே இல்லை”ன்னு அந்தப் பெண்கள் தரப்புல சொல்றாங்க…,

    அப்புறம் எப்படி முதல் கட்ட விசாரணையில் “காரை இடித்ததால் பின் தொடர்ந்து விரட்டினார்கள்”னு காவல்துறை கண்டு பிடிச்சிருப்பாங்க…

    இந்தக் கேஸ்ல எத்தனை “சார்” கள் சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தெரியலையே…

கண் துடைப்பு நாடகம் இல்லாமல், உண்மையாக வசதி செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

1783428 palani murugan temple - 2026

கண்துடைப்பு நாடகம் வேண்டாம். பக்தர்களுக்கு உண்மையான வசதியை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாவது…

தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செய்யவும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் அறுபடை வீடு முருகன் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும். அதுபோல பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி வழி அமைத்தும், ஒளிரும் குச்சியை அனைத்து பக்தர்களுக்கும் வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு முருக பக்தர்களை அலட்சியப்படுத்துகிறது. முருக பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கை மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்களால் பல கோடி வருமானம் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக்கூட செய்து தருவதில்லை என்பது மனிதாபிமானமற்ற செயல்.

கும்பமேளா நடக்கும் உத்திரப்பிரதேசத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி எத்தகைய சிறப்பான வசதிகளை செய்துள்ளது அந்த அரசு. இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உலக அளவில் மக்கள் விருப்பத்துடன் வருகை தருவதைக் காண முடிகிறது.

ஆனால் தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவிற்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

பழனியில் பாதயாத்திரை சென்று திரும்பும் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி செய்வதாக தற்போது செய்தியில் வந்து உள்ளது. அதனை முழுமையாக பயனடையும் வகையில் செய்ய வேண்டும். அதைவிடுத்து கண்துடைப்பு நாடகமாக இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாது பாதயாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பி செல்லத்தான் பேருந்தில் பயணிப்பாளர்கள். அதற்குத்தக்க பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இது வழக்கமான பேருந்து சேவை இல்லை என்பதை உணர்ந்து செயல்படுத்த அரசு கவனம் கொடுக்க வேண்டும்.

மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவது நேர்த்தி கடனாக தொன்றுதொட்டு நடைபெறுகிறது. அதனை உணவு பாதுகாப்பு என்ற பெயரில் தடுப்பது அநியாயம். இத்தகைய நற்பணி, வியாபாரம் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

பல லட்சம் பக்தர்களுக்கு அரசு உணவளிக்க போவதில்லை. நல்ல எண்ணத்துடன் தருபவர்களை சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயல் இல்லை. நமது நாட்டில் அன்னச்சத்திரம் வைத்து பசியாற்றுதல் என்ற வரலாறு உண்டு. அந்த வகையில் மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களை தடுப்பது கூடாது.

எனவே வருகின்ற காலங்களில் நடைபெற இருக்கின்ற தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆன்மிக விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்ரோ அடித்த செஞ்சுரி! வெற்றிகரமாக ஏவப்பட்ட 100வது ராக்கெட்!

isro 100th launch - 2026

இஸ்ரோ தனது நூறாவது ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

  • இஸ்ரோ தனது முதல் ராக்கெட்டை கடந்த 1979ம் ஆண்டு ஆக.,10ம் தேதி விண்ணில் ஏவியது.
  • இதுவரை 548 ராக்கெட்டுகள் இந்தியா சார்பில் விண்ணில் பாய்ந்துள்ளன; இதுவரை 6 தலைமுறை ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
  • சந்திரயான், ஆதித்யா போன்ற திட்டங்கள் இஸ்ரோவின் முக்கிய சாதனைகளுள் ஒன்று.
  • GSLV F-15 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட NVS 02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
  • இந்தியா இதுவரை 548 செயற்கைக்கோள்களை வெற்றிகரமான விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்தியாவின் நூறாவது செயற்கை கோள் ஏவு வாகனமான GSLV F15, NVS-02 செயற்கை கோளை சுமந்து கொண்டு இன்று காலை 6:23 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திப்பட்டது என அதன் தலைவர் பெருமதிப்புடன் அறிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இவ்வாண்டின் முதல் செயற்கைக்கோளாக, ஜன.29 இன்று, நூறாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக இரண்டு விதமான ஏவு வாகனம் பயன்படுத்தி வருகிறோம். ஒன்று PSLV, மற்றொன்று GSLV. இதில் PSLV என்பது போலார் சாட்டிலைட் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.அதுபோலவே GSLV என்பது ஜியோ சின்க்கரனைஸ் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும். இதில் இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சின் பொருத்தப்பட்ட 11வது ஏவு வாகனம் ஆகும்.

