தமிழகம்

யாரும் தீக்குளிப்பில் ஈடுபட வேண்டாம்: அன்புமணி உருக்கமான வேண்டுகோள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

#GoBackModi க்கு போட்டியாக டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouModi

டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

காவிரி விவகாரத்தில் நடவடிக்கை கோரி மோடியிடம் எடப்பாடி கோரிக்கை மனு!

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.  

காவலர் மீது கொலைவெறித் தாக்குதல்! கைதாகிறார் சீமான்? போலீஸார் குவிப்பு!

சென்னையில் இன்று பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்எல்ஏக்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனூடே சீமானை முந்தைய ஜாமீனில் வெளிவர இயலாத வழக்குகளில் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

போரினால் அல்ல, அன்பினால் வெல்வதே இந்தியாவின் வழி: பிரதமர் மோடி!

தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தொழில் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் தொழில்துறை மேம்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்தில் இந்த 2 வழித்தடங்கள் தான் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிக்கப் போகின்றன. தளவாட உற்பத்திக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளப் படும் என்று பேசினார் மோடி.

மேக் இன் இந்தியா; தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பிரதமரை வரவேற்ற அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறை திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.
- 2026

கறுப்புச் சட்டை; கறுப்புக் கொடி: கருணாநிதியின் மஞ்சள் துண்டில் மாற்றமில்லை!

இந்நிலையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயம், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல்., சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றம்!

இந்நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி சென்னையில் நடக்க இருந்த 6 போட்டிகள் திருவனந்தபுரம், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஆறு போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மோடி; வரவேற்ற முதல்வர்: எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி போராட்டம்!

எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ளார் மோடி. அவரை மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

பூ..ன்னும் சொல்லலாம், புய்ப்பம்ன்னும் சொல்லலாம்… நீ சொல்ற மாதிரியும் சொல்லலாம்! வாரியமா? ஸ்கீமா? யு.பி.சிங் அளித்த பதில்!

புது தில்லி: தமிழகம் சொல்வது போல் வாரியமா அல்லது கர்நாடகம் சொல்வது போல் திட்டமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறைச் செயலர் யு.பி.சிங், அட... பெயரில் என்ன இருக்கிறது.... காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் சரி, ஸ்கீம் என்றாலும் சரி, எல்லாமே ஏதோ ஒரு பெயர்தான். வரும் மே 3 ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் முக்கியம். அதைச் செய்வோம் என்றார்.

ஆண்டுகள் பல இழுத்தடிக்கும் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே மோடி விரும்புகிறார்!

பல ஆண்டுகளாக இருந்து அரசியல் ஆக்கப்பட்டு விட்ட காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றே மோடி விரும்புகிறார் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியுள்ளார்.

‘கள்ளத் தோணி’ புகழ் வைகோ கோழைத்தனம் பற்றி பேச தகுதியற்றவர்!

கள்ளத்தோணி புகழ் வைகோ கோழை, வீரம் என்று பேசுவதற்கே தகுதியற்றவர். பிரதமரைக் கோழை என்று கூறிய மதிமுக பொதுச் செயலர் வைகோவை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.சென்னை...
- 2026

Recent articles