இந்தியா

அரசு நலத்திட்ட உதவிகள் பெற ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது,  பாஸ்போர்ட் மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்டவை தற்போதைக்கு கட்டாயமல்ல என்றும், அதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வினாத்தாள் வாட்ஸ்அப்பில் லீக் ஆன சர்ச்சை: 2 தாள்களுக்கு மறு தேர்வு என சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்நிலையில், 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் நாள் ஒருவாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலாண்மை வாரியத்துக்காக தற்கொலை: அதிமுக., எம்பி பேச்சும் எதிர்வினைகளும்!

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும், ஆனால் இப்படி தற்கொலை என்றெல்லாம் சொல்லி மிரட்டுவது நன்றாக இல்லை என்று அவையில் பலர் கருத்து கூறினர். இருப்பினும் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறியதாக பின்னர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்னும் 3 நாட்கள்தான்?! அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் இணைப்புக்கான காலக் கெடு!

இதை அடுத்து, அரசு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சிடிஎஸ் வங்கிக் கணக்குகளை முடக்கியது வருமான வரித் துறை: ரூ.2,500 கோடிக்கு வரி ஏய்ப்பு!

சிடிஎஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், எல்லா வரியையும் முறையாக கட்டியுள்ளோம். வருமான வரித் துறை சட்டத்தை மீறிச் செயல்படுகிறது. வருமான வரித்துறை நடவடிக்கைகள், எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழில் நிறுவனங்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்று விளக்கம் அளித்தது. இதனிடையே வழக்கு விசாரணை முடியும் வரை மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டபடி மேலாண்மை வாரியம் ஒன்றையே ஏற்போம்: தமிழக அரசு உறுதி

இந்நிலையில் நேற்று கர்நாடகத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் தேதிக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தேர்தல் ஆணையர் அறிவித்தார். எனவே, உச்ச நீதிமன்ற கெடு முடிவடைவதால் காவிரிப் பிரச்னையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
- 2026

சினிமா க்ளைமாக்ஸ் போல் ‘திகில்’: பாலியல் முறைகேடில் ஈடுபட்ட 2 தருமபுரி இளைஞர்களை சுட்டுப் பிடித்த பெங்களூரு போலீஸ்!

இருவரும் தப்பி ஓடிவே போலீஸார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகள் 2 மர்ம நபர்களின் கால்களிலும் பாய்ந்ததில் இருவரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பின் இருவரையும் கைது செய்த போலீஸார், விசாரணையில், அவர்கள் தர்மபுரியை சேர்ந்த சங்கர்(வயது 25), செல்வகுமார்(26) என்பதும், பெங்களூரு பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

ஸ்டூடியோவில் வைத்து கத்திக் குத்து: கேரள ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷ் படுகொலை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கி ரசிகன் ராஜேஷை மர்ம நபர்கள் கூர்மையான கத்தியால் அவரது ஸ்டூடியோவிலேயே வைத்து குத்திக் கொன்று தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தேர்தல் தேதி அறிவிப்பு! மே 12ல் வாக்குப் பதிவு! காவிரி மேலாண்மை வாரியம் என்ன ஆகும்?

வேட்பாளர்கள் செலவு செய்வதைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும். மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்... என்று கூறினார்.

ஏப்ரல் 2 முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இவற்றைக் கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் ஏப்ரல் 2 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்தை ஏப்.2 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

என்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை ஏப்.2 வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை! வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

ஏப்.2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். எனவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால், அன்று பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூறினர்.
- 2026

Recent articles