பி.எஸ்.எல்.வி துருவத்தில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.

ஜி.எஸ்.எல்.வி என்பது புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.

இப்போது ஏவப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள் மிக முக்கியமான இரண்டு விதமான பயன்பாடுகளை கொண்டுள்ளது என்கிறார்கள். அதில் பிரதானமானது NaviC . நமது இந்தியாவிற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட gps போன்ற ஒன்று என்பதாக புரிந்து கொள்ள பாருங்கள். தற்சமயம் புவியீர்ப்பு விசையின் வட துருவம் நகர்ந்து கொண்டே வரும் சூழலில் அதனால் துல்லியமான மற்றும் சரியான ஸ்டாண்டர்ட் பொஸிஷனிங் சிஸ்டம் SPS வழங்க இது அவசியம் ஆகுகிறது. தற்போது உலக அளவில் இயங்கும் 40 m துல்லியம் திறனை தாண்டி இது 20m துல்லியத்திறன் கொண்டு வந்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.

நிச்சயம் இது ஒரு மைல் கல் சாதனையாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் இது இந்தியாவின் நிலப்பரப்பை தாண்டி கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் விதத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள்.

இங்கு NaviC என்பது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.

நேரம் காலம் துல்லியமாக தர அணு கடிகாரம் ஒன்று இதனுள் அடங்கியிருக்கிறது. மொத்தம் இதனுடன் சேர்த்து ஆறு செயற்கை கோள் இந்த வரிசையில் வருகிறது. ஏற்கனவே ஐந்து விண்வெளியில் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இயங்கி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாண்டில் வெற்றிகரமாக கணக்கை துவக்கிவைத்து இருக்கிறார்கள். இது மென்மேலும் வளரும் என்பதும் நிச்சயம்.

தை அமாவாசை தர்ப்பணம்; மந்திரங்கள் – செய்யும் முறை!

amavasai pitru tharpanam - 2026

29.01.2025 க்ரோதி தை 16 புதன் கிழமை தை மாத அமாவாசை தர்ச தர்பணம்

  • வேதிக்ரவி (ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர்)

தை அமாவாசை தர்ச தர்ப்பண ஸங்கல்பம்

ஆசமனம் செய்து 3 பில் பவித்திரத்தை மோதர விரலில் போட்டு கொண்டு காலுக்கு அடியில் 3 கட்டைபில்லை போட்டுக்கொள்ளவும் , 3 கட்டை பில்லை பவித்திரத்துடன் இடுக்கிகொள்ளவும்
மந்திரம்
ஆசமனம்
ப்ராணாயாமம்
ஶுசுக்லாம் பரதரம் விஷ்ணும் …………………. ஓம் பூ: ——- பூர்புவஸ்வரோம், மமோபாத்த ஸமஸ்த …… ப்ரீத்யர்த்தம்,
அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய,

அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம்,

ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய,
ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே,
கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ:
தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா ஸம்வத்ஸராணாம், மத்யே
க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்திராயனே *ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம்   புண்யதிதௌ² வாஸர:  செளம்ய வாஸர , உத்திராஷாடா (09.24) ஸ்ரவன நக்ஷத்திர யுக்தாயாம்  ஸித்தின்  நாம   யோக  நாகவ   கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ² ப்ராசீணாவீதி )
(ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் 984078797)
(ப்ராசீனா வீதி – பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .

………… கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)

வசு, ருத்ர, ஆதித்ய

ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,

இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள்
மட்டும் கூறவும்

மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் …

(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)

பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம்

(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ………….
கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம்
உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்ய தர்ச ஸ்ராத்தம் தில தர்பண ருபேன அத்³ய கரிஷ்யே

என சொல்லி கையில் இடுக்கிகொண்டுள்ள கட்டை பில்லை தெற்கு பக்கம் போடவும்., பூணல் வலம் செய்து தீர்த்ததால் கையை துடைத்து கொள்ளவும் , மீண்டும்
(பூணல் இடம்)

3 கட்டை தர்ப்பை பில் இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும்.

