37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை அருகே, சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.
இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் “பரிக்சா பே சர்ச்சா” தலைப்பில், ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தியாவிற்காக எனும் முக தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகிய தலைப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரிடம் இருந்து கடிதம் வரப் பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மூலவரை வணங்கியபின் வெளியே வந்து வலமாக வரும்போது பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்ணாரக் கண்டு மகிழலாம். அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து நின்று அருமையை பறைசாற்றுகிறது.
கோயிலின் சிறப்புக்களை இணைதளத்தில் படித்துவிட்டு நேரில் காணச் செலவோருக்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே. கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் – வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை – சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சித் தருகிறாள். அபயவரதம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது.
சற்றுத் தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று “சிம்மக்கிணற்றை”க் காணலாம். இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன. உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது.
ஒன்பது கிரகங்களும் வான சாத்திர முறைப்படி ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன்; சுற்றிலும் எட்டு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது; ஒருபால் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம்வரும் கோலம் – மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும்; மன்னனார் என்பது திருமாலுக்குப் பெயர்.
அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.
இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராசேந்திர சோழன் கங்கை நீராட்டியதை நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985, 1986ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கும் ஸ்ரீ காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திரரால் வழிவகை செய்யப்பட்டு நடந்துவருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக திண்டிவனத்தை சுமார் மூன்று மணி நேரத்தில் அடைந்தோம். திண்டிவனத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக பெரம்பூர் வந்தடைந்தோம்.
இவ்வாறாக எங்களின் குலதெய்வக் கோயிலான கண்டியூர் வடிவுடையம்மனைத் தரிசித்துவிட்டு, பல திருக்கோயில்களையும் பார்த்துவிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.
ஐப்பசி மாத பூஜைகளுக்கு இன்று உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.நாளை புதன் கிழமை ஐப்பசி மாத பூஜைகள் துவங்கி அக்22 வரை ஐந்து நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறுகிறது . ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் ஐயப்பன் கோயில் மளிகை புறம் கோயில் புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.
#image_title
ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. வரும் அக். 22ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலாக உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குத் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.
சபரி மலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும் அதைத்தொடர்ந்து தை மாதம் அங்கே மகரவிளக்கு பூஜை நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழ், மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும்.
அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை அக். 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜைகளும் நடக்காது. நாளை முதல் வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜையின் போது வரும் ஆண்டிற்கான மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக ஐயப்பன் கோவில், மாளிகைப்புறத்து அம்மன் கோவிலில் பணியாற்றும் மேல் சாந்தி தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து அவர் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும்.
தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, மாலை நடை திறந்து வரும் 11 ஆம் தேதி பூஜைகள் நடைபெறும். அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவ. 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை மற்றும் மாளிகப்புரம் புதிய மேல்சாந்தி தேர்வு நாளை சன்னிதானத்தில் நடக்கிறது.சீட்டு மூலம் மேல்சாந்தி தேர்வு செய்ய பந்தளம் அரண்மனையை சேர்ந்த வைதே மற்றும் நிருபமா ஜி. வர்மாவும் பந்தளம் கைப்புழா ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று சபரிமலை வந்தடைந்தனர் .
மதுரை திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி ரூ1500கோடி நிதி ஒதுக்கீடு செய்து வேகமாக பணிகள் நடந்து வரும் நிலையில் ராஜபாளையம் – செங்கோட்டை நான்கு வழி சாலை அமைக்கரூ.2,409 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜபாளையம் – செங்கோட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2,409 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்க உள்ளது.
திருமங்கலம் – கொல்லம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜபாளையம் – செங்கோட்டை சாலை உள்ளது.
விருதுநகர் தென்காசி மாவட்டத்தில் தளவாய்புரம், சிவகிரி, வாசுதேவநல்லுார், புளியங்குடி, கடையநல்லுார், தென்காசி, இலஞ்சி வழியாக பயணிக்கும் இச்சாலை, 72 கி.மீ., நீளம் உடையது.
