Home Blog Page 165

ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை!

735767 adhar - 2026

சோழவந்தான்.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவித்தது. தற்போது மூன்று மாதம் கூடுதல் அவகாசமாக டிசம்பர் 31 வரை ஆதார் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதில், ஆதார் புதுப்பித்துக் கொள்ள அரசு இ- சேவை மையம், தபால் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அரசு குறிப்பிட்டுள்ள நிலையில் பொதுமக்களிடையே குழப்பமான நிலையே நிலவி வருகிறது.

ALSO READ: நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

குறிப்பாக, ஆதார் எண்ணை புதுப்பிக்க தபால் நிலையம் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் , தங்களது வழக்கமான பணிகளை முடித்த பின்பே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகளை பார்க்க முடியும் என, அலுவலர்கள் கூறுவதாகவும் இசேவை மையங்களிலும் வழக்கமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு ஊராட்சி பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஆதார் புதுப்பிக்க வழி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அவ்வாறு புதுப்பிக்கும் நிலையில் அதிகமான பொதுமக்கள் முகாம்களில் வந்து தங்கள் ஆதார் புதுப்பிக்க வாய்ப்பு ஏற்படும் விடுபட்டவர்களுக்கு தனியாக சிறப்பு முகாம்களையோ, அல்லது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் அலுவலகங்கள், இ- சேவை மையங்கள் மற்றும் மற்ற இடங்களில் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கலாம்.

இது பொது மக்களின் சிரமங்களை குறைக்கும் எனவும் பொதுமக்கள் அலைக்
கழிக்கப்படுவதை தவிர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என, கூறுகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்டு 40 மாணவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் அனுமதி!

madurai dmk biriyanii ssue - 2026
#image_title

திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் 40 பேர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி – திருமங்கலம் அருகே பரபரப்பு!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே, வில்லூரில் திமுகவினர் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு புட் பாய்சன் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு கள்ளிக்குடி, விருதுநகர், வில்லூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக சார்பில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா, வில்லூரில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, அனைவருக்கும் நேற்று முன்தினமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று மதியம் கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் சில்வர் தட்டு மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கப்
பட்டுள்ளது.

பிரியாணியை சாப்பிட்ட சிலர் கூடுதலாக சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்து மாலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தங்களது பிள்ளைகளுக்கும் பிரியாணி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பிரியாணி சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருநேற்று இரவு எட்டு மணிக்கு மேல் திடீரென வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டனர். இதில் மூன்று வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் வில்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால். அவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறு குழந்தைகள் பத்துக்கும் மேற்பட்டோர் உட்பட 29 பேர் விருதுநகர் மருத்துவமனையிலும் 30 பேர் கள்ளிக்குடி மருத்துவமனையிலும் மீதமுள்ள 82பேர் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

பொதுமக்களுக்காக தயார் செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப் போய் இருந்ததாகவும், மேலும் இவர்கள் கொடுப்பதற்கும் காலதாமதம் ஆனதால், உணவு விஷமாக மாறி உள்ளது. அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. வேறு ஏதும் பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நிகழ்ச்சியில், வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால், உள்ளூர் பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியது.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுல் நாகர் தலைமையிலான வில்லூர் போலீசார் மருத்துவமனைகளில் பாதிக்கப்
பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சதுரகிரியில் செப்.15 முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி!

sathuragiri adi amavasai - 2026
#image_title

சதுரகிரியில் தரிசனம்; செப்டம்பர் 15 முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக செப்., 15 முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது.

இக்கோவிலில் செப்., 15ல் பிரதோஷம், செப்., 17ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது.

இதனை முன்னிட்டு செப்., 15 முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

கனமழை அலர்ட் எதுவும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மக்காத பொருட்களை வீசிச் செல்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ரூ.1.17 கோடி மோசடி: 5 பேர் கைது

crime scene - 2026


விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் விதிமுறைகளை மீறி உயர் அதிகாரியின் அனுமதியின்றி விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக ஒரு கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த 5 பேரை பொருளதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் உட்பட 2பேரிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ். இவரது தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்களில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கணக்கை தணிக்கை செய்த போது, அதில் 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ரூ.1 கோடிக்கு மேல் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சங்க பணத்தை கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சங்க முன்னாள் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் 8 பேர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில், இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2020-21ம் நிதியாண்டில் கொரோனா காலகட்டத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு விளம்பரம் செய்தல், இதர செலவு வகை கணக்குகள் அடிப்படையில் உயரதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமலேய கூட்டுறவு சங்க நிதி ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கையாடல் நடைபெற்றது உறுதியானதாம்.

இதில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான இராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த முருகேசன் (63), பராசக்தி நகரை சேர்ந்த ராஜலிங்கம் (47), தளவாய்புரத்தை சேர்ந்த பொறுப்பு தலைவர் தங்க மாரியப்பன் (53), இராஜபாளையம் ஆனையூர் தெருவை சேர்ந்த கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம் (61), சம்மந்தபுரத்தை சேர்ந்த காளிராஜ் (56) ஆகிய 5 பேரை பொருளதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத் வருகின்றனர். இதில், வனராஜ் அ.தி.மு.க.,வில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள சிவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

புரட்டாசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை திறப்பு!

sabarimala iyappan sannidhi opened - 2026
#image_title

கேரளாவில் பிரபலமானதாக கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. செப்.14 முதல் பூஜைகள் நடைபெறும். செப்.15இல் திருவோணம் பண்டிகை பூஜை வழிபாடு திருவோண சத்யா விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் திருவோணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 இல் தலைவோணம் பண்டிகையும் செப்டம்பர் 15 திருவோணம் பண்டிகை விழாவிற்கு செப்டம்பர் 16 மூன்றாம் ஓணமும் செப்டம்பர் 17 கடைசி ஓணம் பண்டிகையும் நான்கு நாட்கள் பண்டிகையாக திருவோணம் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு காரணமாக கேரளா அரசு திருவோணம் பண்டிகையைக் கொண்டாடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது.

இருந்தாலும் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி ஏற்கெனவே அஸ்தம் நட்சத்திரம் முதல் நடந்து வருகிறது. திருவோணம் பண்டிகையையொட்டி இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சபரிமலை சன்னிதான நடையை திறந்து வைத்தார்.

பக்தர்களுக்கு ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து பஸ்பப் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று வேறு பூஜைகள் ஏதும் இன்றி இரவு நடை அடைக்கப்பட்டு நாளை செப்டம்பர் 14 முதல் சபரிமலை ஐயப்பனுக்கு திருவோணம் பண்டிகை விழா மையபிஷேகம் சிறப்பு பூஜை வழிபாடுகள் இரவு படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் செப்.15ல் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் செப். 14, 15, 16, 17ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.

தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை நெய் அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் பம்பை நதியில் தண்ணீர் செல்கிறது. பக்தர்கள் பம்பை நதிக்கரையோரம் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் முக்கியப் பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. திருவனந்தபுரம், புனலூர், செங்கனூர், கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

ரயிலில் வரும் பயணிகள் சென்னையில் இருந்து செங்கோட்டை வழி கொல்லம் செல்லும் ரயிலில் புனலூரில் இறங்கினால், புனலூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பைக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம், மதுரை – குருவாயூர் ரயில்களில் புனலூர் வரை பயணித்து, உணவுகளில் இருந்து பஸ் அல்லது டூரிஸ்ட் வாகனம் மூலம் பம்பைக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இந்த மாதம் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும் வனப்பகுதியில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது!

தேசிய அபாயத்தின் சிந்தனைத் துளியாக… ஒரு கவிதை!

christian school killed a girl - 2026

நண்பர் B.R. மகாதேவனின் கவிதை ஒன்று


அர்ச்சனைத் தட்டு ஏந்தி பக்தி சிரத்தையுடன்
அம்மனை வழிபடச் செல்கையில்
கருவறைக்குள் எரியும் ட்யூப் லைட்
நம்மைக் கதிகங்க வைப்பதில்லை
(யார் இதை மாட்டியிருப்பார்கள்?
யார் இதைப் பழுது பார்ப்பார்கள்?)

பிரகார இருட்டு அறையில் பூட்டப்பட்ட
கருவறை குத்து விளக்குகள் முன்னால்
நம் தெய்வங்கள் நீர் கோத்த விழிகளுடன்
அடைந்துகிடப்பதும் நமக்குத் தெரிவதில்லை.

பொட்டு வைத்து பூச்சூடி பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள்
பாழ் நெற்றியுடன்
விரித்த தலையுடன் திரும்பிவருவதை
வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்

குடும்பத்துடன் குதூகலமாக நேரத்தைக் கழிக்க
குத்துப் பாடல்கள் நிறைந்த திரைப்படங்களுக்குச்
சென்றுவிட்டுத் திரும்புகையில்
குழந்தைகளின் கழுத்தில்
குட்டிக் குருசு முளைப்பதைக் கவனிப்பதே இல்லை.

குல தெய்வக் கோவிலுக்குப் புறப்படும்
நீண்ட நெடிய பயணத்துக்கான வாடகை டாக்ஸியில்
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டிருப்பதைக் கவனிப்பதே இல்லை

(புனித யாத்திரையின் முதல் காணிக்கையே தசம பாகம் தான்)

ஒருவேளை கவனித்து
அடுத்த முறை எச்சரிக்கையுடன்
இந்து பெயருள்ள வாகன ஓட்டியைத் தேர்ந்தெடுத்து அழைத்தால்
அவருக்கான வங்கி கணக்கில் குல்லா மின்னும்
(அது நம் தலையில் வைத்த குல்லாதான்)

மருத்துவப் பரிசோதனைகளுக்கு முன் கழற்றப்படும் தாலி
விளக்கேற்றும் மாலை நேரங்களில் மூடப்படும்
வீட்டுக் கதவுகள்…

விழாக்காலங்களில் நடு வீட்டில் கேட்கும்
தொலைகாட்சி ஒப்பாரிகள்
விரத நாட்களில் அறிவிக்கப்படும் பிரியாணி ஆஃபர்கள்
சுற்றுலா மையங்களாகும் மலைக் கோவில்கள்
டிசம்பர் மாதம் முழுவதும்
கிறிஸ்மஸ் கொண்டாடும் கார்ட்டுன் கதாபாத்திரகள்..

மதச்சார்பற்ற அரசுகளின் முடிவற்ற சலுகைகள்
மூன்று பக்கம் கடல்… நான்கு பக்கம் க்ரிப்டோக்கள்
கண்டத் தட்டுகள்
கண்ணுக்குத் தெரியாமல் நகர்கின்றன

பனி மலை உருகி
கரைபுரண்டு ஓடிய நதி
மெள்ள மெள்ள வற்றுகிறது.
முழுவதும் வற்றினாலும்
சூட்சும நதியாக ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

ஆனால்
கண் முன் ஓடும் நதிகள் எல்லாம் கூவங்களாகிவருகின்றன
பச்சிளம் பாலகனைச் சுற்றிலும் பாய்மார்கள்.
சிந்து சாகரம் அரபிக் கடலாகிவிட்டது
நம் சிந்தையில் உறைக்கவே இல்லையே
இந்துஸ்தான் இந்தியாவானதும் புரியவே இல்லையே.

ஆனால்
இந்துஸ்தான் பெயர் மீண்டும் சூட்டவும்படலாம்.
(இந்தோனேஷியாவில் பெயர் பலகைகளில் எல்லாம்
இன்றும் இந்து மயம்தானே).

காவிக் கொடி பறக்க வேண்டிய கோட்டையில்
வெண்ணிறக் கொடி பறந்தால் வேறென்ன நடக்கும்?
தர்ம சாஸ்திரம் கோலோச்சவேண்டிய தேசத்தில்
ஆப்ரஹாமிய அரசியல் சாசனம் கோலோச்சினால்
தேசம் இருக்கும்

கட்சிகள் ஜெயிக்கும்
வளர்ச்சிகள் இருக்கும்
நாமும் இருப்போம்
ஆனால்,
நாமாக இருக்கமாட்டோம்.


அனேகமாக நண்பர் இது எதனால் உருவானது என்கிற அடிப்படையை மறந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு மீண்டுமொருமுறை நினைவூட்ட விழைகிறேன்.

அடிப்படையில் தமிழ்ச் சமுதாயம் வென்றேடுக்கப்பட்ட ஒன்று. கடந்த எழுநூற்றைம்பது ஆண்டுகால வரலாறு இது. வெல்லப்பட்டு, மறைமுக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சமுதாயம் மீண்டும் எழுந்துவர நீண்ட, நெடிய, ஒன்றுபட்ட பிரயத்தனங்கள் வேண்டும். அந்த ஒன்றுபட்ட பிரயத்தனங்களைச் செய்ய அவர்களிடையே தலைவர்கள் உருவாக வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமும் எந்த வேறுபாடுமின்றி அவரின் பின்னே அணிவகுத்து நிற்பதும் அவசியம்.