அதன்மேல் 5 அல்லது 7 தர்பையுள்ள கூர்ச்சத்தை தாம்பாளத்தில் கூர்ச்சம் தெற்கு நுனியாக இருக்கும் படி வைக்கவும்.

(பூணலை இடமாக தான் தர்பணம் முடியும்வரை இருக்கணும்)

எள்ளை எடுத்து கொள்ளவும்.
கூர்ச்சத்தில் ஆவாஹனம்:

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச

அஸ்மின் கூர்ச்சே வர்க த்வய பித்ரூன் ஆவாஹயாமி.

என்று எள்ளை கூர்ச்சத்தில் கட்டை விரல் வழியாக மறித்து போடவும்.

பிறகு மூன்று கட்டை பில் கையில் எடுத்து கொள்ளவும்:

ஸக்ருதாஸ்ச்சின்னம் பர்ஹி: ஊர்ணாம்ருது ஸ்யோனம் பிதுர்ப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச்ச அனுகை: ஸஹ வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சு கட்டை பில் வைக்கவும்.

எள்ளை எடுத்து கொண்டு:

ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்.

என்று சொல்லி எள்ளை கூர்சத்தில் போடவும்.

கட்டை விரலை ஜலத்தில் முக்கி கட்டை விரலில் எள் தோய்த்து கட்டை விரலால் தர்பயாமி என்று சொல்லும் போது நிறைய எள்ளு ஜலம் ஒவ்வொரு முறையும் கூர்சத்தில் விடவும்.

தர்பணம் ஆரம்பம்

உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் யயீயு: அவ்ரகா: ருத்க்ஞா: தேனோவந்து பிதரோ ஹவேஷு
…………கோத்ரான், (அப்பா பேர்)
…………..சர்மண:
வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
( எள்ளு ஜலம் விடவும்)

அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வாண: ப்ருஹவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம

………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண: வஸு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்).

ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்தீ அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
………….கோத்ரான்(அப்பா பேர்)
………….சர்மண:
வஸுரூபான் ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
…………..கோத்ரான்(தாத்தா பேர்)
…………..சர்மண:
ருத்ர ரூபான்
அஸ்மத் பிதாமஹான்
ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
அக்ஷன் பிதர:
…………கோத்ரான்(தாத்தா பேர்)
…………….சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

யேசேஹ: பிதர: யேசனேஹ யாஹிஸ்ச்ச வித்மயான் உசன ப்ரவித்வான் அக்னே தானு வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தம் ஸ்வதயா மதந்தீ
………….கோத்ரான்(தாத்தா பேர்)
……………சர்மண:
ருத்ர ரூபான்: அஸ்மத் பிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுவாதா: ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்நக: ஸந்த்வோஷதீ:
……… கோத்ரான்(கொள்ளு தாத்தா)
…………..சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுநக்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துன: பிதா
………கோத்ரான்(கொள்ளு தாத்தா)
………….சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
(எள்ளு ஜலம் விடவும்)

மதுமான்ன: வனஸ்பதி: மதுமானு அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துன:
……கோத்ரான் (கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி
(எள்ளு ஜலம் விடவும்)

………….கோத்ரா: (அம்மா பேர்)
……………நாம்னீ: வஸு ரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை ஜலம் விடவும்)

——கோத்ரா: ( பாட்டி)
………….நாம்னீ:
ருத்ர ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி.
(3தடவை ஜலம் விடவும்)

—–கோத்ரா: (கொள்ளு பாட்டி)
………….நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை ஜலம் விடவும்)

(அம்மாவாத்து கோத்ரம் மாமாவாத்து கோத்ரம்)

……கோத்ரான் (அம்மாவின் அப்பா)
……………….சர்மண:
வஸு ரூபான்
அஸ்மத் மாதாமஹான்
ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

….கோத்ரான் (அம்மாவின் தாத்தா)
………………சர்மண:
ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

………..கோத்ரான் (அம்மாவின் கொள்ளு தாத்தா)
……………சர்மண:
ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