இச்சாலை, தற்போதைய வாகன போக்குவரத்துக்கு ஏற்ப அகலமாக இல்லை. பல இடங்களில் அபாய வளைவுகள் இருப்பதால், அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகின்றன. இச்சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
நடப்பாண்டு பிப்., மாதம் மத்திய பட்ஜெட்டில், சாலை விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை அனுமதி உள்ளிட்ட பணிகளால், சாலை விரிவாக்கத்தை துவங்குவது காலதாமதமாகி வந்தது.
தற்போது, சாலை விரிவாக்க பணியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கி உள்ளது. ‘பாரத்மாலா பரியோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், இச்சாலை பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துஉள்ளது.
இரண்டு, ‘பேக்கேஜ்’களாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் பேக்கேஜ்க்கு, 1,090 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், 32 கி.மீ., சாலை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யப்படும்.
இரண்டாம் பேக்கேஜுக்கு, 1,319 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த நிதியில், 32 கி.மீ., சாலை, விரிவாக்கம் செய்யப்படும்.
இப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது. சாலை விரிவாக்க பணி டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ராஜபாளையம் – செங்கோட்டை இடையிலான பயண நேரம், 1 மணி 45 நிமிடங்களாக உள்ளது.
சாலை விரிவாக்க பணி முடிந்தால், பயண நேரம், 30 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளா புனலூர் அலிமுக்கு முதல் அச்சன் கோயில் செங்கோட்டை வரை சாலை அகலப் படுத்த கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த சாலை பணிகள் முடிந்தால் குற்றாலம் சபரிமலை மற்றும் கேரளா செல்லும் பயணிகள் பெரும் வரப் பிரசாதமாக இருக்கும்
சிவகாசி அருகே இன்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி -இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பெண் தொழிலாளர்கள் உடப்ட 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ளது ரெங்கபாளையம். இங்கு சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையின் வளாகளததில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது. திடீரென தீயானது பட்டாசு தயார் செய்யும் பகுதிக்கு சென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை பிற பகுதிகளுக்கு செல்லவிடாமல் போராடி தடுத்து நிறுத்தினர்.
10 பேர் பலி – இந்த வெடி விபத்தில் அழகாபுரி காந்தி நகரைச் சேர்ந்த முனியப்பன் மனைவி அனிதா (40), லட்சுமியாபுரம் பகுதியச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பாக்கியம் (35), அதே பகுதியைச் சேர்ந்த சுப்புக்கனி மனைவி குருவம்மாள்(55), வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த சீனிராஜ் மனைவி மகாதேவி(50), அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பஞ்வர்ணம்(35), முத்துராஜ் மகன் பாலமுருகன்(30), தாளமுத்து என்பவர் மனைவி தமிழ்ச்செல்வி(55), எஸ்.அம்மாபட்டியைச் சேர்ந்த முத்துராஜ் மனைவி முனீஸ்வரி(32), செவலுர் அசேபா காலனியைச் சேர்ந்த மகேந்திரன் தங்கமலை (33), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி இந்திரா (50) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் – இந்த விபத்தில் அழகாபுரியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னுத்தாயி(45). கிருஷ்ணன்கோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சின்னத்தாய்(34) ஆகியோர் படுகாயமடைந்தனர், இவர் இருவரும் திருவில்லிபுத்துர் அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வருகின்றனர், எஸ்,பி ஆய்வு – விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.
ரூ,10லட்சம் நிவாரணம் வழங்கிடுக சிஐடியு அறிக்கை – இந்த விபத்து குறித்து சிஐடியுவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பி.என்,தேவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது – சிவகாசியில் கிச்சநhயக்கன்பட்டி மற்றும் ரெக்ஙபாளையம் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர், உயிரிழந்த அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் சிஐடியு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது, அதே நேரத்தில் பட்டாசு ஆலை நிர்வாகங்கள் தொடர்ந்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் இந்தகோர விபத்து நடைபெற்றுள்ளது. அதாவது உயிரிழந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டிய நிலை உள்ளது, இந்த கொடூர விபத்தில் காயம் அடைந்தவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டுகிறோம், மேலும் விபத்துக்கு காரணமான பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் மற்றும் இதை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ,10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பட்டாசு ஆலை நிர்வாகமும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சிஐடியு/விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகிறது,
செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விழா கமிட்டி தலைவா் தங்கையா தலைமைதாங்கினார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராமநாத் சாய் சித்தா மருத்துவமனை மருத்துவா் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
அதனை தொடர்ந்து சாய் கிளினிக் சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு குடிநீரை செங்கோட்டை அரசு ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவா் ஹரிஹரன் மருத்துவர் சிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னா் அம்மையப்பர் திருவாசக குழு தலைவா் திருவாசகி சிவபகவதி மற்றும் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயம் சார்பில் இன்று முதல் நவராத்திரி திருவிழா துவங்கப்பட்டு 10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடத்தப்படும் விழா ஏற்பாடுகளை விழாகமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனா்.