ஆனால் இன்றுவரையில் அப்படி நடக்கவில்லை. அல்லது துல்லியமான திட்டமிடல்களுடன் அப்படி உருவாகாமல் பார்த்துக் கொண்டார்கள். அப்படியே உருவாகி வந்தாலும் அவரைக் கேலி பேசி, மட்டம் தட்டினார்கள். அதுதானே இன்றுவரையில் நடந்தது? இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது?

தன் மொழி, கலாச்சார, இலக்கிய, இலக்கண, குல, குடிப்பெருமை அறியாத சமூகம் பிழைத்துக் கிடத்தல் அரிதினும் அரிது. அதற்கு முக்கியமானது மொழி. ஒருவனுடைய மொழி அழிந்தால் அவன் அத்தனையையும் இழப்பான். மொழியறிவு இருக்கும்வரையில் அவன் தனது முன்னோர்களின் கடந்தகாலப் பெருமைகளை அறிந்து கொள்ளமுடிபவனாக இருக்கிறான். அந்த மொழி அழிந்தபின்னால் அவனுக்கும் அவனது முன்னோர்களுக்குமான தொடர்ப்பு அறுத்து எறியப்படுகிறது. கண்ணிருந்தும் குருடனாக அவன் மாறுவான்.

துல்லிய திட்டமிடல்களுடன் இன்றைக்குத் தமிழ் (ஏறக்குறைய) அழிக்கப்பட்டுவிட்டது. தன் கலாச்சார, குடிப்பெருமை அறியாமல் தாழ்வுமனப்பான்மையில் அவனை உழல வைத்தாகிவிட்டது. குடிகாரனாக, சினிமாப் பைத்தியமாக, போலி நாத்திகவாதியாக திக்குத் தெரியாமல் தடுமாறுகிற அவனை ஏதாவதொரு ஆபிரகாமிய மதம் ஈர்ப்பதும் எளிதாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் வெள்ளம் தலைக்குமேல் சென்றாகிவிட்டது. இனி அதனை திசைதிருப்புவது அத்தனை எளிதான காரியமில்லை.

ஏற்கனவே சொன்னபடி தன் வரலாற்றுப் பெருமை அறிந்த தலைவர்கள் தமிழர்களிடையே இருந்து உருவாகி வந்தால்தான் அது சாத்தியம். ஆனால் அப்படியானவர்களைத் தமிழர்களே ஏற்றுக் கொள்வதில்லைதானே? அண்ணாமலையை ஆட்டுக் குட்டி எனக் கேலி பேசுபவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தானே?

இந்தியா விடுதலை பெற்றபிறகு தமிழர்களை வழி நடத்து திறனுள்ள மூன்று சமூகங்கள்தான் இருந்தன. முதலாவது பிராமணர்கள், இரண்டாவது நாடார்கள், மூன்றாவது முக்குலத்தோர்கள்.

துரதிருஷ்டவசமாக முக்குலத்தோர் வெள்ளைக்காரனால் காயடிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் இன்னமும் சிறிதுகாலம் உயிருடன் இருந்திருந்தால் வரலாறு மாற்றம் கண்டிருக்கலாம். அது நடக்கவில்லை. அவருக்குப் பின்னர் திறமையான, தலைவர்கள் அங்கு உருவாகவில்லை. வந்தவன் எல்லாம் சுயநலவாதிகளாக, தங்களின் வரலாற்று பின்புலம் அறியாதவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ மதமாற்றம் முக்குலத்தோரையும் விட்டுவைக்கவில்லை.

அடுத்து நாடார்கள் துல்லியமாகக் குறிவைக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாறிய எவனும் தன் குல, குடிப்பெருமையைப் பேசுவதில்லை. கிறிஸ்தவம் அவனை அதிலிருந்து முற்றிலும் அன்னியப்படுத்துவதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறது. மிச்சமிருக்க ஹிந்து நாடார்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மந்தையை நோக்கி ஓடிப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியில் பிராமணர்கள். அவர்களுக்கு வரலாறும் தெரிந்திருந்தது. அதற்கும் மேலாக மந்தையிலிருந்து ஆடுகளை மீட்டுக் கொண்டுவருகிற சூட்சுமமும் தெரிந்திருந்தது. எனவே அவர்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்.

1960-களில் பிராமணர்கள் தமிழகத்தைவிட்டு அடித்துவிரட்டப்பட்ட பிறகே திராவிடம் தமிழகத்தில் காலூன்ற முடிந்தது என்பதினை நினைவில் கொள்ளுங்கள். சேம்சைட் கோல் போட்ட பிராமணர்களும் அந்த மாற்றத்தைத் துரிதப்படுத்தினார்கள் என்பது வரலாறு.