………கோத்ரா:(அம்மாவின் அம்மா)
……………நாம்னீ:
வஸுரூபா: அஸ்மத் மாதாமஹீ:
ஸ்வதா நம்: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

……..கோத்ரா:(அம்மாவின் பாட்டி)
……………நாமனீ:
ருத்ர ரூபா:
அஸ்மத் மாது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

……………கோத்ரா: (அம்மாவின் கொள்ளு பாட்டி)
……………நாம்னீ:
ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
(3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன்
ஸ்வதா நம: தர்பயாமி
(3தடவை எள்ளு ஜலம் விடவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

(எல்லா ஜலத்தையும் விடவும்)

பூணல் வலம் போட்டு கொள்ளவும்)

எழுந்திருந்து வலமாக
3 முறை கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரக்ஷிணம், பின் நமஸ்காரம்) .

தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: யேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிச பாபானி ஜன்மாந்தர க்ருதாநிச, தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:

(அபிவாதயே சொல்லி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)

பூணல் இடமாக போட்டு கொள்ளவும்.

எள் எடுத்து

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச

அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி.

என்று எள்ளை கூர்சத்தில் போடவும்.

கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு தாம்பாளத்தில் உள்ள எல்லா கட்டை பில் தர்பங்கள் எடுத்து
இடது கையில் பஞ்சபாத்ரம் நிறைய ஜலம் எடுத்து

யேஷாம் ந மாதா, ந பிதா,. ந பந்து:, நச பாந்த்வா:, நான்ய கோத்ரிண:, தே ஸர்வே, த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்ட்டை: , குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.

எள் இல்லாமல் கையை ஒதரவும்.
பூணலை வலமாக போட்டுக்கொள்ளவும்

அவரவர் தகுதிக்கேற்ப தக்ஷிணை வெற்றிலை பாக்குடன் ஒரு உத்திரணி தீர்த்தம் விட்டுக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தத்தம் செய்து வைத்துக்கொண்டு தங்கள் வாத்தியாரிடம் சமயம் கிடைக்கும்போது சமர்ப்பிக்கவும் ( தக்ஷிைணை கொடுக்காத எந்த யஞமும் பூர்த்தி ஆகாது என்பது தர்ம சாஸ்த்திரம்)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்ஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ அனந்த புண்ய பலதம் அத சாந்திம்
ப்ரயச்சமே அனுஷ்டித புண்யகால ஸ்ராத்த தில தர்ப்பண மந்திர
ஸாத்குண்யம் காம்யமான யதாசக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே நம ; !

கையில் ஜலம் விட்டுக் கொண்டு கீழ்கண்ட மந்திரங்களைசொல்லி மந்திரம் முடிபந்தவுடன்
கீழே விடவும்

காயேன வவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்ம நாவா ப்ருகிருதே ஸ்வபாவாது
கரோமி யத்யது ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

தில தர்ப்ணார்க்யம் கர்ம ஓம் தத்ஸத்
ப்ரம்மார்ப்பணமஸ்து

பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்தஊ ஜலத்தில் ஆசமனம்.செய்யவும்.
அச்யுதாய நம: + தாமோதரா.

பிறகு விபூதி இட்டு கொள்ளவும்.
விபூதி இட்டுக்க மந்த்ரம்.

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்/உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம் அம்ருதாத்/

இனி ஒரு ஆசமனம்.

அச்யுதாய நம: + தாமோதர.

பிறகு சுத்த ஜலத்தில்
ப்ரஹ்ம யக்ஞம்..
யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ருஹ்ம யக்ஞம்

ஆசமனம்:
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்புவஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிரும்மயக்ஞம் கரிஷ்யே

ப்ரம்மயக்ஞேன யக்ஷ்யே வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத், ஸத்யமுபைமி

(திர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்)

பிறகு வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் வைத்து வலது துடையில் கைகளை வைத்துக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்

மந்த்ரம்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் கும் ஸூவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் கும் ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந : ப்ரசோதயாத்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
இஷேத்வா, ஊர்ஜேத்வா, வாய வஸ்த, உபாயவஸ்த,
தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மனே

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான : ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

ஹரி : ஓம், ஹரி : ஓம்
சந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அப ரிஸ்ரவந்துந:

ஹரி : ஓம், ஹரி : ஓம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப : ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று தீர்த்தத்தைக் கொண்டு தலையை சுற்றவும்