செங்கோட்டையில் சித்தர் நெறி மறுமலா்ச்சி பேரவை ஆலோசனைக் கூட்டம்.
செங்கோட்டை ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சித்தர் நெறி மறுமலா்ச்சி பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவா் சசிவர்ணகார்த்திக் தலைமைதாங்கினார். மாநிலச்செயலாளா் அஜீத்குமார் கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவா் நிதிஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்ட செயலாளா் முத்துமாரி அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னா் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அதில் இந்து சமயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நமது நாட்டின் பாரம்பரிய கலை இலக்கியம் பண்பாடுகளை பாதுகாத்தல், சமய கல்வி போதித்தல்,ஆலயங்களை பாதுகாத்தல், இந்து சமயத்திற்கான நலவாரியம் அமைக்க அரசுக்கு வலியுறுத்தல். சித்த வைத்தியத்தை இந்து சமய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தல் குருகுல கல்வியை மீட்டெடுத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாநில செயலாளா் மணிமகேஷ்வரன், மற்றும் நிர்வாகிகள் கேப்டன் டிஎஸ் சாமிநாதன், கோபக்குமார், சிவக்குமார், அக்ரிசங்கரலிங்கம், டிவி.திருமால், குருவாயூர்கண்ணன், முருகையா, மாவட்ட நிர்வாகி சிவக்குமார், சக்திவேல், தங்கராஜ், மகாலிங்கம், மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி மகேஷ்வரன் நன்றி கூறினார்.
செங்கோட்டையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
செங்கோட்டை பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரன்வாஞ்சிநாதன் சிலை முன்பு வைத்து செங்கோட்டை வட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடந்தது.
பேரணியை வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமைதாங்கி துவக்கி வைத்தார். பேரணியில் எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் நுாறு பேர் கலந்து கொண்டனா்.
பேரணி வாஞ்சிநாதன் சிலை முன்பு துவங்கி வட்டாட்சியா் அலுவலகம் வளாகம் சென்று நிறைவடைந்தது. பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனா்.
நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ராஜமணி, தேர்தல் தனித்துணை தாசில்தார் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா்கள் மாடசாமி, சரவணன், கிராம நிர்வாக அலுவலா்கள் ஆயிஷாள், காளிச்செல்வி கிராம நிர்வாக உதவியாளா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செங்கோட்டை காவல்துறையின் செய்திருந்தனா்.
தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை, தனது 3ம் கட்ட பாத யாத்திரையை அவிநாசியில் கொட்டும் மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்து, மக்களை சந்தித்தார். அப்போது, ‘கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. கோவிலுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது’ எனக் கூறினார்.
தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தமிழகத்தில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரையை நடத்தி வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக அவரது பாத யாத்திரை நடந்து முடிந்துள்ளது. சிறிது இடைவெளிக்கு விட்டு, அரசியல் சலசலப்புக்குப் பின், குறிப்பாக அதிமுக., கூட்டணி முறிவுக்குப் பின்னர் அவரின் 3ஆம் கட்ட பாதயாத்திரை அக்.16 இன்று தொடங்கியது.
பாஜக.,வினருக்கு செல்வாக்கு மிக்க கொங்குப் பகுதியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, 19ம் தேதி பல்லடம், 20ம் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். இன்று தொடங்கிய பாதயாத்திரையில், மத்திய அமைச்சர்கள் பியுஷ்கோயல், எல்.முருகன், பாஜக., சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாத யாத்திரை தொடங்கியதும், அந்தப் பகுதிகளில் கனமழை கொட்டியது. மழையைப் பொருட்படுத்தாமல் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி பாத யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுக்கு பாஜக., தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யாத்திரையின் போது நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “சனாதன விவகாரத்தில் உதயநிதிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்கிறார். ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். தமிழகத்தின் இளம் தளபதி அண்ணாமலை, நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, பிரதமருக்கு பின் அண்ணாமலை உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
அண்ணாமலை பேசியபோது, கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருடன் ஹிந்து அறநிலையத்துறை தான். கோவிலுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி சொன்னதை பொய் என்று கூறும் ஸ்டாலின்தான் பொய் சொல்கிறார் என்று பேசினார்.
அவர் பேசிய விவரங்களை, அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்….
இன்றைய #EnMannEnMakkal பயணம், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமான, எம்பெருமான் அவிநாசியப்பர் காத்து வரும் அவிநாசியில் இனிதே நடந்தேறியது. மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு L முருகன் அவர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவிநாசி என்றால் அழிக்க முடியாதது என்று பொருள். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் அவிநாசி ஈஸ்வரரைப் போற்றி சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடிய தலம் இது. காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகள் புண்படுத்துவதும் தொடர்கிறது. கோவில்களில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையே கொள்ளை அடிக்கிறது. இதைத் தான் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டி பேசினார். 1985-1987 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், இந்து அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களுக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இப்போது 3.25 லட்ச ஏக்கர் நிலங்களே உள்ளன. 2 லட்ச ஏக்கர் எங்கே போனது?
கோவிலையும், கோவிலின் சொத்துக்களையும் பாதுகாக்க துப்பில்லாத அரசுக்கு கோவிலில் என்ன வேலை? மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 361 சிலைகள் மற்றும் பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. கோவிலை பாதுகாப்பதை பற்றி பேச நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. கோவில் பாதுகாப்பில் கோட்டை விட்ட அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பாசன மேம்பாட்டிற்காக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய நிதி 2962 கோடி ரூபாய். அத்திக்கடவு அவிநாசி திட்டம், 65 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் 2019 பிப்ரவரி 28 ல் 1652 கோடி மதிப்பில் திட்டம் பூமி பூஜை போடப்பட்டு 02-05-2021 வரை 16 மாதத்தில் 83% பணிகள் நிறைவடைந்தது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த 28 மாதங்களில், மீதமுள்ள 17% பணிகள் முடிக்கப்படாமல், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
தமிழக நெசவாளர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசுப் பள்ளி சீருடை கொள்முதல், அரசு நூல் கொள்முதல் நிலையம், அதுமட்டுமல்லாது, திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளான, திருப்பூரில் கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதி, திருப்பூரில் சிறப்பு மின் வழித்தடம், திருப்பூரில் வர்த்தக மையம், திருப்பூரில் ESI மருத்துவமனைகள் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் வழங்கியுள்ளார். அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 28,323 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 3,65,331 வீடுகளில் குழாயில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. 1,66,352 வீடுகளில் இலவச கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளது. 45,344 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. மற்றவர்களுக்கும் 200 ரூபாய் மானியம் வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், திமுக சொன்ன 100 ரூபாய் மானியம் இதுவரை வழங்கவில்லை. 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,07,359 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 89,490 விவசாயிகள், கிஸான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள். 3850 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி திருப்பூர் பகுதி அருகில் இருக்கும் செவ்வூர் TMV-7 ரக நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.
வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, மக்கள் பேராதரவுடன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி பனிரெண்டாம் நாள் இலங்கை vs ஆஸ்திரேலியா லக்னோ – 16.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணியை (43.3 ஓவரில் 209, பதுன் நிசாங்கா 61, குசல் பெரேரா 78, சரித் அசலங்கா 25, ஆடம் சாம்பா 4/47, மிட்சல் ஸ்டார்க் 2/43, பேட் கம்மின்ஸ் 2/32, மேக்ஸ்வெல் 1/36) ஆஸ்திரேலிய அணி (35.2 ஓவரில் 215/5, மிட்சல் மார்ஷ் 52, லபுசேன் 40, இங்கிலிஷ் 58, மேக்ஸ்வெல் 38*, மதுஷங்கா 3/38) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் 125 ரன் அடித்த பின்னர் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ஆட்டமாக மாறியது. அவர்கள் அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து இலங்கை விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், மட்டையாளர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் எதிர்க்க முடியாத பந்துவீச்சில் தங்கள் விக்கட்டுகளை இழந்தனர்.
முதல் விக்கட்டுக்கான பார்ட்னர்ஷிப் தவிர 32 ரன் கொண்ட இரண்டாவது பார்ட்னர்ஷிப்புக்குப் பின்னால் இலங்கை அணியின் சிறந்த ஸ்டாண்ட் 12 ரன்களாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்காக, ஆடம் சம்பா 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இலங்கையின் புதிய கேப்டனும், சமீபத்திய மாதங்களில் சிறந்த பேட்டருமான குசல் மெண்டிஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.
தில்ஷான் மதுஷங்கா முதலில் ஒரு மெய்டன் ஓவரை வீசினார், பின்னர் அடுத்த ஓவர் இரட்டை விக்கெட் மைடன்-ஆக வீசினார். ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். பந்து வீச்சில் ஸ்விங் குறைந்தபோது, மதுஷங்காவின் பந்துகளையும் அடிக்க ஆரம்பித்தனர். மேலும் வேறு எந்த பந்துவீச்சாளரும் அவருக்கு இணையாகச் சிறப்பாக பந்து வீசவில்லை.
ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசேன் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளே வந்து தனக்குப் பிடித்த இலங்கை அணிக்கு எதிராக 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை 88 பந்துகளில் இலக்கை எட்ட வைத்தார். கடைசியில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
ஆடம் சாம்பா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலிய புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. நாளை தர்மசலா மைதானத்தில் நெதர்லாந்து அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் விளையாடுகின்றன.
அநேக அரசியல் கட்சிகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் இவை:
“காங்கிரஸ் தலைமை ஏற்கும் மத்திய ஆட்சியில் நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”
“பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டவர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதப்படி சலுகைகள் பெற ஏதுவாக, 50-சதவிகித இட ஒதுக்கீட்டு உச்சவரம்பானது சட்டத்தின் மூலம் நீக்கப்படும்”
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “நமது நாட்டின் ஏழை மக்களை உயர்த்திவிடும் ஒரு முற்போக்கான பலம் வாய்ந்த நடவடிக்கை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” என்றார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக ஏன் நமது அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள்? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களா? ஆம், அப்படித்தான்.
நாம் பிறந்த ஜாதி இரண்டு வகைகளில் நம்முடன் தொடர்புடையது. ஒன்று இயல்பானது. அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் சுய-ஜாதிப் பிரக்ஞை என்பது இயற்கையாக உண்டு. நமது ஜாதி மனிதர்களோடு – அதுவும் ஒரே பொருளாதார நிலையில் உள்ள மனிதர்களோடு – இருக்கும்போது நமக்குள் ஒரு நெருக்கத்தை நாம் ஒரே ஜாதியினராய் உணரலாம். ஜாதி நம் மக்களுக்கு இதமான, அவர்கள் விரும்புகிற, ஒரு அடையாளம்.
ஜாதியுடனான நமது இரண்டாவது வகைத் தொடர்பு சற்று சிக்கலானது. இந்தத் தொடர்பில் ஒவ்வொருவரும் ஜாதியைத் தாண்டி ஒரு தனி மனிதன் என்றிருப்பது நல்லது. நமது ஜாதியோடு நாம் ஒன்றி இருப்பதா, தள்ளி இருப்பதா அல்லது வேறுபட்டு நிற்பதா என்றும் நாம் பார்க்க வேண்டிய தருணங்கள் இருக்கும். ஒரு குடும்பத்தில் உள்ளது போல், ஒரு குழுவில் சரியும் இருக்கும், தப்பும் இருக்கும். அது போலத்தான் ஜாதிகளுக்குள்ளும்.
நமது ஜாதியுடன் நமக்குள்ள இரண்டாவது வகைத் தொடர்பில்தான் அரசியல்வாதிகள் எளிதாக நுழைகிறார்கள். குறிப்பாக, பின் தங்கிய அல்லது பிற்படுத்தப் பட்ட ஜாதி மக்களைப் பார்த்து, “உங்கள் ஜாதிக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள். உங்களைக் கைதூக்கி விட்டு, உங்களுக்கு அதிக விகிதத்தில் கல்விச் சேர்க்கைகள், அரசுப் பணியிடங்கள் கிடைக்க நாங்கள் வழி செய்வோம்” என்று அந்த அப்பாவி மக்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வருவதுதான் அரசியல்வாதிகளின் குறி.