இதையெல்லாம் நான் எழுதினால் பலருக்கு எரிச்சலாக இருக்கலாம். அதனைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

இந்தியாவெங்கும் பரந்து விரிந்திருக்கும் சனாதனம் என்கிற ஆலமரத்தின் வேர் தமிழகத்தில் இருக்கிறது. அந்த வேர்களை வெட்டினால் சனாதனம் சரிந்துபோகும் என்கிற நீண்டகாலத் திட்டம் இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது. அதனை எதிர்க்கும் சக்தி பிரிந்து கிடந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகும் அடிமைகளுக்கு இல்லை.

அவர்களால் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும்.

  • பி.எஸ். நரேந்திரன்

தேசிய நெல் திருவிழா: 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு!

traditional paddy farmers - 2026
#image_title

அலங்காநல்லூரில் தேசிய நெல் திருவிழா -150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் கிரியேட் – நமது நெல்லை காப்போம் அமைப்பின் சார்பில் 18 ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா நடைபெற்றது. மதுரையைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயிகள், 50க்கும் மேற்பட்ட தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கிரியேட் அமைப்பின் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமை தாங்கி நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளதை பற்றி கூறினார்.

பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரியேட் அமைப்பின் “வெற்றிக்கு வித்திடும் இயற்கை வேளாண்மை” புத்தகத்தை வெளியிட்டார்.

பாரம்பரிய நெல் சாகுபடி நன்மைகளான கலை கட்டுப்பாடு, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல்திறன், அதன் ஊட்டச்சத்து, மற்றும் மருத்துவ பயன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீடு, மற்றும் மண்வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் நேர்மையான தாக்கத்தை பற்றி கூறினார்.

மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மை துறை விவசாயிகளுக்கு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் பரணிதரன் விவசாயிகள் சாகுபடிக்கு பின் தங்கள் விளை பொருட்களை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் முறை குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

விழாவில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ஆத்தூர் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்கார், சீரகச் சம்பா, கருங்குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளை கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டன.

செமிகான் இந்தியா 2024 மாநாடு: அப்படி என்ன ஸ்பெஷல்?

IMG 20240912 WA0007 - 2026
#image_title

கோலோச்சும் பாரதம்

பலரும் பலராலும் எதிர்பார்த்த ஒரு மாநாடு – செமிகான் இந்தியா 2024 கலந்தாய்வுக் கூட்டம், நேற்று இன்று நாளை நடந்து கொண்டிருக்கிறது!

அதென்ன செமிகான்.?

இன்றைய இணைய உலகின் அத்தியாவசிய உயிர்நாடி இந்த செமிகண்டக்டர் சிப்செட்கள் தான். அதிலும் நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட சூப்பர் செமிகண்டக்டார் தான் இன்றைய இணைய உலகை கட்டி ஆள்கிறது. இதில் இன்றைக்கு தைவான் முன்னோடியாகத் திகழ, தாமதமாக விழித்துக் கொண்ட அமெரிக்கா ஆலாய்ப் பறக்கிறது. ஒன்றும் பருப்பு வேகவில்லை. காரணம் பெய்ஜிங் உள்ளே புகுந்து அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தகவல் உண்டு. சீனர்கள் அமெரிக்கர்களை முந்தி இருக்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் அமெரிக்கா கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பின் தங்கி இருப்பதாக புள்ளி விவர தரவுகள் சொல்கின்றன.

அப்படி என்றால் என்ன மாதிரியான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும்?!
இந்த விஷயம் புரிந்து கொள்ள வசதியாக, உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் ஐபோன் தனது ஐபோன் 16 வெளியிட இருக்கிறார்கள். அதைக் குறித்துப் பார்த்தால் புரியும்.

ஐபோன் 16ல் என்ன மாதிரியான மேப்படுத்தல்களை அதில் புகுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஒரேயொரு பட்டனை அதிகப் படியாக சேர்த்து விலையை மாத்திரம் ஏகத்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள். சரி அந்த பட்டன்- சிறப்பு வாய்ந்த AI தொழில்நுட்ப பண்புகளை சேர்த்திருப்பதாக சொன்னாலும், அதனை கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனம் ஏற்கெனவே தங்களுடைய செல்போன் தயாரிப்பில் இணைத்து விட்டன. ஆக ஆப்பிள் ஐபோன் 16 அநேகமாக நொண்டும் என்கிறார்கள் நுகர்வோர் வட்டாரங்களில்! இது ஒரு சான்று!

இந்த உலகில் இன்றைய தேதியில் சாமானியனின் கைகளில் இருக்கும் அதிகபட்ச தொழில்நுட்பத் திறன்களை கொண்ட ஒன்று என்றால் அது செல்போன்தான். அதில் பிரதான பங்கு வகிக்கிறது அதன் சிப் செட்.

இன்றைய தேதியில் 5 நானோ மீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட் தான் இந்த உலகை தன் வசம் வைத்திருக்க, நம் இந்தியாவில் டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனத்தில் 3 நானோ மீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட்டை உருவாக்கி தயாரித்து, தயார் செய்ததை உலகின் முன்னணி நாடுகளின் உள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு கொடுத்து அதன் செயல் திறனை சோதித்துக் கொள்ள சொல்ல, பார்த்தவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள். அதி அற்புதமான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக அவர்கள் சிலாகித்து வருகிறார்கள்.

ஆக நம்மவர்களுக்கு இது ஒரு மைல் கல் சாதனை இது!

இதனோடு கூடவே 6G தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஆன்ட்ராய்டு வெர்ஷன் 17 உருவாக்கி அதனை காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

3 நானோமீட்டர் அலகு கொண்ட சிப் செட்டில் 6G தொழில்நுட்ப பண்புகளில் இயங்கும் இணைய தளம், தற்போதைய உலகின் முன்னணி ஜப்பானிய தொழில்நுட்ப பண்புகளை ஓரம் கட்டி முன்னிலை பெற்று விடும் என கணித்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் ஜப்பான் மட்டுமே 400 டெராபிட்டில் இயங்கும் இணையதள வசதிகளைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. நம்மூர் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 12000 படங்களை நொடிப்பொழுதில் தரவிறக்கம் செய்யும் வல்லமையை இது காட்டுகிறது.

செமிகண்டக்டர்களின் பயன்பாடு ஏதோ செல்போன்களுக்கு மாத்திரமே என நினைத்துக் கொண்டு விடவேண்டாம். மின்னணு உபகரணங்கள் அத்தனையிலும் இந்த செமிகண்டக்டார்ஸ் உள்ளது.மின்னணு சாதனங்கள் இன்று உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது கவனித்தில் கொண்டால் இதன் நீள வீச்சு புரியும்.

நம்மவர்கள் இன்னமும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி இந்த செமிகண்டக்டர்ஸை பாதிப்படைய செய்யும் மின்காந்த புலங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உபகரணங்களையும் உருவாக்கி சோதனை செய்து வருகிறார்கள். நவீன உலகின் போர்முனையில் இனி மின்னணு சாதனங்களே கோலோச்சப்போகிறது என்பதை அனுமானித்து அதற்கேற்ப முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நம்மவர்களின் துல்லிய திறனுக்கான எடுத்துக்காட்டாக நிலவுக்கு பல நாடுகளிலும் செயற்கைக்கோள்களை அனுப்பியிருந்தாலும், நிலவில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தது நம் இந்திய தேசம்தான். அதுபோலவே பலரும் அங்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய போதிலும் நாம் எடுத்த புகைப்படங்களுக்கும் அவர்கள் எடுத்தவைக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது.

ஆக இதற்கான விதை ஊன்றப்பட்டது இன்று நேற்று அல்ல; முளைவிட்ட துளிர் மட்டுமே தற்போது நம் கண்களுக்கு தெரிகிறது! இன்னமும் வளர வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை மட்டுமே நாம் சொல்வோம். இது போல் நிறைய இருக்கின்றன! அவற்றை வரும் நாட்களில் பார்த்து விடலாம். அப்போது தான் நம் இந்திய தேசத்திற்கெதிரான சதியில் யாரெல்லாம், எவ்வாறெல்லாம் பங்கு கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அப்போதுதான் ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களோடு சோரம் போன ராகுல் வின்சியை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அப்போது தான் தரங்கெட்ட தற்குறியை எவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்கிற சாமானியனின் கேள்விக்கு பதில் கிடைக்கக்கூடும்!

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

மின் வாகன ஊக்குவிப்பு: பிரதமரின் இ-டிரைவ் திட்டத்துக்கு ரூ.10.9 ஆயிரம் கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்!

ebus seva - 2026
#image_title

மின் வாகனங்களின் பெருக்கத்தை ஊக்குவிக்கவும், மின்வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்கவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிரதமரின் ‘இ-டிரைவ்’ திட்டத்தின்கீழ் ரூ.10,900 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, மின்சார காருக்கு இனி மானியம் இல்லை என்றும், மின்சார ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்களுக்கு ஆதரவு அளித்தும், பிரதமரின் ‘இ – டிரைவ்’ திட்டத்துக்கு நிதி ஒதுக்கியும்  அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

24.79 லட்சம் இருசக்கர மின் வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர மின் வாகனங்கள், 14,028 மின் பேருந்துகளுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி கட்டமைப்பை உருவாக்க ரூ.12,461 கோடி திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிராமப்புற போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்த 2024-25 முதல் 2028-29 நிதி ஆண்டு வரை ரூ.70,125 கோடி திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாகன மாசு குறைப்பு ஆகிய நோக்கங்களில், மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகன உற்பத்தி மற்றும் வாகனம் வாங்குவோரை ஊக்குவிக்க, 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பேம்’ திட்டம், கடந்த மார்ச் மாதம் வரை, ‘பேம்-2’ என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது. அடுத்ததாக ‘பேம்– 3’ திட்டம் அறிவிக்கப்படும் வரை, மின்சார வாகனங்களுக்கான மானியம் பேம்-2 திட்டத்தின் கீழ் தொடரும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதுதில்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ‘பேம்’ என்ற திட்டத்துக்கு மாற்றாக, பி.எம். இ – டிரைவ் என்ற பெயரில், மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை  மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது…  

பி.எம். இ-டிரைவ் திட்டம், அடுத்த ஒன்பது ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்துக்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அரசு 10,900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் வாயிலாக, மின்சாரத்தில் இயங்கும் 24.79 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள், 14,028 பேருந்துகளுக்கு மானியம் வழங்கப்படும். நாடு முழுதும் 88,500 பேட்டரி சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்கள், மின்சார ஆம்புலன்சுகள், மின்சார சரக்கு வாகனங்களின் உற்பத்திக்கு தேவைக்கான ஊக்கத்தொகை மற்றும் வாகன மானியமாக, இந்த தொகையில் 3,679 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மாநில போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு 14,028 மின்சார பேருந்துகளை வாங்க 4,391 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இ-ஆம்புலன்ஸ் எனப்படும் மின்சார ஆம்புலன்ஸ் சேவைக்கும், பேட்டரியில் இயங்கும் சரக்கு வாகனங்கள் தயாரிப்புக்கு மாறவும், தலா 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்… என்று தெரிவித்தார். 

ashwini vaishnav - 2026

‘பி.எம். இ-பஸ் சேவா-பேமென்ட் செக்யூரிட்டி மெக்கானிசம்’ என்ற திட்டத்தின்கீழ், 38,000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.இதற்காக ரூ.3,435 கோடி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் வாயிலாக, மின்சார வாகனத் துறைக்கு மொத்தம் ரூ.14,335 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  இது குறித்து தெரிவித்தபோது, 2015ம் ஆண்டு முதல் மின்சார கார் வாங்குவோருக்கு, பெட்ரோல், டீசல் கார்களைவிட விலை அதிகம் என்பதை கருத்தில் கொண்டு, மானிய சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அது கைவிடப்படுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் காருக்கும் மின்சார காருக்கும் விலையில் வேறுபாடு இல்லாமல் போகும். மேலும், மின்சார கார்களுக்கு இனி மானியம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார்.  தற்போது, பி.எம். இ-டிரைவ் என்ற புதிய, மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தில், மின்சார கார்கள் மற்றும் ‘ஹைபிரிட்’ கார்களுக்கு மானியம் அறிவிக்கப்படவில்லை.  

சந்தையில் மதிப்பு உயர்ந்த ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட், அசோக் லேலண்ட்

மத்திய அமைச்சரவை முடிவு வெளியான நிலையில், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் ஆகிய எலக்ட்ரிக் வாகனத் துறையில் மற்ற வாகன உற்பத்தியாளர்களில் பங்குகள் வியாழக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் பட்டியலில் உயர்ந்து நின்றன. 

இரு சக்கர வாகனங்களை மையமாகக் கொண்ட துறைக்கான புதிய மானியத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்ததை அடுத்து. , இரு சக்கர, மூன்று சக்கர சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. 

