தமிழகம்

பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்: எஸ்.வி.சேகர் செய்த தவறு; மன்னிப்பால் சரியாகுமா?

இப்பொழுது, அனைத்து பத்திரிகையாள சங்கங்களும் இந்த நிகழ்வுக்காக கொதித்துப் போய் புகார்களைக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டு, களத்தில் பணி புரியும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தால், அவச் சொற்கள் ஏதும் இல்லாது போனால், அதுவே மிகப் பெரும் ஆறுதலாக அமையும்!

பாலியல் புகார் சொன்னால் கட்சியை விட்டு நீக்கம்: இதுதான் திமுக., ‘ஸ்டைல்’!

கரூர்: பாலியல் புகார் கொடுத்த பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியுள்ளது திமுக., தலைமை. இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: காவல் ஆணையர் பதில்!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ராஜா படத்தில் திமுக.,வினர் எச்ச துப்பி போராட்டம்: பதிலுக்கு பாஜக., என்ன செய்யப் போகிறது?

இன்று காலை, ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை தொங்க விட்டு, தூக்கில் தொங்குவது போல் போராட்டம் நடத்தி அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.இப்போது இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி போராட்டங்களாக பாஜக., என்ன வித்தியாசமாக நடத்தப் போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் புகார்

காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில், 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

நிர்மலா தேவியிடம் ஏப்.21ம் தேதி விசாரணை: கூடுதலாக பெண் அதிகாரிகள் நியமனம்

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். எனவே இந்த விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
- 2026

தமிழகத்தில் ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்த அமையுங்கள்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

புதுவையில் காங்கிரஸாரின் அராஜகம்: நியமன எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து,  சம்பவம் குறித்து நியமன எம்எல்ஏ சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

நிர்மலா தேவி என சித்திரித்து முகநூலில் அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., பெண் பிரமுகர் புகார் மனு!

இதுபோல் தவறாக சமூகவிரோத விஷமிகள் அவர்களது ஆதாயத்திற்காக அப்பாவி பெண்ணான எனது படத்தை வெளியிட்டு, எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர். பா.ஜ.க. கட்சி மீதும் அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள்.

பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!

எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு  காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் குறைவான பள்ளிகளை மூட திட்டம்!

நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்கள் தேவை. ஏனைய ஊரகப் பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தேவை என்றும்  அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
- 2026

Recent articles