தமிழகம்

தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்ரா தொடக்கம்!

சென்னை: தாமிரபரணி புஷ்கர பிரசார யாத்திரை இன்று காலை காஞ்சிபுரத்தில் தொடங்கியது.

சந்தன வீரப்பன் குறித்து உளவு சொன்னதற்கு இன்னும் பரிசு தரலையாம்: கோவை சண்முக பிரியா

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த தகவல்களை காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய-மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என கோவையைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக் கடைகளில் இனி ஸ்வைப்பிங் மிஷின்!

கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக்கடைகளில் இனி ஸ்வைப்பிங்மெஷின் வரும் டிசம்பர் இறுதிக்குள் அமல்படுத்தப்படுகிறது.இந்த திட்டம் சென்னையில் அடுத்த மாதமும், அதைத் தொடர்நது மற்ற மாவட்டங்களி்லும் டிசம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது....

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்

புது தில்லி: சபரிமலை தலத்தின் மரபுகளை மீறி, மத நம்பிக்கைக்கு எதிராக, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
- 2026

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்!

இது போல் தீர்த்த தலமான திருக்குற்றாலம் அருவிக் கரையில் நள்ளிரவு முதலே குவிந்திருந்த பக்தர்கள், அருவியில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, குற்றாலநாத ஸ்வாமி கோயிலில் தரிசித்து வழிபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.

சென்னையில் அமைகிறது இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட்! தமிழகத்தில் முதல் முயற்சி!

தமிழகத்திலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக அமையும் இதனை வரும் 10ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றுள்ளார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

சபரிமலை நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடுவேன் என்கிறார் சுரேஷ் கோபி!

சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகரும் எம்.பி,யுமான சுரேஷ்கோபி!
- 2026

Recent articles