உலகின் மூன்றாவது பெரிய வாகனத் துறையில் மின்சார இயக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கான மற்றொரு முயற்சியாக, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.10,900 கோடி EV மானியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement அல்லது PM E-Drive என அழைக்கப்படும் இந்தத் திட்டம், 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 மின்சார பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.3,679 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

மின்சார கார்களுக்கு 22,100 ஃபாஸ்ட் சார்ஜர்கள், எலக்ட்ரிக் பஸ்களுக்கு 1,800 ஃபாஸ்ட் சார்ஜர்கள் மற்றும் மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு 48,400 ஃபாஸ்ட் சார்ஜர்கள் நிறுவப்படும் என்று இந்தத்  திட்டம் முன்மொழிகிறது. இதற்கு ரூ. 2,000 கோடி செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் ஆம்புலன்ஸ்களுக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

PM E-Drive ஆனது (Hybrid) எலக்ட்ரிக் வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தியின் இரண்டாம் கட்டத்தைப் பின்பற்றுகிறது.  இந்தத் திட்டம், தற்போதுள்ள FAME திட்டத்தை மாற்றியமைக்கும், இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 25 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் மின்சார-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 மின்சார பேருந்துகளுக்கு ஆதரவளிக்கும்.

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் PM E-DRIVE திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது” என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

PM E-DRIVE ஆனது 88,500 சார்ஜிங் தளங்களையும் ஆதரிக்கும் என்று வைஷ்ணவ் கூறினார்.

மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் இ-மூன்று சக்கர வாகனங்களுக்கு PM E-Drive மானியத்தை எவ்வாறு பெறலாம்?

கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) EV வாங்குபவர்களுக்கு டிமாண்ட் சலுகைகளைப் பெற மின்-வவுச்சர்களை அறிமுகப்படுத்துகிறது. EV ஐ வாங்கும் போது, ​​வாங்குபவருக்கு ஆதார் அங்கீகரிக்கப்பட்ட மின்-வவுச்சரை ஸ்கீம் போர்டல் உருவாக்கும். மின்-வவுச்சரைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு வாங்குபவரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பகிரப்படும்.

EV வாங்குபவர் மின்-வவுச்சரில் கையொப்பமிட்டு, மானியத்திற்காக டீலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். டீலர் இ-வவுச்சரில் கையெழுத்திட்டு PM E-DRIVE போர்ட்டலில் பதிவேற்றுவார். கையொப்பமிடப்பட்ட மின்-வவுச்சர் எஸ்எம்எஸ் மூலம் வாங்குபவர் மற்றும் டீலருடன் பகிரப்படும். கையொப்பமிடப்பட்ட மின்-வவுச்சர் OEM (அசல் உபகரண உற்பத்தியாளர்) திட்டத்தின் கீழ் கோரிக்கை ஊக்கத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கு அவசியமாக இருக்கும்.

மின்சார இரு சக்கர வாகனங்கள், இ-மூன்று சக்கர வாகனங்கள், இ-டிரக்குகள் மற்றும் இ-ஆம்புலன்ஸ்கள் தத்தெடுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக ₹3,679 கோடி மதிப்புள்ள கோரிக்கை ஊக்கத்தொகைகள்/மானியங்களை இத்திட்டம் ஒதுக்கியுள்ளது.

14,028 இ-பஸ்கள் வாங்குவதற்கு ₹4,391 கோடியும், இ-ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்த ₹500 கோடியும் அரசு வழங்கியுள்ளது.

இந்தத் திட்டம் இ-டிரக்குகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது மற்றும் அவற்றை தத்தெடுப்பதை ஊக்குவிக்க ஊக்கத்தொகையாக ₹500 கோடியை ஒதுக்கியுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

narendra modi in parliament - 2026

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘ஆயுஷ்மான் பாரத்’ எனும் பொதுமக்களுக்கான சுகாதார நலத் திட்டத்தை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் என்று கூறப்பட்டது. இதுவரை, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், இத்திட்டத்தில் மக்கள் பயனடைந்துள்ளனர்.

முதலில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது சமூக பொருளாதார வரம்பு நிலைகளைக் கடந்து 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ayushman card - 2026

முன்னதாக, ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்’ என்று, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில்,  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தால் 4.5 கோடி குடும்பங்களில் உள்ள 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், 6 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும். 

‘சமூக – பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும். தகுதியான மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.

 இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறும் மூத்த குடிமக்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். 

மத்திய அரசின் பிற சுகாதாரத் திட்டங்களில் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள், ஏற்கனவே உள்ள திட்டத்தில் தொடரலாம் அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.