ஓம் நமோ ப்ரும்மணே நமோ அஸ்து அக்னயே நம ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
(இந்த மந்த்ரத்தை மூன்று தடவை சொல்லவும்)

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்க)

தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே(நுனி விரல்களின் வழியாக தீர்த்தம் விட வேண்டும்)

ப்ரும்மாதயோ யேதேவா ஸ்தான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணான் தர்ப்பயாமி
ஸர்வதேவ பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணபத்னீஸ் தர்ப்பயாமி

(பூணலை மாலையாக போட்டுக் கொண்டு செய்யவும்)

க்ருஷ்ணத்வை பாயனாதய : யே ரிஷய :
தான்ரிஷீன் தர்ப்பயாமி
ஸர்வான் ரிஷீன் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணான் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி பத்னீஸ் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணபத்னீஸ் தர்ப்பயாமி
ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸாகும் ஹிதீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
யாக்ஞிகீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
வாருணீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி

(இந்தக் கீழ்க்கண்ட மந்த்ரம் மட்டும் கையை உயர்த்தி தர்ப்பணம் செய்யவும்)

ப்ரம்மாணம் ஸ்வயம்பு வம் தர்ப்பயாமி

உபவீதி (பூணலை சரியாக போட்டுக் கொள்ளவும்)

விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அருணான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸதஸத் பதிம் தர்ப்பயாமி
ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாமவேதம் தர்ப்பயாமி
அதர்வணவேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி

ப்ராசீணா வீதி
(பூணலை இடமாக போட்டுக்கொள்ளவும்)

ஸோம பித்ருமான்யம: அங்கிரஸ் வான் அக்னி : ஹவ்யவாஹனாதய :
யே பிதர:
தான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணான் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி

ஊர் ஜம்வஹந்தி : அம்ருதம் க்ருதம் பய: கீ லாலம்ப ரிஸ்ருதம் ஸ்வதாஸ் த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

(உப வீதி) பூணல் வலம் போட்டுக்கொள்ளவும்

ஆசமனம் செய்யவும்

ஶுபம்

(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்……வர்கத்வய பித்ரூன்- , அமாவாஸ்ய தர்ச ஸ்ரார்த்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே – ததங்கம் தில தர்பணஞ்ச அத்ய கரிஷ்யே)

தை அமாவாசை : இன்றைய முன்னோர் வழிபாட்டின் சிறப்பு!

amavasai pitru tharpanam - 2026

தை அமாவாசை (29/01/2025).

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது சனாதன தர்மத்தின் ஓர் அங்கம். ஆனால் இன்றைய காலச்சூழலில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதே இங்கு நம்மில் பலருக்கும் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

அமாவாசை என்பது நவகோள்களில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் பூமிக்கு நேர் வரிசையாக வரும் போது ஏற்படும். இன்னும் சரியாக சொன்னால் சூரியன் மற்றும் பூமியின் நடுவில் சந்திரன் வரும் போது அமாவாசை என்றாகிறது. இதுவே நேர் கோட்டில் சூரிய கிரணங்களை மறைத்து சந்திரன் வருமானால் அஃது சூரிய_கிரகணம்.

அதனால் தான் சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை திதியில் வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையில் முன்னது-பின்னதாக சந்திரன் கடக்கும் சமயத்தில் அதன் மைய ஈர்ப்பு விசை சூரிய ஈர்ப்பு விசையுடன் கலந்து பூமியில் சில தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஆதலால் அன்று கடல் அலைகள் சற்றே ஆக்ரோஷமாக இருந்து வருகிறது.

இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால் ஜோதிஷத்தில் இன்னும் சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சந்திரன் மனோகாரக கிரகமாக குறிக்கப்படுறது.

இது ஏன் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

தாயின் வயிற்றில் நாம் அனைவரும் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் தரித்து, பிறகு இப்பூமியில் குழந்தையாக பிறக்கின்றோம்.கர்ப்ப காலத்தில் நாம் பை போன்ற ஒரு அமைப்பில் நீரில் மிதந்த படி தொப்புள் கொடி வழியாக ஜீவ ரசத்தை உணவாக கொண்டு பிண்டத்தை தேகமாக வளர்த்து பின்னர் குழந்தை வடிவில் பிறப்பு எடுக்கின்றோம் . இந்த புவியில் மனித_பிறப்பு மாத்திரமே தொப்புள் கொடி உறவுடன் குழந்தை பிறந்த பின்னரும் அறுந்து விடாமல் இருக்கிறது. மற்ற ஜீவராசிகள் கர்ப்ப வாசம் தரித்து பிறந்தாலும் தொப்புள் கொடி பனிக்குடம் வரையில் மாத்திரமே அதன் தொடர்பு இருக்கும். சரியாக சொன்னால் அந்த கொடியை அறுக்கும் வேலை இல்லை, தானாக விலகிய பின்னர் தான் குட்டி பிறக்கும்.

பனிக்குடம் என்பது நீர் நிறைந்த ஒரு விதமான ஜவ்வு பை. ஆனால் இங்கு பலரும் அறிந்திராத ஒன்று உள்ளது. நாம் ஏற்கனவே இது குறித்து ஓர் பார்வை பார்த்து இருக்கிறோம்.,அது கடல் நீரில் எவ்வளவு உப்பு உள்ளதோ அதே அளவு உப்பு மாத்திரமே பனிக்குட நீரிலும் இருக்கும். இறைவன் படைப்பில் இதுவும் ஓர் அதிசயமே. இன்று வரை ஏன் இவ்விதம் என்று அறிவியலாளர்கள் வியந்து வருகிறார்கள். இதிலும் ஒன்று உள்ளது, அது என்னவென்றால் எப்படி கடல் நீர் ஒவ்வொரு கண்டங்களில் மாறுபடுகின்றனவோ அது போலவே அங்கு வசிக்கும் அந்தந்த பகுதிகளில் பிறக்கும் குழந்தையின் பனிக்குட நீரிலும் , உப்பின் அளவிலும் இந்த மாற்றம் காண முடிகிறது.

ஜனனம் என்பது குழந்தை தலை வெளிப்பட்டு தொப்புள் கொடி அறுப்பது வரை ஓர் நாழிக்கைக்குள்ளாக நிகழ வேண்டும் என்பது ஒரு கணக்கு. ஓர் நாழிகை என்பது 24 நிமிடங்கள்.

ஒரு நாளைக்கு 60 நாழிகைகள்.இது குறித்த கணக்கு ஜனன கால ஜாதகம் என்பர்.

கடல் நீரில் உள்ள உப்பின் அளவே கர்ப்ப காலத்தில் பனிக்குட நீரிலும் உள்ளது என்று பார்த்தோம் அல்லவா, அது போலவே அமாவாசை காலத்தில் எப்படி கடல் சீற்றம் கொள்கிறதோ, அது போலவே கிரகண காலத்தில் இது இன்னும் சற்று அதிகரித்து காணப்படும்.

இஃது கர்ப்ப வாசம் செய்யும் குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆதலால் தான் கர்ப்பிணி பெண்கள் கிரகண காலத்தில் வெளிவர வேண்டாம் என்கிறார்கள்.

நாம் தொப்புள் கொடி என்று சொல்வதை சரியாக சொன்னால் கொப்பூழ்கொடி. இது வழியாகவே குழந்தை தாயின் சலனங்களை உள்வாங்குகிறது. மனம் செயல்படும் விதம் இதுவே. ஜாதக ரீதியாக சந்திர கிரகம் மாதுர்ஸ்தானம் கொள்வது இதனால் தான்.

அமாவாசை வருடத்தில் 12 வரும், மாதம் ஒன்று விதம்.இதிலும் இரண்டு அமாவாசை திதி வெகு விஷேசம் நம் சனாதன_தர்மிகளுக்கு

ஒன்று: ஆடிஅமாவாசை , இரண்டாவது தைஅமாவாசை.

அது ஏன்?

கிரகங்கள் நகர்வுகளை பூமியில் இருந்து பார்க்கும் கோணத்தில் கணிதம் செய்து வைத்து கொண்டு கணக்கிட முயன்று அதில் வெற்றியும் கண்டார்கள் நம் முன்னோர்கள்.

அப்படி அவர்கள் கண்டறிந்த முறைக்கு கோச்சாரம் என்று பெயர். 12 ராசிகள் என பிரித்து 27 நட்சத்திரங்களை அதில் உள்ளிட்டு கணிதம் சமைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை மாதம் எனவும், ஒவ்வொரு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தை நாள் எனவும் கொண்டனர்.

