இந்தியா

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் இலவச சலுகைகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

இந்த சலுகை வரும் 31-ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். ஏற்கெனவே ரூ.99 செலுத்திய உறுப்பினர்கள் மார்ச்31ஆம் தேதிக்குப் பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேநேரம், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பெங்களூருல் புழுதி கிளப்பிய ஆலங்கட்டி மழை

கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், திடீரென மழை பெய்துள்ளது பெங்களூருவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு பெங்களூரு பகுதியில் புழுதிக் காற்று பயங்கரமாக வீசியது.

சிகிச்சைக்கு ரயிலிலேயே அழைத்து வரப்பட்ட முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு!

லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள  மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். பின், மேல்  சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆந்திரா, தெலங்கானாவில் கடும் பணத்தட்டுப்பாடு

பெரும்பாலான ஏடிஎம்கள் மூடப்பட்டிருப்பதுடன், வங்கிகளிலும் பணம் எடுக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ரயில்வேயில் 90 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பம்

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் வரையில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் நிலைப்பாட்டில் உள்ள நியாயங்கள்!

இப்படியாக, மத்திய அரசின் குழப்ப நிலையை முன்வைத்து  மத்திய அரசின் செயலை நியாயப் படுத்தி முன் வைக்கப்படும் இன்னொரு கருத்து:உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னது என்று தமிழ் ஊடகங்கள் ஒரு செய்தியைப் பரப்பியுள்ளன.

தேசிய கீதத்துக்கு நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப் படுவதேன்?: இல.கணேசன் கேள்வி

பாராளுமன்றத்தில் தேசிய கீதமோ, வந்தே மாதரமோ இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் நம் நாட்டு மக்களே. அவர்களும் தேசத்தை வணங்க அனுமதிக்க வேண்டும், இல்லாவிடில் இதையே சிலர் தவறான முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்ட வாய்ப்புண்டு. இதைச் சரி செய்ய வேண்டுகிறேன்- என்று அவர் பேசினார்.

வெற்றிகரமாகப் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: ஜிசாட் 6ஏ விண்ணில் நிலைநிறுத்தம்

இது புவியில் இருந்து அதிகபட்சம் 36 ஆயிரம் கி.மீ. தொலைவும், குறைந்தபட்சம் 170 கி.மீ., தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் புவியைச் சுற்றிவரும். ஜிசாட்- 6ஏ செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்குப் பெயர் ஜென்டில்மென் விளையாட்டா? டிராவிட் போல் நேர்மையாளர் உண்டா?

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்று வர்ணிப்பார்கள். கிரிக்கெட் இங்க்லீஷ் நாடுகளில் தோன்றி இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளில் பரவலாகி, காமல்ன்வெல்த் நாடுகளில் நங்கூரம் பாய்ச்சி நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.

காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, ஓர் ஆய்வுக் கட்டுரை அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!

தகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது.
- 2026

Recent articles