இத்தகைய அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் குறி வைக்கும் அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன நினைக்க முடியும்? சிலர் சந்தேகம் இல்லாமல் நம்புவார்கள். சிலருக்கு இந்த விஷயமே புரியாது. இன்னும் சிலர், ‘நமது ஜாதிக்குத் துணை நிற்போம், நம் ஜாதி மக்கள் அனைவரையும் முன்னேற்றுவோம் என்கிறார்களே அரசியல்வாதிகள்? அந்த அரசியல்வாதிகளில் நமது ஜாதித் தலைவர்களும் இருக்கிறார்களே? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்று நாம் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் நமது ஜாதி மக்களுக்கு எதிராகவும் நமது ஜாதி நன்மைக்கு விரோதமாகவும் நாம் செயல்படுவதாக ஆகி விடுமோ? பேசாமல் இந்த அரசியல்வாதிகளை நாமும் வரவேற்போம்’ என்று எண்ணுவார்கள்.
அறியாமையும் ஏழ்மையும் நிறைந்த நம் நாட்டில் அநேகமாக அனைத்து ஜாதி மக்களும் அப்பாவி மக்கள் தான். அவர்களைப் பெரிய பெரிய குழுக்களாக வைத்து ஏய்க்கும் ஒரு கருவியாகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நமது அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள்.
நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சட்டம் நான்கு வித ஜாதிகளில் வைத்துப் பார்க்கிறது. ஒன்று, “எஸ்.சி” (SC) எனப்படும் பட்டியல் ஜாதிகள். இரண்டு, “எஸ்.டி” (ST) எனப்படும் பட்டியல் பழங்குடியினர் – அதாவது, அவர்களின் பல ஜாதிவகையினர். மூன்று, “ஓபிசி” (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – இவர்கள் பல்வேறு குறிப்பிட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்கள். நான்கு, இந்த மூன்றிலும் வராத பிற ஜாதிகள் – பேச்சு வழக்கில் இவை ‘முன்னேறிய ஜாதிகள்’ என்று சொல்லப் படுகின்றன. இவற்றில் முதல் மூன்று மட்டும் (எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி) இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஜாதிகள். அரசியல்வாதிகள் இந்த மூன்று வித ஜாதிகளில்தான் ஜோதியை ஓட்டு வடிவில் காணத் துடிக்கிறார்கள்.
கல்விச் சேர்க்கைகளிலும் அரசுப் பணி இடங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் ஜாதிகளாக மத்திய அரசு நாடு முழுவதற்கும் அறிவித்திருக்கும் ஜாதிகள் எத்தனை தெரியுமா? மாநிலங்கள் வாரியாகப் பிரித்துச் சொல்லப் பட்டிருக்கும் அவற்றைக் கூட்டிப் பார்த்தால் எஸ்.சி ஜாதிகள் 1,248, எஸ்.டி ஜாதிகள் 781, ஓபிசி ஜாதிகள் 2,479 என்பதாக அவை ஒட்டு மொத்தமாக 4,508 என்று இன்டர்நெட்டில் தெரிகிறது. இவற்றில் சில ஜாதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ளதாகும். இருந்தாலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடிட்டில் இடம் பெறும் ஜாதிகள் நிச்சயம் ஆயிரக் கணக்கில் உண்டு.
மாநில அரசுகளும் அவற்றுக்கான பணியிடங்கள், மாநிலங்களின் கீழ் வரும் கல்விச் சேர்க்கைகள், என்பதற்காகத் தனியாக ஓபிசி ஜாதிகளை அங்கீகரிக்கும் – மத்திய அரசுப் பட்டியலைவிட கூடக் குறைய இதில் ஜாதிகள் இருக்கும்.
சரி, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் போட்ட தீர்மானத்தின் அர்த்தம்தான் என்ன?
அந்தத் தீர்மானத்தின் படி, காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றால், இந்தியாவில் உள்ள மனிதர்கள் அனைவரும் என்ன ஜாதியில் எத்தனை பேர்கள் உள்ளார்கள் என்பதை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மத்திய அரசு குறிப்பெடுக்கும். அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கீழ் வரும் கல்விச் சேர்க்கை இடங்கள், மத்திய அரசுப் பணி இடங்கள் ஆகியவற்றை ஜாதி வாரியாகக் கூறு போட்டு, இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஆயிரக் கணக்கான ஜாதிகளுக்கு அந்தப் புதிய மத்திய அரசு வழங்கும்.
இட ஒதுக்கீட்டுக்கான ஜாதியினர் நமது மக்கள் தொகையில் கூட்டாக 75 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால், அதே சதவிகிதத்தில் கல்விச் சேர்க்கை இடங்களையும், அரசுப் பணி இடங்களையும் அந்த ஜாதி மக்களுக்கு அவர்களின் ஜாதி எண்ணிக்கை விகிதங்களின் படி இட ஒதுக்கீடாகத் தர வேண்டும் என்று சொல்கிறது காங்கிரஸ். இதைச் செய்து முடிக்க, தற்போது இட ஒதுக்கீட்டு இடங்களுக்காக சுப்ரீம் கோர்ட் விதித்திருக்கும் 50 சதவிகித உச்ச வரம்பானது புதுச் சட்டம் மூலமாக நீக்கப் படும், இதெல்லாம் சமூக நீதி என்பதும் காங்கிரஸின் நிலை. இப்படித்தான் மற்ற பல அரசியல் கட்சிகளும் சொல்ல வருகின்றன. இட ஒதுக்கீட்டை இப்படி உயர்த்தினால் சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது வேறு விஷயம்.
இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம் போதுமானதாக இல்லை. அதனால் நம் நாட்டினர் மேலே படிக்கவும் வேலை தேடியும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் என்று பல அயல் நாடுகளுக்குப் போகிறார்கள். அந்த நாடுகளில் நம் நாட்டினருக்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்தான் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதே போல் நம் நாட்டிலும் நமது இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலே அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் நமது பொருளாதாரத்தை நமக்கு வளர்க்கத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?
காங்கிரஸ் கட்சியின் – அது போன்று குரல் கொடுக்கும் பிற கட்சிகளின் – குறுக்கு சிந்தனையைப் பாருங்கள். நாட்டிலுள்ள 75 அல்லது 80 சதவிகித இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் படியாக நாட்டின் தொழில்துறையை வளர்க்கவும் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மாட்டார்களாம். அதற்கான நேர்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு, திட்டங்கள், திறன், திராணி, தலைமை எதுவும் இவர்களிடம் இல்லையாம். பதவியில் சுகித்தபடி இவர்களால் முடிவது என்னவாம்? யானைப் பசிக்கு சோளப் பொறியாக துளித் துளி எண்ணிக்கையில் உள்ள அரசுப் பணியிடங்களை நாட்டின் 75 அல்லது 80 சதவிகித ஜனங்களை அழைத்து “இந்தா உன் ஜாதிக்கும் உண்டு” என்று அங்கும் இங்கும் கொஞ்சம் தெளித்து விடுவார்களாம். இதற்கு சமூகநீதி என்று பெயராம்.
முன்பு தேச விடுதலைக்கும் நாட்டு நலனுக்கும் பாடு பட்ட காங்கிரஸ் கட்சி, இப்படித் தீர்மானம் போட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்க நினைக்கும் தலைமையிடம் சிக்கியிருக்க வேண்டாமே?
சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டு என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கீழஅணையும் கொள்ளிடத்திற்குப் பாலமும் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மதிலையும் இடித்துக் கற்களை எடுத்தனர்.
ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை. கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க வில்லையென்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது.
இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும். இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் – சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்) பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது. இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.
கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பே ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கு எட்டாதது. இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது. முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான்.
மூலவர் சிவலிங்கமூர்த்தி கிழக்கு நோக்கியுள்ளார், பேருருவம் 13 அடி உயரம்; ஆவுடையார் சுற்றளவு 60 அடி, ஒரே கல்லால் ஆனவை; விமானம் 160 அடி உயரம் – 100 அடி சதுரமானது. மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது. மூலவர் முன்பு நிற்குங்கால் – வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் – உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.
இதற்குச் சொல்லப்படும் காரணம், மூலவரின் அடியில் சந்திரக் காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக் காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.