இதில் இரண்டு தரப்பினரும் உள்ளனர். ஒன்று சூரியனை பிரதானமாக கொண்டு கணக்கிடுபவர், சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுபவர். நாம் சந்திரனை எடுத்து கொண்டு உள்ளோம்.

மேஷ ராசி முதலாகக் கொண்டு மீன ராசி வரை 12 ராசிகள். இதில் கடகம் நான்காவது ராசி. இதன் அதிபதி சந்திரன். இந்த ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை நாம் ஆடி மாதம் என்கிறோம். இந்த ராசியில் இருந்து நேர் எதிர் ராசியாக உள்ளது மகரம். மகர ராசியின் அதிபதி சனி. இந்த மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை நாம் தை மாதம் என்கிறோம்.

இந்த இரண்டு ராசியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு வாய்ந்ததாகும்.

அமாவாசை திதியில் தர்ப்பணம் ஏன்?

முதலில் தர்ப்பணம் என்றால் தர்ப்பை எனும் புல்லின் ஊடாக நம்மை நாம் அர்ப்பணித்திலே தர்ப்பணம் என்கிறோம்.

சரி அர்ப்பணிப்பு என்றால் யாருக்கு?

என்னவென்று அர்ப்பணிக்கிறோம். ?

எதனை அர்ப்பணிக்கிறோம்?

இதற்கு விடை தெரிந்தால் ஏன் என்பதும் விளங்கிவிடும்.

இதற்கு இன்னுமோர் பதமும் உண்டு.

த்ருப்தி படுத்துதல்…

தர்ப்பையை கொண்டு த்ருப்தி படுத்துதல் .. அர்ப்பணித்தல்… ஆதலால் தர்ப்பணம் என்கிறோம் இதனை.

இவ்விதம் செய்ய இரண்டு அமாவாசை ஏற்றம் கொண்டது.

ஒன்று தை அமாவாசை..

மற்றொன்று ஆடி அமாவாசை…

இந்த ஆண்டு.

இத்துடன் 144 ஆண்டுகளுக்கு ஓர் முறை மாத்திரமே வரும் மஹா கும்பமேளா நடந்து வருகிறது.

மூன்று நதிகளின் சங்கமத்தில். சங்கமிக்கும் இடத்தில்.. பிரயக்ராஜில் இந்த மஹா கும்பமேளா நடக்கிறது. ஏற்கனவே பார்த்தது போல் ஐந்து முக்கிய குளியலில் நாளை அமாவாசையில் இரண்டாம் குளியல் அங்கு நடக்க இருக்கிறது.

இங்கும் மற்றோர் விஷேசமும் உண்டு. அது நாம் கொண்டுள்ள நவக்கிரகங்களில் ஐந்து ஒரே நேர்கோட்டில் அமையும் விதத்தில் கடந்து வந்திருக்கிறது. இப்படியான தருணத்தில் எந்த ஒரு ஜீவ நதியில் நீராடினாலும் ஜந்மாந்திர பாவங்கள் தொலையும் என்பர். ஒன்றிக்கே இப்படி என்றால் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் முங்கிகுளித்தால்…??

பிரயக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா பற்றின குறிப்பு ரிக்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் இதன் வயதை நீங்களே யூகித்து அறிந்திடுங்கள்.

நம் தமிழகத்திலும் இதேபோன்றதொரு அரிய நிகழ்வாக மஹாமகம் வரும் 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது என கணித்திருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் நம் தமிழகத்திலும் உண்டு.

காவிரி அமராவதி மற்றும் மணிமுத்தாறு ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடலூர் ஆகும்.

இதே போன்றதொரு பெருமை காஞ்சிபுரம் அடுத்த பழைய சீவரம் எனும் ஊருக்கு அருகில் இதே பெயரை ஒத்த ஓர் அற்புதமான இடம் இருக்கின்றது. அது திருமுக்கூடல் என்பதாகும்.

இங்கு எழுந்தருளி நிற்பது அப்பன் பிரசன்ன வெங்கடேச பெருமாள்.ஒரு பக்கம் இவர் மறுபுறத்தில் மறுகரையில் லக்ஷ்மி நரசிம்மர் என பிரமாதமான இடம்.

பாலாறுக்கு க்ஷீர நதி என்று பெயர். இதனை ஒட்டியே பழைய சீவரம் என்கிறார்கள்.அடுத்தாக வேகவதி, சரஸ்வதி என்கிற மற்றோர் பெயரில் ஒரு நதி., அடுத்ததாக பகு நதி என மூன்றும் சங்கமிக்கும் இந்த இடத்திற்கு தான் திருமுக்கூடல் என்று பெயர். பகு நதிக்கு இன்று மற்றோர் பெயர் உண்டு, அது தான் செய்யாறு.

இந்த இடத்தை சுற்றுலும் புகழ் பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. அதில் பிரதானமானது ஓரிக்கை என இன்று அழைக்கப்படும் ஓர் இரவு இருக்கை. திருமழிசை ஆழ்வார் தனது சீடன் கனிக்கண்ணனுக்காக வா போகலாம் என காஞ்சி பெருமாளை அழைக்க… அவரும் மறுபேச்சில்லாமல் நகர அன்று இரவு அவர்கள் தங்கிய இடத்திற்கு இந்த பெயர் வந்தது. அதன் பொருட்டே பெருமாள் இங்கு மாத்திரமே இடம் வலம் மாற்றி சயனித்திருப்பார்.இது உலகில் எங்குமே காண இயலாத திருக்கோலம் என்பர். இதன் வடக்கு எல்லையில் தான் தக்கோலம் வருகிறது.

திருமுக்கூடலிலும் சயனத்திற்கும் பெருமாளே முதலில் இருந்திருக்கிறார். அவரே எழுந்து நின்ற கோலம் தான் அப்பன் வெங்கடேச பெருமாள் என்கிறார்கள். இதன் பின்னணியில் மிக நுட்பமான பொருள் உண்டு. தொண்டைமானுக்காக வரமருளிய திருக்கோலம்.

ஆகச் சிறந்த பித்ரு தோஷத்தை நிவர்த்தியாகும் இடம் இந்த திருமுக்கூடல்‌. சொல்லி வைத்தார் போலே இவ்வாண்டில் செய்யாற்றில் வெள்ளம் வந்த படியால் ஜீவ நதியாக மாறி இருக்கிறது.

தில தர்ப்பணம் பிரதானம்.

திலம் என்பது எள்ளை குறிக்கும் சொல். அதுபோலவே மஹாலக்ஷ்மியையும் குறிக்கும்.

உள்ளங்கை அளவு எள்ளை எடுத்து தர்ப்பையின் நுணி கிழக்கு பார்த்து இருக்கும் படி பிடித்து இரண்டு கைகளாலும் நீரை ஏந்தி மார்புவரை உயரத்தி இதயப்பூர்வமாக வார்க்க பாவங்கள் தொலைந்து போகும். மந்திர உச்சாடனங்களை விட ஆத்மார்த்தமான அர்ப்பணத்தையே இது பிரதானமாக கொண்டிருக்கும்.

இவையெல்லாம் தான் நம்முடைய நதிக் கரை நாகரீகங்கள்.

நதி தீரத்தில் முடியாதவர்களுக்கு குளக்கரையில் சமர்ப்பிக்க ஏதுவான இடங்கள் ஆகும். குளக்கரையில் வடக்கு திக்கு நோக்கி இவ்விதம் செய்வது சாலச் சிறந்ததாகும்.

தொடர் போலும் எழுதி வருவதின் ஓர் அங்கம் இப்பதிவு. மூத்தோர் தவம் இன்னாநிலத்தில் அவதரித்தது .. அவர்களை கொண்டாட அவர்களுக்குண்டானதை வர்ஷிக்க நாளைய அமாவாசை தினம் பிரதானமான ஒன்று.

ஓர் கையளவு நீர்..

ஆத்மார்த்தமாக அழைத்ததற்காக தன் ஆசனம் விட்டு வந்தவன் அவன். அதற்கு சாட்சி ஓரிக்கை.

அப்படி பட்டவர்களை தந்தது இந்த மண். நாம் வாழும் இந்த மாநிலம்… அவர்களுக்காக ஓர் கையளவு நீர்.. அர்ப்பணிப்பிக்க முடியாதா என்ன.?

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்