இந்தியா

கர்நாடகாவில் வீசுவது பாஜக அலை அல்ல; சூறாவளி: முதல் நாளிலேயே போட்டுத் தாக்கிய மோடி!

70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை நாங்கள் இப்போது செய்துள்ளோம். நமது நாட்டின் உண்மையான வரலாறே தெரியாதவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். வந்தே மாதரத்தை இழிவுபடுத்தியவர்கள்தான் காங்கிரஸ் தலைவர்களாக உள்ளனர். மன்மோகன் சிங்குக்கு ராகுல் மரியாதை அளிக்கவில்லை.

என்னல்லாம் செய்திருக்கீங்க… 15 நிமிடம் பேப்பர் இல்லாம மடமடன்னு பேசுங்க பார்ப்போம்: மோடி விட்ட சவால்!

"இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது தாய் மொழியில் ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருந்தார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் வேலைக் காரர்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

பெண்கள் பலருடன் நெருக்கம்: கோபத்தில் கணவன் மீது அமிலம் ஊற்றிக் கொன்ற மனைவி கைது!

பெண்கள் பலருடன் இவ்வாறு அவர் நடந்து கொள்வதற்கு அவரது முக அழகுதான் காரணம் என்று நினைத்தேன். எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்தப் பெண்ணும் எனது கணவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்று நினைத்த நான், அவரது முகத்தில் அமிலத்தை ஊற்றினேன்

வட இந்தியாவில் கொளுத்தி எடுக்கும் வெயில் உக்கிரம்: தீ எரிவது போல் தெரிந்த நாசாவின் சாட்டிலைட் படங்கள்

நாசா வெளியிட்டுள்ள படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன.

கதுவா சம்பவ நெருக்கடி: ஜம்மு காஷ்மீர் புதிய துணை முதல்வர் பொறுப்பேற்பு

ஜம்மு- காஷ்மீரில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவ நெருக்கடி காரணமாக துணை முதல்வர் பதவியை நிர்மல் சிங் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு ஆளாகும் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ்: தில்லிக்கு அழைத்தார் மோடி!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக., முதல்வர் பிப்லப் குமார் தேவை தில்லிக்கு வருமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, மோடி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
- 2026

பீடா கடை வெச்சாவது பொழச்சிக்கோங்க; அரசு வேலைன்னு சுத்தாதீங்க: சர்ச்சை ஆக்கப்பட்ட திரிபுரா முதல்வரின் அறிவுரை

அவர் தெரிவித்த யோசனையைத்தான் சினிமாக்களிலும் ஊடகங்களிலும் பலரும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சுய தொழில் தொடங்கி இளைஞர்கள் சொந்தக் காலில் நிற்கப்பழக வேண்டும் என்று ஊடகங்களில் சொல்லப் படும் அறிவுரையானது, ஒரு முதல்வரால் சொல்லப் படும் போது அதே ஊடகங்களில் இளைஞர்களை மாடு மேய்க்கச் சொல்கிறார் ஒரு முதலமைச்சர் என்று சர்ச்சையாக்கப்படும் என்பது பிப்லப் குமார் தேவுக்கு தெரியாமல் போயுள்ளது.

அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் என்ற இலக்கு எட்டப்பட்டுவிட்டது: மோடி பெருமிதம்

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவது என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.  இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன

காங்கிரஸ் வெற்றிபெற கேம்பிரிட்ஸ் அனலிடிகா கொடுத்த பகீர் திட்டங்கள்! வெளிநாட்டு சதியை இந்திய சமூகம் முறியடிக்குமா?

காஷ்மீர் கதுவா சிறுமி பாலியல் விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நடக்கும் போராட்டங்கள் வரை, இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள பாஜக., தன் வழிகளைக் கையாள்கிறது. நீதித்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலகம் விளைவித்தார்கள். நீதிபதியை பதவியிறக்க மனு போட்டார்கள். எல்லாமே இந்த அரசியல் சதித் திட்டமிடலின் ஓர் அங்கம்தான் என்கிறார்கள்.

பாலிவுட் படங்களை சீனாவில் அதிகம் திரையிட அதிபர் ஜீ ஜின்பிங் ஆர்வம்!

இந்திய திரைப்படங்கள் அதிகமாக சீனாவிலும், சீனப் படங்கள் இந்தியாவிலும் திரையிடப்பட வேண்டும் என்பது தொடர்பான பேச்சு இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இடம் பெற்றுள்ளதாக கோகலே கூறினார்.

மோடியின் சீன பயணம் நிறைவு! இதயங்களை வென்ற இந்தியா!

மோடியின் சாய் பர் சர்ச்சா என்ற நிகழ்ச்சி பிரபலமாக இருந்தது. டீ குடித்துக் கொண்டே, நாட்டு மக்களிடம் பிரச்னைகள் குறித்து விவாதிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அது போல் சீனாவிலும் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் டீ குடித்துக் கொண்டே, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இது தனக்கு இனிய அனுபவமாக இருந்தது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles